புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்பமும் துன்பமும்
Page 1 of 1 •
மகத நாட்டில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் ஒரு வெள்ளை நிறக் குதிரை இருந்தது. பேரழகு மிக்கது அந்தக் குதிரை. அது அழகான பிடரி ரோமங்களையும், நீண்ட வாலையும் கொண்டிருந்தது. அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் அந்தக் குதிரையைச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் முதியவர் அந்தக் குதிரையை மிகவும் நேசித்து வளர்த்து வந்தார். எனவே அவர் யாருக்கும் குதிரையை விற்க மறுத்துவிட்டார்.
ஒரு நாள் அந்த நாட்டின் மன்னன் அந்த ஊருக்கு வந்தான். அந்த முதியவரின் வீட்டு வாசலில் மிகுந்த அழகான ஒரு குதிரை கட்டிக் கிடப்பதைக் கண்டான். எப்படியாவது அந்தக் குதிரையை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்று பேராவல் கொண்டான் அவன். முதியவரை அரண்மனைக்கு வரவழைத்துப் பேசினான்:
"முதியவரே உங்கள் குதிரையை என்னிடம் விற்றுவிடுங்கள். நான் நான்காயிரம் பொற்காசுகளை குதிரைக்கு விலையாகத் தருகிறேன்.''
முதியவர் பணிவுடன் மறுத்தார்:
"அரசே நான் இந்தக் குதிரையை அன்புடன் வளர்த்து வருகிறேன். விற்பதற்கு எனக்கு மனம் இல்லை. என்னை மன்னிக்க வேண்டும்.''
அவரின் முதுமையின் காரணமாகவும், பணிவின் காரணமாகவும் மன்னன் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டான்.
சில நாட்கள் கடந்தன. ஒரு நாள், எதிர்பாராதவிதமாக அந்தக் குதிரை தொலைந்துவிட்டது.
குதிரை காணாமல்போன செய்தி காட்டுத் தீயைப்போல அதிவிரைவில் ஊரெங்கும் பரவியது. மக்கள் அனைவரும் முதியவரின் வீட்டு முன்னால் கூடினார்கள். முதியவர், தான் வழக்கமாக அமரும் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டத்தில் நின்றிருந்த ஒருவன் சொன்னான்:
"தாத்தா, நம் மன்னர்தான் அப்போதே அந்தக் குதிரையை நான்காயிரம் பொற்காசுகளுக்குக் கேட்டாரே. அன்றே அவரிடம் குதிரையை விற்றிருந்தால் உன் இந்த முதுமைக் காலத்தில் சிரமம் ஏதுமின்றி நிம்மதியாக இருக்கலாம் அல்லவா? இப்போது உனக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டதே! ஏன் இப்படி முட்டாளாக நடந்துகொள்கிறாய்?''
அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோரும் அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள். ஆனால் அப்போதும் அந்த முதியவர் அமைதியாக இருந்தார். மெதுவாக எழுந்து நின்று சொன்னார்:
"முன்பு என்னிடம் ஒரு குதிரை இருந்தது. இப்போது அது தொலைந்துவிட்டது. அவ்வளவுதான் விஷயம்.''
பிறகு அவர் தன் வீட்டின் உள்ளே சென்றார். அந்த வயதான மனிதரின் முட்டாள்தனத்தைக் குறித்துக் கேலி பேசிச் சிரித்தபடியே மக்கள் கலைந்து சென்றனர்.
தொலைந்துபோன குதிரை இரண்டு நாட்களுக்குப் பிறகு தன்னுடன் பன்னிரெண்டு காட்டுக் குதிரைகளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டது. இந்தச் செய்தியும் அதிவிரைவில் ஊர் முழுதும் பரவியது. மக்கள் முதியவரின் வீட்டு முன்னால் திரண்டனர். அங்கே வாசலில் பதின்மூன்று குதிரைகளும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அப்போது முதியவர் காலை உணவு அருந்திவிட்டு தன் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி சொன்னாள்:
"தாத்தா நீ மிகவும் அதிர்ஷ்டசாலிதான்! முன்பு உன்னிடம் ஒரே ஒரு குதிரைதான் இருந்தது. இப்போதோ நீ பதின்மூன்று குதிரைகளுக்குச் சொந்தக்காரனாகிவிட்டாய்! ஆச்சரியம்தான்...''
தன் வீட்டு வாசலில் கூடியிருக்கும் மக்களை நோக்கி முதியவர் அதே அமைதியுடன் சொன்னார்:
"முன்பு என்னிடம் ஒரு குதிரை இருந்தது. இப்போது பதின்மூன்று குதிரைகள் இருக்கின்றன. அவ்வளவுதான் விஷயம்!''
என்ன இந்தக் கிழவர் அதிர்ஷ்டம் வரும்போது சந்தோஷப்படத் தெரியாத மனிதராக இருக்கிறாரே என்று முணுமுணுத்துக்கொண்டே மக்கள் கலைந்து சென்றார்கள்.
மறு நாள் அந்த முதியவரின் ஒரே மகன், காட்டுக் குதிரைகளை வேலைகளுக்குப் பழக்கப்படுத்தினான். அப்போது சினம்கொண்ட ஒரு குதிரை அவனைத் தூக்கி வீசியது. அடிபட்டு அவனுடைய கால் எலும்புகள் உடைந்துபோயின.
வழக்கம்போல இந்தச் செய்தியும் விரைவாக ஊர் முழுதும் பரவியது. மக்கள் முதியவரின் வீட்டு வாசலில் திரண்டனர்.
முதியவர், மாவுக் கட்டுப் போடப்பட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் மகனுக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டத்தில் நின்றிருந்த இளைஞன் ஒருவன் உரத்த குரலில் சொன்னான்:
"ஏ தாத்தா! உனக்குத்தான் எவ்வளவு பேராசை! அந்தக் காட்டுக் குதிரைகளை உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நினைத்தாயே, இப்போது பார்த்தாயா உன் மகனுக்குக் கால் உடைந்ததுதான் மிச்சம்!''
முதியவர் சற்றும் பதற்றம் இல்லாமல் எழுந்தார்:
"என் மகனுக்கு இப்போது கால் உடைந்துவிட்டது. அவ்வளவுதான் விஷயம். அதற்குமேல் ஒன்றும் இல்லை.'' என்று சொல்லிவிட்டு, உணவு சமைப்பதற்காக உள்ளே சென்றார். "என்ன இந்தக் கிழவர் மகன் அடிபட்டிருப்பதை நினைத்து அழாமல் அப்படியே அமர்ந்திருக்கிறாரே!' என்று முதியவரை விமர்சித்துக்கொண்டே மக்கள் கலைந்து சென்றார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு பக்கத்து நாட்டு அரசன், மகத நாட்டின் மீது போர் தொடுக்கப்போவதாக செய்தி அனுப்பினான். உடனே மகத நாட்டு அரசன் ஒரு அறிவிப்புச் செய்தான்:
"எந்த நேரத்திலும் பக்கத்து நாட்டு அரசன் நம் நாட்டின் மீது படையெடுக்கலாம். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் நாட்டின் படையை வலுப்படுத்தும் பொருட்டு ஆண்கள் அனைவரும் படையில் இணைய வேண்டும். முடமானவர்களையும் முதியவர்களையும் சிறுவர்களையும் தவிர மற்றவர்கள் அனைவரும் படையில் இணைந்து பயிற்சி பெறவேண்டும். இந்த அறிவிப்பை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.'' என்று முரசு அறிவிப்பு ஊர் முழுவதும் ஒலித்தது.
மீண்டும் மக்கள் முதியவரின் வீட்டு வாசலில் கூடினர். முதியவர் தன் காய்கறித் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் மகன், நடக்க முடியாத காரணத்தால் கட்டிலில் படுத்திருந்தான். கூட்டத்திலிருந்த ஒருவன் முதியவரிடம் சொன்னான்:
"தாத்தா! என்ன இருந்தாலும் நீ பெரிய அதிர்ஷ்டசாலிதான்! முதியவர்களும் உடல் ஊனமுற்றவர்களையும் தவிர இந்த நாட்டில் உள்ள எல்லா ஆண்களும் படையில் சேரவேண்டுமாம். நீ வயதானவன் அதனால் படையில் சேர வேண்டியது இல்லை. உன் மகனால் நடக்க முடியாது. அதனால் அவனும் படையில் சேர வேண்டியது இல்லை. உன்னைப்போல் அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை. ஆனால் நாங்கள் எல்லோரும் படையில் சேர்ந்து போருக்குச் செல்ல வேண்டும். போரில் என்ன நடக்குமோ! நாங்கள் உயிருடன் திரும்பி வருவதே சந்தேகம்தான்.''
அப்போது முதியர் அந்தக் கூட்டத்தை உற்றுப் பார்த்தார். அனைவரின் முகமும் துயரத்துடன் இருந்தன. பலர், நடக்க இருக்கும் போரை நினைத்து அழுதுகொண்டிருந்தனர். அமைதியான குரலில் முதியவர் சொன்னார் முதியவர்:
"நடந்து முடிந்த சம்பவத்தை மாற்ற முடியாது. அதனை நினைத்து வருந்துவது வீண். அதேபோல, வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். எனவே நாம் எது வந்தாலும் மிகவும் உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையாக இருக்கவேண்டும். துன்பம் வரும்போது அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியதும் இல்லை. இன்பம் வரும்போது ஆனந்தக் கூத்தாட வேண்டிய அவசியமும் இல்லை. எதிலும் சமத்தன்மையுடன் இருப்பதுதான் சிறந்தது.''
பின்பு அவர் தன் தோட்டப் பணியைத் தொடருவதற்காகச் சென்றார்.
திலகம்
ஒரு நாள் அந்த நாட்டின் மன்னன் அந்த ஊருக்கு வந்தான். அந்த முதியவரின் வீட்டு வாசலில் மிகுந்த அழகான ஒரு குதிரை கட்டிக் கிடப்பதைக் கண்டான். எப்படியாவது அந்தக் குதிரையை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்று பேராவல் கொண்டான் அவன். முதியவரை அரண்மனைக்கு வரவழைத்துப் பேசினான்:
"முதியவரே உங்கள் குதிரையை என்னிடம் விற்றுவிடுங்கள். நான் நான்காயிரம் பொற்காசுகளை குதிரைக்கு விலையாகத் தருகிறேன்.''
முதியவர் பணிவுடன் மறுத்தார்:
"அரசே நான் இந்தக் குதிரையை அன்புடன் வளர்த்து வருகிறேன். விற்பதற்கு எனக்கு மனம் இல்லை. என்னை மன்னிக்க வேண்டும்.''
அவரின் முதுமையின் காரணமாகவும், பணிவின் காரணமாகவும் மன்னன் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டான்.
சில நாட்கள் கடந்தன. ஒரு நாள், எதிர்பாராதவிதமாக அந்தக் குதிரை தொலைந்துவிட்டது.
குதிரை காணாமல்போன செய்தி காட்டுத் தீயைப்போல அதிவிரைவில் ஊரெங்கும் பரவியது. மக்கள் அனைவரும் முதியவரின் வீட்டு முன்னால் கூடினார்கள். முதியவர், தான் வழக்கமாக அமரும் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டத்தில் நின்றிருந்த ஒருவன் சொன்னான்:
"தாத்தா, நம் மன்னர்தான் அப்போதே அந்தக் குதிரையை நான்காயிரம் பொற்காசுகளுக்குக் கேட்டாரே. அன்றே அவரிடம் குதிரையை விற்றிருந்தால் உன் இந்த முதுமைக் காலத்தில் சிரமம் ஏதுமின்றி நிம்மதியாக இருக்கலாம் அல்லவா? இப்போது உனக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டதே! ஏன் இப்படி முட்டாளாக நடந்துகொள்கிறாய்?''
அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோரும் அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள். ஆனால் அப்போதும் அந்த முதியவர் அமைதியாக இருந்தார். மெதுவாக எழுந்து நின்று சொன்னார்:
"முன்பு என்னிடம் ஒரு குதிரை இருந்தது. இப்போது அது தொலைந்துவிட்டது. அவ்வளவுதான் விஷயம்.''
பிறகு அவர் தன் வீட்டின் உள்ளே சென்றார். அந்த வயதான மனிதரின் முட்டாள்தனத்தைக் குறித்துக் கேலி பேசிச் சிரித்தபடியே மக்கள் கலைந்து சென்றனர்.
தொலைந்துபோன குதிரை இரண்டு நாட்களுக்குப் பிறகு தன்னுடன் பன்னிரெண்டு காட்டுக் குதிரைகளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டது. இந்தச் செய்தியும் அதிவிரைவில் ஊர் முழுதும் பரவியது. மக்கள் முதியவரின் வீட்டு முன்னால் திரண்டனர். அங்கே வாசலில் பதின்மூன்று குதிரைகளும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அப்போது முதியவர் காலை உணவு அருந்திவிட்டு தன் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி சொன்னாள்:
"தாத்தா நீ மிகவும் அதிர்ஷ்டசாலிதான்! முன்பு உன்னிடம் ஒரே ஒரு குதிரைதான் இருந்தது. இப்போதோ நீ பதின்மூன்று குதிரைகளுக்குச் சொந்தக்காரனாகிவிட்டாய்! ஆச்சரியம்தான்...''
தன் வீட்டு வாசலில் கூடியிருக்கும் மக்களை நோக்கி முதியவர் அதே அமைதியுடன் சொன்னார்:
"முன்பு என்னிடம் ஒரு குதிரை இருந்தது. இப்போது பதின்மூன்று குதிரைகள் இருக்கின்றன. அவ்வளவுதான் விஷயம்!''
என்ன இந்தக் கிழவர் அதிர்ஷ்டம் வரும்போது சந்தோஷப்படத் தெரியாத மனிதராக இருக்கிறாரே என்று முணுமுணுத்துக்கொண்டே மக்கள் கலைந்து சென்றார்கள்.
மறு நாள் அந்த முதியவரின் ஒரே மகன், காட்டுக் குதிரைகளை வேலைகளுக்குப் பழக்கப்படுத்தினான். அப்போது சினம்கொண்ட ஒரு குதிரை அவனைத் தூக்கி வீசியது. அடிபட்டு அவனுடைய கால் எலும்புகள் உடைந்துபோயின.
வழக்கம்போல இந்தச் செய்தியும் விரைவாக ஊர் முழுதும் பரவியது. மக்கள் முதியவரின் வீட்டு வாசலில் திரண்டனர்.
முதியவர், மாவுக் கட்டுப் போடப்பட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் மகனுக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்தார். கூட்டத்தில் நின்றிருந்த இளைஞன் ஒருவன் உரத்த குரலில் சொன்னான்:
"ஏ தாத்தா! உனக்குத்தான் எவ்வளவு பேராசை! அந்தக் காட்டுக் குதிரைகளை உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நினைத்தாயே, இப்போது பார்த்தாயா உன் மகனுக்குக் கால் உடைந்ததுதான் மிச்சம்!''
முதியவர் சற்றும் பதற்றம் இல்லாமல் எழுந்தார்:
"என் மகனுக்கு இப்போது கால் உடைந்துவிட்டது. அவ்வளவுதான் விஷயம். அதற்குமேல் ஒன்றும் இல்லை.'' என்று சொல்லிவிட்டு, உணவு சமைப்பதற்காக உள்ளே சென்றார். "என்ன இந்தக் கிழவர் மகன் அடிபட்டிருப்பதை நினைத்து அழாமல் அப்படியே அமர்ந்திருக்கிறாரே!' என்று முதியவரை விமர்சித்துக்கொண்டே மக்கள் கலைந்து சென்றார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு பக்கத்து நாட்டு அரசன், மகத நாட்டின் மீது போர் தொடுக்கப்போவதாக செய்தி அனுப்பினான். உடனே மகத நாட்டு அரசன் ஒரு அறிவிப்புச் செய்தான்:
"எந்த நேரத்திலும் பக்கத்து நாட்டு அரசன் நம் நாட்டின் மீது படையெடுக்கலாம். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் நாட்டின் படையை வலுப்படுத்தும் பொருட்டு ஆண்கள் அனைவரும் படையில் இணைய வேண்டும். முடமானவர்களையும் முதியவர்களையும் சிறுவர்களையும் தவிர மற்றவர்கள் அனைவரும் படையில் இணைந்து பயிற்சி பெறவேண்டும். இந்த அறிவிப்பை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.'' என்று முரசு அறிவிப்பு ஊர் முழுவதும் ஒலித்தது.
மீண்டும் மக்கள் முதியவரின் வீட்டு வாசலில் கூடினர். முதியவர் தன் காய்கறித் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் மகன், நடக்க முடியாத காரணத்தால் கட்டிலில் படுத்திருந்தான். கூட்டத்திலிருந்த ஒருவன் முதியவரிடம் சொன்னான்:
"தாத்தா! என்ன இருந்தாலும் நீ பெரிய அதிர்ஷ்டசாலிதான்! முதியவர்களும் உடல் ஊனமுற்றவர்களையும் தவிர இந்த நாட்டில் உள்ள எல்லா ஆண்களும் படையில் சேரவேண்டுமாம். நீ வயதானவன் அதனால் படையில் சேர வேண்டியது இல்லை. உன் மகனால் நடக்க முடியாது. அதனால் அவனும் படையில் சேர வேண்டியது இல்லை. உன்னைப்போல் அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை. ஆனால் நாங்கள் எல்லோரும் படையில் சேர்ந்து போருக்குச் செல்ல வேண்டும். போரில் என்ன நடக்குமோ! நாங்கள் உயிருடன் திரும்பி வருவதே சந்தேகம்தான்.''
அப்போது முதியர் அந்தக் கூட்டத்தை உற்றுப் பார்த்தார். அனைவரின் முகமும் துயரத்துடன் இருந்தன. பலர், நடக்க இருக்கும் போரை நினைத்து அழுதுகொண்டிருந்தனர். அமைதியான குரலில் முதியவர் சொன்னார் முதியவர்:
"நடந்து முடிந்த சம்பவத்தை மாற்ற முடியாது. அதனை நினைத்து வருந்துவது வீண். அதேபோல, வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். எனவே நாம் எது வந்தாலும் மிகவும் உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையாக இருக்கவேண்டும். துன்பம் வரும்போது அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியதும் இல்லை. இன்பம் வரும்போது ஆனந்தக் கூத்தாட வேண்டிய அவசியமும் இல்லை. எதிலும் சமத்தன்மையுடன் இருப்பதுதான் சிறந்தது.''
பின்பு அவர் தன் தோட்டப் பணியைத் தொடருவதற்காகச் சென்றார்.
திலகம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா தல.... கதை அருமையாக இருந்துச்சு
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
நன்றி அண்ணா.
அகீல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|