புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
3 Posts - 6%
prajai
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
2 Posts - 4%
Rutu
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
1 Post - 2%
சிவா
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
1 Post - 2%
viyasan
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
2 Posts - 15%
Rutu
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_m10நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில்


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 07, 2010 5:05 am

எகிப்து தலைநகரான கெய்ரோவில் நடந்த ஆசிய _ஆப்பிரிக்க படவிழாவில், சிவாஜியின் "கட்டபொம்மன்" படம் கலந்து கொண்டது. அதில், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.

சிறு வயதிலேயே கட்டபொம்மனாக நடிப்பதில் சிவாஜிக்கு ஆர்வம் அதிகம். 1957_ல் படங்களில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்தாலும், சொந்தமாக "சிவாஜி நாடக மன்ற"த்தைத்தொடங்கி, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அரங்கேற்றினார்.

இதில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ரத்னமாலா அவர் மனைவியாகவும் நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், வடஇந்தியாவின் பல நகரங்களிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டு, பாராட்டு பெற்றது. 100 முறை இந்த நாடகம் மேடை ஏறியது.

சென்னையில் "கட்டபொம்மன்" நாடகத்துக்கு தலைமை தாங்கிய பேரறிஞர் அண்ணா, சிவாஜியின் நடிப்பைப் பாராட்டியதுடன், "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தினார். மூதறிஞர் ராஜாஜியும் இந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார்.

கட்டபொம்மனை திரைப்படமாகத் தயாரிக்க பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்துலு விரும்பினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சிவாஜி சம்மதித்தார். நாடகத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ண சாமி, படத்துக்கும் வசனம் எழுதினார். கட்டபொம்மன் வரலாற்றை புத்தகமாக எழுதிய "சிலம்புச் செல்வர்" ம.பொ.சிவஞானம், திரைக்கதை அமைப்பதற்கு ஆலோசனைகள் கூறினார். இசை: ஜி.ராமநாதன்; டைரக்ஷன்: பி.ஆர். பந்துலு.

கட்டபொம்மனாக சிவாஜிகணேசன், அவர் மனைவியாக எஸ்.வரலட்சுமி, வெள்ளையத்தேவனாக ஜெமினிகணேசன், வெள்ளையம்மாளாக பத்மினி, கட்டபொம்மனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கும் பானர்மேனாக ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.

வெள்ளையத்தேவன் வேடத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. ஆனால், கட்டபொம்மனுக்கு போட்டிப்படமான "சிவகங்கை சீமை"யில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதனால் கட்டபொம்மன் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார்.

எனவே, வெள்ளையத்தேவன் வேடத்தில் நடிக்கும்படி ஜெமினிகணேசனை கேட்டுக் கொண்டார்கள். அப்போது சாவித்திரி நிறை கர்ப்பிணியாக இருந்தார். கட்டபொம்மன் படத்தின் பெரும்பகுதி, ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பல நாட்கள் சாவித்திரியை பிரிந்திருக்க வேண்டுமே என்று ஜெமினி யோசித்தார். ஆனால் சாவித்திரி, "அண்ணன் (சிவாஜி) நடிக்கும் முக்கியமான படம். என்னைப்பற்றி கவலைப்படாமல் ஜெய்பூருக்கு போய் வாருங்கள்" என்றார். அதன் பேரில், ஜெமினியும் கட்டபொம்மன் குழுவினருடன் ஜெய்ப்பூர் சென்றார்.

மத்திய அரசின் அனுமதி பெற்று, இந்திய ராணுவத்தின் குதிரைப் படையையும், ராணுவ வீரர்களையும் பயன்படுத்தி சண்டைக்காட்சிகளை ஆங்கிலப்படங்களுக்கு நிகராகப் படமாக்கினார்கள். இது "டெக்னி கலர்" படம். லண்டனுக்கு சென்று பிரிண்ட் எடுத்தார்கள்.

16_5_1959_ல் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெள்ளி விழா படமாக அமைந்தது. கட்டபொம்மனை தன் அற்புத நடிப்பால் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார், சிவாஜி. "பராசக்தி", "மனோகரா" ஆகிய படங்களுக்குப்பிறகு, சிவாஜியின் சிம்ம கர்ஜனையை இப்படத்தில் கேட்க முடிந்தது.

"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப்பணி புரிந்தாயா?" என்ற வசனம், ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகியது.

எகிப்து தலைநகரான கெய்ரோவில், "ஆசிய _ ஆப்பிரிக்க பட விழா" 1960 மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" கலந்து கொண்டது. சிவாஜிகணேசன், பத்மினி, பி.ஆர்.பந்துலு மற்றும் சிலருடன் கெய்ரோ சென்று, இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தியாவைப் போல எகிப்தும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்த நாடு. எனவே, கட்டபொம்மன் படத்தை எகிப்தியர்கள் கைதட்டி ரசித்தனர். வெள்ளைக்கார அதிகாரிகளை எதிர்த்து சிவாஜிகணேசன் கர்ஜனை செய்யும் கட்டங்களில் பெரும் ஆரவாரம்!

ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான படங்களைப் பார்த்தபின், சிறந்த நடிகராக சிவாஜிகணேசனை நடுவர்கள் தேர்வு செய்தனர். சிறந்த நடிகையாக "லைலா மஜ்னு" படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த படத்துக்கான பரிசு "சாமர்கண்ட் இளவரசன்" என்ற ரஷிய படத்துக்கு கிடைத்தது.

சிறந்த ஆடல் _ பாடல் கொண்ட படம் என்று கட்டபொம்மனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பரிசைப் பெறுவதற்கு சிவாஜி கணேசன் மேடைக்கு சென்ற போது, ஆனந்த மிகுதியால் மயக்கம் வந்துவிட்டது! அவரை பத்மினி தாங்கிப் பிடித்துக் கொண்டார். கழுகு உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கேடயம் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழா நடைபெறும் சமயத்தில், அதிபர் நாசர் எகிப்தில் இல்லை. அவசர வேலையாக சிரியாவுக்கு சென்றிருந்தார். எனவே, வேறொரு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழா முடிந்ததும், நாசர் வீட்டுக்கு சிவாஜி சென்றார். அவர் மனைவியைச் சந்தித்தார்.

"என் கணவர்தான் இன்று பரிசு வழங்குவதாக இருந்தார். அவசர வேலையாக சென்று விட்டதால் இயலவில்லை" என்று அவர் தெரிவித்தார். "நாசர் அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, என் விருந்தாளியாக கொஞ்ச நேரமாவது தங்கவேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை அவரிடம் தெரிவியுங்கள்" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.

சிறந்த நடிகருக்கான விருதுடன் சென்னை திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். உள்பட நடிகர்_நடிகைகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.


ஆனால் இந்தியாவில்?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக