புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
18 Posts - 62%
heezulia
நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
60 Posts - 63%
heezulia
நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jul 24, 2022 12:37 pm

நானும் புத்தன் தான்!
நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி-604 408, பக்கங்கள் : 80 விலை : ரூ. 90
••••••
ஹைக்கூவில் தொடர்ந்து இயங்கி வரும் இனிய நண்பர். சக கவிஞர்களுக்கு அணிந்துரை நல்கி ஊக்குவிக்கும் மு. முருகேஸ், கவிஞர் அய். தமிழ்மணி, கவிஞர் அ. உமர் பாரூக்,நூலாசிரியரின் கணவர் க. முஹம்மது ஹனிபா ரிஜ்வான் ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்து உள்ளனர்.
நூல் ஆசிரியர் கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் அவர்களின் முதல் ஹைக்கூ கவிதை நூலான “விரலிடுக்கில் வெளிச்சம்” என்ற நூலின் மூலம் இலக்கிய உலகில் வெளிச்சம் பெற்றவர். கம்பம் இலாஹி தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார். பாராட்டுகள்.
பிள்ளையில்லா வீடு
துள்ளி விளையாடுகிறது
முதியவர் மடியில் நாய்க்குட்டி!
புகழ்பெற்ற சொலவடைகளை மாற்றி ஹைக்கூ எழுதுவதும் சிறந்த யுத்தி தான்.
‘பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்‘ என்பதை மாற்றி சிந்தித்து வடித்த ஹைக்கூ நன்று.
தீயாய் வறுமை
அலைபேசியின்றி இணையவழிக்கல்வி
தொடரும் தற்கொலைகள்
கொடிது கொடிது வறுமை கொடிது, கொரோனா தொற்றுக் காலத்தில் நடந்த இணையவழிக்கல்விக்காக திறன்பேசி அலைபேசி வாங்கிட வசதி இல்லாத காரணத்தால் வறுமையின் காரணமாக பல தற்கொலைகள் நடந்தது. மறக்கமுடியாத கொடுமைகள் அவை. அதனை நினைவூட்டிய ஹைக்கூ.
காய்கறிக் கழிவு கொண்டு
உணவு சமைக்கிறாள்
பொம்மைக்காக மகள்!
இந்த ஹைக்கூ படித்தவுடன் சிறு குழந்தையாக இருந்தபோது பொம்மைகள் வைத்து அடுப்பு வைத்து காய்கறி நறுக்கிப் போட்டு விளையாண்ட விளையாட்டு அல்லது பார்த்த விளையாட்டு நினைவுக்கு வநது விடுகின்றது.
பெட்டிக்கடை மிட்டாய்
இன்றும் இனிக்கிறது
தொடக்கப்பள்ளி நினைவு!
இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தொடக்கப்பள்ளி காலத்தில் பள்ளியின் வாயிலில் விற்கும் மிட்டாய் வாங்கி சுவைத்த நினைவு மலரும் நினைவுகளாக மலர்கின்றன.
அழும் குழந்தை
வறண்ட மார்பில்
வியர்வை வாசம்!
ஏழைத்தாயின் வறுமையை உணர்த்திடும் ஹைக்கூ. குறைந்த சொற்களைக் கொண்டு வலிய கருத்துக்களை விதைக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.நெகிழ்ச்சி.ஏழ்மையின் சோகம்.கொடுமை.
திருமண நிகழ்வு
வெளியில் சிரித்து தனக்குள் அழும்
முதிர்கன்னி!
தங்கம் விலை ஏறிக்கொண்டே போவதால் ஏழைப் பெண்களின் திருமணமும் தள்ளிக்கொண்டே போகின்றன. வரதட்சணை ஒழிந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் முதிர்கன்னிகள் பெருகி வருகின்றனர். அவர்களின் ஏக்கப் பெருமூச்சு உணர்த்தும் ஹைக்கூ நன்று. முதிர்கன்னிகள் மட்டுமல்ல, முதிர்காளைகளும் பெருகி வருகின்றனர். காரணம் வரதட்சணை தான்.
திருவிழாக் கூட்டம்
மூச்சு முட்டி நசுங்கும்
குழந்தை கையில் பலூன்!
காட்சிப்படுத்தும் ஹைக்கூ நன்று. நம் மனசு முன் திருவிழாவும், குழந்தையும், பலூனும் நினைவிற்கு வந்து விடுகின்றன. நசுங்கும் மட்டுமல்ல, சிலசமயம் பலூன் உடைந்தும் விடும். குழந்தையும் மனசு உடைந்து அழும்.
குழலினிது யாழினிது தான்
உற்றுக்கேள்
பறையும் இனிது!
உண்மை தான். பறை இசைக்கு ஈடான இசை வேறில்லை. அனைவரையும் வசீகரிக்கும், ஈர்க்கும் வனப்பான இசை தான் பறை இசை. வெளிநாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் பறை இசை கேட்டு வியந்து விடுகிறார்கள். பிரமாண்டமான இசை தான் பறை. யாழ், குழல் தோற்றுப்போகும் உண்மை தான். திருவள்ளுவரின் திருக்குறளையும் நினைவூட்டும் ஹைக்கூ நன்று.
அறுந்த செருப்பு
சரிசெய்கிறது ஊக்கு மாதக் கடைசி!
நூலாசிரியர் கிராமத்து பள்ளி ஆசிரியை என்பதால் வறுமையில் வாடிடும் மக்களின் நிலையை உற்றுநோக்கியவர் என்பதால் படைப்புக்கு பல பொருட்கள் கிடைக்கின்றன. மாதக்கடைசி என்பதால் செருப்பு தைக்கக்கூட பணம் இல்லாமல் ஊக்கு மாட்டி நடக்கும் ஏழைகள் இன்றும் நமது கிராமங்களில் இருக்கின்றனர். நம் நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை. ஒழிப்பதாகச் சொன்னவர்கள் ஒழிக்கவில்லை என்பதே உண்மை.
பரீட்சை காலம்
இரவெல்லாம் தலைகீழாய்
முகத்தின் மேல் புத்தகம்!
இரவில் விழித்திருந்து பரீட்சைக்கு படிக்கும் மாணவ-மாணவியர் தூக்க அசதியில் அப்படியே புத்தகத்தை வைத்தபடியே தூங்கி விடுவர். அதனை உற்றுநோக்கி வடித்த ஹைக்கூ சிறப்பு.
விருந்தினர் வருகை
வழக்கத்தை விடக் கூடியது
பாலில் நீரளவு!
வறுமையில் வாடுவோருக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் திடீரென விருந்தினர் வந்து விட்டால் உடன் சென்று பால் வாங்க முடியாது. எனவே இருக்கும் பாலில் வழக்கத்தை விட கூடுதலான தண்ணீர் கலப்பதை காட்சிப்படுத்தி உள்ளார்.
மாலை நேரக் கடற்கரை
ரசிக்க மனம் வரவில்லை
சுண்டல் விற்கும் சிறுவன்!
கடலையும் கடலலையும் ரசிப்பது சுகமான அனுபவம் தான். இதற்காகவே கடற்கரைக்கு பலரும் வந்து போவார்கள். ரசிப்பார்கள். மகிழ்வார்கள். ஆனால் வறுமையின் காரணமாக கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவனுக்கு கடலை ரசிக்க மனமும் நேரமும் இருப்பதில்லை என்பது உண்மை.
நூலாசிரியர் கவிதாயினி ஆசிரியை ராஜிலா ரிஜ்வான் அவர்கள் முகலிலும் பல்வேறு இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்
. பள்ளி, வீடு என்று சராசரி ஆசிரியராக இல்லாமல் இலக்கிய ரசனையோடு படைப்பதற்கு பாராட்டுகள்.
***



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக