புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
jairam
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
சிவா
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Manimegala
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
17 Posts - 4%
prajai
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
Jenila
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_m10பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே உன்னைத் தெரிந்து கொள் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 06, 2011 2:45 pm

இந்த அகன்ற பிரபஞ்சத்தில் எங்கோ எம்மை ஆளும் சக்திஒன்றுண்டு. அது தெய்வமா , இல்லையா? ஆணா
பெண்ணா? எம்மை உற்பத்தி செய்த ஒரு இயந்திரமா என்றகேள்விகள் எழுகின்றன . இக்கேள்விகளுகப்பால்
அந்தசக்தியை நான் நேசிக்கிறன் ஏனெனில் அந்த சக்திதான் நான். அதை சக்தியின் எழுச்சியை ஒரு
பெண்ணினுள்ளே காண்கிறேன்.
அப்படியே இருக்குமா?தெரியவில்லை. அந்தக்கருத்தில் எழும் ஒரு மாறுபட்ட கருவைக்கொண்ட கவிதை.
கரு ஏற்புடையதில்லாமல் இருக்கலாம். இது ஒருதனிபட்ட மனிதனின் எண்ணம்..
அன்புடன் கிரிகாசன்

பெண்ணே உன்னைத் தெரிந்து கொள்!
(மனதில் தூய்மையுடன் இயற்கையெனும் சக்தியில் ஒருமைப்படுத்தல்)
1. யார் செய்தார்

விண்வெளி யாம்பிர பஞ்சமெனும்ஒரு
விந்தைதனைப் படைத்து
துண்டெனச் சூரியக்குஞ்சுகள் செய்ததை
திக்கெங்குமே விதைத்து
வண்ண மென்தூரிகை கொண்டொரு மஞ்சளும்
வார்த்தே சிவந்தநிறம்
கண்ணைக் கவர்எழில் நீலமும் வெள்ளையும்
கற்பனைக்கோலமிட்டு

ஓடி உருண்டிடும் இராட்சதகோளமும்
உருளும் பந்துகளும்
ஆடி அதிர்ந்திட அண்டசராசரம்
அத்தனையும் அமைத்து
கூடிஒன்றாகிட குமுறும்தீயெனும்
கோடி அனல்குழம்பும்
தேடியிழுத்திடும் காந்தமென்னலையில்
சிக்கா துருள வைக்கும்

எண்ணவும் எட்டாத விண்ணைப்படைத்தங்கு
வைத்ததும் யாரவரோ?
கண்களும் காணாத எந்தொருசக்தி யின்
காரணிதான் இதுவோ?
மண்ணை யுமாக்கியே மானிடம் செய்தது
மாபெரும் சக்தியெனில்
பெண்ணெனவே காணும் அன்னையவள் தோற்றம்
பெற்றதும் சக்தியன்றோ

சக்தியே தோற்றமாம் சக்தியே மாற்றமாம்
சக்தியே நம்முருவம்
சக்தியே ஏற்றமும் சக்தியேவீழ்ச்சியும்
சக்தியேஎம் உலகம்
சக்தியின்உருவே பெற்றவளன்னையாம்
அத்தனை உயிர்களுக்கும்
வித்தெனஆக்கி விளைந்திட வைத்துமே
வையக வாழ்வளித்தாள்

2. பெண்வதை
உயிரைத்தந்தாள் உடலைத்தந்தாள்
உலகைக் காட்டிவிட்டாள்
பெயரைத் தந்தாள் பிறப்பைத் தந்தாள்
பெண்ணென அன்புதந்தாள்
வயிற்றுக் கென்றே உணவைத் தந்தாள்
வைரம்கொள்ள வைத்தாள்
உயிரைத் தந்தவள் உடலை வதைத்து
உலகம் சிரிப்பதுஏன்?

சக்தியின் கூறாம் பெண்ணவள் இன்று
சஞ்சலம் கொள்ளுவதேன்
சக்திகள் எல்லாம் சக்தியேஇன்றிச்
செத்து மடிந்திடல் ஏன்
எக்கதியாகும் இப்புவி மாந்தர்
இவளொரு தாயின்றேல்
நிர்க்கதியாய்ஒரு வெற்றிடம் மட்டும்
நின்றே சுழலுமன்றோ

பெண்ணே உந்தன் பேரரும்சக்தி
பிறப்பில் இருக்குதம்மா
மண்ணில் இந்த மாபெரும் உண்மை
மறைந்து கிடக்குதம்மா
உன்னை நீயே உணர்ந்து வெகுண்டால்
உலகம்மட்டுமல்ல
விண்ணும்வானும் வியன்தரு அண்டம்
வெடித்துச் சிதறாதோ

அண்ட மனைத்தும் ஆளுவள் சக்தி
அன்னையின் உருவன்றோ
மண்ணில் மானிடம் செய்திடவென்றே
மாதரை வடிவாக்கி
எண்ணிய நல்லோர் இயற்கைவடிவில்
ஈன்றிடும் சக்திதனை
பெண்ணில்உள்ளேவைத்து பேறெனும்
பெருமை உவந்தளித்தாள்

பெண்ணேயின்றில் பேருலகில்லை
பிறவிகள் ஏதுமில்லை
பெண்ணேயின்றேல் பேச்சும் மூச்சும்
பிழைப்பும் இங்கில்லை
பெண்ணேயின்றில் ஆணும் இல்லை
பெண்ணே அவள்இல்லை
பெண்ணே இன்றில் எதுவுமில்லை
பெரிதோர் காரணியாம்

மாபெரும் சிங்கம்புலியை யானை
மதமெடு விலங்குகளை
யாவரும் காணக் காட்சிநடத்தும்
வேடிக்கை வித்தகன்போல்
பாவையர் தம்மைபாவிகள் கட்டிப்
பாதகம்செய்வதுண்டு
பூவையர் சக்திபுரிந்து எழுந்தால்
புவியோ தாங்காது

3. சக்தியை வேண்டு!

பெண்ணே உன்னைப் புரிவாய் உன்னில்
பெரிதோர் சக்தியுண்டு
மண்ணில் வெல்லும் மனதும் வல்லமை
மறமும் தீரமுண்டு
உண்மை சத்தியம் உத்தமஎண்ணம்
உயர்வைமனமெடுத்து
கண்முன் வானம் கடந்தோர் சக்தி
கருத்தில் கொண்டுவிடு

உள்ளத்தாலே சக்தியை எண்ணி
ஒருமைப் பட்டுவிடு
உள்ளே உன்னில் மாற்றம் தோன்றும்
ஓங்கும் சக்தியது
தெள்ளத் தெளியும் மனதும் அன்பு
தோன்றும் மகிழ்வூறும்
வெள்ளம் ஆகி வேகம்பெருகி
வியக்கும் வேளைவரும்

பேயின் கையில் உலகம் இன்று
பெண்ணைக் கொல்லுவதும்
தாயைக் இழிந்து தன்னிலை கெட்டுத்
தலை கீழாக்குதடா
மாயதெருவாம் வானக்குழியின்
மாறா சக்தியினை
ஓயாதென்றும் வேண்டிகொள்ளு
உள்ளே வாவென்று

அண்டம் ஆளும் சக்தி உன்னில்
ஆளுமைகொள்ளவர
திண்மை பெருகும் திறனும்கூடும்
தேகம்வலிகொள்ளும்
கண்ணில் ஒளியும் கருத்தில்தெளிவும்
காரியமாற்றுவதில்
விண்ணைப் போன்று வேகம் மாறும்
வியந்து உலகாடும்

உள்ளப் பொறுமை கொண்டவள்சக்தி
ஒருநாள் வெகுண்டெழுந்தால்
வெள்ளம் பெருகி வானம்வெடிக்கும்
வீசும்புயல் காற்று
அள்ளிதின்ன அனலாய்தீயும்
அண்டம்தனிலோடி
சுள்ளித் துகளாய் தூசாய் கரையும்
சுந்தரபூமியிது

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Mar 11, 2011 10:25 am

வணக்கம் கிரி, நற்றமிழன்னை தங்கள் நலன் காப்பாள்!

அருமையான கவிதைகள் படைக்கும் தங்களின் கவிதைகளை என் வார விடுமுறையின் விடியலில் படிப்பது முதல் வேலையாக்கிக்கொள்ளும் அளவு தங்கள் கவிதைகள் என்னை ஈர்ப்பது உண்மை. வாழ்க தங்கள் கவிதைகள்! வற்றற்க தங்கள் புலமை!

பாரதியின் கவிதை படிப்பது போன்று உள்ளது தங்களின் "பெண்ணை உன்னைத் தெரிந்துகொள்" கவிதை... அற்புதமான வரிகள்

சக்தியின் கூறாம் பெண்ணவள் இன்று
சஞ்சலம் கொள்ளுவதேன்
சக்திகள் எல்லாம் சக்தியேஇன்றிச்
செத்து மடிந்திடல் ஏன்
எக்கதியாகும் இப்புவி மாந்தர்
இவளொரு தாயின்றேல்
நிர்க்கதியாய்ஒரு வெற்றிடம் மட்டும்
நின்றே சுழலுமன்றோ

பெண்ணே உந்தன் பேரரும்சக்தி
பிறப்பில் இருக்குதம்மா
மண்ணில் இந்த மாபெரும் உண்மை
மறைந்து கிடக்குதம்மா
உன்னை நீயே உணர்ந்து வெகுண்டால்
உலகம்மட்டுமல்ல
விண்ணும்வானும் வியன்தரு அண்டம்
வெடித்துச் சிதறாதோ"


ஆஹா .....வேறென்ன சொல்வது.... அருமை என வியப்பது தவிர?

அன்புடன்
தங்கள் தமிழ்த்தங்கை
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக