புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
59 Posts - 50%
heezulia
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_m10 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 3:45 pm


முன்னுரை


உலகிலுள்ள மனிதர் யாவரும் தாம் இறைவனால் தான் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை தெளிவாகப் புரிந்து வைத்துக் கொண்டுள்ளனர். தங்களுக்குத் தேவைப்பட்ட அனைத்தையும் அந்த இறைவனிடமே கேட்கின்றனர். துன்பம் வந்தால் துன்பம் நீங்க வேண்டுகின்றனர். செல்வத்திற்காக வேண்டுகின்றனர். சாகவேண்டி விரும்பினாலும் ''கஷ்டம் இல்லாமல் என்னை உன்னிடம் அழைத்து கொள் இறைவா'' என்றும் வேண்டிக் கொள்கின்றனர். அந்த அளவுக்கு இறைவனின் மீது அன்பு, பக்தி, நம்பிக்கை, பயம், பாசம் ஆகியவைகளை உலக மக்கள் யாவருமே கைக் கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு மட்டும் அவர்கள் அனைவருமே பாரட்டுதற்களுக்கு உரியவர்களே.

இறைவனும், தன்னால் படைக்கப்பட்ட மனிதகுலம் அனைத்தும் தன்னை வணங்குவதற்காக வேண்டியே படைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றான். மனிதர்களை தங்கள் இச்சைபோன போக்கில் வாழவிடாமல் ''இப்படியாக வாழுங்கள்'' என கூறியுள்ளான். அந்த அறிவுரையை மனிதகுலத்துக்கு வழங்க ஆதம் காலம் முதல் இறுதி தூதர் முஹம்மது(ஸல்) வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களை அனுப்பிவைத்து போதிக்கச் செய்தான். போதனை செய்த நபிமார்கள் அனைவருமே வேதனை செய்யப்பட்டார்கள். நபிமார்களைச் சேர்ந்தவர்களையும் துன்புறுத்தினார்கள் மறுப்பாளர்கள். இத்தகைய சூழ்நிலைகளில் எண்ணற்ற ஊர்களை அல்லாஹ் நீரினாலும், நெருப்பினாலும், கல்மாரியினாலும், ப+கம்பத்தாலும் அழித்ததாகக் கூறுகின்றான். விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கும் நிலபாகம் ப+மிக்கடியில் காணப்படும் மனிதவாழ் தடயங்களும் அதனுடைய பின்னனியாக இருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. எரிமலை வெடித்தல், ப+கம்பம், வெள்ளச்சேதம், புயல்சேதம் ஆகியவைகள் நேர்ந்தால் மக்கள் அவைகளை ''இயற்கையின் சீற்றம்'' என்று கூறுவதை நாம் கேட்கின்றோம். அது ''இறைவனின் சீற்றமே'' மனிதன் தான் செய்த வினைக்கு தானே அனுபவிக்கிறான். அதிலே நல்லோர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் இறைவனின் அதி தீவிர சீற்றம், மன்னிக்கமுடியாத குற்றம், கொடிய நரக நெருப்பின் தண்டனை, முடிவில்லாத வேதனை என்று ஒன்று ஒவ்வொரு மனிதனுக்கும் மரணத்திற்கும் பின் திண்ணமாக உள்ளது.

அது யாருக்கு என்றால்

என்னை (இறைவனை) வணங்குவதற்கன்றி மனிதர்களைப் படைக்கவில்லை என்றும் எந்தக் குற்றத்தையும் தான் மன்னிப்பதாகவும், இணைவைத்து வணங்குபவர்களுக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது என்றும் கூறுகின்றான்.

எனவே மரணத்திற்குப்பின் மனிதன் துன்பப்படக்கூடாது என்பதற்காக வேண்டியே ''ஏக இறைவனை மட்டும் வணங்குகள்'' என்ற அனைத்து வேதங்களின் போதனைகளுக்கேற்ப மக்களை அழைக்கிறேன். இனி படியுங்கள். உள்ளே.

முஹம்மது(ஸல்) கல்கி அவதாரம்!

இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

(முஹம்மது நபியே) ''நாம் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் நன்மாறாயம் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அன்றி வேறெதற்கும் அனுப்பவில்லை'' (திருக்குர்ஆன் 34:28)

இறைவன் இந்து மதத்தின் ரிக் வேதத்தின் வாயிலாகக் கூறுகின்றான்:

''அவர் (முஹம்மது -ஸல்) முழுமையானவர். முழு உலகிற்கும் (மனிதகுலம் முழுமைக்கும்) அருட்கொடையானவர்'' (ரிக்வேதம் 5:28) அதர்வண வேதத்தில் (முஹம்மது-ஸல்) அவருடைய புகழ் சுவர்க்க லோகம் வரை பரவும்'' (அதர்வண வேதம் 20 - ஆம் காண்டம் 127 - 30சூக்தம்)

''மேலும் இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

''(முஹம்மது-ஸல்) இறைவனின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் இறுதியாகவும் இருக்கின்றனர்'' (திருக்குர்ஆன் 33:40) அதே கருத்தை இறைவன் ரிக் வேதத்தில் கூறுகின்றான்: ''அந்த அராபியர் (முஹம்மது - ஸல்மூ தூதர்களுக்கெல்லாம் இறுதியாக இருப்பார்''. (ரிக்வேதம் 1:1631)

இனி வங்காளத்தைச் சேர்ந்த பிராமணர் பண்டிட் வேதபிரகாஷ் உபாத்தியைக் கூறுவதைக் காண்போம்:

''இந்துக்களே! கல்கி வந்துவிட்டார். 1400 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டார்'' என்று கூறுகின்றனர். ''கல்கி அவதார்'' என்ற ஒரு நூலையே வெளியிட்டுள்ளார். அன்னாரில் நூலை அலகாபாத் பல்கலைகழகத்திலிருந்து எட்டு பண்டிதர்கள் பார்வையிட்டு ஆதார ப+ர்வமானச் செய்திகளையே தொகுத்து வெளியிட்டுள்ளார் என்று கூறி, மதிப்புரை வழங்கி தங்கள் ஆதரவையும் வழங்கியுள்ளார்கள்.

அகில உலகத்தின் வழிகாட்டி என்றும், மனித குலத்தின் தலைவர் என்றும், இந்து மதத்தின் புனித நூல்கள் வர்ணிக்கும் ''கல்கி'' அவதாரம் என்பவர் இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களேயாவார்கள் என்று அந்நூலாசிரியரும், அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டு பண்டிதர்களும் கூறுகின்றனர்.

வேதபிரகாஷ் உபாத்தியை இந்து புனித நூல்களிலிருந்து எடுத்துரைக்கும் ஆதாரங்களில் வெளிடப்பட்டது. அதை அப்படியே தமிழ்ப்படுத்தித் தருகிறோம்.

1. ''கல்கி'' இறைவனின் இறுதி தூதராக, அகில உலகத்திற்கும் பொதுவானவராகவும், மனிதகுலம் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

2. ''கல்கி''க்கு இறைவன் தன் தூதை ஹரி என்றும் குகையிலே வழங்குவார் என்று இந்துபுராணம் கூறுகின்றது. முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறைச்செய்தியானது ஜிப்ரில் - அலை மூலமாக ''ஹீரா'' என்னும் குகையிலேயே தான் வழங்கப்பட்டது. ஜிப்ரில் - அலை (வானவர்களின் தலைவர்) அவர்களை கிறிஸ்தவ வேதம் கபிரியேல் என்றும், åத வேதம் ''நாமுஸ்'' என்றும், இந்து புராணம் ''பரசுராமர்'' என்றும் குறிப்பிடுகின்றது என்று கூ. ஆடிhயஅஅநன தன்னுடைய ''டீநே ழுடின டீநே ஊசநநன'' நூலில் (பக்கம் 27-ல்) கூறுகின்றனர்.

3. கல்கியின் தந்தை பெயர் ''விஷ்ணுபகத்'' என்றும் தாயார் பெயர் ''சுர்மானி'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு பெயர்களின் பொருளும் மிக ஆச்சரியமான செய்தியைத் தருகிறது. விஷ்ணு என்னும் பெயரானது ஏன இறைவனின் பெயர்களில் ஒன்று என்று ரிக் வேதம் கூறுகிறது (ரிக் 2, 2, 3:11) இதன் பொருள் பரிபாலிப்பவன். பரிபாலிப்பவன் ஏக இறைவன் தான். ஏக இறைவனைத் தான் அல்லாஹ் என்று அழைக்கிறோம். பகத் என்பதன் பொருள் அடிமை. அடிமையை அரபியில் ''அப்த்'' என்கிறோம். ஆக விஷ்ணுபகத் என்பதை அரபியில் எழுதும்போது அப்த் 'அல்லாஹ்" அப்துல்லாஹ் என்றாகிறது. முஹம்மது(ஸல்) அவர்களின் தந்தை பெயர் அப்துல்லாஹ், ''சுமதி'' என்பதன் பொருள் அமைதி முஹம்மது(ஸல்) அவர்களின் தாயார் பெயர் ''ஆமினா'' ஆகும். ஆமினா என்பதன் அரபிப்பெயரின் பொருள் அமைதி ஆகும். தாய் தந்தை பெயர் ஒற்றுமையிலிருந்து கல்கி தான் முஹம்மது(ஸல்) என்பது தெளிவாகிறது.

4. பேரீட்சை பழமும், ஆலிவ்வும் கல்கியின் பிரதான உணவாக இருக்கும். இன்னும் தன் இனத்தார் மத்தியில் நேர்மையானவராகவும், உண்மையாளராகவும் இருப்பார் என்று இந்து புனித நூல்கள் கூறுகின்றன. தம்முடைய நேர்மை, நாணயத்தின் காரணமாக நபித்வம் அடைவதற்கு முன்பே ''அல்அமீன்'' ''அல் சாதிக்'' (நம்பிக்கைக்குரியவர், உண்மையாளர்) என்னும் சிறப்புப் பெயர்களே மக்களிடத்தில் பெற்றவராவார்கள்.

5. கல்கி உயர் குலத்தில் பிறப்பார் என்று இந்து புனித நூல் கூறுகிறது. முஹம்மது(ஸல்) அவர்கள் ''குரைஸி'' குலம் என்னும் உயர் குலத்தில் ''ஹாஸிம்'' என்னும் மேல்குடியில் பிறந்தார்கள்.

6. கல்கி இறைவன் உதவியால் இவ்வுலகையும் ஏழு வானங்களையும் குதிரையில் இருந்தபடியே அதிவேமாகப் கடந்து சென்று வருவார் என்று இந்து புனித நூல்கள் கூறுகின்றன. இது தௌ;ளத் தெளிவாக முஹம்மது(ஸல்) அவர்கள் குதிரைக்கும் கோவேறு கழுதைக்கும் இடைப்பட்ட வடிவத்திலமைந்த 'புராக்' என்னும் வாகனத்தில் அமர்ந்து எழு வானங்களையும் கடந்து ''மிஹ்ராஜ்'' என்னும் விண்வெளிப்பயணம் செய்ததைக் குறிப்பிடுகிறது. (குறிப்பு:- இதையே ''மிஹ்ராஜ் இரவு'' என்ற புனிதமிக்க இரவாக முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.)

7. கல்கி இறைவன் புறத்திலிருந்து வந்த உதவியால் வெற்றிவாகை சூடுவார் என்றுள்ளது. இது திட்டவட்டமாக முஹம்மது(ஸல்) அவர்களின் ''பத்ரு'' போர் வெற்றியைக் குறிக்கிறது.

8. கல்கி கைதேர்ந்த வாள்வீரராகவும், குதிரையேற்றம் செய்பவராகவும் இருப்பார் என்று இந்து புனித நூல்கள் கூறுகின்றன. 1400 ஆண்டுகளுக்கு முன்பே வாள் வீராக இருந்து களம் பல கண்டு வெற்றிகள் பல சூடிய முஹம்மது(ஸல்) அவர்களுக்கே முற்றிலும் அது பொருந்திவிட்டது.

9. இந்து புனித நூல்களில் கல்கி கலியுகத்தில் 3658-ம் ஆண்டில் சாமா தீவில் அவதரிப்பார் என்றுள்ளது. (அரபு தீபகர்ப்பதைத் தான் ''சாமா'' தீவு என்று இந்து புராணம் குறிப்பிடுகிறது.)

10. கல்கி தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே தந்தையை இழந்துவிடுவார் என்றுள்ளது. முஹம்மது(ஸல்) அவர்கள் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தையை இழந்துவிட்டார்கள்.

11. கல்கி நாடுவிட்டு மலைப்பிரதேசத்திற்கு தப்பிச் செல்வார். பின் திரும்பி வந்து போரிட்டு தன் தாய்நாட்டை மீட்பார் என்றுள்ளது. முஹம்மது(ஸல்) தாம் பிறந்த மண்ணான மக்காவை விட்டு, மக்காவிற்கு வடக்கேயுள்ள மலை சூழ்ந்த மதினாவுக்கு தப்பிச் சென்றார்கள். பின்னர் பெரும்படையுடன் திரும்பிவந்து மக்கா நகரை வென்றார்கள்.

ஆக இந்து புனித நூல்கள் கூறும் ''கல்கி'' என்பவர்கள் திருக்குர்ஆன் கூறும் முஹம்மது(ஸல்) அவர்களே ஆவார்கள் என்பதற்கு மேற்கண்ட தகவல்கள் போதுமானதே. (நன்றி, நன்றி, நன்றி ''இந்து வேதங்களில் இஸ்லாம் - வெளியீடு - ஹீரா பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில் -2)

அந்த முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி திருக்குர் ஆனில் அல்லாஹ் கூறியுள்ளபடியும், முஹம்மது(ஸல்) அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டிய விதமாகவே மனிதகுலம் அனைத்தும் இவ்வுலகில் வாழவேண்டும். அன்னாரின் முஹம்மது(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் கடைபிடிக்க வேண்டும்.

''மனிதர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களுக்கென ஒரு வாழ்க்கை நியதியை ஏற்படுத்தி வாழச் செய்து மரணிக்கவும் செய்துவிடுகின்றான். மனிதர்களும் தாம் பிறந்தோம், வாழ்ந்தோம், மரணத்தின் மூலமாக அமைதி அடைந்துவிடுவோம் அல்லது அமைதி அடையப் போகிறோம்'' என்று எண்ணுகிறார்கள். அப்படிப்பட்ட எண்ணம் முற்றிலும் தவறான கருத்தும், எண்ணமுமாகும்.

''என்னை வணங்குவதற்கன்றி நான் மனிதர்களையும், ஜின் வர்க்கத்தையும் படைக்கவில்லை'' என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான். (குர்ஆன் 51:56)

அப்படியானால் உலகில் இறுதியாக உயிரை இழக்க இருவரும் அந்த ஒரே ஒரு மனிதனும் கூட ''அல்லாஹ்வையே'' ஏக இறைவனையே வணங்க வேண்டும் என்று தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.



 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 3:46 pm

முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமே ''ஏக இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்று பறைசாற்றினார்களா? இல்லை, இல்லை. இதே கொள்கையைத் தான் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன்னதாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்கள் போதித்துள்ளார்கள். ஆனால், இன்றுவரை வேதங்களின் போதனைகளுக்கு மாறான நபிமார்களின் போதனைகளுக்கு மாறான வணக்கமுறைகளை உலகமக்கள் மத்தியில் காண்கின்றோம். ஆனால் இஸ்லாம் மட்டுமே, உலகில் வாழும் ஏறத்தாழ 150 கோடி முஸ்லிம்கள் மட்டுமே, திருக்குர்ஆனில் கூறியுள்ளபடியும், ஏனைய அனைத்து மதத்தினுடைய வேதங்களில் கூறப்பட்டுள்ளபடியும் ''ஏக இறைவன் ஒருவனையே'' வணங்கி வருகின்றனர்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

''ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும்'' என்ற போதனையுடன் (உலகெங்கிலும்) ஒவ்வொரு சமுதாயத்திலும் இறைத்தூதரை நாம் அனுப்பியுள்ளோம். (அந்நகல் - 37)

மேலும் அல்லாஹ் முஹம்மது(ஸல்) வாயிலாக உலக மாந்தர் யாவருக்கும் எடுத்துரைக்கின்றான். (முஹம்மது நபியே!) ''நீர் கூறுவீராக! வேதம் கிடைக்கப் பெற்றவர்களே எமக்கும் உங்களுக்கும் இடையில் ஒற்றுமையுள்ள ஒரு விஷயத்தில் ஒன்றுபட வாருங்கள், நாமனைவரும் ஏக இறைவனை மட்டும் வணங்குவோம். அவனுக்கு யாரையும் இணை வைக்க வேண்டாம். நாம் ஏக இறைவனை வணங்காமல் ஏனையவற்றை (இறைவனென) வணக்கத்துக்குக்குரியவையாக எண்ண வேண்டாம்.'' (அல்குர்ஆன் 3:64)

இனி இதர மதங்களிலுள்ள புனித நூல்களில் கூறப்பட்டுள்ள ''ஓரிறை'' வணக்கக் கொள்கையைக் காண்போம்'' இந்து மதத்தின் அதர்வண வேதத்தில் அல்லோப நிஸத் (1:10) -ல் ''அல்லாஹ் (கடவுள்) முழுமையானவன், எல்லாப் பிரபஞ்சமும் அவனுடையது. சிவனுடைய ஸ்தானத்தை அலங்கரிக்கும் முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார். இறைவன் ஒருவனேயன்றி வேறில்லை. அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள். மகமது (முஹம்மது(ஸல்)) அல்லாஹ்வின் தூதர். ஏக இறைவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை''

இனி இந்து மதத்தின் ரிக் வேதத்தில் இறைவனைப் பற்றி கூறப்பட்டுள்ளதைக் காண்போம்:

''யா இக் இத் முஸ்தி இ'' (ரிக் 6:45:16)

பொருள்: வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே.


''அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்'' (ரிக் 10:190:3)

''ஒப்பாரிக்கு உலகை ஆள்பவன், இயங்கும் இயங்காப் பொருட்களுக்கும் தலைவன். ஆன்மாவும் அகத்தூண்டல் அளிப்பவன். (ரிக் 1:89:5)

''வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்'' (ரிக்: 8:1:1)

''அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான்'' (ரிக் 6:45:16)

இந்த வேதங்களில் கூறியுள்ளபடி பண்புகளை உடைய இறைவன் ஒருவன் தான். அவன் தான் வணக்கத்திற்குரியவன் - அல்லாஹ்.

''லாஇலாஹ இல்லல்லாஹ'' திருக்குர்ஆன்

பொருள்: வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. இதுதான் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை.

இதையே இந்து வேதங்களின் பிரம்மசாத்திரமும் கூறுகிறது:

''ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்''

பொருள்: இறைவன் ஒருவனே: வேறுஎவரும் இல்லை; இல்லவே இல்லை.

''ஏகம் ஏவம் அத்விதியம்''

பொருள்: அவன் ஒருவனே, அவனுக்கு யாதொரு இணையுமில்லை.

அத்தகைய ஏக இறைவனை யாரேனும் கண்ணால் கண்டதுண்டா?

''என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது'' குர்ஆன் 7:143

''பார்வைகள் அவனை அடைய முடியாது''

குர்சூன் 1:103

''கடவுளை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை'' (பைபிள்யோவான் 1:18)

''அவன் மஹாத்மா, காணுதற்கரியவன்'' (பகவத் கீதை 7:19)

அனைத்து மதத்திலுள்ள வேதங்களிலும் கூறப்பட்டுள்ள ''அந்த இறைவனையே'' வணங்கும்படியாக திருக்குர்ஆனின் வாயிலாகக் கூறுகின்றான்:

இன்னும் சிலவற்றையும் காண்போம்:- அடுத்து பகவத் கீதை (9:25)ல் ''தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்தும், முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும், ப+தங்களை வணங்குபவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஏக இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என இதனின்றும் புலனாகிறது.

''அந்த ஆதிதேவனின் (இறைவனின்) வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களில்லை, அசுரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல'' என்று பகவத் கீதை 10:14ல் கூறப்பட்டுள்ளது.

அடுத்து இந்து மதத்தின் திருமூல மந்திரத்தில் ''ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' (இறைவன்) என்றிருப்பதையும் காண்க.

அடுத்து கிறிஸ்துவ மதத்தின், பைபிளியின் பழைய ஏற்பாட்டில் (டீடன கூநளவஅநவே)-ல் கீழ்வருமாறு வாசிக்கிறோம். ''ஒருவரேயன்றி வேறொரு தேவன்(இறைவன்) இல்லையென்று அறிந்திருக்கின்றோம். பிதாவாகிய ஒரே தேவன் (இறைவன்) இல்லையென்று அறிந்திருக்கின்றோம். பிதாவாகிய ஒரே தேவன்(இறைவன்) நமக்குண்டு (கொரி8:46) அடுத்து புதிய ஏற்பாட்டில் இயேசுபிரான் இவ்வாறு கூறியதாகக் காண்கிறோம் : ''உன் தேவனாகிய கார்த்தரிடத்திலே உன் முழு இருதயத்தோடும், உன் முழு மனதோடும், உன் முழுபலத்தோடு அன்பு கூறுவாயாக என்பதே பிரதான கற்பனை (மாற்கு 12:30)

இனி திருக்குர் ஆனிலே அல்லாஹ் (இறைவன்) ஆணித்தரமாகக் கூறுவதைக் காண்போம்:

''அணியாக அணி வகுத்து நிற்போர் மீது சத்தியமாக, தீவிரமாக விரட்டுவோர் மீது சத்தியமாக (இறைவனின்) வேதத்தை ஒதுவோர் மீது சத்தியமாக, நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய நாயன்(இறைவன்) ஒருவனே தான்.'' குர்ஆன் 37:1, 2, 3, 4)

எனவே உலக மாந்தர் யாவரும் ஏக இறைவன் ஒருவனையே வணங்கவேண்டும். இல்லையெனில் அல்லாஹ் திருக்குர்ஆன் வாயிலாக எச்சரிக்கின்றான். ''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பத்தை மன்னிக்கவே மாட்டான். இதனை தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்'' குர்ஆன் 4:48

இல்லையெனில் மரணத்திற்குப்பின் முடிவில்லாத நிரந்தரமான, கடுமையான நெருப்பினால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

''அதில் அவன் சாகவும் மாட்டான். சுகத்துடன் வாழவும் மாட்டான்'' வேதனையே அனுபவித்துக் கொண்டே இருப்பான்) குர்ஆன் 20:74

இனி இந்து மதத்தின் ரிக் வேதம் 10:65:5ல் கூறப்பட்டுள்ளதையும் ஏனைய எச்சரிக்கைகளையும் காண்போம். ''ஏ அக்னி! இந்த (இறந்த) மனிதர் மறு உலகிற்கு செல்வார்''.

''ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்களை செய்யத் துவங்குங்கள்; சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.'' (அதர்வண வேதம் 6:122:3)

''யார் பெரும்பாவியாக, பொய்யானாக, நம்பிக்கை அற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் இருப்பான்''. (ரிக் வேதம் 4:5:5)



 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 3:47 pm

''நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கைகால்கள் எரிக்கப்படும். விறகுக்கட்டுகள் அவனை சுற்றி குவித்து வைக்கப்பட்டு எரிக்கப்படும். அவனுடைய சதை அவனுக்க உண்ணக்கொடுக்கப்படும். தன்னைத்தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப்படுவான். குடல்கள்ள பிதுங்கி வெளியே தள்ளப்பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனேயே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்'' என்று இந்து மதத்தின் ஸ்ரீமத் பகவத் மஹாபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதெல்லாம் எப்போது நடைபெறப்போகிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று உலக மக்கள் எண்ணுகிறார்கள். அதற்கு அல்லாஹ் கூறுகின்றான்.

''மனிதர்களுக்கு அவர்களுடைய (கேள்வி) கணக்கு (நாள்) நெருங்கிவிட்டது. அவர்களோ (அதனைப்) புறக்கணித்தவர்களாக மறதியில் இருக்கின்றனர்'' குர்ஆன் 21:1

இதிலிருந்தே உலக மக்கள் யாவரும் என்ன எண்ணிக் கொண்டிருக்கின்றனர், நாம் இறக்க போகிறோம். அதன் பின் பரிப+ரணமான நிம்மதி தான் நாம் அடையப்போகிறோம் என்று. அதுதான் இல்லை. அறியாமையே இதற்கு காரணம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:


''மறுமை நாளைக்கொண்டு நான் சத்தியம் செய்கிறேன். வழிபாட்டில் மனிதன் குறைவு செய்து விட்டதைப் பற்றி மிக நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவைக் கொண்டும் நான் சத்தியம் செய்கிறேன். மனிதன் (இறப்பெய்தி) மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின்னர் அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் என்று எண்ணுகிறானா? ஆம்! அவனுடைய விரல்களின் நுனிகளை (முன்பிருந்தது போல் இணைத்து சரிபடுத்தி) செவ்வையாக ஆக்க நாம் ஆற்றலுடையோராக இருக்கிறோம். (இவ்வளவு தெளிவாகக் கூறியும்) மாறாக மனிதன் (திருந்தாது) தன் எதிர்காலத்திலும் (உண்மையை உணர்ந்த பின்னரும்) பாவம் செய்யவே நாடுகிறான்.'' குர்ஆன் 75:1-5

''ஏக இறைவன்'' ஒருவனையே வணங்கமாலும், அவனது கட்டளைகளுக்குட்பட்டு வாழாமலும் உலகில் வாழ்ந்து வரும் மக்களைப் பார்த்து அல்லாஹ் - இறைவன் ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டான். ''வல் அஸ்ரி இன்னல் இன்சா லஃபி குஸ்ர்'' ''காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டவாளி'' என்று இதையே சுவாமி விவேகானந்தர் அவர்களும் ''உலகாதயக் கல்வி எவ்வளவு தான் பெற்றிருந்தாலும் கூட ஆன்மீகக் கல்வி இல்லையானால் அது பயனற்றதாக ஆகிவிடும்'' என்று கூறியுள்ளார்கள்.

இனி, நாம் எல்லோருக்கும் ஏற்பட இருக்கும் உலக அழிவு நாள் பற்றி சிறிது சிந்திப்போம்:

முஹம்மது(ஸல்) அவர்களிடத்தில் ''உலகம் எப்போது அழியும்'' என்று தோழர்கள் கேட்கின்றனர். அதற்கவர்கள் ''அது பற்றிய அறிவு அல்லாஹ்விடத்திலேயே உள்ளது'' என்றும் ஆனால் அதற்கு முன்னதாக என்னென்ன நிகழும் என்பதை எடுத்துரைத்தார்கள். அவைகளில் சிலவற்றைக் காண்போம்.

''பெண்கள் நாட்டை ஆளுவார்கள் (நாட்டை என்றால் அரசாட்சியை) மட்டும அல்ல வீட்டில் கணவன், மனைவி முதற்கொண்டு சகல துறைகளிலும் அவர்களது ஆதிக்கமே மேலோங்கி நிற்கும்; நடிகர்கள் நாட்டை ஆளுவார்கள். தகரம்(உலோகம்) பேசும். (டெலிபோன், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் பல....); நதிகள் ஒன்றோடொன்று பாயப்பண்ணப்படும், இணைவைக்கப்படும், மலைகள் தகர்க்கப்படும் (மலை மீது ரோடுகள் போட, ரோடுகளுக்குத் தேவையான கற்களை உடைத்து சேகரித்தல், மலை குகை பாதை அமைக்க, மலைகளின் மீது குடியிருப்பு ஏற்படுத்தி ஆகிய காரணங்களுக்காக).

விபச்சாரம் மலிந்துவிடும், பெண்கள் மெல்லிய ஆடையை அணிவார்கள். ஆண்களைப் போல் பெண்களும், பெண்களைப் போல் ஆண்களும் உடை அணிவார்கள். (வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வருபவர்களில் இப்படிப்பட்டவர்களைக் காணலாம்). கொலைகள் மிகுந்துவிடும். கொன்றவனுக்கும் காரணம் தெரியாது, கொல்லப்பட்டவனுக்கும் காரணம் தெரியாது. அப்படிப்பட்ட கொலைகள் மலிந்துவிடும். (இன்று நாம் தினமும் செய்தித் தாள்களில் நிறைய படிக்கின்றோம்.) காலில் செருப்பு அணியத் தகுதியற்றவன் நாட்டை ஆளுவான் (அதாவது நிதி, நியாயம், ஒழுக்கம் ஆகியவை இல்லாதவர்கள் என்று பொருள்.) கடல் நீர் பற்றி எரியும். வானத்திலிருந்து தீப்பிழம்புகள் சீறிப்பாயும். (விஞ்ஞானத்தின் காரணமாகவோ, நாட்டிற்கு நாடு விரோதத்தின் காரணமாகவோ ஏவப்படும் ராக்கெட். குழந்தைகள் பெற்றோர்களை அன்னியர்களாகவும் அன்னியர்களை பெற்றோர்களாகவும் பாவிப்பவர். கல்லுக்கும் மண்ணுக்கும் மக்கள் பணத்தை வீண் விரயம் செய்வார்கள். (விளை நிலங்களையும் பிளாட் போட்டு விற்பது, தவணை முறையில் பிளாட் வாங்குதல், புறம்போக்கு நிலத்தையும் எப்படியாவது வாங்கிவிடுவது, கடன்பட்டாவது வீடுகளைக் கட்டி முடிப்பது ஆகியவைகளைக் குறிக்கும்). வணக்க ஸ்தலங்கள் பிரம்மண்டவைகளாக இருக்கும், அதில் இறைவனை வணங்குபவர்கள் மிகக் குறைவாக இருப்பர். அதிசயங்கள் நிகழும் (சந்திரனுக்கு சென்று வந்தது. அதை இங்கிருந்தே இயக்குதல், அதிசயப் பிறவிகள், கம்ப்åட்டர், போன்றவைகளையும் கூறலாம். உலக அழிவுக்கு முன்னதாக மிகப் பெரிய, பெரிய பேரழிவுகள், அடிக்கடி நிகழும், உதாரணத்திற்கும் முதல், இரண்டாம் உலக யுத்தங்கள், அரசை தக்க வைத்துக் கொள்ள அல்லது மாற்ற நாட்டின் அதிபதிகளால் நடத்தப்பட்ட கொலைகள், ப+கம்பம், வெள்ளம், எரிமலை வெடித்தல், ஜாதி, இனம், மதக்கலவரங்களால் ஏற்படும் உயிர்ச்சேதங்கள் ஆகியவைகள் குறிப்பிடத்தக்கது. இன்னும் அன்றாடம் செய்தித்தாள்களில் வெளிவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மற்ற மற்ற தீமைகள் அனைத்தும் இறுதி நாட்களின் அடையாளங்களே, போலி சாமியார்களும், பக்திமான்களும் (அனைத்து மதங்களிலும்) உலகெங்கிலும் பெருத்துவிடுவார்கள். (தான் தான் கடவுள் என்றும்; கடவுளின் அவதாரம் என்றும் கூறிக்கொண்டு வாழ்பவர்கள் அனேகரை இன்று நாம் பார்க்கிறோம். அனைத்து மதத்தினுடைய வேதங்களில் கூறியுள்ளபடி இவைனை பெரும்பாலோர் வணங்குவதில்லை. காரணம் அந்தந்த மதத்தினுடைய வேதம்பயின்ற சான்றோர். ''உண்மையான இறைவனுடைய போதிக்காததே காரணம். உண்மையை உணர்த்தி வழிபடச் செய்யாததன் காரணத்திற்காக அவர்களுக்கு இரட்டிப்பு மடங்கு வேதனையை மறுமையில் நரகில் துன்புறுத்தப்படும்போது ''அவர்களுக்கு இரட்டிப்பு வேதனையை கொடுப்பாயாக. மேலும் அவர்களைக் கடுமையாக சபிப்பாயாக'' என்று கதறுவார்கள். அல்லாஹ் திருக்குர் ஆனில் 33:66, 67, 68 ஆகிய வசனங்களில் கூறுகின்றான: எனவே வேதம் பயின்றவர்கள் உண்மையை உணர்த்தி மக்களை நரக நெருப்பினின்றும் பாதுகாக்க வேண்டும். ஏனையோரும் உண்மை இறைவணை உணர்ந்தபின் மனம் மாறி ''ஏக இறைவனையே'' துதித்தல் வேண்டும்.)

முஸ்லிம்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். (வீட்டிலும், நாட்டிலும், நாட்டுக்கு நாடும் இவ்வாறு இருப்பதைக் காண்கிறோம்.) உலக ஜனத்தொகையில் ஆண், பெண் விகிதாச்சாரம் 1:8 என்கிற அடிப்படையில் இருக்கும். விலைவாசிகள் உயர்ந்துவிடும். எந்த அளவுக்கு என்றால், விலையைக் கேட்ட மாத்திரத்தில் யா அல்லாஹ். டீ! ழுடின, ஏ இறைவா என்று கூறும் அளவுக்கு இன்னும் அநேகம் உள.

இதுவே உலக அநேகம் உள.

இதுவே உலக அழிவுக்குப் போதுமான அடையாளங்களாகும். மனிதர்கள் எத்தகைய வாழ்க்கையை நடத்தினர் என்பதற்கு அவர்களிடம் கேள்வி கணக்கு கேட்பதற்குரிய நாள் நெருங்கிவிட்டது என்பதையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

(முஹம்மது நபியே!) ''காலம் நெருங்கி விட்டது என்பதை நீர் அறிவீரா?'' என்று அல்லாஹ், நபியைப் பார்த்து கேட்கின்றான். அதாவது உலக அழிவு நாள் நெருங்கிவிட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறான்.

இப்படிப்பட்ட காலக் கட்டத்திலாவது உலகிலுள்ள மனிதகுலம் அனைத்தும், ஆதம் - ஹவ்வா, ஆகியோருடைய சந்ததியினராகிய நாம் அனைவரும் அன்பாகவோ, விரோமாகவோ, உயர்ந்த சமுதாயத்திலோ, தாழ்ந்த சமுதாயத்திலோ, செல்வ சீமான்காளகவோ, பரம அடிமட்ட தரித்திரவான்களாகவோ, வலிமையானவர்களாகவோ, பலஹீனமானவர் களாகவோ, உலகலாவிய அளவில் அதிகாரங்களைக் கொண்டவர்களாகவோ, எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் சரியே, அவர்கள் அனைவரும் இறைவனை அறநது அவனையே வணங்காமலும், அவன் வேதங்களில் கூறியுள்ள கட்டளைகளின் படி வாழாமலும் மரணித்துவிட்டால் தாயைப் போல் 70 மடங்கு அன்பு கொண்டு, கருணை கொண்டு (இறைவன் இல்லை) என்று கூறுபவர்களையும், இறைவன் என்னு எண்ணி இறைவன் அல்லாத அவனின் படைப்புக்களை வணங்குபவர்களையும்) மனிதர்களை வாழவைத்த இறைவன் ''அவனைப் போன்ற ஒரு கொடுமையாளன் இல்லை'' என்று எண்ணி எண்ணி வேதனைப்படும் அளவுக்கு மரணத்திற்குப்பின் மனிதர்களைத் துன்புறுத்துவான் என்பதை உலகெங்கிலும் உள்ள மனிதகுலம் அனைத்தும் உணருதல் வேண்டும். என்றைக்கு ஒரு மனிதன் மரணித்தானோ, அக்கனமே அவன் மீது இப்ப+வுலகில் காட்டின இறைவனின் கருணையும், அன்பும் மரணித்து விடுகிறது. உயிர்விட்ட உடனேயே முதல் கேள்வியாக ''உன்னுடைய ரப்பு (உன்னைப் படைத்து, பரிபாலித்து, ரட்சித்து வந்த இறைவன்) யார் என்று கேட்கப்படும். அத்தண்டனைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இறைவன் திருக்குர்ஆனில் கூறியுள்ளபடி பார்ப்போம்.



 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 3:48 pm

மனிதன் தாகம் எடுத்து தண்¡ர் என்று கேட்கும் போது மிக மிகத் துர்நாற்றமுள்ள கொதிக்கும் சீழை அவனுக்கு குடிக்க கொடுக்கப்படும். அவன் நெருப்பினாலான செருப்பை அணிவிக்கப்படுவான். அதன் உஷ்ணம் உடலின}டே சென்று மூளையை உருக்கும் தன்மையுடையதாக இருக்கும். நெருப்பினலான அங்கிகள் அணிவிக்கப்படும். உடலின் தோல் கருகிவிடும் போதெல்லாம் மாற்று தோல் போர்த்திக் கொண்டே இருக்கப்படும். வட்டி வாங்கியவர்களின் வட்டியை உருக்கி அதனுள் போடப்பட்டு துன்புறுத்தப்படுவர். அவர்கள் துனபுறும்போது ''நன்றாக இருக்கிறதா? சுவை, இன்னும் நன்றாக சுவை'' என்று கூறப்படுமாம். மேலும் பல இப்படிப்பட்ட முடிவே இல்லாத தண்டனை தான் மனித குலத்திற்கு வேண்டுமா? மனிதர்களே சிந்தியுங்கள்! மனித குலமே சிந்தியுங்கள்!!

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!- அது தான் அறிவுடமை. ஒரு முறை முஹம்மது(ஸல்) அவர்களிடம் தோழர்கள் கேட்கிறார்கள். ''அறிவாளி என்பவர் யார்?'' என்று, அதற்கு அவர்கள் ''எவரொருவர் தன்னுடைய இறைவனைப் புரிந்து கொண்டாரோ அவரே அறிவாளி என்று கூறினார்கள்.

பிறிதொரு இடத்தில் ''எவர்கள் மறுமைக்கு (தன்னுடைய மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கைக்கு) வேண்டியவைகளை இம்மையிலேயே (இவ்வுலகத்திலேயே) தயார்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களே அறிவாளி'' என்றும் கூறினார்கள்.

மனிதனே! உலகம் அனைத்திலுமுள்ள மனித குலமே! ''உன்னையோ, உன் மனைவி மக்களையோ, உறவினர்களையோ, ஜாதியார்களையோ மற்றவர்கள் தகாத வார்த்தை கூறினாலோ அல்லது சிறிது துன்புறுத்தி விட்டாலோ, கோபாவேச வெறிகொண்டு வன்முறையில் இறங்கி விடுகின்றாயே! அதே உங்கள் அனைவரையும் மரணத்தின் பின்னர் உங்கள் அனைவருக்காவும் ''என்னுடைய கட்டளைகளை நிராகரிப்போருக்காக நரக நெருப்பு சித்தப்படுத்தி வைத்துள்ளோம்'' என்று இறைவன் கூறுகின்றானே, அதற்கு உங்களது பதில் என்ன?

''கேள்விகளைக் கேட்காமல் விட்டுவிடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா என்று கேட்கின்றானே, அதற்கு உங்களது பதில் என்ன? ''மனிதர்களே! எரிகற்களாகுமுன் திருந்திவிடுங்கள்'' என்று இறைவன் எச்சரிக்கின்றானே, அதற்கு, மனிதர்களே! உங்கள் பதில் என்ன? மனிதகுலமே! உன் பதில் என்ன?

கேள்விக்கணக்கு நபிமார்களுக்குக் கூட உண்டு. ஒரு முறை முஹம்மது(ஸல்) தன் தோழர்கள் மத்தியில் கூறினார்கள்: அல்லாஹ் தன்னிடம் கூறச் சொன்னதாக ஜிப்ரில் (அலை) (வானவர்களின் தலைவர்) அவர்கள் சொன்னது:

''நபியே! நீர் எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழப் பிரியப்படுகின்றீரோ, வாழுங்கள். நீங்கள் யார், யார் மீதெல்லாம் பிரியமாக இருக்க விருப்பமாக இருக்கின்றீர்களோ அவர்கள் மீதெல்லாம் பிரியமாயிருங்கள். உங்கள் மனம் எதை எதை எல்லாம் செய்த தூண்டுகிறாதோ அவைகளையெல்லாம் செய்யுங்கள்.

ஆனால் ஒரு நாள் மரணிக்கப்ப போகிறோம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். முஹம்மது(ஸல்) அவர்களுக்கே இந்த எச்சரிக்க என்றால் மனிதர்களின் நிலை என்ன?

அடுத்து இறைவன் திருக்குர்ஆனின் வாயிலாக மனிதர்களுக்கு எச்சரிக்கின்றான்: ''கேள்விக் கணக்கு (நாள்) நெருங்கிவிட்டது, மக்களே பாராமுகமாக இருக்கின்றனர்'' என்று.

முடிவுரை

மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையை இறைவன் தான் நிர்ணயித்தான். அதன்படியும் வாழ்கின்றனர். ஆனால் மரணத்திற்குப் பின் தனக்குள்ள வாழ்க்கையை ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே தான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ''ஏக இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். வேதங்களில் உள்ளபடி, அவன் ஏவின கட்டளைகளின் படியே வேதங்களில் கூறியுள்ளபடி, மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனில் கூறியுள்ளபடி வாழ வேண்டும். எல்லா வேதங்களிலும் ''இறைவன் ஒருவனே'' என்று கூறும் இறைவன் மனித குலத்தின் வாழ்க்கையை காலத்திற்கு, காலம் மாற்றியமைத்து கூறியிருக்கலாம். மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

திருக்குர்ஆன் உலக மாந்தர் யாவருக்கும் உரியது. இறுதித் தூதர் (ஞசடிஞாநவ) முஹம்மது(ஸல்) மூலமாக அருளப்பட்டது. அதனை ஏற்பவர்களுக்கே ''முஸ்லிம்'' என்று பெயர். முஸ்லிம் என்றால் இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டு அதன்படி வாழ்பவர் என்று பொருள். மேலும் ''இஸ்லாம் முஸ்லிம்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல. அதற்கு அப்பெயர் சூட்டியதே இறைவன்தான். இஸ்லாம் என்ற அரபி சொல்லுக்கு சரணடைதல், கீழ்ப்படிதல் என்ற பொருளும், சாந்தி, சமாதானம் என்ற அர்த்தங்களும் உண்டு. அதன் அடிப்படையில் பார்க்கும்போது ''ஏக இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடந்தால் சாந்தி, சமாதானம் கிடைக்கும்'' என்னும் பரந்த பொருளைக் கொள்ளலாம்.

இனி,

''வமா அர்ஸல்னான இல்லா ரஹ்மதன்லில் ஆலமின்'' (அல்குர்ஆன் 21:107)

பொருள்: ''உலகம் முழுமைக்கும் உம்மை அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்.

இனி ''அவர் (முஹம்மது(ஸல்)) முழுமையானவர், முழு உலகுக்கும் அருட் கொடையானவர்'' இந்துக்களின் ரிக் வேதம் - மந்திரம் 5, சூத்திரம் 28 என்று கூறப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனின் போதனைகளை உலக மாந்தர் யாவருக்கும் முஹம்மது(ஸல்) வாயிலாக எடுத்துரைக்க அல்லாஹ் கூறுகின்றான்.

ஏற்பதும், மறுப்பதும் அவரவரது உரிமை, ''லகும் தீனுக்கும் வலியதீன்'' ''உங்களது வழி உங்களுக்கு, எங்களது வழி எங்களுக்கு'' என்று மறுப்பாளர்களுக்கு கூறிவிடச் சொல்கிறான் அல்லாஹ். ஏற்பதும், ஏற்காததும் அவரவரது சுய விருப்பமே.

''இன்னும் எங்கள் கடமை மக்களுக்கு எடுத்துச் சொல்வதேயன்றி வேறில்லை'' என்று கூறி அனைத்து நபிமார்களும் மரணித்துவிட்டனர். அதையே நானும் உங்களுக்குக் கூறுகிறேன்.

''உங்களுக்கு எடுத்துச் சொல்வதைத்தவிர எந்த நிர்பந்தமும், கட்டாயமும் இல்லை. வல்ல அல்லாஹ் நம் அனைவரையுய்ம இம்மையிலும், மறுமையிலும் பாதுகாப்பானாகவும் - ஆமீன்




 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 15, 2010 8:30 pm

அல்ஹம்துலில்லாஹ்.

இந்து முஸ்லிம்களின் வேதங்களின் போதனைகளை மிக அழகிய முறையில் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மேலும் சில தகவலை அறிந்து கொண்டேன் பகிர்விக்கு மிக்க நன்றி அண்ணா.

''வமா அர்ஸல்னான இல்லா ரஹ்மதன்லில் ஆலமின்'' (அல்குர்ஆன் 21:107)

பொருள்: ''உலகம் முழுமைக்கும் உம்மை அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்.

இனி ''அவர் (முஹம்மது(ஸல்)) முழுமையானவர், முழு உலகுக்கும் அருட் கொடையானவர்'' இந்துக்களின் ரிக் வேதம் - மந்திரம் 5, சூத்திரம் 28 என்று கூறப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனின் போதனைகளை உலக மாந்தர் யாவருக்கும் முஹம்மது(ஸல்) வாயிலாக எடுத்துரைக்க அல்லாஹ் கூறுகின்றான்.

ஏற்பதும், மறுப்பதும் அவரவரது உரிமை, ''லகும் தீனுக்கும் வலியதீன்'' ''உங்களது வழி உங்களுக்கு, எங்களது வழி எங்களுக்கு'' என்று மறுப்பாளர்களுக்கு கூறிவிடச் சொல்கிறான் அல்லாஹ். ஏற்பதும், ஏற்காததும் அவரவரது சுய விருப்பமே.

''இன்னும் எங்கள் கடமை மக்களுக்கு எடுத்துச் சொல்வதேயன்றி வேறில்லை'' என்று கூறி அனைத்து நபிமார்களும் மரணித்துவிட்டனர். அதையே நானும் உங்களுக்குக் கூறுகிறேன்.

''உங்களுக்கு எடுத்துச் சொல்வதைத்தவிர எந்த நிர்பந்தமும், கட்டாயமும் இல்லை. வல்ல அல்லாஹ் நம் அனைவரையுய்ம இம்மையிலும், மறுமையிலும் பாதுகாப்பானாகவும் - ஆமீன் .

நிறைவான விளக்கம் இதில் கூறப்பட்டுள்ளது.அல்லாஹீ அக்பர்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 16, 2010 12:14 am

ஈகரையை நான் சேர்ந்த நாள் முதல் ,உங்களது ,மருத்துவம்,கவிதைகள் ,ஆன்மீக கட்டுரைகள்,ஊக்கமான மறுமொழிகள்,ஒவ்வொன்னும் அருமை தலை .அந்த வகையில் இதுவும் ஒன்று .நன்றி தலை .அரிய தகவலை அறிய தந்தமைக்கு ,
நன்றி தலை ! நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Sep 16, 2010 1:25 am

ஏற்பதும், மறுப்பதும் அவரவரது உரிமை, ''லகும் தீனுக்கும் வலியதீன்'' ''உங்களது வழி உங்களுக்கு, எங்களது வழி எங்களுக்கு'' என்று மறுப்பாளர்களுக்கு கூறிவிடச் சொல்கிறான் அல்லாஹ். ஏற்பதும், ஏற்காததும் அவரவரது சுய விருப்பமே.

''இன்னும் எங்கள் கடமை மக்களுக்கு எடுத்துச் சொல்வதேயன்றி வேறில்லை'' என்று கூறி அனைத்து நபிமார்களும் மரணித்துவிட்டனர். அதையே நானும் உங்களுக்குக் கூறுகிறேன்.

''உங்களுக்கு எடுத்துச் சொல்வதைத்தவிர எந்த நிர்பந்தமும், கட்டாயமும் இல்லை. வல்ல அல்லாஹ் நம் அனைவரையுய்ம இம்மையிலும், மறுமையிலும் பாதுகாப்பானாகவும் - ஆமீன் .

நன்றி நன்றி நன்றி



 இந்து - முஸ்லிம் வேதங்களின் போதனைகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக