புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_m10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_m10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_m10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_m10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_m10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_m10தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 25, 2023 12:04 am

தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு? Rice10

ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சிறுதானியங்கள் உடல்நலத்துக்கு நல்லது எனக் கூறி, இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது.

`செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழ்நாடு அரசும் பின்விளைவு தெரியாமல் மக்களுக்கு அதை விநியோகிக்கிறது’ என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

செறிவூட்டப்பட்ட அரிசி


இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை (Fortified Rice) மத்திய அரசு அறிமுகம் செய்தது. முதலில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய நுண்ணூட்டச் சத்துகளைச் சேர்த்து ‘ஃபோர்டிஃபைடு கெர்னல்’ (Fortified Rice Kernel) அரிசி உருவாக்கப்படுகிறது. பிறகு சாதாரண அரிசியுடன் இந்த அரிசியை 100:1 விகிதத்தில் கலந்து செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது.

இதற்காக, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த அரசு, முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 112 மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோகத் திட்டம் வாயிலாக மக்களுக்கு விநியோகிக்கச் செய்தது. முதற்கட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி மாவட்டம் இடம்பெற்றது. அதன் பிறகு இரண்டாம் கட்டமாக விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 5.51 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த அரிசி வழங்கப்பட்டது.

உள்ளூர் அரிசியை என்ன செய்வது?


தற்போது இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 18.64 லட்சம் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ பயனாளர்கள், 96.12 லட்சம் முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள், 1.1 கோடி முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி கடந்த ஒரு மாதமாக வழங்கப்பட்டுவருகிறது. இதற்கு, தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள் சங்கத்தினர், ``ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சிறுதானியங்கள் உடல்நலத்துக்கு நல்லது எனக் கூறி, இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் ஊட்டச்சத்தை அதிகரிக்க, செயற்கை முறையில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதை எப்படி ஏற்க முடியும்... அரசுக்கு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு... மேலும், இந்த அரிசி வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது என்கின்றனர். அப்படியானால் உள்ளூர் விவசாயிகள் விளைவித்த அரிசியை எங்கே அனுப்புவது?” எனக் கேள்வி எழுப்பினர்.

கேரளாவில் தடை


அதேபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., ``தொடக்கம் முதலே இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருவதுடன், சட்டசபையிலும் என் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறேன். ‘இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என அமைச்சர் சொன்னார். ஆனால், இது பெரும் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதே மருத்துவர்கள் கருத்தாக இருக்கிறது. இதனால் நேரடியாக பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான் என்பதால், மற்றவர்கள் யாரும் எதிர்ப்பதில்லை. ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் பரவாயில்லையா... அரசு இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசியபோது, ‘`உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஒழுங்குமுறை விதி 7(4)-ல், தலசீமியா (மரபணு ரத்தசோகை) நோய் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரிவாள் செல் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக் கிறது. ஆனால், இது தொடர்பாக மக்களிடையே எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. அடுத்தகட்டமாக செறிவூட்டப்பட்ட உப்பு (ஐயோடின்+இரும்பு), பால், கோதுமை, மைதா ஆகிய உணவுப் பொருள்களையும் வழங்க அரசு முற்படுகிறது. பால் செறிவூட்டப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க F+ என பாக்கெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ரேஷனில் வழங்கும் அரிசிக்கு எந்தக் குறியீடுமில்லை. இதுவரை இந்த அரிசியால் ஏற்பட்ட விளைவுகளை வெளிப்படையாகச் சொல்லாமல், திட்டத்தைப் பரவலாக்குவது ஏற்புடையதல்ல. 100% மத்திய அரசு நிதி ஒதுக்கும் இந்தத் திட்டத்தில் இத்தனை சிக்கல்கள் இருப்பதைக் குறிப்பிட்டுத்தான், ‘எங்கள் மாநிலத்தில் விநியோகிக்க மாட்டோம்’ என கேரளா அரசு கூறியிருக்கிறது. தமிழகத்திலும் விநியோகிக்க மாட்டோம் எனச் சொல்லியிருக் கலாமே?” எனும் கேள்வியை முன்வைத்தார்.

நம்மிடம் பேசிய மருத்துவர்கள் சிலர், ``இந்தியாவில் 45% மக்கள் ரத்தசோகையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதைத் தடுக்க செறிவூட்டப்பட்ட அரிசியை அரசு தேர்ந்தெடுத்திருப்பது சரிதான். ஆனால், சோதனை அடிப்படையில் இதுவரை இந்த அரிசியைப் பெற்ற மக்களிடம், அரிசியால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து எந்த ஆய்வும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை” என்கின்றனர்.

இந்தச் சிக்கல்கள் குறித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் விளக்கம் கேட்டோம். ``செறிவூட்டப்பட்ட அரிசியை, சோதனையோட்டமாக தமிழக மாவட்டங்களில் விநியோகித்தோம். அவை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து எந்த ஆய்வறிக்கையும் மத்திய அரசு தரவில்லை. இருப்பினும், இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதனால் இதை அமல்படுத்தியிருக் கிறோம். மரபணு ரத்தசோகை, அரிவாள் செல் ரத்தசோகை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2,000 பேர் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட வாரியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு சாதாரண அரிசியை விநியோகிக்க உத்தரவிட்டிருக்கிறோம். இதற்காக மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுவருகிறது” என்றார்.


விகடன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

ஊட்டச் சத்திற்கான நடவடிக்கை தனியாக இருக்கவேண்டும்; அதை அரிசியில் கலந்து குழப்புவானேன்? இதன் உள்நோக்கம் என்ன? கேரளா அரசு வழிகாட்டியும் நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Oct 21, 2023 1:36 pm

செயற்கை முறையில் . உடலுக்கு ஒரு வேளை உபாதைகள் வருமா? வந்தால்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக