புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
6 Posts - 3%
prajai
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
6 Posts - 3%
Jenila
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
2 Posts - 1%
jairam
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
2 Posts - 1%
kargan86
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
74 Posts - 32%
mohamed nizamudeen
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
10 Posts - 4%
prajai
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
8 Posts - 3%
Jenila
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_m10தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !


   
   
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Oct 05, 2010 4:38 pm

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள் 'இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்! ''என்றனர். உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக்கூறினார்கள்... இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 1742.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஒருவர் புனித தலத்தில் இருக்கும் பொழுது இறைவன் தடை செய்த எந்த ஒன்றையும் எந்தளவுக்கு செய்யத் துணிய மாட்டாரோ அந்தளவுக்கு புனித தலமல்லாத மற்ற இடங்களிலும் மனித உயிர்கள், அவர்களது உடமைகள், அவர்களது மான மரியாதையின் மீது துஷ்பிரயோகம் செய்யக்கூடாது புனித தலத்தை மதிப்பதுப் போன்று மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றுப் பெருந்திரளாகக் குழுமி இருந்த அரஃபா மைதானத்தில் அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு எடுத்துக் கூறினார்கள். அதிகார பலத்தைக் கொண்டோ, பண பலத்தைக் கொண்டோ, படை பலத்தைக் கொண்டோ, அல்லது தவறான தகவல்களின் அடிப்படையில் மேற்காணும் அநீதிகளில் எதையாவது ஒன்றை இழைத்து விட்டால் ? அதற்கான தீர்வு என்ன ?
அவருடைய மான மரியாதைக்கு பங்கம் விளைவித்திருந்தால் அதற்காக அநீதி இழைக்கப்பட்டவரிடம் நேரடியாக

சென்று வருத்தம் தெரிவித்துக் கொண்டு படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
அவருடைய பொருளாதாரத்தில் இழப்பை ஏற்படுத்தி இருந்தால் இழப்புககு தகுந்தாற்போல் ஈடு கட்டி விட்டு

படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.

யாரையாவது கொலை செய்திருந்தால் அரசிடம் சரணடைந்து அரசு மூலம் கொலையாளிகளின் வாரிசுகளிடம் மன்னிப்பையோ, அல்லது நஷ்ட ஈட்டுத்தொகையையோக் கொடுத்து விட்டு படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.மிகவும் சாமார்த்தியமாக தான் செய்த தவறுக்கு நியாயாம் கற்பித்தக் கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தால் பாதிக்கப்பட்டவர் இறைவனிடம் கையேந்தி இறைவா ! நீ இவரைப் பார்த்துக் கொள் என்று கண்ணீர் மல்க ஒப்படைத்து விட்டால் இறைவன் அவருக்கு அதேப் போன்றதொரு இழப்பை அல்லது அதற்கு மேலான ஒன்றை தன்னுடைய திறமையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாதவாறு அவரை விட திறமைசாலி ஒருவர் மூலமாக அல்லது அவருக்கு அறியாப் புறத்திலிருந்து அவர் சற்றிலும் எதிர்பாராத வகையில் திடீரென ஏற்படுத்தி விடுவான் அவ்வாறு ஏராளமான சம்பவங்கள் நம் கண் முன் நிகழ்ந்திருக்கிறது. காரணம்

அநீதி இழைக்கப்பட்வருடைய பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் திரை இல்லை. அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

நூல்: புகாரி இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 2448.


இவ்வாறு மாட்டிக் கொண்டவர்களில் சிலர் இது இன்னாருக்கு நாம் செய்த துரோகத்தின் காரணத்தினால் நிகழ்ந்திருக்கலாம் அவர் இறைவனிடம் கையேந்திருப்பார் அதனால் இது இறைவனின் தீர்ப்பாக இருக்கலாம் என்று அஞ்சிக் கொண்டு அதன் பிறகு நற்செயல்களை முற்படுத்துவார் ஆனாலும் அவரால் பாதிக்கப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்க வழி செய்யாமல் தன் தவறை மறைத்தே வாழ்வார் நற்செயல்களை மட்டும் முற்படுத்துவார். அதற்கு காரணம். நான் செய்தது சரி தான் என் மீது எவ்வித தவறுமில்லை என்று இது நாள் வரை தனது வாதத் திறமையால் கூறி வந்த மக்கள் முன் இன்று நான் செய்தது தாறு தான் என்றுக் கூறி அவர்கள் முன் எவ்வாறு தலை நிமிர்ந்து நடப்பது ! அவர்கள் நம்மைப் பொய்யர் என்றெண்ணி விடுவார்கள்,

இதை விட நல்லதோ, கெட்டதோ தான் செய்தது சரி தான் என்ற நிலையில் உறுதியாக நின்று விடுவோம் என்று சமுதயாத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டு அவரால் அநீதியழைக்கப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்காமல் நற்செயல்களை மட்டும் முற்படுத்திக் கொண்டிருப்பார். தன்னால் அநீதியழைக்கப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்காமல் அவர் எத்தனை தான் இறைவனுக்கு விருப்பமான நற்செயல்களை முற்படுத்தி மலைப் போன்று நன்மைகளை சேர்த்துக் கொண்டு சென்றாலும் அவைகளால் அவர் செய்த மனித உரிமை மீறல்களுக்கு பகரமாகாது. அவைகளைக் கொண்டு அவர் சொர்க்கம் செல்ல முடியாது. அவர் சேர்த்துக் கொண்டு வந்திருந்த நன்மைகளை எடுத்து அவரால் பாதிக்கப்பட்டவருக்கு அல்லாஹ் கொடுத்து விடுவான் அதனால் நன்மைகளை இழந்த அவர் நரகில் தள்ளப்படுவார்.

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.)2 (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நூல்: புகாரி 2449.


இறைவனுக்காக செய்ய வேண்டிய சில வணக்கங்களில் குறைபாடுகளுடன் ( இணைவைப்பில்லாமல் ) அதை இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி விட்டு நற்செயல்களை முற்படுத்தலாம் அதை இறைவன் நாடினால் மறுஉலக விசாரனையின் போது மன்னித்து விட்டு அவருடைய நற்செயலகளைக் கொண்டு சொர்க்கத்திற்கு அனுப்பி விடலாம்.

அதேப் போன்று தனக்குத் தானே சரீர சுகத்திற்காக இஸ்லாம் தடைசெய்துள்ள தீமைகளை அனுபவித்திருந்தால் அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி விட்டு நற்செயல்களை முற்படுத்தினால் அதையும் இறைவன் நாடினால் மறுஉலக விசாரனையின் போது மன்னித்து விட்டு அவருடைய நற்செயலகளைக் கொண்டு சொர்க்கத்திற்கு அனுப்பி விடலாம்.

ஆனால் ஒருமனிதன் தன்னைப் போன்ற பிற மனிதனுக்கு வரம்பு மீறி இழைத்த அநீதிகளுக்காக சம்மந்தப் பட்டவரிடம் பேசி தீர்த்துக் கொள்ளாமல் அவருடைய மனதை குளிரச் செய்யாமல் இறைவனிடம் மட்டும் பாவமன்னிப்புக்கோரி நற்செயல்களை முற்படுத்தினால் அந்த நற்செயல்கள் அவருக்குப் பலனலிக்காமல் போவதுடன் அவருக்கு இறைவனால் பாவமன்னிப்பும் கிடைக்காது.

தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !
தவறு செய்யக் கூடியவனே மனிதன் !
ஆனால் தான் செய்த தவறுக்காக வருந்த வேண்டும்
!


மனிதன் என்பவன் வருந்தித் திருந்தி தனது தவறுகளை சீர் படுத்திக் கொண்டு தானும் வாழவேண்டும் தன்னைப் போல் பிறரும் வாழ வேண்டும் என்றக் கொள்கையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

2:134, 2:135 வசனத்தில் இறைநம்பிக்கையாளர்கள் தெரிந்து கொண்டே ஒருத் தவறை செய்ய முயற்சிக்க மாட்டார்கள் அவ்வாறு செய்து விட்டாலும் அதில் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றும் இறைவன் கூறுகிறான் இந்த உபதேசத்திற்கு மாற்றமாக ஒருவர் நடந்து கொண்டால் அவர் என்னப் படித்திருந்தாலும் இறைநம்பிக்கையாளருக்கு எதிர் மறை இறைமறுப்பாளர். ...''தெரிந்து கொண்டே தாங்கள் செய்த (தீமையான)வற்றில் நிலைத்து இருக்கமாட்டார்கள்.'' திருக்குர்ஆன் 03:135

உன் சகோதரனைப் பார்த்து புன்முறுவல் பூப்பதும் நற்செயல் என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

இதனால் அவருடைய மனம் குளிரும் ஒரு மனிதன் பிற மனிதனுடைய மனதை குளிரச் செய்யும் ஒவ்வொரு அம்சங்களும் நற்செயல்கள் ஆகும் நற்செயல்களின் மூலமே நன்மைகள் பெருகும் நன்மைகள் மூலமாகவே சுவனத்தின் சுகந்த காற்றை நுகர முடியும். கழுத்தறுப்பு வேலையில் ஈடுபடுவது, மனதை நோகடிக்கும் செயல்களில் ஈடுபடுவது, போன்ற அனைத்தும தீய செயல்கள் தீய செயல்கள் அனைத்தும தீமைகளை உண்டாக்கும் தீமைகள் மூலமாகவே நரகிற்கு தள்ளப்படுவார்ள். உலகில் வாழும் காலத்திலேயே நீங்கள் பிறருடைய உயிர, உடமைகள். மான மரியாதையின் மீது கை வைத்திருந்தால் அதை இலோசாக எண்ணி விட்டு விடாமல்

சரி செய்து விடுங்கள்

அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 2447.
'


மின்னஞ்சலில் அனுப்பியவர் : சகோதரர் செய்யது கவுஸ்



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 05, 2010 4:55 pm

அழகான ஹதிதுக்கு நன்றி நண்பா ,,,
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Oct 05, 2010 6:00 pm

அல்ஹம்துலில்லாஹ் குர்ஆன் ஹதிஸ் மூலம் அழகாக விளக்கியுள்ளீர்கள் மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 05, 2010 6:33 pm

சிறந்த பதிவு. இஸ்லாம் மிக எளிய மார்க்கம் என்பதற்க்கு இது சரியான பதிவு.

தொடருங்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Oct 05, 2010 7:01 pm

அருமையான பகிர்வு....

தவறு செய்யாத மனிதன் இல்லை...

ஆனால் செய்த தவறை உணர்ந்து நேர்மையுடன் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்பவன் இறைவனுக்கு சமமாக கருதப்படுவான்....

அன்பு நன்றிகள் இத்தனை அருமையான பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 05, 2010 7:11 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வு....

தவறு செய்யாத மனிதன் இல்லை...

ஆனால் செய்த தவறை உணர்ந்து நேர்மையுடன் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்பவன் இறைவனுக்கு சமமாக கருதப்படுவான்....

அன்பு நன்றிகள் இத்தனை அருமையான பகிர்வுக்கு....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Oct 05, 2010 7:14 pm

சபீர் wrote:அல்ஹம்துலில்லாஹ் குர்ஆன் ஹதிஸ் மூலம் அழகாக விளக்கியுள்ளீர்கள் மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Oct 05, 2010 10:25 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வு....

தவறு செய்யாத மனிதன் இல்லை...

ஆனால் செய்த தவறை உணர்ந்து நேர்மையுடன் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்பவன் இறைவனுக்கு சமமாக கருதப்படுவான்....

அன்பு நன்றிகள் இத்தனை அருமையான பகிர்வுக்கு....

உங்கள் மறுமொழிக்கு நன்றி சகோதரி...
ஒரு அன்பு வேண்டுகோள் எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு எதையும் சமமாகாதீர்கள்... .


ரிக் வேதம் (6:45:16)

''யா எக்கா இட்டமுஸ்ததி"

தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.




மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Oct 05, 2010 10:40 pm

அருமையான பகிர்வு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி



தவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Mதவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Oதவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Hதவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! Aதவறு செய்யாதவன் மனிதனே அல்ல ! N
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Wed Oct 06, 2010 2:05 pm

vmrmohan wrote:அருமையான பகிர்வு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி... புன்னகை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக