புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_m10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_m10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_m10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_m10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_m10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_m10பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2020 8:49 am

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள் 202004060445257275_Turn-off-the-lights-in-the-homes-People-lit-the-lamp_SECVPF

சென்னை,

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமலில் இருந்து வருகிறது.

இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அவ்வப்போது, பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி நாட்டு மக்கள் அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதன்படி, அன்று மாலை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்தியாவின் இந்த நடைமுறையை கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருந்த பல நாடுகளும் கடைபிடிக்க தொடங்கின.

இந்தநிலையில், கடந்த 3-ந் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி வேண்டுகோள் ஒன்றை விடுத்து இருந்தார்.

அப்போது, கொரோனாவால் வந்த இருள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக ஒளியின் வலிமையை நாம் நான்கு திசைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், எனவே வருகிற 5-ந் தேதி (நேற்று) இரவு 9 மணிக்கு அனைவரும் வீடுகளில் எரியும் மின் விளக்குகளை அணைத்து விட்டு வாசலில் நின்றோ, அல்லது பால்கனியில் நின்றோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச்லைட் அல்லது செல்போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று, நாட்டு மக்கள் அனைவரும் விளக்கு ஏற்றுவதற்கு தயாரானார்கள். அதன்படி, நேற்று இரவு சரியாக 9 மணிக்கு நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் எரிந்த மின் விளக்குகளை அணைத்துவிட்டு, வாசல்களில் மெழுகுவர்த்தி மற்றும் அகல் விளக்கு களை ஏற்றினார்கள். பலர் டார்ச்லைட் மற்றும் செல்போன் டார்ச்லைட்டை ஒளிரச் செய்தனர். பலர் பால்கனியில் நின்றபடி டார்ச்லைட், செல்போன் டார்ச்லைட்டை ஒளிரச் செய்தனர்.

இதனால் இருளுக்கு மத்தியில் எங்கும் விளக்குகள் ஒளிர்ந்ததை காண முடிந்தது. கொரோனாவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி 9 நிமிடங்களுக்கும் மேலாக நின்றனர்.

மோடி குத்துவிளக்கு ஏற்றினாார்

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீபம் ஏற்றினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினருடன் விளக்குகளில் ஒளி ஏற்றினார்.

பிரதமர் மோடி தனது இல்லத்தில் பெரிய குத்துவிளக்கை ஏற்றி ஒளிரச் செய்தார்

உள்துறை மந்திரி அமித்ஷா தனது இல்லத்தின் முன்பு விளக்கு ஏற்றினார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் வீட்டின் முன்பு விளக்குகளை ஏற்றினார். தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தனது வீட்டின் முன்பு மெழுகுவர்த்தியை ஏந்தியபடி நின்றார்.

இதேபோல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் வீடுகளின் முன்பு விளக்குகளை ஏற்றினார்கள்.

கொரோனாவை விரட்ட தமிழக மக்கள் ஓரணியில் நின்று தங்கள் ஒற்றுமையை பறைசாற்றினார்கள். சென்னை, மதுரை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மக்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஒளிரும் அகல்விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏந்தி நின்றனர்.

இளைஞர்கள் டார்ச் லைட்டுகள் மற்றும் செல்போன்களில் உள்ள டார்ச்லைட்டுகளை ஒளிரச் செய்தனர்.

இது கொரோனாவை ஒழிப்பதில் தமிழக மக்களுக்கு உள்ள ஆர்வத்தையும் ஒற்றுமையையும் காட்டுவதாக அமைந்தது.

இரவிலும் பரபரப்பாக இயங்கும் சென்னை நகரம், ஊரடங்கின் காரணமாக கடந்த சில நாட்களாக பகலில் கூட வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் நகரில் வீடுகளில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் திடீரென்று மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டதால் நகரம் இருளில் மூழ்கியது போல் காணப்பட்டாலும், மக்கள் விளக்குகளை ஏற்றியதால் எங்கும் ஒளிவெள்ளம் பாய்ந்தது.

புரசைவாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, அடையாறு, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வடபழனி, அண்ணாநகர், வளசரவாக்கம், வேளச்சேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் வீடுகளில் மக்கள் விளக்குகளை ஏற்றினார்கள். சிறுவர்-சிறுமிகள் ஆர்வத்துடன் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி நின்றனர். சிலர் தங்கள் வீட்டு வாசலில் குத்துவிளக்குகளை ஏற்றி வைத்து இருந்தனர்.

அடுக்குமாடிகளில் வசிப்பவர்கள் பால்கனியில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி நின்றனர். சில இடங்களில் இந்திய வரைபடம் போன்று விளக்குகளை ஏற்றி வைத்து இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

கவர்னர் பன்வாரிலால் புரோகித் கவர்னர் மாளிகையில் விளக்கு ஏற்றினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சமூக இடைவெளி விட்டு மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி நின்றார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது குடும்பத்தினருடன் வீட்டில் விளக்குகளை ஏற்றினார். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் வீட்டு வாசலில் குடும்பத்தினருடன் தீபம் ஏற்றினார். இதேபோல் மற்ற அமைச்சர்களும் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றினார்கள்.

ரஜினிகாந்த்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வாசலின் முன்பு மெழுகுவர்த்தியை ஏந்தியபடி வந்து நின்றார். இரவு 8.50 மணிக்கே அவரது இல்லத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. போயஸ் கார்டன் பகுதி முழுவதுமே பெரும்பாலான இடங்களில் மத்தாப்பு, புஸ்வாணங்கள் கொளுத்தப்பட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. குழந்தைகள் கொரோனா வைரஸ் ஒழிக என்று கோஷமிட்டதையும் காண முடிந்தது.

இதைப்போல பெருந்தலை வர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், வி.ஜி.பி. சந்தோசம் உள்ளிட்டோரும் தங்கள் வீடுகளில் ஒளியேற்றி ஆதரவு தெரிவித்தனர்.

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாரும் தங்களின் கைகளில் உள்ள செல்போன் டார்ச் விளக்குகளை எரிய விட்டிருந்ததை காண முடிந்தது. மொத்தத்தில் சென்னை நகரமே இருளில், விளக்குகளால் ஜொலித்தது.

கொரோனாவை ஒழிக்க உறுதி கொள்ளும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் காட்டிய இந்த ஒற்றுமை, உலக நாடுகளுக்கு இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், வலிமையையும் காட்டுவதாக அமைந்தது.

தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 06, 2020 11:06 am

நாங்களும் விளக்கு ஏற்றினோம்.....


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக