புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
3 Posts - 4%
prajai
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
3 Posts - 4%
Jenila
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
2 Posts - 2%
jairam
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
7 Posts - 5%
prajai
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
5 Posts - 4%
Jenila
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
4 Posts - 3%
Rutu
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_m10நான் இருக்கும்வரை நடக்காது..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இருக்கும்வரை நடக்காது..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 4:50 pm

நான் இருக்கும்வரை நடக்காது..! Vikatan%2F2023-02%2Fd72f07d4-08c1-4cc9-8d2d-bd9dc17ee115%2FUntitled_30

மனிதனும் அப்படித்தான். வெளியே அமைதியாக - ஆனந்தமாக இருப்பதாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் ஏதோவொரு சிந்தனை விழித்துக்கொண்டேதான் இருக்கும்.

கிராமத்தில் இருக்கும் வீடுகளில் பெரியது அது. பலரும் பல விஷயங்களுக்காக அந்த வீட்டுப் பெரிய மனிதரைப் பார்க்க வருவது வாடிக்கை. அன்று சாது ஒருவர் அந்த வீட்டுக்கு வந்தார்.

பெரிய மனிதர் படுத்திருந்தார். சாது அவரை நெருங்கி ``ஐயா’’ என்று குரல் கொடுத்தார்.

‘‘எனது அமைதியைக் கெடுக்காதீர்கள்!’’ என்றார் பெரிய மனிதர்.

உடனே சந்நியாசி சிரித்துவிட்டுச் சொன்னார், ‘‘கெடக்கூடிய நிலையில் இருந்தால், அது அமைதியே அல்ல!’’

உண்மைதான். எந்தச் சூழலிலும் நாம் அமைதியாக இல்லை என்பதே உண்மை. எரிமலைகள் வெளியே அமைதியுடன் திகழ்வது போன்று தோற்றம் தந்தாலும் உள்ளே எரிமலைக்குழம்பு கனன்றுகொண்டுதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் பீறிட்டு வெளிப்படலாம்.

மனிதனும் அப்படித்தான். வெளியே அமைதியாக - ஆனந்தமாக இருப்பதாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் ஏதோவொரு சிந்தனை விழித்துக்கொண்டேதான் இருக்கும். இப்படியான எவ்விதச் சிந்தையும் இன்றி ஒருவரால் வெளியேயும் உள்ளேயும் சும்மா கிடக்க முடிகிறது என்றால், அவரே மகா புருஷர் என்கின்றன நம் ஞான நூல்கள். கிடைத்தற்கரிய சொர்க்க வாய்ப்பு இது.

விஸ்வாமித்திரரின் மகன் அஷ்டகன். ஒரு முறை இவன், அசுவமேத யாகம் செய்தான். அழைப்பை ஏற்று அரசர்களும் முனிவர்களும் யாகத்துக்கு வருகை தந்தனர்.

யாகம் முடிந்ததும் அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி ஆகிய நால்வரும் ஒரே தேரில் சென்றனர். அப்போது எதிரில் நாரதர் வருவதைக் கண்டு அவரையும் தேரில் ஏற்றிக்கொண்டனர்.

``நாரதரே! நாங்கள் புகழ் மிக்க அரசர்கள். நீங்களோ சிறந்த மகரிஷி. இப்போது நம் ஐவரில், நால்வர் மட்டுமே சொர்க்கம் செல்லலாம் எனில், தேரிலிருந்து இறங்க வேண்டியவர் யார்?’’ என்று அவர்கள் கேட்டதும், ``அஷ்டகன்!’’ என்றார் நாரதர்.

``ஏன்?’’ - அரசர்கள் கேட்டனர்.

``நான், அஷ்டகனின் அரண்மனையில் இருந்தபோது பல்லாயிரம் பசுக்களைக் காட்டி, அவற்றைத் தானம் செய்து விட்டதாகப் பெருமிதத்துடன் கூறினான். செய்ததைச் சொல்லிக்காட்டிப் புகழ்ந்து கொள்பவனுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடையாது!’’ என்றார் நாரதர்.

உடனே, ``மூவர் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும் என்றால், நால்வரில் யார் இறங்க வேண்டும்?’’ என்று அரசர்கள் கேட்டனர்.

``இப்போது இறங்க வேண்டியவன் பிரதர்த்தனன். ஒரு முறை, இவனுடன் மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் சென்றேன். ஒருவர் பின் ஒருவராக மூன்று பெரியவர்கள் மூன்று குதிரைகளையும் தானமாகக் கேட்டுப் பெற்றனர். இழுப்பதற்குக் குதிரை இல்லாமல், தானே தேரை இழுத்தான் பிரதர்த்தனன்.

ஆனால், ‘எதைத்தான் தானமாகக் கேட்பது என்று இந்தப் பெரியவர்களுக்குத் தெரியவில்லையே!’ என்று மனதுக்குள் சலித்துக்கொண்டான். தானம் கொடுத்துவிட்டு நொந்துகொள்பவனுக்கு எப்போதும் சொர்க்கத்தில் இடமில்லை!’’ என்றார் நாரதர்.

``மூவரில் இருவருக்குத்தான் சொர்க்கத்தில் அனுமதி எனில் யார் இறங்க வேண்டும்?’’ என்று அரசர்கள் மீண்டும் கேட்டபோது, ``வசுமனஸ்’’ என்றார் நாரதர்!

``இவனிடம் உள்ள உயர்ந்த ரதத்தை ஒருவன் கேட்டபோது, ‘எனக்கு இந்த ரதத்தில் எந்த உரிமையும் இல்லை. எவர் வேண்டுமானாலும், எப்போதும் இதை என் அனுமதியின்றிப் பயன்படுத்தலாம்’ என்று நயமாகச் சொன்னானே தவிர, தானம் செய்வதைத் தவிர்த்தே வந்தான். வெறும் வார்த்தை தானம் சொர்க்கம் வழங்காது!’’ என்று விளக்கினார் நாரதர்.

இப்போது அடுத்த கேள்வியை அவர்கள் கேட்டனர், ``சரி, சிபியும் நீங்களும் தேரில் இருக்க... ஒருவர் இறங்கிவிட வேண்டும் எனில் யார் இறங்க வேண்டும்?’’

நாரதர் சட்டென்று சொன்னார், ``நானே!’’ என்று.

இதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த நாரதர் காரணத்தை விளக்கினார்.

``சிபி எந்த நாளிலும் தானத்தைப் புகழுக்காகவோ, புண்ணியத்துக்காகவோ செய்தவன் இல்லை. இல்லாதவருக்கு உதவுவதே இருப்பவனது கடமை என்று நினைப்பவன். நம்மில் சொர்க்கம் செல்ல அவனே முழுத் தகுதி உடையவன்!’’ என்றார் நாரதர்.

தற்புகழ்ச்சி, சலிப்பு, வார்த்தை ஜாலங்கள் போன்றவை யாவும் `நான்’ எனும் அகங்காரத்தால் விளைபவை அல்லவா? நான் எனும் எண்ணம் கொண்ட நெஞ்சில் அமைதி தங்கியதில்லை!

அன்பர் ஒருவர் ரமண மகரிஷியை தரிசிக்க வந்தார். அப்போது உணவு வேளை. பகவான் ரமணர் பக்தர்களுடன் சாப்பிட அமர்ந்தார். அவரை தரிசிக்க வந்த அன்பர் ஒருவர் பகவான் ரமணரை அணுகி, ‘`எனக்குச் சிறிது பிரசாதம் கொடுங்கள்!’’ என்று கேட்டார்.

அதாவது, ரமண மகரிஷி தனது உணவிலிருந்து சிறிது கொடுக்க வேண்டும் என்று விரும்பினார் அந்த அன்பர். அதை அவர் பிரசாதமாகக் கருதினார்.

இதை உணர்ந்துகொண்ட ரமணர், ‘`சாப்பிடுபவன்... ‘நான்’ என்ற எண்ணம் இல்லாமல் சாப்பிட்டால் அதுவே பிரசாதம்தான்!’’ என்றாராம்!

புத்தரிடம் யார் யாரோ சீடர்களாக இருந்து, ஞானம் பெற்றனர். ஆனால், ஆனந்தனுக்கோ புத்தர் கண் மூடிய கடைசி நாள் வரை ஞானம் கிட்டவில்லை.

புத்தர் மரணத்தின் மடியில் விழுந்த நாளில், ``இவ்வளவு காலம் உங்களுடன் இருந்தும் கைவராத ஞானம், இனிமேலா எனக்கு வாய்க்கப்போகிறது?’’ என்று வருந்தினான் ஆனந்தன்.

``ஆனந்தா! ‘எனக்கு மூத்தவன்’ என்பதை இன்று வரை நீ மறக்கவில்லை. அந்த நினைப்பில் உனக்கு ஒரு கர்வம் இருக்கிறது. நான் உன்னுடனேயே இருக்க வேண்டும், உறங்க வேண்டும் என்று நீ விதித்த நிபந்தனையை நான் ஏற்றுக்கொண்டேன். எனக்கே நிபந்தனை விதித்தவன் என்ற அகந்தையும் உன்னை விட்டு அகலவே இல்லை. ‘நான்’ இருக்கும் வரை, உனக்கு ஞானம் வர வாய்ப்பு இல்லை. ‘நான்’ இறந்ததும் ஒருவேளை நீ ஞானி ஆகலாம்’ என்று அருளினார்.

இந்த `நான்’ எனும் அகங்காரம், அமைதியை அழிப்பதோடு, தகுதியை உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை அறவே அற்றுப்போகச் செய்துவிடும். சுயத்தை இழக்கச் செய்யும். நம்மிடமிருந்து `நான்’ தொலையட்டும்; வாழ்க்கை மலரட்டும்!

விகடன்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm

அருமையான ஆன்மீக தகவல் .

ரசித்தேன்.

சிறந்த நீதி நெறி /விளக்கம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக