புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
13 Posts - 25%
prajai
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
1 Post - 2%
சிவா
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
1 Post - 2%
viyasan
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
1 Post - 8%
Rutu
திருவள்ளுவர் பக்கம் Poll_c10திருவள்ளுவர் பக்கம் Poll_m10திருவள்ளுவர் பக்கம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:16 pm

[You must be registered and logged in to see this image.]


திருக்குறள் பயன்

மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை சான்றோன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில்
ஒன்றச் செய்வதும் திருக்குறள்.
மதுரை இளங்குமரனார்

திருக்குறள் செம்பொருள் நுகர்வு

"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்"
"நன்றின்பால் உய்ப்ப தறிவு"

திருக்குறள் முழக்கங்கள்

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்"
"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை"
"திருக்குறள் நம் மறை"



திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் ஒப்பற்ற ஓர் உலகம்; அவர், வாழும் உலகத்தைத் தம்முள் கொண்டு, அவ்வுலகுக்காகத் தம் வாழ்வை ஒப்படைத்து, ஒப்பற்ற ஒரு நூலை ஆக்கிய பெருமகனார்.

திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றியவர்; தமிழகத்தில் வாழ்ந்தவர்; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', 'ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்', 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்னும் இத்தகைய பெருநெறி பற்றியவர். இறைமை முதல் எல்லாம் பொதுமைக் கண் கொண்டு நோக்கியவர்: மாந்தரைத் தெய்வ நிலைக்கு ஏற்றும் மாணெறி படைத்த தெய்வர்.

திருவள்ளுவர் பன்மொழிப் புலமையர்: தம் காலத்து வழங்கிய நூற் பரப்புகளையெல்லாம் கண்டவர்; உலகியல், உயிரியல், உணர்வியல், உடலியல், குடியியல், படையியல், பொருளியல், தொழிலியல், அரசியல், மருத்துவ இயல், அருளியல், மெய்யியல் முதலாம் பல்வகை இயல்களில் திறமான புலமையுற்றவர்.

திருவள்ளுவர் இயற்கை இன்ப இல்வாழ்வை ஏற்று, அறவழி நின்று, பொருளீட்டி, இன்பந்துய்த்து, அறிவறிந்த நன்மக்களைப் பெற்று, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு குடும்பக் கடமையும் நாட்டுக் கடமையும் நானிலக் கடமையும் சீருறச் செய்து சிறந்த செவ்வியர்.

சான்றோர்க்கு எந்நாடும் தம் நாடே என்றும், எவ்வூரும் தம் ஊரே என்றும், அறிவறிந்த நன்மக்கட்பேறு தம் பெற்றோரினும் இப்பேருலகுக்குப் பெருநலம் செய்யுமென்றும் உலகளாவிய பெருநெறி காட்டியவர்.

பெருமூதாளராக இலங்கிய நிலையில் தம் உண்மையறிவும் படிப்பறிவும் பட்டறிவும் மெய்யுணர்வுமாகிய எல்லாம் உலகை உய்விக்குமென்னும் அருளுள்ளத்தால் திருக்குறளை உலகுக்குத் தந்து தெய்வமாப் புகழ் எய்திய இறைமையர்.

இவை வள்ளுவ வழிக் கண்டவை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:17 pm

திருவள்ளுவர் ஆண்டும் நாளும்

சுறவத் (தை)த் திங்கள் ஐந்தாம் நாள் (18.1.1935) திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை பூண்டருளிய மறைமலை அடிகள், "கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்" என்று அறிவித்துத் திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். "திருவள்ளுவர் ஆண்டைக் கிறித்து ஆண்டுடன் 31 ஆண்டைக் கூட்டிக் கணக்கிட வேண்டும்" என்பது அடிகள் குறிப்பு. அதனை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்படலாயிற்று.

திருவள்ளுவர் நினைவு மலர், பக் 117

1969 -இல் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றபின் பொங்கலுக்கு அடுத்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டு அரசு விடுமுறை அளிப்பது என்றும் 1.1.1970 முதல் இது நடைமுறைக்கு வருமென்றும் ஆணை இட்டார்.

சுறவத் (தை)த் திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாள் என்று அரசு 1974 முதல் கொண்டாடி வருகின்றது.

திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடு அரசு ஏற்று 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:17 pm

திருவள்ளுவரைக் குறிக்கும் பிற பெயர்கள்:

செந்நாப் புலவர்
செந்தாப் போதார்
திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
தெய்வத் திருவள்ளுவர்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
தெய்வப் புலவர்
தேவர்
தேவர் திருவள்ளுவர்
தேவிற் சிறந்த திருவள்ளுவர்
நாயனார்
புலவர்
பெருநாவலர்
பொய்ய மொழியார்
பொய்யில் புலவர்
மாதாநுபங்கியார்
முதற் பாவலர்
வள்ளுவ தேவன்(ர்)
வள்ளுவர்

திருக்குறளைக் குறிக்கும் பிற பெயர்கள்

அறம்
இரண்டு
உத்தரவேதம்
எழுதுண்டமறை
குறள்
தமிழ்மறை
திருவள்ளுவப் பயன்
திருவள்ளுவர்
தெய்வநூல்
தெய்வமாமறை
நம் மறை
பழமொழி
பால்முறை
புகழ்ச்சி நூல்
பொது மறை
பொய்யா மொழி
பொருளுரை
முதுநெறி
முதுமொழி
முப்பால்
முப்பொருள்
மெய்வைத்தசொல்
வள்ளுவ தேவன் வசனம்
வள்ளுவம்
வள்ளுவ மாலை
வள்ளுவர்
வள்ளுவர் வாய்மொழி
வள்ளுவர் வைப்பு
வள்ளுவன் வாய்ச்சொல்
வாய்மை
வாயுறை வாழ்த்து



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:18 pm

திருக்குறளைத் தம்மில் ஒரு பகுதியாக வைத்துப் போற்றும் விளக்க நூல்கள்

இரங்கேச வெண்பா
சிவசிவ வெண்பா
சினேந்திர வெண்பா
சோமேசர் முதுமொழி வெண்பா
திருக்குறள் குமரேச வெண்பா
திருக்குறள் விளக்க வெண்பா
திருத்தொண்டர் வெண்பா
திருப் புல்லாணி மாலை
திருமலை வெண்பா
தினகர வெண்பா
பழைய விருத்த நூல்
முதுமொழி மேல் வைப்பு
முருகேசர் முதுநெறி வெண்பா
வடமலை வெண்பா
வள்ளுவர் நேரிசை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:19 pm

புகழ்மாலை

௧. பாடற் புகழ் மாலை
- திருவள்ளுவ மாலைத் தொகுப்பு

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையது
-இறையனார்

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்
-கபிலர்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளவ வெல் லாம்அளந்தார் ஓர்ந்து
-பரணர்

தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந்நான்கும் -ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉல கென்னாற்றும் மற்று
-நக்கீரர்

பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் -சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்
-அரிசில் கிழார்

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் -போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்
-நத்தத்தனார்

ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் -தீதற்றோர்
உள்ளுதொறுள்ளுதொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு
-மாங்குடி மருதனார்

எல்லாப் பொருளும் இதன்பால் உளதிதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் -சொல்லால்
பரந்தபா வால்என் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை
-மதுரைத் தமிழநாகனார்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:20 pm

அறந்தகளி ஆன்ற பொருள் திரிஇன்பு
சிறந்தநெய் செஞ்சொல்தீத் தண்டு -குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கு; விளக்கு
-நப்பாலத்தனார்

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் அல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே -முப்பாலின்
தெய்வத் திருவள்ளு வர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து
-தேனீக்கடிக் கீரனார்

அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் -மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு
-கொடிஞாழல் மாணி பூதனார்

சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து -முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண்பா.
-கவுணியனார்

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
-இடைக்காடர்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
-ஔவையார்.

இடைக்கால - பிற்காலப் புலவர்கள் இயம்புவன -பாடல்

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன்
-கல்லாடனார்

என்னடிகள் வெண்குறள் நேர் அடியிரண்டும்
என்றலையில் இருத்தும் இறை
-சிவப்பிரகாசர்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகு கருதியும்
-பாரதியார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:21 pm

வள்ளவர் செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளவரோ மநுவாதி
ஒருகலத்துக் கொருநீதி.
-பேராசிரியர் பெ. சுந்தரனார்

வள்ளுவர் தந்த திருமறையைத் -தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுப் போற்றுவமே -என்றும்
உத்தம ராகி ஒழுகுவமே.

புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் -வித்தகன்
தெய்வப் புலவன் திருவள்ளு வன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது
-கவிமணி

தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய
இடண்டடிகள்
அள்ளு தொறுஞ் சுவை உள்ளு தொறுணர்
வாகும் வண்ணம்
கொள்ளு மறம்பொருள் இன்ப மனைத்தும்
கொடுத்ததிரு
வள்ளு வனைப்பெற்ற தாற்பெற்ற தேபுகழ்
வையகமே
வானுக்குச் செங்கதிர் ஒன்று -புனல்
வண்மைக்குக் காவிரி ஒன்றுண்டுநல்ல
மானத்தைக் காத்துவாழ என்றுமிந்த
வையத்துக் கொன்று திருக்குறள்
-பாவேந்தர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Wed Mar 17, 2010 4:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:22 pm

உரைநடைப் புகழ்மாலை

திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு -உலகுக்குப் பொது.

திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம்.

திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்; அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் நின்றது. அவர் உலகம் ஆயினார்.. உலகம் அவராயிற்று. இத்தகைய ஒருவரிடமிருந்து பரிணமித்த ஒரு நூல் எந் நினைவையூட்டும்? அ·து உலக நினைவை ஊட்டுதல் இயல்பே. ஆகவே திருவள்ளுவர் நினைவு தோன்றும் போது உலகமும் உடன் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை.

திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் தெய்வ மறையினிடத்தில் எனக்குத் தணியாக காதல் உண்டு. காரணம் பலப்பல. சில வருமாறு: திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப்பால் விடுத்தது. அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது. பெண்ணை வெறுத்தல முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது. மனமாசு அகற்றலே துறவென்று இயற்கை நுட்பத்தை விளக்கியது. இயற்கைப் பொது நெறியை அறிவுறுத்தியது. இன்ன பிற.

-திரு வி.க.

செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழிவகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்;

வள்ளுவர் தனிப்பொது நெஞ்சம் யாது?

செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால் செயலே வள்ளுவம் எனச் செய்க.

திருக்குறள் கருத்து வகையால் உலகமக்கட்கு எல்லாம் உரியது எனினும், மொழிகாரணமாய் நமக்கு உறவுடையது. ஆதலில் அதனை உள்ளவாறு நாம் உணர்தலும், உணர்ந்தவாறு மொழிபெயர்த்து உலகிடைப் பரப்பலும் நம் கடன். ஞாலத் திருக்குறளை உரிய தமிழ் வாயிலாகக் கற்க முயலுமின்! முயலுமின்! என்ற உணர்ச்சியைப் பிறமொழி மாந்தர்க்கு ஊட்டலும் நம் பொறுப்பு.

-மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கனார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 4:22 pm

திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, 'தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு' என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள்.

தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட காப்பியங்களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டி தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்.

-மறைமலையடிகள்.

தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் மக்கள் உய்யத் திருவாய் மலந்தருளிய தமிழ்மறை. உலகிருள் அகற்ற வந்த ஒற்றைத் தனியாழிப் பரிதி என்னின்; 'மனத்துக் கண் மாசிலனாதல் அனைத்தறன்' என்னும் குறட்பா அவ்வாழியின் அச்சாணி எனத்தக்க அருமை உடையதாதல் கண்டு உணர்ந்து உளங்கொளற் பாற்று.

-நாகை சொ. தண்டபாணியார்.

வள்ளுவர் குறள் தமிழில் தனிமுதல் அறநூலே.

-நாவலர் பாரதியார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக