புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_m10நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 14, 2010 8:25 am

ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்கள் இன்னும் நமது நீதிபதிகளின் மேசை மேலமர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதானிருக்கிறது. இதைத் தவறாகப் பொருள்படுத்த வேண்டியதில்லை. பல நாடுகள் ஆங்கிலேயச் சட்டத்தை அடிப்படையாக வைத்தே தங்களது நீதித்துறையைச் செப்பனிட்டு வளர்த்தன. ஆனால் சில ஆங்கிலேயச் சட்டங்கள் இன்று தேவையற்றுப் போயும் நடைமுறையில் அமலாகிக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு Criminal law amendment act - ஐ சொல்லலாம்.

இரண்டாவது உலக யுத்த சமயத்தில், மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கினார். யுத்தத்தை எதிர்த்து ஒருவர் பொது இடத்தில் பிரச்சாரம் செய்வார். அவரைக் கைது செய்து சிறையிலடைத்தாலும், வன்முறை எதிலும் ஈடுபடாத காரணத்தினால் சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளி வந்து மீண்டும் பிரச்சாரம் செய்வார். இதைத் தவிர்ப்பதற்காக அன்றைய ஆங்கிலேய அரசு, இவ்வாறு கைதானவர்கள் ஜாமீனில் வெளிவராமல் தடுக்க 'Criminal law amendment act' ஐ அறிமுகப்படுத்தியது. இன்றைக்கும் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருவது யாரை ஒடுக்க ?...

அடிப்படையில் ஆங்கிலேய காலத்துச் சட்டத்தைச் சார்ந்திருந்தாலும், நமது சட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் நலம் சார்ந்த சட்டங்கள் இந்திய விடுதலைக்குப் பின்பே உருவாக்கப்பட்டவை. அப்பொழுதெல்லாம் ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை. வ. உ.சி. க்கு விதிக்கப்பட்ட இரண்டு ஜென்ம தண்டனை என்பது நாற்பது வருட கடுங்காவல் தண்டனையே ஆகும். இப்பொழுது ஆயுள் தண்டனை பதினான்கு ஆண்டு சிறை வாசமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. சாட்டையடி போன்ற ஈவிரக்கமற்ற தண்டனைகளும் ஒழிக்கப்பட்டு விட்டன. சர்வசாதாரணமாய்ப் புழங்கிக் கொண்டிருந்த தூக்கு தண்டனை இப்பொழுது மிகவும் அரிய குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. (ஆனால், இன்னமும் எடுத்ததற்கெல்லாம் தூக்குதண்டனை கொடுத்து அதை ஒரு கேலிப் பொருளாக மாற்றிய, மாற்றிக் கொண்டிருக்கும் பெருமை திரைப்படங்களுக்கு உண்டு) அப்படியும் மக்கள் நம்பிக்கையை நீதிமன்றங்கள் இழந்து வருகின்றன. மேம்படுத்துதல் நடைபெறாத எந்தத் துறையும் ஒட்டடை படிந்தே காணப்படும். இன்றைய நீதித்துறை, வழக்குகளை விசாரிக்க ஏற்படுத்தும் காலதாமதம் எதனால் ஏற்படுகிறது?

சாதாரணமாகக் கொலை வழக்குகள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் போன்றவை துரிதமாக நடைபெறும். (அப்படியும் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு' முடிவதற்குள் இரு தேர்தல் காலம் முடிவடைந்து விட்டது). சாதாரண வழக்குகள் சவ்வு போல இழுத்துக்கொண்டே போகும். சாதாரணமாக ஒரு பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட வழக்கு முடிவதற்குப் பத்து ஆண்டுகளாகின்றன.

இந்தியச் சட்டத்தில் விரைவில் வழக்கை முடிப்பதற்கு எவ்வித வழியும் இல்லை. ஆனால் வழக்கைத் தாமதப்படுத்த அநேக வழிகள் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் வழக்குகள் குறைவாய் இருந்தன. அப்பொழுது கடைப்பிடிக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள் இன்றைக்குப் பயன்படாது. எனினும் ஆங்கிலேயர் காலத்து நீதிமன்ற நடைமுறைகளே இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு எண் வழங்குவதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. அதற்குப் பின் அனுப்பப்படும் சம்மன்களை எதிர்த்தரப்பு, நிர்வாக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து 'எதிர்த்தரப்பினர் ஊரில் இல்லை' எனச் சொல்ல வைத்து, ஆறு மாதத்திலிருந்து ஓராண்டு வரை இழுத்தடிக்கலாம். 'வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ, 'வழக்கில் ஈடுபடுத்தப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ ஆயிரமாயிரம் பொய் சொல்லி 'வாய்தா' க்கள் வாங்கலாம்.

நீதிமன்றம் தொடங்கிப் பத்தரை மணி முதல் பன்னிரெண்டரை மணி வரை இரண்டு மணி நேரம் நீதிபதி வழக்கு எண் போடுதல், தேதி கொடுத்தல் போன்ற பணிகளுக்கே சரியாகப் போய் விடுகிறது. இது போன்ற நிர்வாகப்பணிகள் நீதிபதியின் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும். வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தல் என்பது மட்டுமே நீதிபதியின் பணியாக இருக்க வேண்டும்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழக்குத் தொடங்குவதற்கு ஒரு மாத கால அவகாசமும், முடிவதற்கு ஓராண்டு கால அவகாசமும் மட்டுமே தரப்படுகின்றன. வழக்கில் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகவில்லையெனில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படும்.

வழக்குகள் தூரிதமாக நடைபெற மக்கள் நீதிமன்றங்கள் என்றழைக்கப்பட்ட 'லோக் அதாலத்' அறிமுகப்படுத்தப்பட்டது என்னவோ உண்மை. ஆனால், இரு தரப்பினரும் விரும்பினால் மட்டுமே வழக்கினை 'லோக் அதாலத்தில்' நடத்த முடியும். இதனால் பெரும்பாலான வழக்குகள் வழக்கமான நீதிமன்றங்களிலேயே நடைபெறுகின்றன.

நவீன விஞ்ஞான வளர்ச்சியைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதது நீதித்துறை பற்றிய மற்றொரு குறையாகும். இந்திய சாட்சிய சட்டம் (Indian evidence act) மாற்றப்பட வேண்டியது காலத்தின் தேவையாகிறது. ஜெராக்ஸ் பிரதிகளை எதிர்த்தரப்பு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே நீதிமன்றம் சாட்சியமாக அங்கீகரிக்கும். விடியோ பதிவுகள் போன்றவை இரண்டாம் தர சாட்சியமாகக் கருதப்படுமே தவிர முதன்மை சாட்சியாக (Primary evidence) ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. தீர்ப்பு நகல்களை நீதிமன்றத்திலிருந்து பெறுவதற்கே கூட சில நேரங்களில் ஏழெட்டு மாதங்களாகி விடுகின்றன.

D.T.P. போன்ற நவீன வசதிகளை உபயோகப்படுத்தினால் உத்தரவு நகல்கள் ஓரிரு வாரங்களில் தயாராகிவிடும். உயர்நீதிமன்றத்தில் பெயில் கொடுப்பதற்கு அச்சடிக்கப்பட்ட 'format' உபயோகப்படுத்துகிறார்கள். அதை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்கலாம்.

நீதிமன்றத்தில் உடனடியாகக் களைந்தெறியப்பட வேண்டியவைகளில் முதன்மையானது ஊழல். உச்ச நீதிமன்றத்திலிருந்து பெஞ்ச் நீதிமன்றம் வரை ஊழல் என்பது தலைவிரித்தாடுகிறது. நீதிபதியின் தேர்வுக்கு அவரது குணத்தை விட செல்வாக்கே கருத்தில் கொள்ளப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

நீதித்துறையை ஆராய்வதற்கென பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் பொழுது செய்தித்தாள்களில் இடம் பெறுவதைத் தவிர இந்தக் கமிஷன்கள் பெரும்பாலும் மக்கள் தொடர்பற்றே இருக்கின்றன. பல ஊர்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறியப்படாமலே கமிஷன்கள் செயல்படுவது எவ்வித நன்மையையும் பயக்கப் போவதில்லை. தேங்கிக் கிடக்கும் வழக்குகள், கமிஷன் அறிக்கைகளைக் கிடப்பில் போடுவது போன்றவற்றை மாற்றவே இன்னும் அரசாங்கம் முயலாதபொழுது அரசாங்க அமைப்பின் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவது அரசியல் நகைச்சுவையாகிவிட்டது.



நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 14, 2010 8:26 am

மக்களைப் பற்றிய அக்கறை கொண்ட எந்தவொரு சமுதாய அரசியலமைப்பும் தனது குறைகளை நிவர்த்தி செய்தபடி மேலும் மேலும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும். அரசியலமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யாத இந்திய அரசாங்கம், சில விஷயங்களில் எவ்வளவு வேகமாய்ச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணத்திற்குப் பஞ்சாப் தீவிரவாதிகளின் நவீன ஆயுதங்களை எதிர்கொள்ள அம் மாநிலக் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட ஸ்டென் துப்பாக்கிகள் இன்று எல்லா மாநிலக் காவல்துறையினர் கைகளிலும் காணக் கிடைக்கிறது!

ரப்பர், பிளாஸ்டிக் குண்டுகள், தண்ணீர் பீரங்கி என்று பொதுமக்களிடையே அதிகம் சேதத்தை, உயிர்ப்பலியை ஏற்படுத்தாத ஆயுதங்களை வெளிநாட்டுக் காவல்துறையினர் பயன்படுத்தும்போது, இங்கிலாந்து இறக்குமதிச் சட்டங்களை இன்னமும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் நாம், பொதுமக்களுக்கெதிராகக் காவல்துறையினர் கையாளும் வன்முறை ஆயுதங்களுக்கு மட்டும் இன்னமும் விடை கொடுக்காமல் இருப்பது வன்முறைக்கு மேலும் வித்திடுவதாய் அமையாதா?

சந்தேகப்படும்படி இருப்பவர்களை சுட்டுக் கொல்ல வழிவகுக்கும் 'Supperssion of Disturbances Act', சொந்த நாட்டு மக்கள் மேலேயே ராணுவத்தை ஏவ வகை செய்யும் 'Armedforces (Special Powers)Act) இதற்கும் பஞ்சாப் தீவிரவாதிகளையே அரசாங்கம் மேற்கோள் காட்டியது - அரசாங்கத்தின் சுறுசுறுப்பிற்கு அத்தாட்சி. 'Armed forces (special powers) Act' ஆர்டிக்கல் இருபத்தி ஒன்றை மீறி அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் முடியும். இந்தியர்களின் அடிப்படை உரிமையைப் பற்றி சிறிதளவும் யோசிக்காத பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் 'இராணுவத்தை நாட்டு மக்களுக்கு எதிராகத் திருப்பும் பாணி' இன்றும் புதிய சட்டங்களின் மூலமாய் நிலவி வருவது இந்திய ஜனநாயக நாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள சவாலே. தடா (Terrorist and disruptive activities (prevention) Act) சட்டம் இன்று வழக்கொழிந்து போனாலும், இச்சட்டத்தைக் கையிலெடுத்த அரசாங்கம் மக்கள் நலனில் எவ்வளவு தூரம் அக்கறையுடையதாய் இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது.

'மக்கள்நலன்' என்பதைப் பற்றிய இந்திய அரசியலமைப்பு முன்னுரை (Constitution Preamble), மக்கள் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் வகுக்கப்பட்டுள்ள இந்திய சட்ட அமைப்பு மூன்றாவது நான்காவது பிரிவுகள் எவ்வித ஆக்கபூர்வமான மாற்றத்தையும் காணாது இருக்கும் நிலையில் மக்களை நோக்கிய அரசாங்கத்தின் வன்முறை அதிகரித்து வருகின்றன.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அதிலாபாத் மாவட்டம் 3 லட்சம் பழங்குடி மக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி மக்கள், நில ஆக்கிரமிப்பாளர்களால் துரத்தப்பட்டு இன்று மாவட்ட மக்கள் தொகையில் 17 சதவீதமே உள்ளனர். இத்தகைய 'குழு இடமாற்றங்கள்' நடைபெறாமல் தடுப்பதே இந்திய அரசின் கடமைகளில் ஒன்று என வரையறுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நிலங்களை நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவது மாவட்ட ஆட்சியாளரின் பொறுப்பு. இவை நடைபெறாதபொழுது, பழங்குடி மக்கள் நக்ஸலைட் இயக்கத்தை நோக்கிக் கவர்ந்திழுக்கப்பட்டது எவ்வித வியப்பையும் ஊட்டவில்லை. புதிய மாவட்ட ஆட்சியாளர் 'Scheduled areas land transfer regulation Act 1959' அமுல்படுத்தத் தொடங்கியவுடன் அவர் நக்ஸலைட்டுகளுக்குச் சாதகமாக இருக்கிறார் என்று பழங்குடியினர் அல்லாதவர்களும், எல்லாப் பாராளுமன்றக் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. பழங்குடி இளைஞனைப் பிடித்து வந்து சுட்டுக் கொன்று நக்ஸலைட்டுகளைச் சுட்டுக் கொன்றோம் என்று கதைகட்டும் காவல்துறையினர் எதிர்த்ததற்காக அந்த மாவட்ட ஆட்சியாளர் அதிலாபாத் மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டார்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஓய்னம் கிராமத்தில் 'அசாம் ரைபிள்ஸ்' என்னும் இராணுவப் பிரிவு பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேரைக் கொன்றது. பத்து பெண்கள் பாலியல் சித்ரவதைக்குள்ளானார்கள். நூறு வீடுகளும், சர்ச்சுகளும் அழிக்கப்பட்டன.

இச் சம்பவத்திற்குப் பிறகு சேனாபதி மாவட்டத்தினுள் அம் மாவட்ட ஆட்சியாளர், காவல்துறைக் கண்காணிப்பாளர் நுழைவதைக் கூட தடை செய்ய 'அசாம் ரைபிள்ஸ்' பிரிவினால் முடிந்தது. குவாஹாத்தி உயர்நீதி மன்ற ஆணையின் பேரில் இம்பால் செக்ஷன்ஸ் நீதிமன்றம் இச் சம்பவத்திற்கு சாட்சியங்களைத் திரட்ட முயன்ற பொழுது, சாட்சியங்களைக் கடத்துவதும், வழக்கறிஞர்களை மிரட்டுவதும், அவர்கள் வீட்டைப் பரிசோதிப்பதுமாக 'அசாம் ரைபிள்ஸ்' பிரிவு தொல்லை கொடுத்துக் கொண்டேதான் இருந்தது.

'Armed forces (Special Powers) Act. 1958, Criminal Law amendent Act, 1908, 1932, 1938, 1952, 1961, 1983 என தொடர்ச்சியாக இந்திய அரசாங்கம் காவல்துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் மேன்மேலும் அதிகாரங்கள் வழங்கும் நிலையில் இந்திய நீதிமன்றங்களில் ஒரு வழக்கு தொடங்கி அதற்கு எண் கொடுக்கப்படுவதற்கு ஒரு மாதமும், சம்மன்கள் கொடுக்கப்படுவதற்கு ஒரு ஆண்டு வரையிலும் இழுத்தடிப்பும், அதன்பின் வாய்தாக்கள் மேல் வாய்தாக்களாய்த் தீர்ப்பு வழங்கப்பட பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். இந்நிலையில் ஊழலும் அதிகாரப் துஷ்பிரயோகங்களும் மிகுந்து வருவது இயற்கையே.

தகவல் உதவி : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், எஸ்.வி. ராஜதுரை. 'THE LAWYERS' இதழ்



நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 8:49 am

நல்ல தெளிவான விரிவான வழக்கறிஞர் செந்தில்நாதனின் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! 154550 நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! 678642



நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Aநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Aநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Tநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Hநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Iநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Rநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Aநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 14, 2010 9:59 am

Aathira wrote:நல்ல தெளிவான விரிவான் வழக்கறிஞர் செந்தில்நாதனின் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! 154550 நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! 678642
சியர்ஸ் சியர்ஸ் நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 14, 2010 10:00 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 16, 2010 8:18 pm

சிறந்த முறையில் வழக்கறிஞர் செந்தில்நாதனின் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக