புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_m10முத்துக் கதை: தாம்பாளம்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துக் கதை: தாம்பாளம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 28, 2018 8:17 am

முத்துக் கதை: தாம்பாளம்! Vm5
-


அலமேலு பாட்டி அடுத்த வீட்டில் சத்தம் ஏதோ வருவதைக்
கேட்டு எட்டிப் பார்த்தாள். பல மாதங்களாக பூட்டிக்
கிடக்கும் வீடு.

மூன்று பேர் ஏணி பெயிண்ட் டப்பா சகிதம் வந்து வேலை
செய்ய வந்திருப்பது தெரிந்தது. வீட்டுச் சொந்தக்காரர்
வெளி நாட்டில் இருக்கார். பெயிண்ட் அடித்து வாடகைக்கு
விடுவார் என நினைத்தபடி உள்ளே வந்தாள்.

மதியம் மூன்று மணி இருக்கும். வேலை பார்த்துக்
கொண்டிருந்தவர்களில் ஒருவன், ""டேய் ரங்கா.. பக்கத்து
வீட்டில் பாட்டி இருக்கு. வெளியே பித்தளை சாமான்கள்
கிடக்கு. எடுத்துப் போய் போட்டால் ஒரு ஆயிரம் தேறும்!''

""ம்ம்...ம்ம்...கபாலி.....பார்த்து'' என்றான் ரங்கன்.

""ஏண்டா கபாலி.. ஜெயிலை விட்டு வந்து மூணு மாசம் கூட
ஆகலே.. உன் பழைய புத்தி தலை காட்டறியா?'' என்றான்
முனியன்.

""ஸ்ஸ்ஸ்ஸ்...பேசாம இருடா...'' என்ற கபாலி, காம்பவுண்டில்
ஏறி குதித்து பித்தளை தாம்பாளத்தை தூக்கி ஒரு சிமெண்ட்
சாக்குப் பையில் போட்டுக்கொண்டான்

சாயந்திரம் பாட்டி வந்து சாமான் களை எடுத்து உள்ளே
வைத்தாள். தாம்பாளம் காணாமல் போனதைக்
கவனிக்கவில்லை.

அன்று வேலையை முடித்து விட்டுக் கிளம்பும் போது பாட்டி
இவர்களைக் கூப்பிட்டாள். ""ஏ, தம்பிங்களா!... சித்தே வாங்க!.....''

மூவரும் உள்ளே வந்தார்கள்.

ஆளுக்கு ஒரு டம்ளர் பாயசம் கொடுத்தாள்.
"இன்னிக்கு என் கணவர் நினைவு நாள்..... சாம்பிராணி
போட்டேன்..

...சாப்பிடுங்க....நல்லா இருக்கா!''

""நல்லா இருக்கு பாட்டி!''

ஆளுக்கு ஒரு பை தந்தாள். ""இதில் உங்களுக்கு ஆளுக்கு
ஒரு சட்டை புது வேட்டி இருக்கு. உடுத்திக்குங்க!...''

கபாலி, ரங்கன் முகத்தில் ஈயாடவில்லை. முனியன் ரங்கனை
முறைத்தான். ""என்னா ஆளுங்கடா நீங்க?'' என்பது அவன்
முகத்தில் தெரிந்தது.

""யோசிக்காதீங்க தம்பிங்களா. அவர் நினைவு நாளில்
இது மாதிரி புது சட்டை வேட்டி தர்றதை வழக்கமா
வச்சிருக்கேன்.....அப்புறம் ஒரு சின்ன உதவி செய்ய
முடியுமாப்பா!''

ரங்கனும், முனியனும், ""சொல்லுங்க பாட்டி'' என்றனர்.

""பழைய பித்தளை பாத்திரங்கள் கொஞ்சம் வச்சிருக்கேன்.
அதை எடைக்குப் போட்டு பணம் வாங்கித் தர்றீங்களா.
இந்த மாசம் மாத்திரை மருந்து வாங்க உதவும்!''

-- கபாலிக்கு மனசு ரொம்பவும் உறுத்த ஆரம்பித்து
விட்டது. மூடிய சிமென்ட் பையில் பாட்டியின் தாம்பாளம்!--

""சரி பாட்டி இரண்டு நாளில் வேலை முடிஞ்சுடும்....
போகும் போது வித்து பணம் வாங்கி வர்றேன்'' என்றான்
கபாலி.

தாம்பாளத்தை அவன் கடையில் போடவே இல்லை...
மனதில் ஏதோ தீர்மானித்தான்.

இரண்டு நாள் கழித்து ஒரு ஆட்டோவில் பாட்டி தந்த
பித்தளைச் சாமான்களை எடைக்குப் போட்டான்!

""எடை போட்டு பணம் தாங்க...''

மொத்தம் மூவாயிரத்து ஐநூறைத் தந்தார் கடைக்காரர்.

சிமென்ட் பையிலிருந்த தாம்பாளத்தயும் எடைக்குப்
போட்டான். அதற்குத் தனியாக இருநூறு கிடைத்தது.

மூவாயிரத்து ஐநூறோடு இருநூறு ரூபாயையும் சேர்த்து
ரூபாய் மூவாயிரத்து எழுநூறு ரூபாயைப் பாட்டியிடம்
தந்தான்.

பாட்டி அவனிடம் இரு நூறு கொடுத்தாள்.
"வச்சுக்கப்பா செலவுக்கு''

""வேண்டாம் பாட்டி.. நீங்க வயசானவங்க.. வச்சுக்குங்க.
உங்க பிள்ளையா இருந்தா பணம் கொடுப்பீங்களா?''

"என் பிள்ளையா நினைச்சுதாம்ப்பா தர்றேன்...வச்சுக்க!''

மேலும் ஒரு நூறை எடுத்து கபாலி, முனியனிடம்,
"தம்பிங்களா.. ஹோட்டலில் டிபன் சாப்பிடுங்க..இன்னியோட
வேலை முடிஞ்சிட்டு இல்லே..இந்த பக்கம் வந்தா வாங்க!''

கபாலியின் கண்களில் பொல பொல வென்று கண்ணீர்
அருவி போல கொட்டுகிறது. ரங்கனும் தன் கண்களில்
தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்.

""ஏன் தம்பி அழுவறே?''

""இல்லே பாட்டி தூசு விழுந்திட்டுது!''

பல மாதங்கள் கழித்து ரங்கனையும், கபாலியையும் பார்த்த
முனியன், இப்பவெல்லாம் திருந்திட்டீங்க போலிருக்கு.

கபாலி,
"அன்பு, பாசம் இதெல்லாம் ரொம்ப வலிமையானதுடா!...''
என்றான். ரங்கனும் அதை ஆமோதிப்பது போல்
புன்னகைத்தான். இப்போது இருவரும் நேர்மையான
உழைப்பாளிகள்!
-
---------------------------------
By - என்.எஸ்.வி.குருமூர்த்தி
சிறுவர் மணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 28, 2018 11:14 am

முத்துக் கதை: தாம்பாளம்! 3838410834 முத்துக் கதை: தாம்பாளம்! 3838410834



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 27, 2018 1:28 am

முத்துக் கதை: உபத்திரவம்!



ஆமை ஒன்று ஆற்றைக் கடககும் நேரத்தில் தேள் ஒன்று ஓடி வந்தது. 



""நான் அவசரமாக அக்கரைக்குப் போகணும். கொஞ்சம் உதவுங்கள்..."" என்று கெஞ்சிக் கேட்டு கொண்டது தேள். 



ஆனந்தமாய் ஆமையில்  முதுகில் ஏறிக்கொண்ட தேளுக்கு ஒரு சந்தேகம்....." பாறை மாதிரி இருக்கிற ஆமையின் ஓட்டின் மேல் கொட்டினால் வலிக்குமா, வலிக்காதா'....என்று. "சரி, லேசாகக் கொட்டித்தான் பார்ப்போமே' என்று ஒரு கொட்டு கொட்டியது! ஆமை பேசாமல் இருந்தது. 



தேளுக்கு சந்தேகம். "லேசாகக் கொட்டியதால் வலிக்கவில்லையோ?...கொஞ்சம் பலமாக கொட்டினால் என்ன...' என்று அழுத்தமாகக் கொட்டியது. 



""என்ன தம்பி உன் புத்தியைக் காட்டுறியே?'' என்றது ஆமை. 



""இல்லண்ணே....கொஞ்சம் வழுக்கிற மாதிரி இருந்தது!.... அதனால கொடுக்கால அழுத்திப் பிடிச்சுக்கிட்டேன்!...அவ்வளவுதான்...'' என்று கூறிச் சமாளித்தது. 

 கரை நெருங்கியது. 



""நான் கொட்டினால் எவ்வளவு பெரிய மிருகமும் அலறி ஓடும். இந்த ஆமை கொஞ்சம்கூட அசையமாட்டேங்குதே.... கரைதான் நெருங்கியாச்சே!...... கொஞ்சம் வேகமாக கொட்டுவோம்..""என்று வேகமாக கொட்டியது! 



""நீ சரியாக வரமாட்டே போலிருக்கே?'' என்று ஆமை கடிந்துகொண்டது. 



""பிறந்தது முதலே கொட்டிப் பழகிட்டேன்....



உனக்காக என் பழக்கத்தை மாத்திக்க முடியாது!....



நீதான் அனுசரித்துப் போகணும்!...'' என்று திமிராகப் பேசியது. 



""எனக்கும் ஒரு பழக்கம் உண்டு!'' என்று சொல்லி ஆமை நீரில் மூழ்கியது. நீருக்குள் நீந்தியே கரையை அடைந்தது. 



தேள் நீரில் இறந்து மிதந்தது. 



உதவி செய்பவருக்கு உபத்திரவம் செய்தால் இதுதான் நடக்கும். 





முத்துக் கதை: தாம்பாளம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 27, 2018 2:40 pm

அந்த தேள் தற்போது 8 வழி சாலை என்ற அக்கரைக்கு போக வேண்டும் என்று ஆமையாகிய மக்கள் முதுகில் பயணம் செய்கிறது விரைவில் ஜலசாமதி ஆகும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக