புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்புங்கள் நடக்கும் Poll_c10நம்புங்கள் நடக்கும் Poll_m10நம்புங்கள் நடக்கும் Poll_c10 
21 Posts - 66%
heezulia
நம்புங்கள் நடக்கும் Poll_c10நம்புங்கள் நடக்கும் Poll_m10நம்புங்கள் நடக்கும் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்புங்கள் நடக்கும் Poll_c10நம்புங்கள் நடக்கும் Poll_m10நம்புங்கள் நடக்கும் Poll_c10 
63 Posts - 64%
heezulia
நம்புங்கள் நடக்கும் Poll_c10நம்புங்கள் நடக்கும் Poll_m10நம்புங்கள் நடக்கும் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நம்புங்கள் நடக்கும் Poll_c10நம்புங்கள் நடக்கும் Poll_m10நம்புங்கள் நடக்கும் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நம்புங்கள் நடக்கும் Poll_c10நம்புங்கள் நடக்கும் Poll_m10நம்புங்கள் நடக்கும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புங்கள் நடக்கும்


   
   
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 08, 2010 9:56 pm

நம்பிக்கை. நிச்சயமாக இது ஒரு மந்திரச்சொல். இந்த மந்திரச்சொல்லை மனதில் பதித்து அடிக்கடி உச்சரித்து உழைத்த பலர் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள். இந்த பூமிக்கு வந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் முதலில் தன் தாயின் கைபிடித்து நடக்கிறான். ஒரு கட்டத்திற்கு பின்னர் நம்பிக்கையின் கையைப் பிடித்து நடக்கத் தொடங்குகிறான். கைகளை இழந்தவர்கள் கூட நம்பிக்கைகளை தங்கள் கைகளாகக் கொண்டு பலவிதமான சாதனைகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இரண்டு கைகள் உள்ள பலரும் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொலைத்த வண்ணம் இருக்கின்றனர்.

என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கும் என்று ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம். இப்படி ஏங்கித் தவித்தால் போதுமா? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் முழு நம்பிக்கையோடு செய்யப் பழக வேண்டும். ஒரு ஊரில் வருடக்கணக்கில் மழை பெய்யவில்லை. ஊர் மக்கள் மழைக்காக ஒரு யாகம் நடத்தினார்கள். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்த யாகத்தில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் குடையோடு வந்திருந்தான். பலர் அவனை விநோதமாய் பார்த்தார்கள். சிலர் கேலி யும் செய்தார்கள். வீடு திரும்பும்போது நிச்சயம் மழை வரும் என்று அவன் நம்பிக்கையுடன் பதிலளித்தான். இளைஞனின் நம்பிக்கை ஜெயித் தது. அவனைத் தவிர அனைவரும் மழையில் நனைந்து கொண்டே வீடு திரும்பினார்கள்.

மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம். வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டைவிட்டு புறப்படு கிறோம். ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

வில்பர் ரைட், ஆர்வில் ரைட் என்ற ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கள். விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே சின்னஞ்சிறு வயது முதலே இருந்து வந்தது. ஏன் ஒரு வைராக்கியம் என்றே சொல்லலாம்.

சிறுவயதில் ரைட் சகோதரர்கள் தங்கள் தாயாருடன் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். ஆற்றங்கரையில் ஒரு பறவை பறந்து செல்வதைக் கண்டார்கள். அப்போது வில்பர் ரைட் தன் தாயாரிடம் கேட்டான்.

“அம்மா நமக்கும் சிறகுகள் இருந்தால் நாமும் அந்த பறவையைப் போல பறக்கலாம் அல்லவா?”

அம்மா முடியாது என்று சொல்ல வில்லை. அப்பொழுதே அவன் மனதில் நம்பிக் கையை விதைத்தாள்.

“நிச்சயம் பறக்கலாம் ரைட்”

உடனே வில்பர் சொன்னான்.

“அம்மா, என்றாவது ஒருநாள் பறந்தே தீருவேன்”

சின்னஞ்சிறு வயதில் என்ன ஒரு ஆழ்ந்த நம்பிக்கை ஆச்சரியம்தான்.

ஒருசமயம் தடிமனான அட்டைக் கொண்டு காற்றாடி ஒன்றைச் செய்து பறக்க விட்டார்கள். காற்றாடி தடினமாக இருந்ததால் அது அவர்களை மேலே இழுக்க முயற்சித்தது. அப்போது ஆர்வில் சொன்னான்.

“விரைவில் நம்மைச் சுமந்து செல்லும் ஒரு காற்றாடியை நாம் செய்தே தீர வேண்டும்”

வில்பரும் “நிச்சயம் செய்யலாம்” என்றான்.

ஒருநாள் வில்பர் தன் தந்தையிடம் நம்மைச் சுமந்து செல்லும் ஒரு காற்றாடியை நான் செய்யப் போகிறேன் என்றான்.

ஆனால் அவனுடைய தந்தையோ “அது முடியாது” என்றார்.

வில்பர் விடவில்லை.

“நிச்சயம் செய்வேன்” என்றான்.

சகோதரர்கள் கண்ட கனவு ஒருநாள் பலித்தது.

வடகரோலினா மாகாணத்தில் கிட்டிஹா என்ற இடத்தில் 1903ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் தாங்கள் வடிவமைத்த சிறிய கிளைடர் விமானத்தில் பறந்து காட்டினார்கள். நம்பிக்கை ஜெயித்தது. முடியாது என்ற சொல் வெட்கித் தலைகுனிந்தது.

நம்மில் பலருக்கு தம்மீதே நம்பிக்கை இருப்பதில்லை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல தோல்விகளுக்கு இந்த எண்ணமே காரணமாகி விடுகிறது. நாம் முதலில் நம் மீது திடமான நம்பிக்கை வைக்க வேண்டும்., அப்போதுதான் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். இந்த எண்ணம் தோன்றிவிட்டால் தொட்டதெல்லாம் வெற்றி தான். நம்மை நம்பாத போது தாழ்வு மனப் பான்மை நம் மனதில் வந்து சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டு நம்முடைய செயல்களை முடக்கி விடுகிறது.

அமெரிக்காகவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக் காவைக் கண்டுபிடித்தார். அட்லாண்டிக் பெருங் கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.

பயணம் பலமாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டது. அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களை காதில் வாங்கவே மறுத்துவிட்டார். திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்றுவிட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.

ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப் பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரி கிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந் தார். உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார் கள். அச்சமயத்தில் கொலம்பஸ் சந்தோஷத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற் பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது.

தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.

கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவருடைய பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.

நம்பிக்கை என்பது சாதனை தொடர் பான விஷயம் மட்டுமல்ல. அது வாழ்க்கை தொடர்பானதும் கூட. நம் வாழ்க்கையில் அன்றாடம் தோன்றும் பிரச்சனைகளுக்கு மூல காரணம் நாம் பிறரை முழுமையாக நம்பாததாகும். நம்முடைய பெற்றோர் நமக்கு நல்லதே செய்வார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வேண்டும். நாம் நம்முடைய குழந்தைகளை நூறு சதவிகிதம் நம்ப வேண்டும். நம்முடைய மனைவி உன்னதமானவன் என்ற நம்பிக்கை ஒவ்வொரு ஆண் மகனுக்கும் இருக்க வேண்டும். நம் கணவன் சத்தியவான் என்று மனைவி நூறு சதவிகிதம் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை எப்போது பொய்த்துப் போகத் தொடங்குகிறதோ அக்கணமே குடும்பத்தில் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் தோன்றத் தொடங்கிவிடுகிறது.

நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர்களுடன் மட்டுமே பழக வேண்டும். அப்போதுதான் நமக்கும் அவர்களைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சிலர் எதற்கெடுத் தாலும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். புலம்பல்கள் அடுத்தவர்களைப் பற்றி குறை கூறுதல், பொறாமையோடு பேசுதல் போன்ற வற்றைத் தவிர்த்து எப்போதும் பாஸிட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசிப் பழக வேண்டும். தோல்விகளைக் கண்டு பயப்படவே கூடாது. தொடர்ந்து தோற்பவர்கள் ஒருநாள் ஜெயித்துத் தான் ஆக வேண்டும். இந்த நியதியை யாராலும் மாற்ற முடியாது.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க சுமார் ஆயிரம் முறை பல விதமாக சோதனைகளைச் செய்ததாகச் சொல்லு கிறார்கள். அவர் செய்த ஆயிரம் சோதனைகளும் தோல்வியிலேயே முடிந்தன. பின்னர்தான் வெற்றிகரமான மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஒருவர் இதைப்பற்றி தாமஸ் ஆல்வா எடிசனிடம் கேட்டாராம்.

“ஆயிரம் முறை தோல்விகளைச் சந்தித்தீர் கள். ஆயினும் நீங்கள் சோர்ந்து போய்விட வில்லையே? இது எப்படி உங்களுக்கு சாத்திய மாயிற்று?”

இதற்கு தாமஸ் ஆல்வா எடிசன் “ஒவ்வொரு முறையும் என் சோதனை தோற்கும் போதும் ஒரு சோதனையை எப்படி செய்யக் கூடாது என்று கற்றுக் கொண்டேன். நான் ஒருபோதும் தோற்றதாகக் கருதவேயில்லை” என்றாராம். இது ஒரு பாசிட்டிவ் அணுகுமுறை. இதுபோன்ற அணுகுமுறையை நீங்கள் கடைபிடிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள். உறுதியாய் நம்புங்கள். நிச்சயம் நினைத்தது நடக்கும். உங்கள் கனவெல்லாம் பலிக்கும். வாழ்க்கை தேனாய் இனிக்கும்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed May 19, 2010 6:18 pm

தன்னம்பிக்கையளிக்கும் கட்டுரையைத் தந்தமைக்கு
மிக்க நன்றி
நம்புங்கள் நடக்கும் 677196 நம்புங்கள் நடக்கும் 677196

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed May 19, 2010 8:42 pm

பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி



நம்புங்கள் நடக்கும் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed May 19, 2010 9:45 pm

நம்புங்கள் நடக்கும் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
subbu.v1987
subbu.v1987
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 19/04/2010

Postsubbu.v1987 Sat Jun 05, 2010 10:16 am

இதை போல தன்னம்பிக்கையை நான் மிகவும் விரும்புகிறேன் அன்பு நண்பரே. அருமை மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல "
முயசிப்பவானே மனிதன்..//
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 10:17 am

srisivaerd wrote:தன்னம்பிக்கையளிக்கும் கட்டுரையைத் தந்தமைக்கு
மிக்க நன்றி
நம்புங்கள் நடக்கும் 677196 நம்புங்கள் நடக்கும் 677196

நன்றி ரமீஸ் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 10:25 am

நல்ல தகவல் ரமீஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நம்புங்கள் நடக்கும் Logo12
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 08, 2010 11:11 pm

        




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக