புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 10:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலர்களின் வேதனை..!
Page 1 of 1 •
1. விடியல்வேளை
காலைமலர்ந்திடும் பூவைமணந்தொரு காற்றுஎழுந் தோடிப்போகும்
நீலவானவெளி நீந்துமொளிச்சிறு தாரகைகள் விடைகூறும்
வேல்விழிமாதரோ வாசலிருந்துகை கொண்டவளையல்குலுங்க
கோலவண்ணமிட்ட தானஅழகைப் பொறாமைவிழி கொண்டுநோக்கி
கீழத்திசைஅடி வானும்சிவந்திட்ட ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப்போல் ஏதோகீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத்திசையினில் புள்ளியென்றோர் பட்சிக்கூட்டம்
நீலம்சிவந்தது எப்படிஎன்றுதான் காணப்பறந்ததைக் கண்டேன்
காரிருள்கட்டியணைக்கப் புவிமகள் வாழ்விருண்டு போனதென்று
பேரொளிவான்சுடர் பொல்லாச்சினமெடுத்தேயொளி கொண்டதைத்தேட
வாரியடித்தெழுந் தோடிஇருள்வாசல் மூலைக்கத வடிசந்து
ஆலமரத்தடி சோலைநிழலெங்கும் நாடிஅடக் கலம்கோர
மெல்லஒளிவிரிந் தேகும்பொழுதினில் உள்ளம்களித்திட நானும்
செல்லுமிடமேது உள்ளமறியாதோர் சின்ன நடை கொண்டுசென்றேன்
வெள்ளை மலர்களின்கூட்டம் பசுந்தரைவீழும் பனித்துளிதூங்க
துள்ளும்கயல்விழி மங்கையர்புன்னகைபோல எழில் தரக்கண்டேன்
மாடுகள்பூட்டிய வண்டிமெல்ல அசைந்தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக்கிளை சேர்ந்துகொஞ்சிப்பேசிக் கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம்அணைந்திடும் காலைக்குளிர் காற்றின்முத்தம்
கூவிடும்சேவலும் பின்னேகுரைத்தோடும் நாயதும்கண்டு நடந்தேன்
ஆகப்புதுமைக ளேதுமற்றஒரு காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்துமண் மீதுஅடிபதித் தோடிநடந் திட்டபோது
மேகம்மறைநில வாகஒளிகுன்றிக் காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்துகுவிந்திட்ட ஏதிலிகள்இல்லம்கண்டேன்
கண்களில்நீர்கொண்டு சின்னமுகங்களில் வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும் சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப் பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம தென்னென்றுகூறுவீ ரென்றேன்
2..பறித்துப் போட்ட மலர்கள்
தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணிஎன்றோர்குரல் பின்னால்
கயல்விழி என்றுஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்
பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகியசெல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம்நீட்டிக் கொள்ளும்
பழமுமின்சுவை கொண்ட இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்
குழல்சீவிப்பின்னலு மிட்டு - இரு
குறும்விழி நிறைந்தொரு சொட்டு
விழும்நீரை விரலாலே தட்டி -முன்னே
நின்றொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற விருப்பமுமில்ல
வளமான வாழ்வழிந்தாச்சு -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்
பேச்சின்றிநான்நிற்க அந்தச்- சிறு
பேதையோ மேலுமுரைப்பாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பேரரும் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - வெறும்
அலையும் பிணமென ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் கொடுமையே என்றாள்
3. துயரின் கொடுமை...
நீர்த்திரைகொண்டு விழிவழிய
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீறும் அமைதியுடன்
அங்கவள் பேசிடக் கேட்டு நின்றேன்
பார்த்தவர் போற்றும் நல்வாழ்வுதனும்
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த
வாழ்வுகுலைந்தது போச்சுஎன்றாள்
அன்னைபோன தெங்கு நானறியேன்
அன்புத்தந்தை நிலை ஏதறியேன்
பின்னே பிறந்திட்ட தங்கையவள்
பிழைத்தனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை
வீதியிலேகொலை ஒன்றுகண்டால்
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலைநேர்ந்திடவும்
நெஞ்சம்பொறுத்துநிற்பதுவோ
பாதி கழுத்துகிழியும்வரை
பாவமில்லையென்று பேசுவதோ
எத்தனைபேர் கத்திகூவிநின்றோம்
ஏங்கிக்கதறிஅலறிநின்றோம்
செத்துஅழிந்துசிதறவிட்டு
சிற்பமென சிலையாகி விட்டார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ
மௌனம்கொலை துணைஆகுமன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு
ஒன்றாயிணைந்துஅழித்ததன்றோ
கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
குற்றுயிராகத் துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் திரும்பி வந்து
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ
ஏன் உலகெங்களின் கண்ணீரையும்
ஏழைகதறியகூக்குரலும்
வானில் கரைந்திடவிட்டுஅன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்
கூறி அழுதிட்டு நின்றவளாம்
சின்னவளைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள்
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறி த்திடம் மனம் கொள்ளுஇனி
தெய்வம் இருக்குது என்றுரைத்தேன்
நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும்
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்தும் நீதி நெறி
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த
நானிலம் உள்ளமட்டிலொரு
பூமியல்ல இதுவேறு, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்
கூறிவிடைபெற்றுநான்திரும்பி
வீடு நோக்கிநடந்து வந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி
பீதியெழும் காற்றின் வேகச்சுழல்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில்
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்
(குறையும் நிறைவும் கூறுங்கள்)
அன்புடன் கிரிகாசன்
காலைமலர்ந்திடும் பூவைமணந்தொரு காற்றுஎழுந் தோடிப்போகும்
நீலவானவெளி நீந்துமொளிச்சிறு தாரகைகள் விடைகூறும்
வேல்விழிமாதரோ வாசலிருந்துகை கொண்டவளையல்குலுங்க
கோலவண்ணமிட்ட தானஅழகைப் பொறாமைவிழி கொண்டுநோக்கி
கீழத்திசைஅடி வானும்சிவந்திட்ட ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப்போல் ஏதோகீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத்திசையினில் புள்ளியென்றோர் பட்சிக்கூட்டம்
நீலம்சிவந்தது எப்படிஎன்றுதான் காணப்பறந்ததைக் கண்டேன்
காரிருள்கட்டியணைக்கப் புவிமகள் வாழ்விருண்டு போனதென்று
பேரொளிவான்சுடர் பொல்லாச்சினமெடுத்தேயொளி கொண்டதைத்தேட
வாரியடித்தெழுந் தோடிஇருள்வாசல் மூலைக்கத வடிசந்து
ஆலமரத்தடி சோலைநிழலெங்கும் நாடிஅடக் கலம்கோர
மெல்லஒளிவிரிந் தேகும்பொழுதினில் உள்ளம்களித்திட நானும்
செல்லுமிடமேது உள்ளமறியாதோர் சின்ன நடை கொண்டுசென்றேன்
வெள்ளை மலர்களின்கூட்டம் பசுந்தரைவீழும் பனித்துளிதூங்க
துள்ளும்கயல்விழி மங்கையர்புன்னகைபோல எழில் தரக்கண்டேன்
மாடுகள்பூட்டிய வண்டிமெல்ல அசைந்தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக்கிளை சேர்ந்துகொஞ்சிப்பேசிக் கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம்அணைந்திடும் காலைக்குளிர் காற்றின்முத்தம்
கூவிடும்சேவலும் பின்னேகுரைத்தோடும் நாயதும்கண்டு நடந்தேன்
ஆகப்புதுமைக ளேதுமற்றஒரு காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்துமண் மீதுஅடிபதித் தோடிநடந் திட்டபோது
மேகம்மறைநில வாகஒளிகுன்றிக் காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்துகுவிந்திட்ட ஏதிலிகள்இல்லம்கண்டேன்
கண்களில்நீர்கொண்டு சின்னமுகங்களில் வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும் சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப் பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம தென்னென்றுகூறுவீ ரென்றேன்
2..பறித்துப் போட்ட மலர்கள்
தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணிஎன்றோர்குரல் பின்னால்
கயல்விழி என்றுஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்
பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகியசெல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம்நீட்டிக் கொள்ளும்
பழமுமின்சுவை கொண்ட இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்
குழல்சீவிப்பின்னலு மிட்டு - இரு
குறும்விழி நிறைந்தொரு சொட்டு
விழும்நீரை விரலாலே தட்டி -முன்னே
நின்றொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற விருப்பமுமில்ல
வளமான வாழ்வழிந்தாச்சு -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்
பேச்சின்றிநான்நிற்க அந்தச்- சிறு
பேதையோ மேலுமுரைப்பாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பேரரும் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - வெறும்
அலையும் பிணமென ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் கொடுமையே என்றாள்
3. துயரின் கொடுமை...
நீர்த்திரைகொண்டு விழிவழிய
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீறும் அமைதியுடன்
அங்கவள் பேசிடக் கேட்டு நின்றேன்
பார்த்தவர் போற்றும் நல்வாழ்வுதனும்
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த
வாழ்வுகுலைந்தது போச்சுஎன்றாள்
அன்னைபோன தெங்கு நானறியேன்
அன்புத்தந்தை நிலை ஏதறியேன்
பின்னே பிறந்திட்ட தங்கையவள்
பிழைத்தனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை
வீதியிலேகொலை ஒன்றுகண்டால்
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலைநேர்ந்திடவும்
நெஞ்சம்பொறுத்துநிற்பதுவோ
பாதி கழுத்துகிழியும்வரை
பாவமில்லையென்று பேசுவதோ
எத்தனைபேர் கத்திகூவிநின்றோம்
ஏங்கிக்கதறிஅலறிநின்றோம்
செத்துஅழிந்துசிதறவிட்டு
சிற்பமென சிலையாகி விட்டார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ
மௌனம்கொலை துணைஆகுமன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு
ஒன்றாயிணைந்துஅழித்ததன்றோ
கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
குற்றுயிராகத் துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் திரும்பி வந்து
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ
ஏன் உலகெங்களின் கண்ணீரையும்
ஏழைகதறியகூக்குரலும்
வானில் கரைந்திடவிட்டுஅன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்
கூறி அழுதிட்டு நின்றவளாம்
சின்னவளைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள்
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறி த்திடம் மனம் கொள்ளுஇனி
தெய்வம் இருக்குது என்றுரைத்தேன்
நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும்
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்தும் நீதி நெறி
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த
நானிலம் உள்ளமட்டிலொரு
பூமியல்ல இதுவேறு, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்
கூறிவிடைபெற்றுநான்திரும்பி
வீடு நோக்கிநடந்து வந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி
பீதியெழும் காற்றின் வேகச்சுழல்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில்
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்
(குறையும் நிறைவும் கூறுங்கள்)
அன்புடன் கிரிகாசன்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- வேதமுத்துபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2010
kirikasan wrote:1. விடியல்வேளை
காலைமலர்ந்திடும் பூவைமணந்தொரு காற்றுஎழுந் தோடிப்போகும்
நீலவானவெளி நீந்துமொளிச்சிறு தாரகைகள் விடைகூறும்
வேல்விழிமாதரோ வாசலிருந்துகை கொண்டவளையல்குலுங்க
கோலவண்ணமிட்ட தானஅழகைப் பொறாமைவிழி கொண்டுநோக்கி
கீழத்திசைஅடி வானும்சிவந்திட்ட ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப்போல் ஏதோகீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத்திசையினில் புள்ளியென்றோர் பட்சிக்கூட்டம்
நீலம்சிவந்தது எப்படிஎன்றுதான் காணப்பறந்ததைக் கண்டேன்
காரிருள்கட்டியணைக்கப் புவிமகள் வாழ்விருண்டு போனதென்று
பேரொளிவான்சுடர் பொல்லாச்சினமெடுத்தேயொளி கொண்டதைத்தேட
வாரியடித்தெழுந் தோடிஇருள்வாசல் மூலைக்கத வடிசந்து
ஆலமரத்தடி சோலைநிழலெங்கும் நாடிஅடக் கலம்கோர
மெல்லஒளிவிரிந் தேகும்பொழுதினில் உள்ளம்களித்திட நானும்
செல்லுமிடமேது உள்ளமறியாதோர் சின்ன நடை கொண்டுசென்றேன்
வெள்ளை மலர்களின்கூட்டம் பசுந்தரைவீழும் பனித்துளிதூங்க
துள்ளும்கயல்விழி மங்கையர்புன்னகைபோல எழில் தரக்கண்டேன்
மாடுகள்பூட்டிய வண்டிமெல்ல அசைந்தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக்கிளை சேர்ந்துகொஞ்சிப்பேசிக் கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம்அணைந்திடும் காலைக்குளிர் காற்றின்முத்தம்
கூவிடும்சேவலும் பின்னேகுரைத்தோடும் நாயதும்கண்டு நடந்தேன்
ஆகப்புதுமைக ளேதுமற்றஒரு காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்துமண் மீதுஅடிபதித் தோடிநடந் திட்டபோது
மேகம்மறைநில வாகஒளிகுன்றிக் காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்துகுவிந்திட்ட ஏதிலிகள்இல்லம்கண்டேன்
கண்களில்நீர்கொண்டு சின்னமுகங்களில் வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும் சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப் பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம தென்னென்றுகூறுவீ ரென்றேன்
2..பறித்துப் போட்ட மலர்கள்
தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணிஎன்றோர்குரல் பின்னால்
கயல்விழி என்றுஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்
பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகியசெல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம்நீட்டிக் கொள்ளும்
பழமுமின்சுவை கொண்ட இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்
குழல்சீவிப்பின்னலு மிட்டு - இரு
குறும்விழி நிறைந்தொரு சொட்டு
விழும்நீரை விரலாலே தட்டி -முன்னே
நின்றொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற விருப்பமுமில்ல
வளமான வாழ்வழிந்தாச்சு -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்
பேச்சின்றிநான்நிற்க அந்தச்- சிறு
பேதையோ மேலுமுரைப்பாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பேரரும் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - வெறும்
அலையும் பிணமென ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் கொடுமையே என்றாள்
3. துயரின் கொடுமை...
நீர்த்திரைகொண்டு விழிவழிய
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீறும் அமைதியுடன்
அங்கவள் பேசிடக் கேட்டு நின்றேன்
பார்த்தவர் போற்றும் நல்வாழ்வுதனும்
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த
வாழ்வுகுலைந்தது போச்சுஎன்றாள்
அன்னைபோன தெங்கு நானறியேன்
அன்புத்தந்தை நிலை ஏதறியேன்
பின்னே பிறந்திட்ட தங்கையவள்
பிழைத்தனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை
வீதியிலேகொலை ஒன்றுகண்டால்
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலைநேர்ந்திடவும்
நெஞ்சம்பொறுத்துநிற்பதுவோ
பாதி கழுத்துகிழியும்வரை
பாவமில்லையென்று பேசுவதோ
எத்தனைபேர் கத்திகூவிநின்றோம்
ஏங்கிக்கதறிஅலறிநின்றோம்
செத்துஅழிந்துசிதறவிட்டு
சிற்பமென சிலையாகி விட்டார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ
மௌனம்கொலை துணைஆகுமன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு
ஒன்றாயிணைந்துஅழித்ததன்றோ
கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
குற்றுயிராகத் துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் திரும்பி வந்து
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ
ஏன் உலகெங்களின் கண்ணீரையும்
ஏழைகதறியகூக்குரலும்
வானில் கரைந்திடவிட்டுஅன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்
கூறி அழுதிட்டு நின்றவளாம்
சின்னவளைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள்
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறி த்திடம் மனம் கொள்ளுஇனி
தெய்வம் இருக்குது என்றுரைத்தேன்
நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும்
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்தும் நீதி நெறி
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த
நானிலம் உள்ளமட்டிலொரு
பூமியல்ல இதுவேறு, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்
கூறிவிடைபெற்றுநான்திரும்பி
வீடு நோக்கிநடந்து வந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி
பீதியெழும் காற்றின் வேகச்சுழல்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில்
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்
(குறையும் நிறைவும் கூறுங்கள்)
அன்புடன் கிரிகாசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|