புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
4 Posts - 3%
prajai
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
4 Posts - 3%
Jenila
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
1 Post - 1%
M. Priya
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
1 Post - 1%
kargan86
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
1 Post - 1%
jairam
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
8 Posts - 5%
prajai
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
6 Posts - 4%
Jenila
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
4 Posts - 2%
Rutu
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
2 Posts - 1%
viyasan
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
1 Post - 1%
M. Priya
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_m10கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:05 pm

காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)


எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு! (7)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*
திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
கருவிற் கலைத்தாய்க் களத்து! (8)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)
உமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (9)

உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து! (10)


குறிப்பு:

தாவில்லா – குற்றமில்லாத

முருகடியான் – எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்

அரி - சிங்கம்

உழுவக்கொடி – புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்
பொருவில் - உவமையில்லாத

மாணார் – பகைவர்; பேணார் –பகைவர்

உமையாள் – பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி)

புணரிசார் – கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை; வேலு –பிரபாகரனின் தந்தையார்.



கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:06 pm

பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (11)

உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (12)

உலகம் வியக்கும் உயர்தனிக் கோனே!
இலங்கைத் தமிழர்க்(கு) இறைவா! -உலங்குவா(ன்)
ஊர்திப் படைகண்ட ஒண்டமிழா! சிங்களரின்
மார்பிளந்த நீயன்றோ மன்! (13)

மன்னு புகழ்மறவா! மானத் தமிழா!நாம்
உன்ன உளத்துள் உறைபவனே! –பொன்னனைய
துய்ய மனத்தால் துயரம் களைந்தகதிர்க்
கைய! எமக்குநீ காப்பு! (14)

காப்பான எங்கள் கரிகாலா! செந்தமிழர்
கூப்பிக்கை கும்பிடும் கோமகனே! –மூப்பில்கை
பற்ற உதவும் பசுந்தடி போலெமக்(கு)
உற்றதுணை ஆனாய் உவந்து! (15)

உவமையொன்(று) இல்லா உயர்கோனே! நீயே
உவமையுனக்(கு) என்றே உணர்ந்தோம் –உவட்டா*
இனிப்பதுவே! பாயும் இளம்புலியே! ஈழம்
இனிப்பொதுவே ஆகும்நாள் என்று? (16)

என்று பிறந்தகுடி என்ப(து) அறியாமல்
இன்றும் உலகம் எதிர்நோக்கும் –பொன்றா*த்
தமிழ்க்குடியைக் காத்த தலைவா! நீயே
அமிழ்தினும் மிக்க அரிது! (17)

அரிதரி(து) உன்போல் அடலேறைக்* காணல்;
அரிதரி(து) உன்னை அடக்கல் –அரிதரிது
கொள்கைக்(கு) உயிர்கொடுக்கும் கோவுன்போல் காண்பரி(து);
உள்வைத்தோம் உன்னை உவந்து! (18)

உவரி* நடுவே உதித்த தமிழர்
உவலை*க் கடலில் உழலும் –அவலம்
களையப் பிறந்த கரிகாலா! உன்னை
அளைய*ப் புகுமெம் அகம்! (19)

அகமென்ற ஒன்றை அடியோ(டு) அகற்றிப்
பகைகொண்ட மாணார்*ப் பரிசை -அகம்கொண்ட
மாந்தர் அறிய, மறவா! அமைதிவழி
ஏந்திப் பிடித்தாய் இயன்று! (20)


குறிப்பு:

கார் -மழைமுகில்

உலங்குவானூர்தி -ஹெலிகாப்டர்

மன்னுதல் –நிலைத்தல்; உன்னுதல் –உணர்தல்; துய்ய -தூய்மையுள்ள

உவட்டா -அருவருப்பில்லாத

பொன்றாத -அழிவில்லாத

அடலேறு –வலிமையுடையவன்; கோ -அரசன்

உவரி –கடல்; உவரிநடுவே உதித்ததமிழர் –இலங்கைத்தமிழர்; உவலை –துன்பம்; அளைதல்- தழுவுதல்

மாணார் –பகைவர்; பரிசு –பண்பு.



கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:08 pm

இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*
அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)

தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க
எழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்
கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை
மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)

மகிழுந்தில், வல்லுந்தில்* மக்கள் கடத்தல்
நிகழ்த்திடும் கற்பிலா நெஞ்சர் – பகைகொய்ய
வேண்டிப் படைநடத்தி வென்ற பெருமறவா!
யாண்டும் உனக்கே இசை!* (23)

இசைவாய் எனவெடுத்(து) இந்தியா சொல்ல
‘இசையேன்’ எனவெழுந்(து) ஆர்த்தாய் –‘குசையிட்(டு)
அடக்கபரி அல்லநான் அமாம்!’ எனச்சொன்ன
திடக்கொள்கைக் குன்றுன் தெளிவு! (24)

தெளியாப் பதர்களன்று செய்தஒப் பத்தால்
நலிமிகும் என்றே நவின்றாய்! –அளித்த
அமைதிப் படையே அமைதி குலைத்துத்
தமைவருத்திக் கொண்டதே தாழ்ந்து! (25)

தாழ்ந்த தலையும் தரைபார்க்கும் கண்ணுமாய்
வீழ்ந்த படையை விரைந்தேற்கும் –சூழ்ந்த
இகழைக் களையறியா இந்தியா உன்றன்
புகழில் புழுங்கும் புழுத்து! (26)

புழுத்த மனம்படைத்த பொல்லாக் கயவர்
கொழுப்பை அடக்கிக் குளிர்ந்தாய் –அழித்தனரே
எம்மங்கை யர்க்கற்பை இங்கவர் சாவெய்ய
வெம்பகை கொய்தாய் விரைந்து! (27)

விரை*மலர் சூடி விரைந்தாய்; பகைவர்
மறைவிடம் தேடி மறைந்தார்; –புரை*தீர்
பெருமறவா!* மக்கள் பெறுமுறுகண்* போக்கும்
ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!* (28)

ஓரா(து) அறிவை ஒழுகாது சிங்களவர்
தேராச் சிறுசெயல்கள் செய்கின்றார் –நேராய்
எதிர்நின்று போரில் எமன்வெல்லும் தோளா!
உதிர்த்தாய் அவரை ஒழித்து! (29)

ஒழிவின்றி* கொண்ட உறுகண் களைந்தாய்
பழிவென்ற தோளா! பகர்வேன் –கழிவின்றிப்
பொன்னை நகையாக்கல் பொய்யே! நமதீழ
மண்ணை நமதாக்கல் மாண்பு! (30)


குறிப்பு:

முனிதல் – சினங்கொள்ளுதல், தியங்காது – கலங்காது

மல்லர் – வீரர்; உழுவக்கொடி - புலிக்கொடி

வல்லுந்து – லாரி, வேன்; இசை –புகழ்.

குசை –கடிவாளம்; பரி –குதிரை

விரை – மணம்; புரை – குற்றம்; மறவன் – வீரன்; உறுகண் – துன்பம்; ஓர்தல் – உணர்தல்.

ஒழிவின்றி –முடிவின்றி



கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:09 pm

மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை
வீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச்
சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி
மாய்க்கப் பிறப்பெடுத்த மன்! (31)

மாணார் –பெருமைகளற்ற பகைவர்; துமுக்கி -துப்பாக்கி


மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!
வன்னவனே!* முப்படையை வார்த்தவனே! –தென்னவனே!
எங்கள் திருவே! எமையாளும் நீயன்றோ
கங்குல்* விளக்கும் கதிர்! (32)


வன்னவன் –அழகானவன்; கங்குல் –இருள்.



கதிர்க்கையா! எல்லாளா! கார்வண்ண கோனே!
முதிர்ந்த அறிவின் முதலே! –விதிர்த்து*ப்
புறங்காட்டி ஓடும் பொறியற்ற நள்ளார்*க்(கு)
அறமென்றால் என்னென்ப தார்? (33)

விதிர்த்தல் –நடுங்குதல்; நள்ளார் –பகைவர்.



பார்முழுதும் ஆண்ட பரம்பரைய ரானாலும்
நீர்த்திரை*சூழ் பாரில் நிலைத்ததில்லை –நேர்த்திமிகு
எல்லாளா! உன்போல் இறப்பின்றி வாழ்ந்தவர்கள்
உள்ளாரா கொஞ்சம் உரை! (34)

நீர்த்திரை –நீரலை.


உரைத்தார் பலமுறை; உன்னை அழித்துக்
கரைத்தாரந் நீற்றைக் கடலில் –மரித்தோன்
திரும்பான் எனச்சொல்லும் வாய்மூடும் முன்னம்
இருப்பாய் அவரின் எதிர்! (35)


எதிர்த்தோனைக் கண்டஞ்சா எல்லாளா! உன்னை
மதித்தோர்க்குத் தோள்கொடுக்கும் மள்ளா!* –மதித்துன்றன்
சொல்லுக்(கு) இணங்கித் தொடர்ந்த எமைக்காத்தாய்
அல்லும் பகலோடும் ஆங்கு! (36)

மள்ளன் –மறவன்.


ஆங்கோர் படைநிறுவி ஆளப் பிறந்தவனே!
தூங்கா(து) எமைக்காக்கும் தூயவனே! –தேங்காயின்
உள்வெளுப்பாய் உள்ளம் விளங்கியவா! உன்றனையே
உள்ளுதப்பா எங்கள் உளம்! (37)


உளவுப் படைகண்ட ஒப்பில்லாய்! யாரும்
களவு செயவரிய காற்றே! –விளிவை*
அரிமுகத்தர்க்(கு) ஈயும் அரசே! இமய
நரிமுகத்தர் வஞ்சித்தார் நன்கு! (38)

விளிவு –அழிவு; ஈதல் –வழங்குதல்


நன்றகற்றித் தீதினையே நத்துகின்ற* நாய்மனத்தர்
சென்றுதவி செய்வார் திருடர்க்கே –தொன்றுதொட்டுச்
செந்தமிழ் மக்களைச் சீரழிக்கும் ஆரியரைச்
செந்தழலுக்(கு) ஈதல் சிறப்பு. (39)

நத்துதல் -விரும்புதல்


சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (40)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.



கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:10 pm

சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (41)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.

இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (42)

தாவு –தப்பு, குற்றம்.


எழுத்துப் பிழையோ? எதுவோ? அறியேன்
பழுத்த மரம்புண் படுமாம் –இழுத்து
விடுகல்லால்; அந்தோ! வியன்தமிழர் தாமும்
கொடுமைபல காணல் கொடிது! (43)


கொடியோர் புரியும் கொடுஞ்செயல் கண்டும்
துடித்துத் தடுக்கத் துணியார் –கொடுப்பார்
கொடுங்கருவி தன்னைக் கொடுத்துத் தமிழர்
மடிவதனைப் பார்ப்பார் மகிழ்ந்து! (44)


மகிழ்நன்* முனமே மனையாளை வாரித்
துகிலுரித்(து) ஆர்க்கும் துடுக்கர் –முகத்தில்
உமிழார்; ஒருசொல் உரையார்; களிப்பில்
அமிழ்வார் உலகத் தவர்! (45)

மகிழ்நன் –கணவன்; துகில் –ஆடை.

தவற்றைச் சரியென்பர் தற்குறிகள்; மேவி
அவற்றைப் புரிவார்க்(கு) அருள்வர் –இவற்றை
எதிப்பார் இலரே எழுகதிர்க் கையா!
மதிப்பார் அவரை மனத்து! (46)


மனமென்ப தில்லா மடையர்க்(கு) அருளும்
குணமென்ப தில்லாத கூட்டம்! –நிணமே
உடலான காடையர் ஊரழித்தல் கண்டும்
தொடர்ந்தவர்க்குச் செய்வரே தொண்டு! (47)

நிணம் –கொழுப்பு.

தொண்டு கிழந்தமிழ்த் தோன்றால்! இவற்றையெலாம்
கண்டு மனம்வெடித்த காவலா! –பண்டு*தமிழ்
மாமறத்தை நாட்டி மறு*வுடைய சிங்களவர்
போய்மறையச் செய்தாய் புலர்ந்து! (48)

பண்டு –பழமை; மறு –குற்றம்.

புலவு*தோள் ஓரியர்*க்குப் போர்வழிப் பாடம்
உலம்பு*தோள் மன்னா உரைத்தாய்! –கலங்கிக்
கருத்தழிந்த மாணார் கரவா ரியரை
இரப்பார் ‘படையருள்க’ என்று! (49)

புலவு –வெறுக்கத்தக்க; ஓரியர் –சிங்களர்; உலம்பு –பேரோசை செய்கின்ற;
கரவாரியர் –வஞ்சனை மிக்க ஆரியர்; துருப்பு –படை.


எண்ணிலா போர்க்கருவி ஈந்து மனங்களிக்கும்
கண்ணிலா ஆரியர் காடையர்க்கே –நண்ணுநரைத்
தேடிக் கொடுத்துத் தெரிந்துளவும் சொல்லிடுவார்
வாடிக் கலங்கலைநீ என்று! (50)

நண்ணுநர் -நண்பர்



கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:11 pm

எனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்
முனைப்போ(டு) உழன்றாய் முதல்வா! –வினைவலி
உள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்
துள்ளல் ஒழித்தாய் துடைத்து! (51)

எனைத்தும் –முழுதும், எல்லாம்; உழலுதல் –சுழலுதல்

துடைத்தழிக்கத் தோன்றிய தூயா! உலகம்
நடத்தை சரியில்லா நண்ணார்க்(கு) –உடனுதவி
ஏற்றிப் புகழும்; இகல்வெல்லும் உன்றனையே
தூற்றிக் களிக்கும் தொடர்ந்து! (52)

இகல் -பகை

துடி*யிடைப் பாவையரை, தொண்டு கிழத்தை,
மடிவளர் பிள்ளை அமுதை –இடியெனக்
குண்டள்ளி வீசிக் கொலைசெய்யும் சிங்களர்க்குச்
செண்டள்ளி*த் தூவும் சிரித்து! (53)

துடி – உடுக்கை; செண்டு –பூச்செண்டு.

சிரித்தவாய் சீழ்ப்பிடிக்கச் செத்தொழிந்து காலன்
இருப்பிடம் ஏகாரோ? ஏய்ப்போர் –இருக்கின்ற
நாள்மட்டில் மண்ணில் நலஞ்சேர்வ(து) இல்லையறம்
பாழ்பட்டுப் போகிறதே பார்! (54)


பார்போற்றும் பைந்தமிழர் சீர்கெட்டு வாடுவதேன்
நீர்சூழ்ந்த நாட்டில் நிலைகெட்டு? –தீர்வொன்றை
நாம்வேண்டும் போதும் நமையீர்க்கும் போர்முனைக்கே
தேம்பிப்பின் ஓடும் தெறித்து! (55)


தெறுநர்க்(கு) அறிவில் தெளிவில்லை; நம்மை
உறுகணுறச் செய்தே உவந்தார் –சிறுமைதனைச்
சுட்டப் பிறந்த சுடர்கதிரே! இங்கவரை
நெட்டி நெரித்தாய் நிமிர்ந்து! (56)

தெறுநர் –பகைவர்.

நிமைப்போழ்து*ம் நின்னை நினைந்தே உருகும்
எமைக்காக்கும் ஈழத்(து) இறையே! –குமை*செய்
கொடுஞ்சிங் களரின் குடலை உறுவி
நெடுவான் எறிந்தாய் நிலைத்து! (57)

நிமைப்போழ்து –ஒருமுறை இமைப்பதற்கும் மறுமுறை இமைப்பதற்கும் இடையிலான
காலஅளவு; குமை –அழிவு, துன்பம்.


நிலைத்த புகழின் நிறையே! இகலைக்
களையப் பிறந்த கதிரே! –களத்திற்(கு)
அழைத்தார் கொடியர் அருந்தமி ழர்க்கே
இழைத்தார் இமையா(து) இடர்! (58)

இகல் -பகை

இடர்பட்(டு) இடர்பட்(டு) இழிந்தோம் அடடா!
அடிபட்(டு) அடிபட்(டு) அழிந்தோம் –உடைபட்(டு)
அடுப்பில் எரியும் அனல்விறகாய் ஆனோம்;
எடுப்பார்கைப் பிள்ளையுமா னோம்! (59)


நோக்கில் தெளியார் நுனிப்புல்லை மேய்வதொக்கும்;
நோக்கில் தெளிவன்றோ நோய்தீர்க்கும்? –போக்கொன்றே
ஆதல் விடுதலைக்(கு) ஆறெ*ன்றாய்; காடையரை
மோதி மிதித்தாய் முனைந்து! (60)

நோக்கம் –பார்வை; போக்கு –வழி; ஆறு -வழி




கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:12 pm

முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்
இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய
மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்
ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61)

ஒறுத்தல் –அழித்தல்; தெறுநர் –பகைவர்.

ஓரியக்கம் கண்டவனே! ஓர்ந்துதமிழ் காப்பவனே!
ஓரியர்க்குப் பாடம் உரைத்தவனே! –ஆரியர்க்கும்
நெற்றியடி தந்து நெறிகாக்கும் தூயனுனைப்
பற்றியடி வைக்கின்றோம் பார்த்து! (62)

ஓரியர் –சிங்களர்; ஆரியர் –பார்ப்பனர்.

பாமரபில் வந்தயெமை, பாழ்மரபில் வந்தவர்கள்
மாமறத்தைக் காட்டென்று மார்விடைத்தார் –போர்மரபில்
வந்தகுடி என்பதனை வந்தறிந்து கொண்டவர்கள்
நொந்தகுடி ஆனதனை நோக்கு! (63)


நோன்பிருந்து பெற்ற நிகரில்லாய்! சிங்களர்
ஊன்பிளந்து நொய்தின் உயிர்குடித்தாய்! –வான்பிறந்த
காலத்தில் வந்துதித்த கன்னித் தமிழ்க்குடிகள்
ஞாலத்தில் வாழ்ந்திடவே நன்கு! (64)

நொய்தின் -விரைவாக

நன்றாய்த் தமிழ்விளைத்த நல்நூ லகமெரித்துச்
சென்றார் செழும்நூல்கள் தீய்ந்தனவே –இன்றளவும்
ஆரியரும் ஓரியரும் அண்டித் தமிழழித்தார்
காரகற்றும் வெய்யவனே காண்! (65)

ஆரியர் –பார்ப்பன வந்தேறி; ஓரியர் –சிங்கள வந்தேறி; கார் –இருள்,கருமை

காணக் கிடைப்போரைக் கண்மூடித் தன்மையொடு
கோணல் மதியர் கொலைபுரிந்தார் –மாணக்
குறையுடையார் தேடியெம் குட்டி மணியின்
உறுப்பரிந்து கொன்றனரே ஓர்ந்து! (66)

மாணம் –மாட்சிமை; குட்டிமணி –ஈழத்தில் கொலைக்கருவியேந்திச் சிங்களரை
எதிர்த்த முதன்மையானவர்களுள் ஒருவர்.


ஓர்குலம் ஓர்நிறையென்(று) ஓங்கி உரைத்தகுடி
சீர்குலைந்து செத்துச் சிறப்பழிய –ஊர்குவிந்(து)
ஓரியர்க்குப் போர்க்கருவி ஓர்ந்து கொடுத்தனரே
ஆரியரின் சூழ்ச்சியினால் ஆங்கு! (67)


ஆங்கண் தமிழர் அமர்வழியத் தீயிட்டுத்
தூங்கா விழியராய்த் துச்சிலின்றி –ஈங்கிருந்(து)
ஏதிலிபோல் ஏகென்றார் காடையர்; இப்பாரோர்
காதிலிபோல் நின்றார் களித்து! (68)

ஆங்கண் –அவ்விடத்து; அமர்வு –இருப்பிடம்; துச்சில் –ஒதுக்கிடம்;
ஈங்கு-இங்கு; ஏதிலி –அனாதி; காடையர் –சிங்களர்.


களப்பில் உணவின்றிக் கண்ணீர் வழிய
அளப்பில் தடுப்பவர்க்(கு) அஞ்சி –உளப்பிப்
பிறந்தநா(டு) எண்ணித்தன் பிள்ளையர் வாழக்
கறுக்கொண் டவர்க்கியார் காப்பு? (69)

களப்பு –கடலில் ஆழமில்லாத இடம் (சிறுசிறு மணல்திட்டு); அளப்பில்
தடுப்பவர்க் கஞ்சி -தங்கள் நாட்டு எல்லைக்குள் வராதவாறு தடுப்பவர்க்கு
அஞ்சி; உளப்புதல் –நடுங்குதல்; கறு –மனவுறுதி.


காணலரால் எம்மவர் காணி இழந்துநலங்
காணக் கடந்தார் கடல்நீரை; –தோணி
கவிழ்ந்தும், பசித்தும், கரைகாணா(து) ஆங்கே
தவித்தும் இறந்தார் தனித்து! (70)

காணலர் –பகைவர்; காணி –உரிமையான இடம்.



கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:13 pm

தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்
துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்
ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்
கோமானாய் உன்னைக் குறித்து! (71)

இசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்.

குறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்
பொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்த
நெஞ்சினாய்! எம்மின் நிறைகாக்க வேண்டிநீ
நஞ்சணிந்து கொண்டாய் நயந்து! (72)


நயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;
வியப்பின் முதலே! விரும்பி –அயிர்க்கா(து)
ஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்
கருநீலத் தொண்டையன் காண்! (73)

அயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு –கயிறு; கருநீலத் தொண்டையன் –சிவன்.

காணக் கிடைக்காக் கவினே! உனையேயெம்
மாணத் துணையாய் மனமேற்றோம்-மான
மறவா! எமையாள் இறைவா!வா! நீயே
இறவாப் புகழின் இருப்பு! (74)

கவின் –அழகு; மாணம் –மாட்சிமை.

இரும்பு மனிதா இதுகேள்! எமையுன்
அரும்பு மனத்தால் அணைத்தாய் –துரும்பும்
எமைத்தீண்டா வண்ணம் எழுந்தருள் செய்தாய்
உமையேற்றோம் உள்ளம் உவந்து! (75)


உவட்டும் உடலர்; உளத்தில் கயவர்;
எவர்க்கும் அடங்கா இழிந்தோர்த் –தவறெலாம்
சொல்லி அடித்தாய்இத் தொல்லுலகில் உன்புகழைச்
சொல்லும்வல் வெட்டித் துறை! (76)

உவட்டுதல் –அருவருக்கத்தக்க

துரையப்ப னைக்கொன்ற தூயவனே! பொன்னின்
வரை*யொத்த தோளுடைய மள்ளா!* –வரைவில்*
உறுதி மனத்தில் உடையோய்!எஞ் ஞான்றும்*
இறுதியுனக்(கு) உண்டோ இயம்பு! (77)

மள்ளன் –மறவன்; வரை –மலை; வரைவில் –முடிவில்லாத; எஞ்ஞான்றும் –எப்பொழுதும்.

இயக்கம் அழிக்க இயன்றார் எனினும்
வியக்கும் வகையில் வளர்த்தாய் –தயக்கம்
அடைந்த குழுமாட்டுக் கூட்டத்தார் அஞ்சி
நடைகட்டிக் கொண்டார் நலிந்து! (78)

குழுமாடு –காடையர்.

நன்புணர்ச்சி தன்னில் நயங்கொள்ளாக் காடையர்கள்
வன்புணர்ச்சி செய்தே மகிழ்வெய்வார் –முன்புணர்ச்சி
பொங்க படைநடத்திப் பொய்யர் புறங்காண
வெங்கொடுமை தீர்த்தாய் விரைந்து! (79)

வன்புணர்ச்சி -கற்பழிப்பு

விரிகடல் பேரலை விண்ணில் எழுந்து
கரைகடந்(து) ஊரைக் கடக்கும் –திரையில்
அகப்பட்(டு) உழன்றோர்க்(கு) அரணாய் அழிவில்
முகங்கொடுத்து நின்றாய் முனைந்து! (80)



கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:14 pm

முனைநாள் குமரி முழுதும் அழித்தும்
தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய்
எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்
பொழுது புலரும்முன் பூத்து? (81)


பூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்று
வீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல் –கூத்தொன்றை
ஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே!
ஊழிசூழ்ந் தன்ன உயர்ந்து! (82)

பொழில் –சோலை; ஆழி –கடல்; ஊழி –அழிவுக்காலம்.

உயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றி
உயிர்த்தோர்க்(கு) உதவ உலகம் –முயன்றால்
தடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்
கெடுமனம் கொண்ட குலம்! (83)


குலக்கா வலனே! குடிகள் குறையை
விலக்கத் துடித்தாய் விரைந்தே –நிலங்காக்கும்
முப்படையை ஏவி முதலுதவி செய்கென்றாய்
அப்படையும் வந்துதவிற்(று) ஆங்கு! (84)


ஆழி இழைத்த அழிவின் களையெடுத்து
மேழி பிடித்ததன் மேலுழுதாய் –பாழின்
வழிவந்த காடையர்கள் கண்டு மருண்டு
மொழியற்று நின்றார் முனிந்து! (85)

ஆழி –கடல்; மேழி –ஏரு.

முனைநாள் முதலாய் முடிவில்லாப் போரை
வினையால் விரித்தாரவ் வீணர் –புனைகதையாம்
மாகுலத்தைக் கற்று மதங்கொண்டார்; கொண்டதனால்
சாகுலத்தர் ஆனார் சரிந்து! (86)

மாகுலம் –மகாவமிசம் (சிங்களர்களின் வேதம் எனப் பீற்றப் படுகின்ற
புனைநூல்); சாகுலத்தர் –அழியும் இனத்தவர்.


சரிக்குச் சரிநின்று சாய்க்கப் பிறந்தாய்
அரிமுகத்தர்க்(கு) அச்சம் அதனால்; –விரிகற்றை
பிஞ்சோலை அன்னஇளம் பிள்ளைகளைக் கொன்றார்
செஞ்சோலை இல்லிற்குச் சென்று! (87)


சென்றெதிர்க்க நெஞ்சில் திறனில்லாக் காடையர்கள்
கொன்றொழிக்க வான்வழியே குண்டெறிந்தார் –நின்றிருக்கும்
கூரை சிதற, குடிசையுள்ளோர் செத்தொழிய
ஊரை அழித்தார் உவந்து! (88)


உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (89)


விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (90)



கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:16 pm

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (91)

நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்

வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;
நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து
அமைதி உடன்படிக்கை நார்வே அமைக்க
தமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (92)

தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு
வாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்
சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே
முரசறைந்து சுட்டினாய் முன்பு! (93)

முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்
பின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே
அமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க
உமையன்றி வேறிலரே ஓர்ந்து! (94)

ஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;
சேர்ந்தான் ‘அருளன்’அச் சீயருடன் –நேர்ந்த
பழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)
இழிந்தோர்க்(கு) உதவினனே இங்கு! (95)

அருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக்
கொள்கின்ற சிங்களர்.


இங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்
அங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்
இவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;
இவன்போல் இவனே எனும்! (96)

ஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை
மாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்
தடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று
நடைபோடும் நம்மியக்கம் நன்கு! (97)

நலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்
களிக்கின்ற காடையர் காண -உலகம்
வியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்
இயக்கம் வளர்த்தாய் இயன்று! (98)


இயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க
முயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்
மக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்
குக்கலைக் கொல்வதுன் கோள்! (99)

குக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.

கோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்
வாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்
தடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி
நடைபோடும் நம்மினம் நன்கு! (100)


--
அன்புடன்
அகரம்.அமுதா
http://www.eelanesan.com/tamil-ilakiyam/67-pirabakaran-anththathy/455-kathirkaiyan-kavithai-06.html



கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக