புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_m10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_m10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_m10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_m10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_m10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_m10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_m10கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Thu Jul 01, 2010 12:26 pm

கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!- மவ்லவி
கே.எஸ்.ஸிராஜுத்தீன் காஷிஃபி






கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%200588


[ ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும்
ஆண்களுக்கும்
, பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று
தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண்
- பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை
அல்லாஹ் வலியுறுத்துகிறான்
. அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை
குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.

''உலக அழிவு
நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா
இல்லை, தெருக்களுக்கு
வந்துவிட்டார்கள்''
என்றெல்லாம் கூறி
பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து
வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.


பார்வையை
பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள்
. நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்
பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்
.


அனேகமாக இன்று
பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள்
. பெண்களுடைய ஒழுக்கம் பற்றி
பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் பெண்கள் எதிரில் வரும்பொழுது பார்வையை
தாழ்த்திக் கொள்கிறார்கள்!



இருசராருக்கும் கற்புண்டு என்பதை
ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்
! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர
வேண்டும்.]


o அதிகாரம் படைத்த
ஆண்கள் எந்த விஷயத்திலும் பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து விடுவார்கள்.



o அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள்
செல்வதை குறையாக காண்பவர்கள் அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு
இவர்கள் செல்வதை குறையாக எண்ண மாட்டார்கள்.



o அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம்
திறந்து செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப்
பெண்களை இவர்கள் பார்ப்பதை குறையாக நினைக்க மாட்டார்கள்.

o அந்நிய
ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள்
பேசுவார்கள்.


இப்படியாக கற்பின் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது
என்பதாக நினைத்து வாழும் முஸ்லீம் ஆண்கள் குர்ஆனையும் ஹதீஸையும்
புரட்டிப்பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்
.


கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%200590small

அல்லாஹ்
திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான
அல்
அஹ்ஸாப் – ன் 35 ஆவது வசனத்தில்; இஸ்லாம், ஈமான், இறைவழிபாடு, உண்மை, பொறுமை, இறையச்சம், தான தர்மம், நோன்பு, கற்பொழுக்கம், திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை
குறிப்பிட்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம்
செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான்.



இதோ அந்த திருவசனம்;

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்;

நன்னம்பிக்கை
கொண்ட ஆண்களும், பெண்களும்;


இறைவழிபாடுள்ள
ஆண்களும், பெண்களும்;


உண்மையே
பேசம் ஆண்களும், பெண்களும்;


பொறுமையுள்ள
ஆண்களும், பெண்களும்;

(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன்
இருக்கும் ஆண்களும், பெண்களும்;



தர்மம்
செய்யும் ஆண்களும், பெண்களும்;


நோன்பு
நோற்கும் ஆண்களும், பெண்களும்;


தங்கள்
வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்;


அல்லாஹ்வை
அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் -


ஆகிய
இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும்
சித்தப்படுத்தியிருக்கின்றான்.
” (33:35)


இதில் ஒன்பதாவதாக தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும்
ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்என்று கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ்
வலியுறுத்துகிறான். அதிலும்
பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிட்டிருப்பதை எவரும் கண்டு
கொண்டதாகத்தெரியவில்லை.



கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%200590small

திருமணமாகாத நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும்
பெண்ணையும்
, ஆணையும் நூறு கசையடி அடியுங்கள் என்றுள்ள
அல்குர்ஆனின் 24/2
வது வசனத்தின் மூலமாக
கூறி, ஒழுக்கம் தவறும்போது இருபாலரும் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் என்பதை தெளிவு படுத்துகின்றான்.

ஃகாத்திமிய்யா
என்ற வமிசத்தை சார்ந்த பெண்ணொருத்தி திருமணம் முடித்த பின்
விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு, ”யா
ரசூலல்லாஹ், நான் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்என்று கூறியபோது அப்பெண்மணியை நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். அதுபோல் மாயிஜ் என்ற நபித்தோழர் தவறான உறவு
வைத்து விட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது
அவரையும் கல்லெறிந்து கொல்லச்செய்தார்கள்.


ஒரு பெண் அந்நிய
ஆணின் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு உறவு கொள்ளப்படும்போது தன் கற்பு
சூறையாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதுபோல்
அமெரிக்காவில் படித்துக்கொடுக்கும் ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய
மாணவனிடத்தில் தவறான உறவு வைத்தபோது
எங்களது குடும்பப் பையனின் கற்பு சூறையாடப்பட்டு
விட்டது
என்று
மாணவனின் உறவுக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர் என்ற பத்திரிகை
செய்தி பெண்ணுக்கு கற்பு இருப்பது போல் ஆணுக்கும் கற்புண்டு என்பதை
நிரூபித்தது.



இருசராருக்கும் கற்புண்டு என்பதை
ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்
! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர
வேண்டும்.



கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%200590small

இறை உதவி ஆணுக்கும் பெண்ணுக்கும்


கற்பொழுக்கத்திற்கு பெயர் போனவர்கள் ஹளரத் மர்யம்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
. எந்த அந்நிய
ஆணையும் சந்தித்திராதவர்கள். ஆனால், கணவன் இல்லாத இவர்கள் ஹளரத் ஈஸா
அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தபோது ஊர்மக்கள் தூற்றினார்கள். அப்போது தொட்டில் குழந்தையாக இருந்த ஈஸா
அலைஹிஸ்ஸலாம் அவர்களை பேச வைத்து மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
கற்பொழுக்கத்தை நிரூபித்தான் ஏக இறைவன்.


அதுபோலவே யூஸூஃப்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை நாடி வந்த அரசியிடமிருந்து தன்னை பாதுகாத்துக்
கொள்கிறார்கள்
.
ஒழுக்க சீலராக நடந்து
கொள்கிறார்கள். ஆனால், தன்
ஆசைக்கு இணங்காத யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்மீது அவப்பெயரை அரசி
ஏற்படுத்துகிறார்.
இந்த நேரத்தில் அரசியின்
குடும்பத்தை சார்ந்த ஒரு தொட்டில் குழந்தையை பேச வைத்து யூஸூஃப்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனதை இறைவன் நிலைநாட்டினான்.



இதுபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
முன் வாழ்ந்த ஜுரைஜ் என்ற நல்ல மனிதருடைய விஷயத்திலும் இதேபோன்ற ஒரு
சம்பவம் நடை பெற்றதாக
ரியாளுஸ்ஸாலி
ஹீன்எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் ஈமானுள்ள
ஆண்களுக்கு நல்ல படிப்பினைகளாகவே திகழ்கின்றன.



கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%200590small

கற்பொழுக்கத்தை இழக்கச் செய்யும் செயல்கள்


o அந்நியப் பெண்களைப் பார்ப்பது இரு கண்கள் செய்யும் விபச்சாரம்.


o அந்நியப் பெண்களை பற்றி பேசுவது நாவு செய்யும் விபச்சாரம்.


o அந்நியப் பெண்களை தொடுவது கரம் செய்யும் விபச்சாரம்.
o அந்நியப் பெண்கள் இருக்கும்
இடத்திற்கு நடந்து செல்வது கால்கள் செய்யும் விபச்சாரம்
. (அல் ஹதீஸ்)


மேற்கூறப்பட்ட ஹதீஸின் மூலம் ஒரு ஆணோ, பெண்ணோ தகாத உறவு கொள்வதின் மூலம் மட்டுமே
கற்பொழுக்கத்தை இழக்கிறார்கள் என்பதல்ல; தகாத
பார்வை, செவி, தொடுதல், பேசுதல், நடப்பது
போன்றவற்றின் மூலமாகவும், கற்பொழுக்கத்தை
இழக்கிறார்கல் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு
படுத்துகிறார்கள்.



கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%200590small

பார்வை


இவைகளில்
எல்லவற்றிலும் மனிதனை அதிகமாக வழி தவறச்செய்யக்குடியது பார்வை
. பார்வையை ஒரு மனிதன் தன் கட்டுப்பாட்டில்
வைத்துக் கொண்டால் இன்ஷா அல்லா ஹ் நிச்சயம் அவன் கற்பொழுக்கத்தில்
மிகப்பெரிய வெற்றியைக் காணுவான். எனவேதான்
திருமறையிலும், திருநபி போதனைகளிலும் பார்வை பேணுதலைப்பற்றி
அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

நபியே! முஃமினான ஆண்களுக்கு நீங்கள்
கூறிவிடுங்கள் அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக்கொள்ளட்டும்
(அல் குர் ஆன் 24:30)


இந்த வசனத்தை எத்தனை ஆண்கள் பின்பற்றுகிறார்கள்
என்பது ஒருபுறம் இருக்கட்டும்
,.எத்தனை
ஆண்களுக்கு இப்படியொரு வசனம் திருக்குர்ஆனில் இருக்கிறது என்பது தெரியும். பெண்களை எச்சரித்து பேசக்கூடியவர்கள் இந்த
வசனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டியது அவசியமல்லவா?!

தீய பார்வை ஷைத்தானின்
விஷமூட்டப்பட்ட அம்புகளில் ஒன்று
” (அல் ஹதீஸ்)


ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்
;

அலீயே! யதார்த்தமாக அந்நிய பெண்ணின் மீது
முதல் முறையாக உமது பார்வை பட்டு விட்டால் இரண்டாவதாக அதே பெண் மீது உம்
பார்வையை தொடராதே
! ஏனெனில் முதல் பார்வையினால் உமக்கு குற்றமுமில்ல. ஆனால், இரண்டாவது பார்வை உமக்கு
அனுமதிக்கப்பட்டதல்ல
.” (அல் ஹதீஸ்)


பார்வையை
பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள்
. நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்
பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள். அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு
நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய
ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் இதனைப்
பின்பற்றுகின்றனர்.



கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%200590small

ஹளரத் மூஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு பயணத்தில் ஓர்
இடத்திற்கு வருகிறார்கள்
. அங்கு ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு பெண்
மக்கள் தங்களின் கால்நைடைகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
உதவுகிறார்கள்.


வீட்டிற்கு சென்ற இரு பெண்களில் ஒருவர்
திரும்ப வந்து எங்களின் தந்தை உங்களை அழைத்தார்என் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வீட்டிற்கு
அழைத்துச் செல்கிறார். செல்லும்போது
வழிகாட்டுவதற்காக அப்பெண்மணி முன்னே செல்கிறார்.


நடக்கும்போது அப்பெண்ணின் கால் பகுதியில் ஆடை
சற்று விலகுவதைப் பார்த்த முஸா அலைஹிஸ்ஸலாம், தங்களின் பார்வையை பாதுகாத்துக் கொள்வதற்காக
அப்பெண்ணை பின்னால் வரச்சொல்லிவிட்டு தானே முன்னால் சென்றார்கள் என
திருமறையின் விரிவுரைகள் நம் வாழ்க்கையின் படிப்பினைக்கக இந்நிகழ்வை
எடுத்துச் சொல்கின்றன.


ஸஹாபாக்கள் ஒரு
யுத்த்திற்காக நாடு கடந்து செல்கிறார்கள் அந்நாட்டை நெருங்கியபோது முஸ்லீம்
எதிரிகள் முஸ்லீம்களை முறியடிப்பதற்காக தந்திரம் செய்கிறார்கள்
. அதாவது பல நாட்களாக மனைவியர்களைப் பிரிந்து
வாழும் இந்த முஸ்லீம்களை பெண்களைக் கொண்டு தான் வீழ்த்த வேண்டும். அதன்படி ஊரின் ஆரம்பத்திலுள்ள கடைத்தெரு
வழியாகவே இஸ்லாமிய படை நுழைய வேண்டும். எனவே, தங்களுடைய இளம் வாலிபப் பெண்களை அரைகுறை
ஆடையுடன் கடைத்தெருவில் நிற்க வைத்துவிட்டு நீங்கள் இங்கு வருகின்ற முஸ்லீம்
வீரர்களை தொட்டு சீண்ட வேண்டும்
என்றும் யோசனை சொல்லித்தருகிறார்கள்.



ஊரை நெருங்கிய ஸஹாபாக்களுக்கு நிலைமை தெரியவந்த போது
இஸ்லாமிய படைத்தளபதி உபைதுப்னுல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு
, போர் வீரர்கள் அனைவரும் பார்வையை
தாழ்த்தும்படி கட்டளையிடுகிறார்கள். எல்லா
ஸஹாபாக்களும் பார்வையை தாழ்த்தியவர்களாக ஊருக்குள் நுழைகிறார்கள். இவர்களின் இந்த செயல் யுத்தமில்லாமல் வெற்றி
கிடைக்க காரணமாகிவிட்டது. நின்றிருந்த
பெண்களும், ஊர்மக்களும் இஸ்லாத்தை தழுவினார்கள் என
இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.



உலக
அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும்
பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

புலி பசித்தாலும் புல்லைத்
திண்ணாது
என பழமொழி கூறுவார்கள். அதுபோல் பெண்களிடம் எவ்வளவுதான் கலாச்சார
சீர்கேடுகள் வந்தாலும் ஒரு நல்ல தரமான முஃமின் தன் கற்பொழுக்கத்தை
ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்
.


வல்ல ரஹ்மான் சீர்கேடுகள் நிறைந்திருக்கும்
இக்காலத்தில் கற்பொழுக்கமுள்ள வாழ்க்கை வாழும் பாக்கியத்தை நம்
அனைவருக்கும் தந்தருள்வானாக
!


கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் End_bar
[url=http://www.eegarai.net/]جَزَاكَ اللَّهُ خَيْرًا -
மவ்லவி கே.எஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 12:31 pm

தகவலுக்கு நன்றி நண்பரே
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Thu Jul 08, 2010 8:17 am

அனைத்து ஆண்களும் உணர வேண்டிய படைப்பு.

நன்றி.



காதர் சுல்தான்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 08, 2010 9:20 am

ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் படித்து உணரவேண்டிய அருமையான, இக்காலகட்டத்திற்குப் பயனுள்ள பதிவைத் த்ந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி..



கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Aகற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Aகற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Tகற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Hகற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Iகற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Rகற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Aகற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jul 08, 2010 9:27 am

Aathira wrote:ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் படித்து உணரவேண்டிய அருமையான, இக்காலகட்டத்திற்குப் பயனுள்ள பதிவைத் த்ந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி..

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Jul 08, 2010 9:55 am

Aathira wrote:ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் படித்து உணரவேண்டிய அருமையான, இக்காலகட்டத்திற்குப் பயனுள்ள பதிவைத் த்ந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி..

ஆதிரா சொன்னது போல் இக்காலகட்டத்திற்கு பயனுள்ள பதிவு அசீம்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



Be Happy always

கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 08, 2010 10:18 am

கண்டிப்பாக இருபாலாரும் கற்பை பாதுகாக்க வேண்டும் என்ற இந்த பதிவு சிறப்பானது பதிந்தமைக்கு
ஜஸாக்கள்ளாகு கைர்



நேசமுடன் ஹாசிம்
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jul 08, 2010 10:21 am

ஹாசிம் wrote:கண்டிப்பாக இருபாலாரும் கற்பை பாதுகாக்க வேண்டும் என்ற இந்த பதிவு சிறப்பானது பதிந்தமைக்கு
ஜஸாக்கள்ளாகு கைர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக