புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
30 Posts - 50%
heezulia
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
72 Posts - 57%
heezulia
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 6:22 pm

சென்னையில் மாணவர்களுக்கு இடையேயான தகராறில் இன்று அதிகாலை கல்லூரி மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த 5 மாணவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் ஏராளமான வெளி மாநில மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த நிர்பேகுமார்சிங் (21) என்ற மாணவர் இக்கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும், செம்மஞ்சேரி சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் இடையே கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து விடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தான் படித்து வரும் கல்லூரியில் நிர்பே குமார்சிங் சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்தியபாமா கல்லூரியில் படித்து வரும் இன்னொரு மாணவர் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சி செய்துள்ளார். இது வெற்றி பெறவில்லை.

சீனியர் மாணவர்கள் பலர் இதுபோல் மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம் வரை கமிஷன் பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக நிர்பேகுமார்சிங்குக்கும், சத்தியபாமா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியபாமா கல்லூரி மாணவர்கள், நிர்பே குமார்சிங்கை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் நீலாங்கரையில் வசித்து வரும் தனது நண்பர் அஜிஸ்குமாரை பார்ப்பதற்காக நிர்பே குமார்சிங்கும் அதே கல்லூரியில் படிக்கும் பங்கஜ்குமார் என்ற மாணவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர்.

நீலாங்கரை அருகே உள்ள அக்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சத்யபாமா கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் அங்கு காரில் வந்தனர். மின்னல் வேகத்தில் காரை ஓட்டி வந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினர். இதில் மோட்டார்சைக் கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

நிர்பே குமார்சிங், பங்கஜ் குமார் இருவரையும் சுற்றி வளைத்து இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்கினர். இதில் மண்டை உடைந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

நடுரோட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நிர்கேசிங் பரிதாபமாக உயிரிழந்தார். பங்கஜ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் முரளி, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நிர்பே குமார்சிங்கை கொலை செய்த 5 கல்லூரி மாணவர்களும் அவர்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையாளிகள் யார் என்பது அடையாளம் தெரிந்தது. சத்தியபாமா கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த சுமன், சரத், சொர்பந்த்ரா, அசைஸ்சிங், ரோகன் ஆகிய 5 மாணவர்கள்தான் இக்கொடூர கொலையை செய்தது தெரிய வந்துள்ளது. இவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இது தொடர்பாக மாணவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை படித்து வருகிறார்கள். இவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதை விட தெரிந்த மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்துவிட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக இவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை இன்னொரு தரப்பு மாணவர்கள் கடத்திச்சென்று சிறை வைத்தனர். இப்போது கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் நீண்ட நாட்கள் தங்குவதில்லை. வெளியில் அறை எடுத்து தங்குகிறார்கள். இதுவே அவர்களை கட்டுப்பாடு இன்றி தவறான செயல்களில் ஈடுபட வழிவகுக்கிறது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் தொடர் மோதலை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற கொலை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினருடன் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும். தவறான வழியில் செல்லும் மாணவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை களையெடுக்க வேண்டும்.

கொலை செய்யப்பட்ட நிர்பே குமார்சிங்கும், மதுரவாயலில் அறை எடுத்து நண்பர்கள் 7 பேருடன் தங்கி இருந்தார். இவரது தந்தை ஜார்கண்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். நிர்பே குமார்சிங் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவர் சென்னைக்கு விரைகிறார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 05, 2010 6:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக