புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
1 Post - 1%
bala_t
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
1 Post - 1%
prajai
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
293 Posts - 42%
heezulia
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
6 Posts - 1%
prajai
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
4 Posts - 1%
manikavi
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை


   
   
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 1:54 pm

அறிவுமதி
அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார்.

அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. தனது நண்பர் ‘அறிவழகன்’ பெயரையும், தனது பெயரையும் சேர்த்து

‘அறிவுமதி’ என்று வைத்துக்கொண்டார்.



**********************



பிழைக்கும் வழி…



மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!

பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!

அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!

ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?

மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!

கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!

கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!

————————————————



பூத்த நெருப்பு…



என்
மரணம்
அது
கண்ணீரை யாசிக்கும்
பிச்சைப்
பாத்திரமன்று

கவிதைக்குள்
முகம் புதைத்து
யாரங்கே
கதறியழுவது
என்
மரணம்
இரங்கற்பா
எழுதுவதற்கானதும்
அன்று

சவுக்கு மரத்து
ஊசி இலைகளில்
சறுக்கி விழுகிற
பனித் துளிகளாய்
நீங்கள் சிந்தும்
கண்ணீர்ச் சொற்களால்
என் பெயரை உச்சரிக்காதீர்கள்

பூமி
இது தண்ணீரின் கல்லறை
கடல்
அது
பூமியின் சமாதி
என் வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசுவதால்
கவிதையை
நீங்கள்
கெளரவப்படுத்தலாம்
வாழ்க்கையை
கெளரவிக்க
இந்த
வண்ணங்கள்
என்ன செய்யும்

மின்னல்
இருளின் விரோதியன்று
அது
மழையின் விளம்பரம்

கனவுகளையும்
கற்பனைகளையும்
மட்டுமே
காதலிக்கத் தெரிந்த
உங்களின்
கவிதைகள் கூட
காதல் தோல்விகளின்
கண்ணீர்
விளம்பரங்கள்தாமே

காதலையே
வெற்றிகொள்ள முடியாத
கோழைகளே
கவிஞர்கள் என்றால்
ஓ…
கவிஞர்களே
இந்த
வீரமரணத்தை
நீங்கள்
ஈரப்படுத்தாதீர்கள்
தூரப் போங்கள்
போய் விடுங்கள்

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

நேற்றுவரை
உங்களோடு
மலை முகடுகளில்
விவாதித்துச்
சேரி வீதிகளில்
வில்லுப் பாட்டிசைத்த
வீரக்
கவிமகன்தான்…இதோ
சாம்பற்
பொட்டலமாய்
உங்களைச்
சந்திக்க
வந்திருக்கிறேன்

தோழர்களே
என்
மரணம்
நிஜமானது
மாரடைப்புத்தான்
பொய்யானது

ஆம்
மரணம் எனக்கு
ஊட்டப்பட்டது

வேர்களைப் பற்றிய
விபரங்கள் புரியாமல்
விழுதுகள்
வெட்டப்படுகின்றன

கசக்கிப்
பிழிந்து
ருசித்துச்
சுவைத்த பின்
தூக்கி எறியப்படுகிற
மாங்கொட்டைகள்
மரங்களாய்
விஸ்வரூபமெடுக்கும்
என்பதை
இவர்கள்
மறந்து போயிருக்கிறார்கள்

கோழிக்
குஞ்சுகளைக்
காப்பாற்றுவதற்காகக்
கழுகுக் கூடுகளைக்
கலைக்கத் துடிப்பது
குற்றமா என்ன

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

ஒரே
ஒரு நிமிட
மெளன அஞ்சலியும்
வேண்டாம்

புறப்படுங்கள்
தொடரட்டும் நமது
மக்கள்பணி

———————————————



செம்மொழி



செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

———————————————



கடைசி மழைத்துளி..


+++++++++++++++++++

அகதி முகாம்
மழையில் வருகிறது

மண் மணம்.

+++++++++

அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.

++++++++++

மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.

+++++++++++

விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.

+++++++++

தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.

++++++++++

இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.

++++++++++

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

++++++++++

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

+++++++++

எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

++++++++++

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.

+++++++++

பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.

+++++++++

மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

++++++++

வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!

++++++++

எவன் நிலம்!
எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!

+++++++

நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.

+++++++


நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.

+++++++

பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.

++++++++

தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!

+++++++

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.

++++++++

ஊருக்கு ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.

+++++++

குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.

+++++++

அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.

+++++++

ஒரே தலையணை
வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.

+++++++

எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.

+++++++

கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.

+++++++

ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்

+++++++

கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு

++++++

‘இந்தியா டுடே‘யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.

++++++

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ… நான்

++++++

உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.

ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 3:57 pm

அருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 4:50 pm

//பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.//

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.


மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

‘இந்தியா டுடே‘யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.

ஆழமான சமுதாயச் சிந்தனை கவிதைகள்.. வடித்தவருக்கும் இங்கு பதித்தவருக்கும் நன்றி..



இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Aஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Aஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Tஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Hஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Iஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Rஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Aஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 4:52 pm

நான் கூட அறிவு அதிகமாக இருப்பதால் அறிவுமதி என வைத்துக் கொண்டாரோ என நினைத்திருந்தேன்!



இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக