புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 5:39 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 5:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
5 Posts - 4%
prajai
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
4 Posts - 3%
jairam
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
1 Post - 1%
kargan86
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
97 Posts - 54%
ayyasamy ram
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
51 Posts - 28%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
9 Posts - 5%
prajai
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
7 Posts - 4%
Jenila
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
2 Posts - 1%
jairam
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
2 Posts - 1%
viyasan
தண்ணீர் தேசம் Poll_c10தண்ணீர் தேசம் Poll_m10தண்ணீர் தேசம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தேசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 3:02 pm

ஒன்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் சொந்த மண்ணை மிதிப்பதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது. குதிரை வண்டிகளும் மிதி ரிக்க்ஷாக்களும் நிறைந்திருந்த ரயில் நிலையத்தில் இப்போது ஆட்டோக்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. எஸ். எஸ். கலைவாணர் வீதியில் நிறைந்திருந்த குடிசைகளில் பல கட்டிடங்களாக உருமாறியிருந்தன.

மீன்பிடித் தொழில் மட்டுமே பிரதானமாயிருந்த ஊரில், துணிக்கடை, மருந்துக்கடை போல தெருக்கொரு டாஸ்மார்க் கடையின் போர்டுகளைப் பார்க்க முடிந்தது. சைக்கிள் குறைந்து ஸ்கூட்டரிலும், ஹீரோ ஹோண்டாவிலும் பறந்தபடி இருந்தார்கள் இளைஞர்கள். சைக்கிளின் பின்புறம் கேன் கட்டி வலம் வரும் பால்காரர்கள், எம்-80இல் போய்க் கொண்டிருந்தார்கள்.

புராண புண்ணியதலமாக மட்டுமே அறியப்பட்டிருந்த ஊர், முதல்முறையாக, அறிவியல்பூர்வமாகவும் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டது, அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகுதான்.

கடைவீதியில் டீக் குடிக்க நின்ற போது சூடாக போட்டுக் கொண்டிருந்த சுவிங்கத்தை எடுத்துத் தின்றேன். பழைய சுவை மாறாமலிருந்தது.
ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. கலர் டீவி, ப்ரிஜ், மெத்தையுடன் கட்டில், பச்சை வண்ண தொலைபேசி.. குளித்து சாப்பிட்டுவிட்டு, வழக்கமாக நண்பர்கள் கூடும் லாலா மிட்டாய்க்கடைக்குப் போகலாம் என்று கிளம்பினேன். மருதுபாண்டியர் சிலையைக் கடந்து நடந்து போய்க் கொண்டிருக்கும்போது எதிரில் வந்த டேங்கர் லாரி ஒன்று மோதுவது போல் வந்து நின்றது.

"டே(ய்).. சுந்தரம்..."

"பங்கா.. எப்படா வந்த?"

"நேத்திக்கு.."

"ஒரு போன் கூட பண்ணலியேடா... அதுசரி.. இப்ப எங்கடா போற.."

"சும்மா அப்படியே வந்தேன்டா"

"அப்ப சரி.. வண்டியில் ஏறிக்கோ, 'ஓலைக்குடா' வர போய்ட்டு வந்திடுவோம்"

ஏறிக் கொண்டேன்.

ராமேஸ்வரத்தைச் சுற்றி இருக்கும் பல மீனவ கிராமங்களில் ஓலைக்குடாவும் ஒன்று. ஊரின் வட கிழக்குப் பகுதியில் கடற்கரையை ஒட்டினாற் போலிருக்கும் கிராமம். முன்னூறுக்கும் குறையாத குடிசைகள். ஒரு தொடக்கப் பள்ளி, சின்ன தேவாலயம், மினி தபால் நிலையம் மட்டுமே கொண்ட சிற்றூர். மருத்துவ வசதிகளுக்கு கிராம மக்கள், ராமேஸ்வரத்திற்குத் தான் வருவார்கள்.

மருத்துவ தேவைகளுக்காக மட்டுமன்றி அவர்கள் ராமேஸ்வரத்துக்கு வருவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அது நல்ல தண்ணீருக்காக. நாடு பொன்விழா கண்ட பின்னும்கூட 'ஓலைக்குடா' போல பல கிராமங்களுக்கும் குடிதண்ணீர் வசதி மட்டும் ஏனோ வாய்க்கவில்லை. பல வருடங்களாக மக்கள் ஆறு கிலோமீட்டர் நடந்து வந்து, ஊருக்குள்ளிருந்துதான் குடிதண்ணீர் தூக்கிச் செல்வார்கள். சில சமயங்களில் சைக்கிளின் கேரியரில் இரண்டுபுறமும் குடம் கட்டிச் செல்லும் பெண்களையும் பார்க்கமுடியும். வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓலைக்குடா போன்று பல கிராமங்கள் உள்ளன.

"ஏண்டா.. இன்னுமா அங்ஙன தண்ணிப் பிரச்சனை தீரல?"

"ஆமாண்டா.. வர்றவனுங்க எல்லாம் இத முடிச்சிட்டுத் தான் மறுவேல பார்ப்பானுங்க.. போடா..."

"ஏண்டா சலிச்சுக்கிற.. உனக்குத்தான் பணம் கெடைக்குமில்ல?"

"டே.. எனக்கு வெறும் சம்பளம் தாண்டா.. தண்ணி வித்து காசு பார்க்கிறவங்க வேற ஆளுங்கடா.."

"ஒலகம் முழுக்க தண்ணி விக்கறாங்க.. நம்மூர்ல விக்கிறது புதுசு இல்லடா.. ஆமா! ஓலக்குடா இன்னும் அப்படியேதா இருக்கா"

"ம்ம்.. நீ போனப்ப இருந்த ஊரு இல்லடா இப்ப.. ரொம்ப மாறிப்போச்சு.. ஊருக்குள்ளாற டெலிபோன் வசதியெல்லாம் வந்திருச்சு. தார் ரோடு போட்டுடாய்ங்க.! ரெண்டு மூணு பெரிய ஸ்டோர்ஸ் எல்லாம் வந்துடுச்சுடா.."

"ஆனா, குடிக்க தண்ணி மட்டும் இன்னும் சொமக்குறாய்ங்கன்னு சொல்லு"

"அடப் போடா இவனே.. ! தண்ணிய சொமக்குற காலமெல்லாம் மலையேறிப் போச்சுடா.. தேவைக்கு ஒரு போன்! தண்ணி சப்ளைக்குன்னே ஊருக்குள்ளாற ஏழு டேங்கர் ஓடுது"

எங்கள் பேச்சினிடையே கிராமத்தில் நுழைந்துவிட்டோம். முதலில் இருந்த வீடுகளில் இருந்து குடத்துடன் பெண்கள் காத்திருந்தார்கள். டேங்கர் லாரி நின்றதும் நாகசுந்தரம், கிளீனருடன் நானும் கீழே இறங்கினேன்.

முதல் வீட்டிலிருந்து ஒரு கட்டையானவர் வந்து டேங்கரின் பைப் அருகில் நின்று கொண்டு குடத்துக்கு இரண்டு ரூபாய் வசூலித்து தண்ணீர் விடத் தொடங்கினார். அவர்தான் தண்ணீர் ஏற்பாடு செய்துதருபவராக இருக்கலாம். டேங்கருக்கு மொத்தமாக பணம் கொடுத்து, கிராமத்தில் சில்லரையாக வசூலித்துப் பணம் பண்ணும் சின்ன முதலாளி!

கிளீனரை மட்டும் விட்டு விட்டு வண்டியின் முன்பக்கம் வந்தோம். சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை நீட்டியபடியே நாகசுந்தரம் கேட்டான். "விட்டுட்டியா?"



தண்ணீர் தேசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 3:03 pm

"நா விட்டுட்டேன்.. அது தான் விட மாட்டேங்குது.." என்றபடி எடுத்து பற்ற வைத்தேன்.

"மாப்ளே கிறிஸ்டோபரைப் பார்க்கலாம்னு நெனைக்கிறேன். வர்றியா?"

"இல்லடா.. வண்டிய ஓட்டணும். நீ வேணா அவே வீட்லேயே ஒக்கார்ந்து பேசிகிட்டிரு.. நா வண்டியோட வர்றேன்"

கிறிஸ்டோபரின் வீடு ஊரின் கடைசியில் இருந்தது. அவனும் எங்களோடு படித்தவன் தான். நான் ஊரை விட்டு போன சில மாதங்களிலேயே, மணவிழா பத்திரிக்கை அனுப்பி இருந்தான். வாழ்த்துத் தந்தி கூட அனுப்ப முடியாமல் போய்விட்டது.

நடக்க.. நடக்க.. நிறைய மாற்றங்களைக் கிராமத்தில் பார்க்க முடிந்தது. குடிசையாக இருந்த துவக்கப் பள்ளி காங்கிரீட் கட்டிடமாக வளர்ந்திருந்தது. பல வீடுகள் மாடி வைத்து கட்டப் பட்டிருந்தன. தேவாலயத்தின் மேல் நியான் விளக்கில் சிலுவை செய்திருந்தார்கள். எல்லா வீட்டு வாசலிலும் குடத்துடன் பெண்கள் காத்துக் கிடந்தார்கள்.

பல வீடுகள் தங்களை மாற்றிக் கொண்ட போதும், கிறிஸ்டோபரின் வீட்டை அடையாளம் காண்பது சிரமமாக இல்லை. பழைய குடிசை மாறாமல், அப்படியே இருந்தது. வேலி மட்டையைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

"கிறிஸ்டோபா.."

"ஆரது..?" ஆண்குரல்.

"வெளியில வர்றது!"

சிறிது நேரத்துக்குப் பின் வெற்றுடம்புடன் துண்டு மட்டும் கட்டியபடி வெளியில் வந்தார் கிறிஸ்டோபரின் அப்பா. ஒன்பது வருடங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தார். கண்களை இடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார்.

"ஆரப்பு... அடையாளந்தெரியலயே.."

"நாந்தாப்பா.." என்னை அடையாளப்படுத்திக் கொண்டதும் சட்டென உணர்ந்து கொண்டவராய்.."வாப்பூ.. நல்லாருக்கியா ராசா?" என்று கைகளைப் பற்றித் திண்ணையில் அமரச் சொன்னார்.

சிறிது நேரம் பழக்கம் பேசிக் கொண்டிருந்தோம். கிறிஸ்டோபர் கடலுக்குப் போயிருப்பதாகவும், அவன் மனைவி தண்ணீர் பிடிக்கப் போயிருப்பதாகச் சொன்னவர், 'சென்னீ' என்று உள் நோக்கிக் குரல் கொடுத்தார். ஐந்து வயதில் ஒரு சிறுமி ஓடி வந்தது.

"ஓடிப் போய்.. பால்ராசு கடையில் சித்தப்பூக்கு ஒரு கலர் வாங்கியா.." என அக்குழந்தையை விரட்டினார்..

"அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்பா.. சொம்புல தண்ணி கொடுங்க போதும்" என்றேன் நான்.

"ஒரு சொட்டு தண்ணீ கூட இல்லப்பூ. இருந்ததுல ஒல வச்சிருக்கா.. மருமக எடுத்துட்டு வந்தாத் தான் தண்ணியே! நம்ம ஊருக்குள்ளார பெரிய கடையெல்லாம் வந்தாச்சுப்பூ..ஏ.. ஓடு.!" என்று ஜென்னியை முடுக்கிவிட, அது ஓடிவிட்டது.

பல வருடங்கள் கழித்து.. மணமான நண்பனைப் பார்க்க வெறுங்கையோடு வந்தது மனதை உறுத்தியது. பழக்கம் பேசிக் கொண்டிருக்கும்போதே.. குழந்தை ஜென்னி வந்து நின்றாள்.

அவள் கையில் வியர்த்து வழிந்தபடி இருந்தது "லெஹர் பெப்ஸி" பாட்டில்!.

எஸ்.பாலபாரதி



தண்ணீர் தேசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 4:27 pm

உண்மைதான். தண்ணிருக்குத்தான் சிரமம். இவையெல்லாம் ஈசியாகக் கிடைத்து விடுகிறது.இயல்பான நிகழ்வு. நல்ல பதிவு.. நன்றி சிவா
தண்ணீர் தேசம் 678642 தண்ணீர் தேசம் 678642 தண்ணீர் தேசம் 154550 தண்ணீர் தேசம் 154550
(தண்ணீர் தேசம் என்றவுடன் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் என்று நினைத்துவிட்டேன்.. )



தண்ணீர் தேசம் Aதண்ணீர் தேசம் Aதண்ணீர் தேசம் Tதண்ணீர் தேசம் Hதண்ணீர் தேசம் Iதண்ணீர் தேசம் Rதண்ணீர் தேசம் Aதண்ணீர் தேசம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 4:53 pm

சிவா wrote:
Aathira wrote:உண்மைதான். தண்ணிருக்குத்தான் சிரமம். இவையெல்லாம் ஈசியாகக் கிடைத்து விடுகிறது.இயல்பான நிகழ்வு. நல்ல பதிவு.. நன்றி சிவா
தண்ணீர் தேசம் 678642 தண்ணீர் தேசம் 678642 தண்ணீர் தேசம் 154550 தண்ணீர் தேசம் 154550
(தண்ணீர் தேசம் என்றவுடன் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் என்று நினைத்துவிட்டேன்.. )


நீங்கள் அனுப்பிய கவிப்பேரரசின் தண்ணீர்தேசம் பதியும் முன்னர் உங்களை ஏமாற்றத்தான் இந்தப் பதிவிட்டேன்.. தண்ணீர் தேசம் 705463

விரைவில் நீங்கள் விரும்பும் தண்ணீர்தேசம் வெளிவரும்!

இப்படியெல்லாம் திட்டம் போட்டு வேலை நடக்குதா சிவா.. தண்ணீர் தேசம் 246975
உங்களால இன்னொரு நல்ல கதையைப் படித்தேனே.. தண்ணீர் தேசம் 705463 தண்ணீர் தேசம் 705463

(என் அருமைச் சகோதரனிடம் ஏமாறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்... தண்ணீர் தேசம் 168113 தண்ணீர் தேசம் 168113 )

தண்ணீஈ தேசமும் பல முறை படித்ததுதான். வைரமுத்துவின் கடல் (அறிவியல்) அறிவு கண்டு வியந்து இருக்கிறேன்.... தண்ணீர் தேசம் 154550 தண்ணீர் தேசம் 154550



தண்ணீர் தேசம் Aதண்ணீர் தேசம் Aதண்ணீர் தேசம் Tதண்ணீர் தேசம் Hதண்ணீர் தேசம் Iதண்ணீர் தேசம் Rதண்ணீர் தேசம் Aதண்ணீர் தேசம் Empty
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010
http://kirichchaan.blogspot.com/

Postகெர்ஷோம் Mon Apr 19, 2010 11:14 am

அருமையான பதிவு!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 19, 2010 12:01 pm

உண்மைதான். தண்ணிருக்குத்தான் சிரமம். இவையெல்லாம் ஈசியாகக் கிடைத்து விடுகிறது.இயல்பான நிகழ்வு. நல்ல பதிவு.. நன்றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக