புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_m10அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 8:53 pm

அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்! Sk12

வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும்
அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கிறது. அப்படித்தான்
இது. பெரிய திட்டமிடல் இருந்தது. ஈரமான மனசுகள் நாம்
எதிர்பார்க்காத இடங்களில் இருக்கிறது.

எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று
தேடினால், உங்களுக்குக் கிடைப்பது
எதிர்பாராத திருப்பங்கள். உங்களின் சந்தோஷத்திற்கும்,
நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி.

முழுப் படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான்
நம்பிக்கையோடு பேசுறேன். நானே ரசிக மனப்பான்மையால்
பார்த்து ரசித்துதான் சொல்கிறேன். ஆர்வமாகப் பேசத்
தொடங்குகிறார் ரமேஷ் ஜி. "ஆழ்வார்', "நாளை‘, "கிங்'
உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்தவர்.
சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குநராகக் களம்
இறங்குகிறார்.

அடவி... தலைப்பே கவனம் ஈர்க்கிறது....


அடவி என்றால் அடர்ந்த காடு எனப் பொருள்.
காடுகளைப் பாதுகாப்போம் என்பதுதான் இந்தக் கதையின்
ஆதாரம். 70-களில் இந்தியா முழுமையும் "சிக்கோ மூவ்மெண்ட்'
என்று ஒரு முயற்சி நடந்தது. மலைவாழ் மக்களைக் காடுகளை
விட்டு வெளியேற்றும் முயற்சி அது. பெண்கள் மரங்களைக்
கட்டிப்பிடித்து வனங்களை விட்டு வெளியேற மறுத்த காட்சிகள்
அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன. அந்தப் போராட்டம்
இந்தியா முழுமையும் பரவி நீண்டது. அது போன்று இப்போதும்
பல போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி ஆங்காங்கே நடக்கிற சம்பவங்களின் சிறு துளிதான் இது.
இங்கே தமிழகத்தில் வாழுகிற பழங்குடி இன மக்களும், அங்கே
சொகுசு ரிசார்ட்டுகளைக் கட்ட வருகிற ஒரு குழுவுக்குமான
சம்பவங்களாக அதைத் தொகுத்து பின்னி வந்திருக்கிறேன்.
காதல் இங்கே முக்கியப் பங்கு வகுக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 9:19 pm



எப்படி உருவானது....


இந்தக் கதை அப்படியே மனதில் இருக்கிற சித்திரம்.
விளைநிலத்தைக் கூறு போட்டு விற்றுக் இருக்கிறோம்.
மலையைக் குடைந்து எம் சாண்ட் ஆக்கி கட்டடம்
கட்டுகிறோம். விவசாயிகள் எல்லாம் சென்னை பக்கம்
வந்து ஏ.டி.எம்., பங்களா, ஐ.டி. வாசலில் செக்யூரிட்டியாக
நின்று கொண்டு இருக்கிறார்கள்.

இப்படிப் பல விஷயங்கள் கதைக்குள் என்னை இழுத்துப்
போனது.

சோறு இல்லை என்பதுதான் எதிர்காலக் குரலாக இருக்கப்
போகிறது. தொழில்புரட்சி பசியைப் போக்காது.
விஞ்ஞானத்திற்கு அரிசியை மந்திரம் மாதிரி உருவாக்கத்
தெரியாது. பழங்குடி இன மக்களின் குரலை பதிவு
செய்திருக்கிறேன். இது நம் மண்ணின் கதை. நம் பூர்வீக
மக்களின் சரிதம். இது வேறு மாதிரி இருக்கும்.

எந்த மாதிரியான கையாளுகை கதையில் இருக்கும்....

தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிப்போம் என்று
நினைத்துக் கூடப் பார்த்தது கிடையாது. ஆனால், நாளை
காற்றுக்கும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய
நிலை வரும்.

நடப்பவற்றைப் பார்த்தால், அதற்கான அறிகுறிகள்
தெரிகின்றன. மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாகப்
பேசுகிற 8 வழி பசுமைவழிச்சாலை வரைக்குமான
போராட்டங்களும், உணர்வுகளும் இதில் உண்டு.

இயற்கைக்கும், அது தருகிற செல்வத்திற்கும் அங்கே
இருக்கிற மக்கள் அமோகமாக இருக்க வேண்டும்.
ஆனால், நிலைமை என்ன? இயற்கை அழிந்துகொண்டு
இருக்கிறது.

அதனால் இழப்பு, நமக்குத்தானே தவிர இயற்கைக்கு
இல்லையென்று யாருக்கும் தெரியவில்லை. மலை மக்களின்
குரல் இதிலே பதிவாகியுள்ளது. சொல்லப்போனால் இதில்
என் குரலும், உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது.

எந்த விதத்திலும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்
என்பதுதான் பிரதானப் பகுதி. மலை மக்களிடம் மிச்சம்
இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும்,
நம் மண்ணின் சொற்களும்தான். ஏதோ ஒரு நாளில் தமது
சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது
விரட்டப்படும் கணங்கள் செத்துப் போகிற வரைக்கும்
மறக்குமா என்ன....?

சுற்றுலா வளர்ச்சி என்பது இங்கே இன்றியாமையாத
விஷயமாகவும் மாறி வருகிறது...

அது தவறில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் விலை வைக்க
ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது.
இதோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, எத்தனை
தமிழ் கிராமங்களின் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறோம்.

பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால்,
உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதிப் பிரச்னைகள் இல்லாமல்
போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்.

நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள்
கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும்.
தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்குப் பணம் இல்லை.
பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்கத் தெரிந்து விட்டால்
வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 9:21 pm



வயிற்று பசிக்குச் சாப்பிடத்தான், நமக்குப் பணம் தேவை
ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது,
பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள்,
லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின்
வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன்
உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான்
கொடுத்து வைத்தவர்கள். அவர்களை விட்டு விடுங்கள்
என்பதைத் தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்.

ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டுமே பெரும் பொறுப்பு... எப்படி
சமாளித்தீர்கள்?


பெரிய திட்டமிடல்கள் இருந்தன. சமூகம் சார்ந்த படம் எப்படி
இருக்க வேண்டுமோ, அப்படியே கொண்டு வந்திருக்கிறேன்.
பருவம் தப்பிய மழை. எல்லாமும் மாறி விட்டது. இதோ இன்னும்
சென்னைக்கு சரி வர மழை இல்லை.

இயற்கையின் சமநிலைக்கே எதிரான இயற்கையின்
வியூகங்கள் வந்து விட்டன. இதையெல்லாம் ஆராய்ந்து கதை
எழுதினேன். அங்கே ஒரு காதல், கலாசாரம், பண்பாடு என்று
கதை தனக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துக்
கொண்டது. வினோத் கிஷன், "அம்மு' அபிராமி என பக்க பலம்
கொண்ட நடிகர்கள் துணைக்கு வந்தார்கள். தயாரிப்பாளர்
உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றிகள்..
-
-------------------------------
By -ஜி.அசோக்
தினமணி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக