புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_m10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_m10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_m10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10 
52 Posts - 59%
heezulia
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_m10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_m10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_m10உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை)


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 20, 2010 12:26 am

உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை)





உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Smalarnews_72347658873






ஒரு அழகான குளத்தில், ஒரு தவளை வசித்தது. அது தன் குரலை
மிகவும் கவர்ச்சியான குரல் என்று மற்ற தவளைகளிடம் பெருமை பேசிக் கொண்டது.
''என்
குரல் போல் யாருக்கு வரும். நான் வாயைத் திறந்து பாடினேன் என்றால், மாலதி, மால்குடி சுபா, உஷா உதூப் எல்லாம் பிச்சை வாங்கணும். அவர்களைப் போன்ற குரல் வளம்தான் எனக்கு.
உங்கள் குரலையெல்லாம் கேட்டால் அக்கம் பக்கத்தில் உள்ள விலங்குகள் எல்லாம் காத தூரம் ஓடி விடும்!'' என்று கூறி மமதையுடன் சிரித்தது.
''அய்யோ... இவன் பெருமைக்கு எல்லையே இல்லையா?''
அந்தத் தவளையை மற்ற தவளைகளுக்குப் பிடிக்கவே
பிடிக்காது. காரணம்... தலைக்கனம் தான்.
''இவனது தலைக்கனத்திற்கு என்றாவது
ஒருநாள் சரியான பாடம் கிடைக்கத்தான் போகிறது!'' என்று சொல்லி ஒதுங்கியே வசித்தன மற்ற தவளைகள்.
ஒரு நாள் —
தலைக்கனம் பிடித்த அந்தத் தவளைக்கு பாட ஆசை வந்தது.
உடனே, அது நீரை விட்டுக் கரைக்கு வந்தது.
''இப்போது நான் பாடப் போகிறேன். என்
குரலின் இனிமை என்னையே மயங்க வைக்கப் போகிறது!'' என்று நினைத்தபடி வாயைத் திறந்து கத்த ஆரம்பித்தது.
மற்ற தவளைகள் நீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தன.

''கத்த ஆரம்பித்து விட்டான். இனி மாலை வரை வாயை மூட மாட்டான். இந்தத் தலைக்கனம் பிடித்தவனுக்கு எப்பொழுது தான் பாடம் கிடைக்கப் போகிறதோ!'' என்று அவை முணுமுணுத்தன.
கத்த ஆரம்பித்த தவளை, தனது குரல் இனிமையைக் கேட்க எந்த விலங்காவது
வருகிறதா என்று அவ்வப்போது தன் கண்களை ஸ்டைலாக சுழற்றிப் பார்த்துக் கொண்டது. நேரம் ஆக ஆக அதன் சுதி கூடியது.
அதே சமயம் —
அந்தக் குளத்தின் சிறிது தூரத்திற்கு
அப்பால் உள்ள மரத்தின் அடியில், உண்ட களைப்பால் ஓய்வெடுக்க நினைத்து ஒரு சிங்கம் வந்து படுத்தது.
அதற்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. மெல்ல அது இமைகளை
மூடியபோது, கொரக், கொரக்... என்ற சப்தம் அதன் காதில் விழுந்தது. இடைவிடாது வந்த அந்த சப்தம் சிங்கத்தின் தூக்கத்தைக் கெடுத்தது.
சிங்கத்திற்கு ஒரே எரிச்சல்.
அதே சமயம், அந்த சப்தம் இதுவரை கேட்டிராத சப்தமாக இருப்பதால், தன்னை விட பலம் பொருந்திய ஏதோ ஒரு விலங்கின் சப்தமாக அது இருக்குமோ என்று நினைத்து பயந்தது.
மனதில் பயம் வந்தால் அதன் பிறகு உறக்கம் வருமா? சிங்கம் எழுந்து
சுற்றும் முற்றும் பார்த்தது. ''இதென்ன சப்தம்? யார் கத்துவது? எங்கிருந்து
வருகிறது?'' என்று நினைத்து ஊன்றிக் கேட்டது. அந்த சப்தம் வந்த திசையை அறிந்து மெல்ல பூனை போல அடிகள் வைத்து அங்கு சென்றது.
அங்கே ஒரு குளம் இருப்பதைப் பார்த்தது. அதோடு கரையில் நின்று கொண்டு ஒரு பெரிய தவளை கடூரமாகக் கத்திக் கொண்டிருப்பதையும் பார்த்தது.
அடச்சே! சிறிது நேரத்தில் கதிகலங்கச் செய்தது...
கேவலம் இந்த தவளையா? என்று நினைத்த சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. அது தவளையை முறைத்துப் பார்த்தது.
தன் குரல் இனிமையில் கவரப்பட்டு ஒரு சிங்கம் மிகவும்
அமைதியுடன் வந்து நிற்பதாக அந்தத் தவளை நினைத்துக் கொண்டு குளத்தில் இருந்த மற்ற தவளைகளைப் பார்த்து, ''பார்த்தீர்களா அங்கே! என் குரலின் இனிமையை கேட்டு காட்டின் அரசனான சிங்க ராஜாவே வந்திருக்கிறார். எங்கே ஆர்ப்பாட்டமாக வந்தால் என் பாடல் தடைப்படுமோ என்று நினைத்து சிறிதும் ஓசையின்றி வந்து நின்று, அமைதியுடன் கேட்டு
ரசிக்கிறார் பாருங்கள். இப்பொழுதாவது என் குரலின் மகிமையை உணர்ந்து கொண்டீர்களா?''
என்று கூறிவிட்டு மறுபடியும் கத்த ஆரம்பித்தது.
''ஓஹோ! திமிர் பிடித்த தவளையா,
நீ? உன் குரலின் இனிமை கேட்டா நான் வந்தேன். என் தூக்கத்தைக் கெடுத்த உன்னை என்ன
செய்கிறேன் பார்!'' என்று முணுமுணுத்தபடி கத்திக் கொண்டிருந்த தவளையின் மேல்
பாய்ந்தது.
தனது முன் காலைத் தூக்கி ஒரே அடி. என்ன, ஏது என்று உணர்வதற்குள் அந்த
தவளை நசுங்கி உயிர்விட்டது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற தவளைகள்,
''தலைக்கனம் பிடித்தவனுக்குச் சரியான பாடம் கிடைத்துவிட்டது!'' என்று எண்ணி
நீரூக்கடியில் மூழ்கி மறைந்தன.
***



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உஷா உதூப் மாதிரி இல்ல... (சிறுகதை) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக