புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 3%
M. Priya
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
Kavithas
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
bala_t
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
prajai
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
296 Posts - 42%
heezulia
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
6 Posts - 1%
prajai
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 1%
manikavi
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மகா பெரியவா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 30, 2022 6:03 pm

பெரியவாளின் தீர்க்க தரிசனம்.

ஒருசமயம் ஸ்ரீமடத்துல மகாபெரியவா பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். அப்போ அவரை தரிசிக்க, கையில சின்னக் குழந்தையோட வந்திருந்தா ஒரு தம்பதி.

அவா வந்து வரிசையில நின்னதுல இருந்து பலரும் அந்தக் குழந்தையைத்தான் பார்த்துண்டு இருந்தா. ரொம்பவே அழகா மூக்கும் முழியுமா இருந்த அந்தக் குழந்தைகிட்டே இருந்து சின்ன சிணுங்கலோ ,அழுகையோ அசைவோ ஒண்ணுமே ஏற்படலை. ஒருவேளை தூங்கிண்டு இருக்கலாம்னு நினைச்சவாளுக்கு குழந்தையோட கண்கள் திறந்த நிலையில இருக்கறதைப் பார்த்ததும் ஒண்ணும் புரியலை.

ஆனா,குழந்தை சம்பந்தமான ஏதோ சங்கடத்தோடதான் அவா வந்திருக்காங்கறது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சுது.

குழந்தையோட பரமாசார்யா முன்னால வந்து நின்ன அந்தத் தம்பதி தங்களோட குழந்தையை அவர் திருவடிக்கு முன்னால அப்படியே தரையில விட்டா.

குழந்தை அழாமலும் சிணுங்காமலும் கிடக்க, பெத்தவா ரெண்டு பேரும் கதறி அழ ஆரம்பிச்சா.

"பெரியவா..குழந்தை பொறந்ததுலேர்ந்து எந்த அசைவுமே இல்லை. இதுக்கு பார்வை தெரியுமா, காது கேட்குமாங்கறதெல்லாம் கூட எங்களுக்குத் தெரியலை. எந்த உணர்ச்சியுமே இல்லாம ஜடம் மாதிரி இருக்கு.நீங்கதான்...!" முழுசா முடிக்க முடியாம கேவிக்கேவி அழத்தொடங்கிட்டா ரெண்டு பேரும்.

பதில் ஏதும் சொல்லாம கொஞ்ச நேரம் அந்தக் குழந்தையையே பார்த்துண்டு இருந்த மகாபெரியவா, "சுவாமிக்கு பூஜை பண்ணின புஷ்பத்தில் இருந்து ஒரு நந்தியாவட்டையும், கொஞ்சம் பசும்பாலும் எடுத்துண்டு வா!" தன் பக்கத்துல நின்னுண்டிருந்த சீடன்கிட்டே சொன்னார்.

என்ன, எதுக்குன்னெல்லாம் கேட்காம போய் எடுத்துண்டு வந்தார் அந்த சீடன்.

கிண்ணத்துல எடுத்துண்டு வந்த பாலை, நந்தியாவட்டை புஷ்பத்தால தொட்டுத் தொட்டு அந்தக் குழந்தையோட உடம்பு முழுக்க தடவினார் மகாபெரியவா.

இதோ இப்ப ஏதோ அதிசயம் நடக்கப்போறதுன்னு எல்லாரும் காத்துண்டு இருக்க, "கொழந்தையை அப்படியே தூக்கிண்டு போய் மாயவரத்துல இருக்கிற கோயில்ல தக்ஷிணாமூர்த்தி சன்னதியில படுக்கப் போடுங்கோ. உடனே பொறப்படுங்கோ!" மகபெரியவா சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காம உடனே புறப்பட்டா அந்தத் தம்பதிகள்.

மகாபெரியவா சொன்னபடியே மாயூரநாதர் கோயிலுக்குப் போய் எல்லா சுவாமியையும் தரிசனம் பண்ணிட்டு, அப்படியே பிரகாரத்துல வந்து தக்ஷிணாமூர்த்தி முன்னால ஒரு துண்டை விரிச்சு, அந்தக் குழந்தையைக் கிடத்தினா.

 வாட்சப் அருளுரை 

தொடருகிறது..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 30, 2022 6:07 pm

---2--

இதுக்குள்ளே மகபெரியவா சொன்னதாலதான் அவா அங்கே வந்து அப்படி ஒரு சங்கல்பத்தை செஞ்சுண்டு இருக்கா, அப்படின்னு தெரிஞ்சு நிறைய பக்தர்கள் அங்கே கூடிட்டா.

ஆசார்யாளே சொல்லி அனுப்பியிருக்கார்னா ஏதாவது ஒரு அதிசயம் நடக்கும்கற எதிர்பார்ப்பு எல்லார் முகத்துலயும் இருந்தது. அதைவிட முக்கியமா அந்தக் குழந்தையோட பெற்றோரிடம், தங்களோட குழந்தைகிட்டே கண்டிப்பா மாற்றம் ஏற்படும்கற நம்பிக்கை இருந்தது

நேரம் கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்துண்டு இருந்தது. மத்தியானம் நடை சாத்தற நேரம் நெருங்கிண்டு இருந்தது.நடை சாத்தறதுன்னா கோயிலை விட்டு வெளியே வந்துடணும். குழந்தையைப் பெத்தவா மனசுல படபடப்பு அதிகரிச்சுண்டே போச்சு.

அந்த சமயத்துல திடீர்னு ஒரு பூனை எங்கே இருந்தோ வந்தது.சன்னதியில கிடந்த குழந்தைகிட்டே நெருங்கித்து குழந்தையை பூனை பிராண்டிடுமோன்னு பயந்து விரட்ட நினைச்சவா கூட ஏதோ மந்திரத்தால கட்டுப்பட்டவா மாதிரி பூனைக்கு எந்தத் தொந்தரவும் செய்யாம வேடிக்கை மட்டும் பார்த்துண்டு இருந்தா.

யாரும் எதிர்பாராத நேரத்துல பூனை சட்டுன்னு குழந்தையை நெருங்கி, அதோட தேகத்தை நாக்கால நக்கிட்டு, ஒரே ஓட்டமா வெளியில தாண்டி ஓடித்து.

அந்த நிமிஷம் அங்கே அதிசயம் நடந்தது. பொறந்ததுல இருந்து அசைவே இல்லாம ஜடம் மாதிரி இருந்த குழந்தை மெதுவா கையைக் காலை உதைச்சுண்டு புரண்டு படுக்க முயற்சி பண்ணித்து.

தன்னையே நம்ப முடியாத பரவசத்தோட குழந்தையை நெருங்கினா, அதோட அம்மா. தாயாரைப் பார்த்து பொக்கை வாயைத் திறந்து சிரிச்சுது. ம்...ழேன்னெல்லாம் மழலையில் கொஞ்சித்து. சரியா அதே நேரத்துல உச்சிகால பூஜைக்கான மணி ஓசை எழுந்து கோயில் முழுக்க எதிரொலிச்சுது

"ஏதோ காரணத்தால, முற்பிறவியில பூனையைக் கொன்னிருந்தாலோ,இல்லை குடும்பத்துல யாராவது அதைச் செஞ்சிருந்தாலோ அவாளோட வம்சம் இப்படித்தான் முடங்கிப் போகும்.'மார்ஜால சாபம்'.னு இதைச் சொல்லுவா. (மார்ஜாலம்னா பூனைன்னு அர்த்தம்) அப்படி ஒரு சாபம் இவாளுக்கு இருந்திருக்குபோல இருக்கு.அதை நிவர்த்தி ஆகறதுக்குதான் மகாபெரியவா இவாளை இங்கே அனுப்பியிருக்கார்!" கூட்டத்துல யாரோ சொல்லிண்டு இருந்தா.

அவாளுக்கு பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம, அவாளோட பாவம் தீர்றதுக்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் குடுத்து மாயவரத்துக்கு மகாபெரியவா ஒரு ஆச்சரியம்னா, குழந்தை மேல பால் வாசனை இருந்தா, பூனை வந்து நக்கும்.,சாபம் விலகும்னு முன்கூட்டியே தீர்மானிச்சு, புஷ்பத்தால குழந்தையோட தேகம் முழுக்க பாலைத் தடவினாரே,அது எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம்!

ஹர ஹர சங்கர..
ஜெய ஜெய சங்கர..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 30, 2022 6:10 pm

பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு, அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம, அவாளோட பாவம் தீர்றதுக்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் கொடுத்த மகா பெரியவா.

ஹர ஹர சங்கர ஜயஜய சங்கரா 
காஞ்சி சங்கர காமகோடி சங்கர  :வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 30, 2022 8:47 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
\
ஹர ஹர சங்கர !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக