புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
4 Posts - 5%
Rutu
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
2 Posts - 2%
prajai
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
2 Posts - 2%
Jenila
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:40 pm

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத் திருத்தலம் 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் ஒன்றாகும். ஸ்ரீ தேசிகரால் தோத்திரம் செய்யப்பட்டது இந்தத் தலம்.

சென்னையிலிருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள் யாவும் பாலுச்செட்டி சத்திரம் என்னும் ஊரில் நிற்கும். அங்கு இறங்கி ஐந்து நிமிட நேரம் நடந்தால் இத் திருத்தலத்தை அடையலாம்.

ஸ்ரீ இராமானுஜரின் முதல் குருவான யாதவப் பிரகாசர் வாழ்ந்த இடம் இது. எம் பாரும் இங்குதான் யாதவரிடம் வேதாந்தம் பயின்றார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியனால் இதன் முன் மண்டபம் கட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

ஜடாயு போரிட்ட திருத்தலம்

ஜடாயு - ராவணன் இடையே நிகழ்ந்த போரில், இறக்கைகள் வெட்டப்பட்டு உயிரைக் கையில் பிடித்தபடி ராமனுக்காகக் காத்திருந்தார் ஜடாயு. ராமச்சந்திரமூர்த்தி அவ்விடம் வந்தபோது ஜடாயு அவரிடம் விவரமெல்லாம் தெரிவித்தார். பின் அவர் ஆண்டவனின் திருவடி சேர்ந்தார். தன் தந்தையையே ஜடாயுவின் உருவில் கண்ட ராமபிரான் அவருக்கு அந்திமக்கிரியைகளைச் செய்தார். வேறு தூய்மையான இடம் கிடைக்காததால் தனது வலது தொடை மீதே அவருக்கு இறுதிக்கடன் செய்தார். தன் வில்லின் நுனியில் பூமியைக் கீறி- அதில் பாய்ந்து வந்த நீரில் நீராடி ஜடாயுவுக்கு நீர்க்கடன் செய்தார்.

ராமபிரான் ஜடாயுவின் பிரார்த்தனைக்கேற்ப ஸ்ரீ விஜயராகவப் பெருமாளாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருத்தலம்தான் திருப்புட்குழி.

இடம் மாறிய ஸ்ரீதேவி - பூதேவி

மூலவர் வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஜடாயுவை வலது தொடை மீது தகனம் செய்ய வைத்துக் கொண்ட நிலை. பொதுவாகப் பெருமாளுக்கு திருமகள் எனப்படும் ஸ்ரீதேவி வலதுபுறமும், நிலமகள் எனப்படும் பூதேவி இடப்புறமும் எழுந்தருளியிருப்பர். ஆனால் இந்தத் தலத்தில் தீயின் வெப்பம் தாளாத நிலையில் இவர்கள் இடம் மாறி திருமகள் இடதுபுறமும், நிலமகள் வலதுபுறமும் மாறி எழுந்தருளியுள்ளனர். இங்கு எழுந்தருளியிருக்கும் தாயாரின் திருநாமம் மரகதவல்லி.



வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:41 pm

ஜடாயு புஷ்கரணி

இங்குள்ள திருக்குளத்தில் தினமும் நீராடி ஒரு ஞாயிறு முதல் அடுத்த ஞாயிறு வரை பிரார்த்தனை செய்தால் அவர்கள் நன் மக்களைப் பெறுவார்கள். இந்தக் குளக்கரையில் தானம் செய்தால் திருவருளால் ஆயிரம் மடங்கு பலன் பெறுவர். இத் திருக்குளத்தின் கிழக்குக் கரையில் பெரிய உடையாருக்குத் தனி சந்நிதி உள்ளது.

மக்கட்பேறு வேண்டி ஜடாயு புஷ்கரணியில் அமாவாசையன்று காலை நீராடிவிட்டு மரகதவல்லித் தாயார் சன்னதியில் வறுத்த பயிரை மடியில் கட்டிக் கொண்டு, அன்று முழுவதும் விரதமிருந்து மறுநாள் காலை அந்தப் பயிரை அப்படியே தாயார் சன்னதியில் சேர்க்க வேண்டும். மகப்பேறு என்னும் பாக்கியத்தை அன்னை அருளும் அந்த நாளில் விடியற்காலையில் அந்த வறுத்த பயிர் முளைக்கும் என்பது பலரது நம்பிக்கை.

கோயிலுக்கு வெகு அருகில் ஜடாயு புஷ்கரணியும் இதற்குக் கீழ்த் திசையில் ஜடாயு சன்னதியும் உள்ளது. நேராக சன்னதித் தெருவும், கடைசியில் கோயிலைப் பார்த்தவாறு மேற்கு நோக்கி சிறிய திருவடி கோயிலும் அமைந்துள்ளன. உற்சவக் காலங்களில் பெருமாள் கோயிலை விட்டுப் புறப்பட்டு ஜடாயுவுக்கு மரியாதைகள் செய்துவிட்டு வாகன மண்டபம் எழுந்தருளுவார்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் புஷ்கரணியில் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு தலையில் சிறிது நீர் தெளித்துக் கொண்டு எதிரில் உள்ள ஜடாயுவை வணங்கிவிட்டுக் கோபுர வாசலைத் தாண்டியவுடன், வடக்கு நோக்கிக் கீழே வீழ்ந்து வணங்கிய பின்பு பிரதட்சிணமாக வர வேண்டும்.

ராமானுஜருக்கே முதல் மரியாதை

இங்கு அமைந்துள்ள ஆண்டாள் சன்னதியில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் உண்டு. பெருமாள் புறப்பாட்டின்போது ஒவ்வொரு முறையும் திரும்புகாலில் ஆண்டாளுக்கு சேவை சாதித்து அருளுகிறார். இந்த சன்னதியை ஒட்டினாற்போல உள்ளதுதான் ராமானுஜர் சிஷ்ய 'பாவத்துடன்' யாதவப் பிரகாசரின் முன்னாலிருப்பது போன்ற கல்வெட்டு.

இங்கு வலம் வர ஏற்றபடி ராமானுஜரின் சன்னதி தனிக் கோயிலாகவே அமைந்துள்ளது. இவர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தாலே பூவுலகம் முழுமையும் ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது. இவரது திருநட்சத்திரம் சித்திரை மாதம் திருவாதிரையில் சாற்று முறையாகப் பத்து நாள்கள் உற்சவம் உண்டு. திருப்புட்குழியில் குருகுலவாசம் செய்தவர் ஸ்ரீராமானுஜர். புறப்பாடுகளில் முதல் மரியாதை ராமானுஜருக்கும், இரண்டாம் மரியாதை ஜடாயுவுக்கும் தரப்படுகிறது.

நிலமகளின் அவதாரமான கோதைப் பிராட்டி பெருமாளுக்கு வலப்புறமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஸ்ரீ வேதாந்த தேசிகர் பெருமாளை நோக்கி சேவித்தவண்ணம் காட்சி தருகிறார்.

அமாவாசைப் பெருமாள் !

மரகதவல்லித் தாயாரின் சன்னதி பெருமாள் சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. தாயார் கிழக்கு நோக்கியபடி பத்மாசனத்தில் அமர்ந்து சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இடதுபுறம் தாயார் சன்னதி என்பது இன்னொரு சிறப்பம்சம். நவராத்திரி பத்து நாள்களும் தாயார் சன்னதியில் பெருமாள் சேர்த்தியில் சேவை சாதிக்கிறாள்.

தாயார் சன்னதியிலிருந்து பெருமாள் சன்னதிக்குத் தென்புறமுள்ள படிக்கட்டுக்களின் மூலமே வர வேண்டும். உற்சவ நேரம் இங்கு படி ஏற்ற சேவை உண்டு. பெருமாளுக்கு எதிரில் பெரிய திருவடி சன்னதி உண்டு. பெருமாள் ஆஜானுபாகுவாய்- சங்கு சக்கர தாரியாய் இடம் மாறிய ஸ்ரீதேவி - பூதேவிகளுடன் வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார். அமாவாசை அன்று பக்தர்கள் திரண்டு வந்து சேவிப்பதால் இவர் அமாவாசைப் பெருமாள் என்றும் பேர் பெற்றவர்.



வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக