புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
Page 1 of 1 •
- bharathichandranssnபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020
படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
ஆசிரியர் : பாரதிசந்திரன்
வெளியீடு : சிவகுரு பதிப்பகம், சென்னை-16
அகவல் உரை
தமிழாகரர் தெ. முருகசாமி
(மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி)
புதுச்சேரி-9
பாரதிசந்திரன் (9283275782)
ஆசிரியர் : பாரதிசந்திரன்
வெளியீடு : சிவகுரு பதிப்பகம், சென்னை-16
இந்த நூல் தமிழின் அனைத்துத்துறை சார்ந்தவைகள் குறித்தும் ஆய்வு நோக்கில் அணுகி அவற்றை வாசகர் எவ்விதம் ஏற்புக் கோட்பாட்டின் படி உணர்ந்து ரசித்தலைப் பெறுகிறார் என்பதை விரிவாக விளக்குகிறது. தமிழ் ஆய்வுக் களத்தில் உள்ளோர்க்கு மிகவும் பயன்படும் நூலிது.
இந்த நூலுக்கு இராமசாமித் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தமிழாகரர் தெ முருகசாமி அவர்கள் அகவலுரை தந்துள்ளார்கள். அதுவே இந்த நூலுக்கு அறிமுகமாகும்.
இந்த நூலுக்கு இராமசாமித் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தமிழாகரர் தெ முருகசாமி அவர்கள் அகவலுரை தந்துள்ளார்கள். அதுவே இந்த நூலுக்கு அறிமுகமாகும்.
அகவல் உரை
தமிழாகரர் தெ. முருகசாமி
(மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி)
புதுச்சேரி-9
தேடல் உத்தியின் துருதுருத்த ஆர்வமுடன் புதுக்கவிதை, மரபுக்கவிதை, இலக்கிய உரைநடை, ஆன்மீகம், அறிவியல் சார் சுற்றுப்புறவியல், பொதுவுடைமை போன்ற பல பரிமாணக் கட்டுரைகளை அணில் கடித்த பழம் போல் தான் சுவைத்து வாசிப்பாளர்களையும் ருசிக்கக் கொடுக்கும் விதமாகத் தொகுத்தளித்த நூல்தான் இந்த இலக்கியக் கட்டுரைகள்.
ஆங்காங்கே பூத்த மலர்களில் அமர்ந்து தேனை உறிஞ்சியதோடு தன்மகரந்த அயல் மகரந்தச் சேர்க்கையாய்ப் பூக்களைக் கர்ப்பமாக்கும் வண்டைப் போல், பாரதிசந்திரப் பேராசிரிய வண்டின் சேதாரம் இல்லாத தமிழ்த்தேன் சேகரத் தேன் கூடுதான் இந்த இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
நூல் படைப்பாளன் உடல் என்றால், படிப்பாளனும் தொகுப்பாளனும் இரு சிறகானவர்கள்.
ஈண்டு இந்நூலின் எந்தப் படைப்பையும் படிப்பாளியும் தொகுப்பாளியுமான பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கள் தரவில்லையாயினும் இலக்கியக் கல்வியை இத்தொகுப்பின் மூலம் பரிமாறியது தான் அவரின் இலக்கியத் தொண்டு எனலாம்.
எழுத்தறிவித்தவன் இறைவனாவான்-என்பர். ஆம்! இந்நூல் ஆசிரியரின் ஆசிரிய வணக்கமாய் “கவிஞர் அடியின் மந்திரக் கவிதைகள்” என்ற முதல் கட்டுரை அபி(னி) மயக்காக அமைகிறது.
கவிதையை ஓர் உளவியல் உளறல் என்பர். இதைத் தான், “கவிதை ஓர் அனுபவத்தூண்டல்” என்கிறார் அபி-எனப் பேராசிரியர் மின்னல் வெட்டாக விமர்சித்துள்ளார்.
இலக்கிய வகையைக் கவிதை, நாடகம், நாவல் எனப் பிரித்தாலும் கவிதைக்குள்ள மவுசு மவுசுதான் என்பதை நிறுவக் கவிஞர் அமீர்ஜான் கூறிய “பூமலர்ந்தால் தேனீக்களுக்குச் சொல்லிவிடவா வேண்டும்” என்ற ஒருவரியை ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறான எடுத்துக் கூறுவது ரசிப்பும் ருசிப்புமாக உள்ளது.
புலம் பெயர்ந்த அயலகத் தமிழை ஆராதிக்கும் விதமாகத் தந்த இணைய தள இலக்கியப் படைப்புக் கட்டுரையில் “காதல் இன்னதென்று காட்ட முடியாது! என்பதை ஒருபிடி காற்றையும் ஒருகிலோ மின்சாரத்தையும் காட்ட முடியாத உவமையுடன் கட்டிய பதிவிறக்கம் உச்சமானதாகும்.
நூல் தந்த பேராசிரியர் மண்வாசனையும் மனிதவாடையும் வீசுமாறு தம் பிறந்த கண்டனூரைச் சார்ந்த தமிழறிஞர் ரெ.இராமசாமி அவர்கள் பற்றிய கருத்தாடலை அமுதத் தெளிப்பாகத் தித்திக்கச் செய்துள்ளார். வட்டித் தொழிலோடு வண்டமிழ் எழிலையும் வளர்த்த ரெ.இராமசாமி அவர்கள் தமிழார்வலர்க்கான எடுத்துக் காட்டானவர் (Roll Model) என்பது தொகுப்பில் கண்டறிந்த வைரத் துணுக்கான ஒரு கருத்து எனலாம்.
ஆன்மீகம் தொடர்பான அத்வைதம் பற்றிய கட்டுரையில் இரண்டறக் கலத்தலான அத்துவைத்திற்குக் கூறும் புது விளக்கம்-சமயத்தின் சமிக்ஞையாக (சைகையாக) உள்ளதைக் காணமுடிகிறது.
“அனுபவிக்கும் பொருளும் அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாகும் போது சடங்கு முறைகளுக்கு இடம் இல்லாமல் போய் விடுகின்றன. மதப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் சடங்கு முறைகள் இல்லாதநிலை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.”
இந்தக் கருத்து-அத்துவைதம் பற்றியதற்குச் சடங்கு இல்லாத நல்லிணக்கம் என்ற விளக்கம் தந்தது புதுமையாகும்.
ஆன்மீகத்தின் அடுத்த நகர்வாகக் காட்டப்பட்ட “பஞ்சகோசம் காட்டும் தனி மனித ஒழுக்கம்” என்ற கட்டுரை தனி மனிதச் சுயக்கட்டுப்பாடான பாதுகாப்பை நெருடும் நெம்புகோல் கட்டுரையாக உள்ளது. கோசம் என்றால் உறைகவசம் என்ற கருத்தில் புற உடல்நலம், அகஉடல் நலம் பேணும் முறைப்பாடுகளை மிகமிக நளினமாகக் கூறுவது சிறப்பாக உள்ளது.
அடுத்ததான இசுலாத்தின் வழிபாட்டு முறையில் 11 சொற்கள் கொண்டு உச்சரிக்கும் பாத்திமா மந்திரத்தின் தேவை பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய சடங்கு ஒழுங்கு பற்றியும் விளக்கியது ஒரு பொதுமையாக இருந்தது.
வான்புகழ் வள்ளுவம் பற்றியதில் தனிமனித ஒழுக்கம் சமூக ஒழுக்கத்திற்கு உயிர் நாடி என்ற மையப்புள்ளியை வரைந்த கோலமாக இருந்தது அந்தக் கட்டுரை அதில் சுட்டிய தனி மனிதன் தன் வேட்கையால் கட்டுப்பாடுகளில் நெகிழ்ந்தால் சமூகம் அழியும் என எழுதிய கருத்து வள்ளுவத்தின் பிரகடனமாக இருந்தது. இதன் தொடர்ச்சியில் கட்டுரையின் இறுதியில் கூறிய தவம் பற்றியதில் உயிர்க்குத் தீங்கு செய்யாமை பற்றியதுதான் என வள்ளுவர் சொன்னதோடு மனிதனை அகவயமாகக் கட்டுப்படுத்துவதும் தவமாகும். (Positive Control) எனக் கூறிய கருத்து சிறப்பானதாகும்.
மனித வாழ்வில் ஆன்மீகமும் அறிவியலும் இருபக்க நாணயமானாலும் இரண்டின் அடிப்படையும் பயன் முறையான அணுத்திறன் பற்றிய கொள்கையை வெவ்வேறு வகையாக விளக்குவதாக காப்பியங்களில் அறிவியல் கூறுகள் என்ற கட்டுரை விவரிக்கின்றது.
உலகத்தின் விரிந்து பரந்த இடமெல்லாம் தூய்மையைப் பேணுவதாயின் அதுவே மக்கள் வாழ்விற்கான நல்ல நிலம் என்பதைச் சுற்றுப்புறச்சூழல் பற்றிய கருத்துடன் மலை, நதி, சதுப்புநிலப்பாங்குகள் முறையாக அமைந்தால் வேணாண் உற்பத்தியால் நாடு தன்னிறை வடைவதுபற்றி மூன்று கட்டுரைகள் விமர்சித்தன.
இறுதியான, முன்பு கூறிய அத்வைதக் கொள்கையை நினைவூட்டி மனித உணர்வுதான் உலகை ஆளும் மேலாண்மைத் தனம் என்பதை வற்புறுத்துவதாக உள்ளது. புலன்களின் வழி மனத்தை அலைவிடாமல் உணர்வின் வரி புலன்களைப் பழக்கினால் வேறுயிடற்ற ஒருமையால் உலகம் ஒன்றுபடுவதைச் சமூக மேம்பாட்டில் அத்வைதம் என்ற கட்டுரை, உண்மையின் “ரூபி”யாக (உருவம்) உள்ளது எனலாம்.
அடுத்த நாதசுக் கச்சேரியில் தனித்தவில் ஆவர்த்தனமும் தனித்த ராக ஆலாபரணமும் தனி இடம் பெறும், திருவாவடுதுறை இராஜரத்தினம் என்றால் தோடி ராகக் சக்கரவர்த்தி எனப்பட்டார்.
தனித்தவில் ஆவர்த்தனம் என்றால் திருவாளப்புத்தூர் கலியமூர்த்தி என்பர். அதுபோல இந்த இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பின் பின் இணைப்பாக உள்ளதுதான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றியதொரு பெரிய கட்டுரையாகும்.
கட்சி அரசியல் சாராத தனித்தமிழ் அரசியலை வளர்த்த பாவாணர் அடிப் பொடியாக வளர்ந்தவர்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். அரசுத் துறைப் பணியாளராயினும் தனித்தமிழ் முரசு கொட்டிய தமிழ்ப் போராளியாக விளங்கியவர்தான் துரை மாணிக்கம் என்னும் பெருஞ்சித்திரனார் ஆவார்.
அவரின் பலபரிமாணங்களைச் சிறுசிறு தலைப்புகளாகப் பிhத்தெழுதியுள்ளார் பேராசிரியர் முனைவர் பாரதிசந்திரன் .மறைமலையடிகளை முன்மாதிரியாகக் கொண்ட ஏகலையவனாகப் பெருஞ்சித்திரனார் விளங்கினாலும் பாவாணரே தனித்தமிழ் குருவாவார். சங்கப் புலவர்களின் செம்மாப்பு, இதழியல் துறைக் கல்வியில் சிறுவர் இலக்கிய ஊக்குவிப்பு என்ற இரண்டும் பாவரரேறுவின் தனித்த அடையாளங்கள் என்பதைக் கட்டுரை பரக்க பேசுகிறது. குவிதை நடைக்குப் பாவேந்தர் பாரதிதாசனையே முன் மாதிரியாகக் கொண்டார். எழுச்சிப் பாவலராய்த் தாய்த் தமிழ் நலம் பற்றிய தம் எழுத்தைப் பயன்படுத்தினாரேயன்றி மானுடரைப் புகழ்வதைத் தவிர்த்த உண்மைகளால் பெருஞ்சித்திரனார் இமாலயமாக உயர்ந்துள்ளதைப் பேராசிரியர் பாரதிசந்திரன் பல்வேறு எழுத்துச் சான்றுகளால் நிறுவியுள்ளார்.
மொழி வளர்ச்சி என்ற அமைப்பில் மொழிக் கலப்பும் வடமொழிக் கருத்துத் தழுவலும் கூடாதென்பதில் மிக மிக எச்சரிக்கையாக இருந்ததைப் பேராசிரியர் சிலாகித்து எழுதியுள்ளார்.
இந்தி மொழி எதிர்ப்பு ஆரியக் கொள்கை எதிர்ப்பு பற்றியதை வீறு கொண்டு பாடும்போது,
கெஞ்சு வதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை!
என்ற வரிகள் இராணுவப் படை எழுச்சியான புறப்பாட்டுணர்வைப் புலப்படுத்துகின்றன.
பெருஞ்சித்திரனாரின் கவிதைகள் மரபுப்பாக்களே ஆயினும் உரைநடைப்பா என்ற ஒன்றைப் புதுக்கினார் எனப் பேராசிரியர்-பாவலர் ஏறுவின் கவிதை அலசலாகத் தகவலைத் தருகிறார்.
பாவியமாகப் பல பாடல்களைப் பாடியது போலக் குறுங்காவியமாக “ஐயை” என்றதை எழுதினார். தென் மொழி என்றாலே பெருஞ்சித்திரனார் எனத் தமிழ் கூறு நல் உலகம் நினைக்கத் தக்க வகையில் தனித் தமிழ் இதழியலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதைப் போல வெரும் வேறோர் இதழால் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்பதைக் கட்டுரையில் பல பக்களாகப் பேராசிரியர் விவரித்துள்ளது சிறப்பாக உள்ளதால் அப்பாவலர் மீது கொண்ட பேராசிரியர் பாரதிசந்திரனின் பரிவு விளங்குகிறது.
நானே எல்லாவற்றையும் எழுதினால் வாசகர்களின் வசவுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இலக்கியக் கட்டுரைகளானாலும் பாவலர் ஏறு பற்றியதானாலும் அச்சுக் கற்கண்டின் மெச்சு புகழ் சுவையுடையதென்பதை நான் சுவைத்தவாறு வாசகர்களையும் சுவைக்க அகவி (கூவி) அழைப்பதாக அமைவதே இந்த “அகவல் உரை” யாம் என்க!
பிறைக்குள் பௌர்ணமி ஒளிந்து ஒளிர்வது போல வளரும் தலைமுறை எழுத்தில் தன்னை ஊதுபத்தி மணமாக மணக்கச் செய்யும் பேராசிரியர் முனைவர் பாரதிசந்திரன் அவர்களின் முயற்சி பாரட்டுக்குரியது. இந்நூல் தன்மகரந்தச் சேர்க்கையாயினும் அயல் மகரந்தச் சேர்க்கையாய்ப் படைப்பிலக்கியம் படைக்க வாழ்த்துகிறேன்.
இந்நூலைப் படிக்க வைத்த தன் மூலம் நான் ஒரு வாசிப்பாளன் ஆனதற்குப் பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கட்கு நன்றி!
இந்த நூல் இ- புத்தகமாக விரைவில் வரவுள்ளது. பதிப்பில் வேண்டுவோர் 9283275782 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தமிழின் ஆய்வுக்களத்தில் மிக முக்கியமான நூலான இந்நூலை ஆதரித்துப் பயன் கொள்ளவும்
அன்பன்,ஆங்காங்கே பூத்த மலர்களில் அமர்ந்து தேனை உறிஞ்சியதோடு தன்மகரந்த அயல் மகரந்தச் சேர்க்கையாய்ப் பூக்களைக் கர்ப்பமாக்கும் வண்டைப் போல், பாரதிசந்திரப் பேராசிரிய வண்டின் சேதாரம் இல்லாத தமிழ்த்தேன் சேகரத் தேன் கூடுதான் இந்த இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
நூல் படைப்பாளன் உடல் என்றால், படிப்பாளனும் தொகுப்பாளனும் இரு சிறகானவர்கள்.
ஈண்டு இந்நூலின் எந்தப் படைப்பையும் படிப்பாளியும் தொகுப்பாளியுமான பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கள் தரவில்லையாயினும் இலக்கியக் கல்வியை இத்தொகுப்பின் மூலம் பரிமாறியது தான் அவரின் இலக்கியத் தொண்டு எனலாம்.
எழுத்தறிவித்தவன் இறைவனாவான்-என்பர். ஆம்! இந்நூல் ஆசிரியரின் ஆசிரிய வணக்கமாய் “கவிஞர் அடியின் மந்திரக் கவிதைகள்” என்ற முதல் கட்டுரை அபி(னி) மயக்காக அமைகிறது.
கவிதையை ஓர் உளவியல் உளறல் என்பர். இதைத் தான், “கவிதை ஓர் அனுபவத்தூண்டல்” என்கிறார் அபி-எனப் பேராசிரியர் மின்னல் வெட்டாக விமர்சித்துள்ளார்.
இலக்கிய வகையைக் கவிதை, நாடகம், நாவல் எனப் பிரித்தாலும் கவிதைக்குள்ள மவுசு மவுசுதான் என்பதை நிறுவக் கவிஞர் அமீர்ஜான் கூறிய “பூமலர்ந்தால் தேனீக்களுக்குச் சொல்லிவிடவா வேண்டும்” என்ற ஒருவரியை ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறான எடுத்துக் கூறுவது ரசிப்பும் ருசிப்புமாக உள்ளது.
புலம் பெயர்ந்த அயலகத் தமிழை ஆராதிக்கும் விதமாகத் தந்த இணைய தள இலக்கியப் படைப்புக் கட்டுரையில் “காதல் இன்னதென்று காட்ட முடியாது! என்பதை ஒருபிடி காற்றையும் ஒருகிலோ மின்சாரத்தையும் காட்ட முடியாத உவமையுடன் கட்டிய பதிவிறக்கம் உச்சமானதாகும்.
நூல் தந்த பேராசிரியர் மண்வாசனையும் மனிதவாடையும் வீசுமாறு தம் பிறந்த கண்டனூரைச் சார்ந்த தமிழறிஞர் ரெ.இராமசாமி அவர்கள் பற்றிய கருத்தாடலை அமுதத் தெளிப்பாகத் தித்திக்கச் செய்துள்ளார். வட்டித் தொழிலோடு வண்டமிழ் எழிலையும் வளர்த்த ரெ.இராமசாமி அவர்கள் தமிழார்வலர்க்கான எடுத்துக் காட்டானவர் (Roll Model) என்பது தொகுப்பில் கண்டறிந்த வைரத் துணுக்கான ஒரு கருத்து எனலாம்.
ஆன்மீகம் தொடர்பான அத்வைதம் பற்றிய கட்டுரையில் இரண்டறக் கலத்தலான அத்துவைத்திற்குக் கூறும் புது விளக்கம்-சமயத்தின் சமிக்ஞையாக (சைகையாக) உள்ளதைக் காணமுடிகிறது.
“அனுபவிக்கும் பொருளும் அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாகும் போது சடங்கு முறைகளுக்கு இடம் இல்லாமல் போய் விடுகின்றன. மதப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் சடங்கு முறைகள் இல்லாதநிலை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.”
இந்தக் கருத்து-அத்துவைதம் பற்றியதற்குச் சடங்கு இல்லாத நல்லிணக்கம் என்ற விளக்கம் தந்தது புதுமையாகும்.
ஆன்மீகத்தின் அடுத்த நகர்வாகக் காட்டப்பட்ட “பஞ்சகோசம் காட்டும் தனி மனித ஒழுக்கம்” என்ற கட்டுரை தனி மனிதச் சுயக்கட்டுப்பாடான பாதுகாப்பை நெருடும் நெம்புகோல் கட்டுரையாக உள்ளது. கோசம் என்றால் உறைகவசம் என்ற கருத்தில் புற உடல்நலம், அகஉடல் நலம் பேணும் முறைப்பாடுகளை மிகமிக நளினமாகக் கூறுவது சிறப்பாக உள்ளது.
அடுத்ததான இசுலாத்தின் வழிபாட்டு முறையில் 11 சொற்கள் கொண்டு உச்சரிக்கும் பாத்திமா மந்திரத்தின் தேவை பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய சடங்கு ஒழுங்கு பற்றியும் விளக்கியது ஒரு பொதுமையாக இருந்தது.
வான்புகழ் வள்ளுவம் பற்றியதில் தனிமனித ஒழுக்கம் சமூக ஒழுக்கத்திற்கு உயிர் நாடி என்ற மையப்புள்ளியை வரைந்த கோலமாக இருந்தது அந்தக் கட்டுரை அதில் சுட்டிய தனி மனிதன் தன் வேட்கையால் கட்டுப்பாடுகளில் நெகிழ்ந்தால் சமூகம் அழியும் என எழுதிய கருத்து வள்ளுவத்தின் பிரகடனமாக இருந்தது. இதன் தொடர்ச்சியில் கட்டுரையின் இறுதியில் கூறிய தவம் பற்றியதில் உயிர்க்குத் தீங்கு செய்யாமை பற்றியதுதான் என வள்ளுவர் சொன்னதோடு மனிதனை அகவயமாகக் கட்டுப்படுத்துவதும் தவமாகும். (Positive Control) எனக் கூறிய கருத்து சிறப்பானதாகும்.
மனித வாழ்வில் ஆன்மீகமும் அறிவியலும் இருபக்க நாணயமானாலும் இரண்டின் அடிப்படையும் பயன் முறையான அணுத்திறன் பற்றிய கொள்கையை வெவ்வேறு வகையாக விளக்குவதாக காப்பியங்களில் அறிவியல் கூறுகள் என்ற கட்டுரை விவரிக்கின்றது.
உலகத்தின் விரிந்து பரந்த இடமெல்லாம் தூய்மையைப் பேணுவதாயின் அதுவே மக்கள் வாழ்விற்கான நல்ல நிலம் என்பதைச் சுற்றுப்புறச்சூழல் பற்றிய கருத்துடன் மலை, நதி, சதுப்புநிலப்பாங்குகள் முறையாக அமைந்தால் வேணாண் உற்பத்தியால் நாடு தன்னிறை வடைவதுபற்றி மூன்று கட்டுரைகள் விமர்சித்தன.
இறுதியான, முன்பு கூறிய அத்வைதக் கொள்கையை நினைவூட்டி மனித உணர்வுதான் உலகை ஆளும் மேலாண்மைத் தனம் என்பதை வற்புறுத்துவதாக உள்ளது. புலன்களின் வழி மனத்தை அலைவிடாமல் உணர்வின் வரி புலன்களைப் பழக்கினால் வேறுயிடற்ற ஒருமையால் உலகம் ஒன்றுபடுவதைச் சமூக மேம்பாட்டில் அத்வைதம் என்ற கட்டுரை, உண்மையின் “ரூபி”யாக (உருவம்) உள்ளது எனலாம்.
அடுத்த நாதசுக் கச்சேரியில் தனித்தவில் ஆவர்த்தனமும் தனித்த ராக ஆலாபரணமும் தனி இடம் பெறும், திருவாவடுதுறை இராஜரத்தினம் என்றால் தோடி ராகக் சக்கரவர்த்தி எனப்பட்டார்.
தனித்தவில் ஆவர்த்தனம் என்றால் திருவாளப்புத்தூர் கலியமூர்த்தி என்பர். அதுபோல இந்த இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பின் பின் இணைப்பாக உள்ளதுதான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றியதொரு பெரிய கட்டுரையாகும்.
கட்சி அரசியல் சாராத தனித்தமிழ் அரசியலை வளர்த்த பாவாணர் அடிப் பொடியாக வளர்ந்தவர்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். அரசுத் துறைப் பணியாளராயினும் தனித்தமிழ் முரசு கொட்டிய தமிழ்ப் போராளியாக விளங்கியவர்தான் துரை மாணிக்கம் என்னும் பெருஞ்சித்திரனார் ஆவார்.
அவரின் பலபரிமாணங்களைச் சிறுசிறு தலைப்புகளாகப் பிhத்தெழுதியுள்ளார் பேராசிரியர் முனைவர் பாரதிசந்திரன் .மறைமலையடிகளை முன்மாதிரியாகக் கொண்ட ஏகலையவனாகப் பெருஞ்சித்திரனார் விளங்கினாலும் பாவாணரே தனித்தமிழ் குருவாவார். சங்கப் புலவர்களின் செம்மாப்பு, இதழியல் துறைக் கல்வியில் சிறுவர் இலக்கிய ஊக்குவிப்பு என்ற இரண்டும் பாவரரேறுவின் தனித்த அடையாளங்கள் என்பதைக் கட்டுரை பரக்க பேசுகிறது. குவிதை நடைக்குப் பாவேந்தர் பாரதிதாசனையே முன் மாதிரியாகக் கொண்டார். எழுச்சிப் பாவலராய்த் தாய்த் தமிழ் நலம் பற்றிய தம் எழுத்தைப் பயன்படுத்தினாரேயன்றி மானுடரைப் புகழ்வதைத் தவிர்த்த உண்மைகளால் பெருஞ்சித்திரனார் இமாலயமாக உயர்ந்துள்ளதைப் பேராசிரியர் பாரதிசந்திரன் பல்வேறு எழுத்துச் சான்றுகளால் நிறுவியுள்ளார்.
மொழி வளர்ச்சி என்ற அமைப்பில் மொழிக் கலப்பும் வடமொழிக் கருத்துத் தழுவலும் கூடாதென்பதில் மிக மிக எச்சரிக்கையாக இருந்ததைப் பேராசிரியர் சிலாகித்து எழுதியுள்ளார்.
இந்தி மொழி எதிர்ப்பு ஆரியக் கொள்கை எதிர்ப்பு பற்றியதை வீறு கொண்டு பாடும்போது,
கெஞ்சு வதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை!
என்ற வரிகள் இராணுவப் படை எழுச்சியான புறப்பாட்டுணர்வைப் புலப்படுத்துகின்றன.
பெருஞ்சித்திரனாரின் கவிதைகள் மரபுப்பாக்களே ஆயினும் உரைநடைப்பா என்ற ஒன்றைப் புதுக்கினார் எனப் பேராசிரியர்-பாவலர் ஏறுவின் கவிதை அலசலாகத் தகவலைத் தருகிறார்.
பாவியமாகப் பல பாடல்களைப் பாடியது போலக் குறுங்காவியமாக “ஐயை” என்றதை எழுதினார். தென் மொழி என்றாலே பெருஞ்சித்திரனார் எனத் தமிழ் கூறு நல் உலகம் நினைக்கத் தக்க வகையில் தனித் தமிழ் இதழியலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதைப் போல வெரும் வேறோர் இதழால் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்பதைக் கட்டுரையில் பல பக்களாகப் பேராசிரியர் விவரித்துள்ளது சிறப்பாக உள்ளதால் அப்பாவலர் மீது கொண்ட பேராசிரியர் பாரதிசந்திரனின் பரிவு விளங்குகிறது.
நானே எல்லாவற்றையும் எழுதினால் வாசகர்களின் வசவுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இலக்கியக் கட்டுரைகளானாலும் பாவலர் ஏறு பற்றியதானாலும் அச்சுக் கற்கண்டின் மெச்சு புகழ் சுவையுடையதென்பதை நான் சுவைத்தவாறு வாசகர்களையும் சுவைக்க அகவி (கூவி) அழைப்பதாக அமைவதே இந்த “அகவல் உரை” யாம் என்க!
பிறைக்குள் பௌர்ணமி ஒளிந்து ஒளிர்வது போல வளரும் தலைமுறை எழுத்தில் தன்னை ஊதுபத்தி மணமாக மணக்கச் செய்யும் பேராசிரியர் முனைவர் பாரதிசந்திரன் அவர்களின் முயற்சி பாரட்டுக்குரியது. இந்நூல் தன்மகரந்தச் சேர்க்கையாயினும் அயல் மகரந்தச் சேர்க்கையாய்ப் படைப்பிலக்கியம் படைக்க வாழ்த்துகிறேன்.
இந்நூலைப் படிக்க வைத்த தன் மூலம் நான் ஒரு வாசிப்பாளன் ஆனதற்குப் பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கட்கு நன்றி!
இந்த நூல் இ- புத்தகமாக விரைவில் வரவுள்ளது. பதிப்பில் வேண்டுவோர் 9283275782 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தமிழின் ஆய்வுக்களத்தில் மிக முக்கியமான நூலான இந்நூலை ஆதரித்துப் பயன் கொள்ளவும்
பாரதிசந்திரன் (9283275782)
bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» புகைப்பழக்கமும், நினைவுத் திறனும்
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» புகைப்பழக்கமும், நினைவுத் திறனும்
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|