புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
26 Posts - 39%
prajai
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 3%
Jenila
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 5%
prajai
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 4%
Rutu
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
Jenila
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_m10ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன?


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Aug 27, 2018 9:40 pm

வாழ்க்கை ஒரு வட்டம். அதில் வலியும் சுகமும் மாறி மாறி வரும்.  வெற்றியும் தோல்வியும் திரும்பத் திரும்ப வந்து சேரும். குளிரும், உஷ்ணமும், இரவும் பகலும் என இயற்கையில் அனைத்தும் சுழலும். இந்த சுழற்சியுடன் சேர்ந்து மனதும் சிக்கிச் சுழல்வதால்தான் மனிதனுக்குத் துன்பம் ஏற்படுகிறது.

கையளவு மனது; அதில் கடலளவு கனவு! அதில் ஆசைகளும் பயங்களும் ஏராளம்; விருப்பு வெறுப்புகள் ஏராளம். எண்ணங்கள், உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகளெல்லாம் எக்கச்சக்கம். காலம் என்ற பாதையில் பின்னாலிருக்கும் கடந்தகாலம் தெரியும்; ஆனால் முன்னாலிருக்கும் எதிர்காலம் தெரியாது. இந்த நாளையை நோக்கி, எதிர்காலத்தை நோக்கி மனிதன் முழுமையைத் தேடிப் பயணிக்கிறான். தன் லட்சியங்கள், ஆசைகளெல்லாம் நிறைவேறி விட்டால் முழுமையான, பூரணத்துவமான பரம திருப்தியும் மன அமைதியும் இன்பமும் வந்துவிடும் என்று எண்ணுகிறான். ஆனால் உண்மை என்ன?

1978ம் வருடம் ப்ரிக்மென் என்பவரும் புல்மென் என்பவரும்  (Brickman, Coates, & Janoff-Bulman ) இணைந்து உளவியல் துறையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.  விபத்தில் கைகால்கள் இழந்தவர்களும் லாட்டரியில் பல லட்சம் பரிசு வாங்கியவர்களும் காலப்போக்கில் ஒரே அளவு சந்தோஷத்தைத்தான் அனுபவிக்கின்றனர் எனக் கண்டறிந்தனர். ஒரு மனிதன் எந்தவித இன்பத்தையோ துன்பத்தையோ தற்காலிகமாக அனுபவித்தாலும் விரைவில் அது ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். புதிதாக  ஒரு கார் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கார் வாங்கிய சில நாட்கள் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். பிறகு உங்கள் சந்தோஷம் ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். அந்த இயல்பு நிலையிலேயே நீங்கள் இருக்கலாம் என்று நினைத்தால் அது முடியாது. ஏனென்றால் இயல்பு நிலையில் முழு மனநிறைவு இருக்காது.  அதனால் எதோ ஒன்றை நினைத்து மறுபடி ஆசை எழும்; ஆசைப்பட்டது கிடைத்தவுடன் ஒரு சிறிய தற்காலிக சந்தோஷம். பின்பு மறுபடியும் நிறைவில்லாத அந்த இயல்பு நிலை. துக்கமான ஒன்று நடந்தாலும் அந்த துக்கமும் தற்காலிகம்தான். மறுபடியும் இயல்பான அந்த நிலைக்குத் திரும்பிவிடும் மனது.

இது ஒரு ட்ரெட்மில்லில் ஓடுவது போன்றது. எவ்வளவு ஒடினாலும் நீங்கள் அதே இடத்தில்தான் இருப்பீர்கள்.  அதனால்தான் இந்த உளவியல் கோட்பாட்டிற்கும் ஹெடானிக் ட்ரெட்மில் தியரி (Hedonic Treadmill Theory) என்று பெயரிட்டார்கள். ஹெடானிக் என்றால் ‘இன்பத்தைப் பற்றிய’ என்று பொருள்.  ட்ரெட்மில்லிற்கு ‘மிதி செக்குருளை’ என்ற வார்த்தையை தமிழாக்கமாக சிலர் உபயோகிக்கின்றனர். அதனால் நாம் இந்தக் கோட்பாட்டினை ‘இன்பமிதி செக்குருளை கோட்பாடு’ எனத் தமிழில் அழைக்கலாம். இது இப்போது ஒரு அறிவியல் உண்மை.

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Kisspng-treadmill-life-fitness-exercise-bikes-physical-fit-fitness-treadmill-5b05dd9b6d5687-7523173115271110674479

மனிதன் வாழ்க்கை முழுவதும் வேறு வழியின்றி இந்தச் செக்குருளையிலேயே ஓடிக் கொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்கு முழுமை உணர்வு மட்டும் கிடைப்பதே இல்லை. இந்த உண்மையை அனுபவத்தில் புரிந்து கொண்டவுடன் உலகப் பொருட்களில் ஒருவனுக்குப் பற்றுதல் குறைகிறது. இந்த பற்றுதல் குறைந்த நிலையைத் தான் வைராக்கியம் என்கிறார்கள். வைராக்கியம் உள்ள மனிதன் இந்த சமூகத்தில் எல்லோரையும் போல் வாழ்ந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல முழுதும் ஒட்டாமல் வாழ்கிறான். உள்முகத் தேடலில் பயணித்து முழுமையை வெளியில் தேடாமல் உள்ளுக்குள் தேடுகிறான். தன்னை உணர்ந்து முழுமை அடைந்து மனத்துயரங்களில் இருந்து நிரந்தர விடுதலை அடைகிறான். இதையே ஆத்ம ஞானம் எனவும் ஜீவன்முக்தி எனவும் கூறுகிறார்கள்.

எப்படி களிமண்ணினால் ஆன வெவ்வேறு பொம்மைகளின் வடிவங்கள் வேறுபட்டாலும் மூலப்பொருள் ஓன்றாக இருக்கிறதோ அதைப்போல உங்கள் அனுபவத்தில் நீங்கள் எதையெல்லாம் ஐம்புலன்களாலும் மனதாலும் உணர்கிறீர்களோ அவை எல்லாவற்றிர்க்கும் மூலப்பொருள் ஒன்றுதான் என்கிறது வேதாந்தம். நீயே அந்த ஒன்று என்கிறது சாந்தோகிய உபநிஷத் (தத்வமஸி). ஒரு மனிதன் தன்னை உடலோடும் மனதோடும் அடையாளப் படுத்திக் கொள்வதால் ‘தான் வேறு, இந்த உலகம் வேறு’ என்ற உணர்வில் வாழ்கிறான். அதனால் அவனுக்கு ‘இருப்பது ஒன்றே ஒன்று தான்’ என்ற உண்மை அனுபவமாக இல்லை. ஆத்ம ஞானம் பெற்றதும் ஒரு மனிதனுக்குத் தான் மனதில் கற்பித்துக் கொண்ட எல்லைகள் மறைகின்றன.

மனதையும் உடலையும் ‘நான்’ என்று அடையாளப் படுத்திக் கொண்டு, அவை தவிர மற்றவை ‘நானல்ல’ என்ற பாவனை தன்னுடைய அனுபவத்தில் இருந்து கொண்டிருக்கும்வரை அவனது மனத்துயரமும் மறையாது, முழுமையும் கிட்டாது. ஆனால், தான் மனதில் கற்பித்துக் கொண்ட எல்லைகள் மறைந்தவுடன் அவன் எப்போதும் முழுமை பெற்றவனாகவே இருந்து வந்திருக்கிறான் என்பதை உணர்கிறான். எல்லைகளே இல்லையென்றாகிவிட்டால் எல்லாமும் தானே என்று உணர்ந்துவிட்டால் என்ன மனக்குறைவோ முழுமையற்ற உணர்வோ இருக்க முடியும்?





அன்புடன்
பி.சண்முகம்
https://www.youtube.com/c/tamilmanam37
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 27, 2018 10:03 pm

சண்முகம் அவர்களே ,
புதியவர் நீங்கள்.
ஈகரை விதிமுறைகளை https://eegarai.darkbb.com/t141766-topic உங்களுக்காக .

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

விதிமுறைகளை படித்து பின்பற்றவும்.

வலைதள முகவரி நீக்கப்படுகிறது.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Tue Aug 28, 2018 4:04 am

T.N.Balasubramanian wrote:சண்முகம் அவர்களே ,
புதியவர் நீங்கள்.
ஈகரை விதிமுறைகளை https://eegarai.darkbb.com/t141766-topic உங்களுக்காக .

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

விதிமுறைகளை படித்து பின்பற்றவும்.

வலைதள முகவரி நீக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275420

நிச்சயம் இனி பின்பற்றுகிறேன்... நன்றி



அன்புடன்
பி.சண்முகம்
https://www.youtube.com/c/tamilmanam37
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக