புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_m10மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:21 pm

டி.வி.எஸ். சோமு பக்கம்
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! J5zVCi9FQMikzj0i8E17+c2e6131d645d170798203384cdd66711



ராமேசுவரம் எனக்கு மிகப் பிடித்தமான ஊர்களில் ஒன்று.
“ஒட்டுமொத்த ஊரே உங்களுக்கானது.. ஊரின் அத்துணை பேரும் உங்களிடம் அன்பும், மரியாதையும் செலுத்துவார்கள்.. பணம் என்பது இன்றியே எங்கும் சுற்றித்திரியலாம்..” – இப்படியோர் அனுபவத்தை நீங்கள் பெற்றது உண்டா?
அதுபோன்ற ஒரு அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறது ராமேசுவரம்!
நான் சிறுவனாக இருந்த காலத்தில், என் தந்தை, தொடர்வண்டித்துறையின் பயணச்சீட்டு ஆய்வாளராக பணியாற்றினார். வாரம் ஒரு முறை விரைவுத் தொடர்வண்டியில் ராமேஸ்வரம் சென்று வருவது அவரது பணி.
காலை ஆறுமணிக்கு தஞ்சையில் ஏறினால் மதியம் அங்கு சென்றுவிட்டு, மறுநாள் மதியம் வரை முழுநாள் அங்கு இருக்க வேண்டியிருக்கும். பிறகு கிளம்பி இரவு தஞ்சையில் இறங்கவேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:38 pm

பள்ளி விடுமுறை நாட்களில் திடீர் திடீரென அப்பாவுடன் நானும் ராமேஸ்வரத்துக்குச் சென்றுவிடுவேன்.
பாம்பன் ரயில் நிலையத்துக்கு அடுத்து பாம்பன் பாலம் வரும். அதில் மெல்ல மெல்ல அசைந்தாடி தொடர்வண்டி நகரும் அந்த கணங்களுக்காகவே அந்த பயணம்.
[size=31]மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! TsgzsALzTs2aE1pd0BUj+a5c7d425d47127141a40ba7c978ce0fa
[/size]
பாம்பன் பாலம்
இந்தியாவிலேயே நீளமான கடல் தொடர்வண்டி பாலம். இரு புறமும் கண்ணுக்கெட்டும் தூரம்வரை நீலமும் இளம் பச்சையும் கலந்த வண்ணத்தில் நீர் படர்ந்திருக்கும் அழகே அழகு. பிரமிப்பூட்டும் அழகு.
பளிங்குமாதிரியான தண்ணீரினுள் கிடக்கும் சிலபாறைகளும் கண்ணுக்கு விருந்தளித்து அடிவயிற்றில் சிலீர் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
மெல்லிய கடல் அலைகளும், அவை வெளிப்படுத்தும் ஓசையும் சிலிர்க்க வைக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:41 pm

தொடருந்து அசைந்தாடி செல்கையில், சாய்ந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தும். அச்சத்துடன் கூடிய பரவச அனுபவம் அது.
[size=31]மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! CFwLqnKCTjaQiJFJaHZV+775b0fe92edee56f837dfb16967cede4
[/size]
பாம்பன் பாலம் வழியாக செல்லும் கப்பல் (நான் பார்க்காத காட்சி)
இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். ஆனால் அந்தக் காட்சியை நான் கண்டதில்லை என்பது வருத்தமே.
(உலகின் ஆபத்தான சுற்றுலா பயணங்களில் இந்த பால பயணத்தையும் ஏதோ ஓர் அமைப்பினர் சேர்த்திருப்பது நினைவுக்கு வருகிறது.)
பாலம் முடிந்ததும் அந்தப் பக்கத் தீவில் முதலில் வருவது தங்கச்சி மடம் ரயில் நிலையம் என்று நினைவு.
முன்னதாக, ராமநாதபுரம் நிலையத்திலேயே தொடர்வண்டியில் ஆட்களுடன், கோழிகள் உள்ளிட்ட சில உயிரினங்களும் ஏறத்துவங்கும். அதோடு சிறு சிறு மூட்டை முடிச்சுகளும் ஏற்றப்படும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:42 pm

காரணம், அப்போது (1988க்கு முன்) ராமேஸ்வரம் செல்ல சாலை (பால) வசதி கிடையாது. தொடர்வண்டி மட்டுமே.
ஆகவேதான் மக்களோடு சேர்ந்து வீட்டுத் தேவைக்கான பொருட்களும் ரயில்களில் ஏறும் நிலை.
விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்கும் தொடர்வண்டி பயணச்சீட்டு ஆய்வாளர்கள்கூட ராமநாதபுரத்தில் இருந்து தளர்வாய் நடந்துகொள்வார்கள். முன்பதிவு பெட்டிகளிலும், இடமிருந்தால் ஆட்களை ஏற்றிக்கொள்வார்கள். அவர்கள் கொண்டுவரும் பொருட்களையும் அனுமதிப்பார்கள். அந்தத்தீவு மக்களின் நிலை உணர்ந்து இதர பயணிகளும் அவர்களுக்கு மறுப்பு சொல்வதில்லை.
தங்கச்சிமடக்குப் பிறகு சில தொடர்வண்டி நிலையங்கள் கடந்து ராமேஸ்வரம் நிலையம் வரும்.
இத்தொடர்வண்டிகளில் பணியாற்றுபவர்களுக்கு அந்த ஊர் மக்கள் அளித்த மரியாதையும் அன்பும் சொல்லில் அடங்காது. குறிப்பாக, மக்களுடன் பழகும் வாய்ப்புள்ள பயணச்சீட்டு பரிசோதர்கள் என்றால் கூடுதல் மரியாதை..

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:43 pm

நான் கவனித்திருக்கிறேன். பயணச்சீட்டு பரிசோதகரான என் அப்பாவைக்கூட, “மாமா, அண்ணன்” என்று உறவு முறை வைத்துத்தான் அழைப்பார்கள்.
தொடர்வண்டி ஊழியர்கள் அனைவரையுமே அந்த ஊர் மக்கள் நன்கு அறிவர். அங்கு இந்த பணியாளர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்புதான். அங்கிருந்த (டூரிங்) திரையரங்குக்குச் சென்றால் சீட்டு அளிக்க மாட்டார்கள்.. “அட.. உங்களுக்கு என்னங்க சீட்டு..” என்று மரியாதையும் பதற்றமுமாய் தனியாக சிறப்பான நாற்காலிகளை எடுத்துப்போடுவார்கள். இடைவேளையில் (எவ்வளவுதான் மறுத்தாலும்) தின்பண்டம், குளிர்பானம், தேநீர்.. என்று ஏக உபசரிப்பாக இருக்கும்.
ஒரு முறை திரையங்குக்கு தொடர்வண்டி பணியாளர்கள் குழு சற்று தாமதமாய் போய்ச் சேர்ந்தது. அதற்குள் படம், ஓடி ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டன.
திரையரங்கு உரிமையாளர் உடனடியாக படத்தை நிறுத்தி முதலில் இருந்து போடச் சொல்லியிருக்கிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:43 pm

அப்பாவுடன் நான் ராமேசுவரம் செல்லும்போதெல்லாம், அவருடன் பணியாற்றிய சாலமன் சார்தான் எனக்குத் துணை. அவர் தலைமையில்தான் மற்ற சில பணியாளர்களும் நானும் ஊரை வலம் வருவோம். எழுத்தாளராகவும் இருந்த என் அப்பா அழகிரி. விசுவநாதன், பணியாளர் அறையிலேயே கதை எழுத உட்கார்ந்துவிடுவார்.
நாங்கள் சாலமன் சார் தலைமையில் கடற்கரை, மார்க்கெட், திரைப்படம் என்று சுற்றி வருவோம்.
வழியில் பழக்கடையோ, தின்பண்டக்கடையோ தென்பட்டால், உடனே என்னிடம், “என்ன சாப்பிடுறே” என்பார் அன்போடு.
நான் மறுத்தாலும் வாங்கித்தருவார். அவரை கடைக்காரர்கள் அனைவரும் அறிவர். மலிவான விலைக்கு கொடுப்பார்கள். சிலர் “அட.. உங்ககிட்ட காசு வாங்கறதா” என்று மறுப்பார்கள். ஆனால் சாலமன் சாரும் சரி, இதர தொடர்வண்டி பணியாளர்களும் சரி மலிவான விலைக்கு வாங்குவார்களே தவிர, இலவசமாய் வாங்கியதை நான் கண்டதில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:46 pm

சாமலன் சாருக்கு அங்கிருக்கும் ராமநாதசுவாமி கோயிலின் மீது அத்தனை பிடிப்பு. கோயிலின் கட்டிடக் கலையை அங்குலம் அங்குலமாக ரசிப்பார்.. தனது ரசிப்பை நம்மிடமும் வெளிப்படுத்துவார்.
“ஆயிரத்துக்கும் மேல தூண்கள்.. அறுநூறு அடி நீளம்.. நானூறடி அகலம்.. ஆகா.. ஆகா.. அந்தக்காலத்திலேயே எப்படி கட்டியிருக்கான் பாரு” என்று ஒவ்வொரு முறையும் அவர் கண்கள் விரிய வியந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.
[size=31]மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! EpwlKqJ0TEeEynvds9CE+f62006ed63c7716aac0207261d121119
[/size]
ராமேசுவரம் கோயில் பிரகாரம்
கோயிலிலும் எங்களுக்கு (!) ஏக மரியாதை இருக்கும். கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், அர்ச்சகர்கள் அனைவருமே, தொடர்வண்டிப் பணியாளர்களை அத்தனை அன்போடு வரவேற்பார்கள். எப்போதுமே நமக்கு (!) சிறப்பு தரிசனம்தான். பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட அர்ச்சகர் (பெயர், குமார் அல்லது குமரேசன் என்று நினைவு) எங்களுடன் வந்து கோயிலை சுற்றிக்காண்பிப்பார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:47 pm

எங்க கோயிலை எங்களுக்குத் தெரியாதா.. நீங்க வரணுமா” என்று அவரிடம் சாலமன் சார் கேட்பதுண்டு.
அவரோ, “பெரியவங்க வந்திருக்கீங்க.. கூட வராட்டி எப்படி” என்று வலுக்கட்டாயமாக உடன் வருவார்.
ராமநாதசுவாமி கோயில் போலவே புகழ் பெற்றது கோதண்டராமர் கோயில். முதன் முதலில், நாட்டுக்கு வெளியே அரசாங்கம் அமைக்கப்பட்டது இங்குதான்.
இராமாயணத்தில், விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம் பிணக்கு கொண்டு பிரிந்து ராமனுடன் வந்துவிடுகிறான் அல்லவா? அவனுக்கு இங்குதான் ராமர், பட்டாபிசேகம் செய்து வைத்தாராம்.
அப்போது இலங்கை, ராவணன் ஆட்சியின் கீழ் இருந்தது. நாட்டைப் பிடிக்கும் முன்பே பட்டாபிசேகம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:49 pm

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! U5ZwjwjqRBCYvHkOLMf6+08df871890d9d8e375085f7f076759ac

கோதண்டராமர் கோயில்
பின்னாட்களில் இந்தியாவுக்கு வெளியே நேதாஜி அமைத்த இந்திய அரசாங்கம், பாலஸ்தீனத்துக்கு வெளியே யாசர் அராபத் அமைத்த அரசாங்கம், தற்போது ஈழத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் அரசாங்கம் எல்லாவற்றுக்கும் முன்னோடி ராமாயணத்தில் இருக்கிறது போலும் என்று பின்னாட்களில் எனக்குத் தோன்றியது உண்டு.
ராமேஸ்வரத்தின் இதர இடங்களான ராமர் பாதம், துறைமுகம் என ராமேஸ்வரத்தில் சுற்றாத இடம் இல்லை. ஒரு முறை பக்கத்தில் இருக்கும் தீவு ஒன்றுக்கு படகில் சென்று வந்ததும் மறக்க இயலா நினைவு. (முயல்தீவு என்று ஞாபகம்)
அதே போல் மிக முக்கியமானது தனுஷ்கோடி. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் மற்றும் சூறாவளியால் அந்நகரமே அழி ந்தது. சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்தும் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணித்த 123 பேரும் பலியானார்கள்.
மிகக் கொடூரமான அந்த நிகழ்வுக்குப் பிறகு, பிறகு தனுஷ்கோடியை வாழத்தகுதியற்ற ஊராக அறிவித்தது தமிழக அரசு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:52 pm

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! VbOPIITfTQmY9WgirHFg+53c740581cc12dc9b2271d3d55454f71

கடலில் “மிதந்து செல்லும்ட வேன்
ஒரு முறை அங்கும் அழைத்துச் சென்றிருக்கிறார் சாலமன் சார். குறிப்பிட்ட தூரம் வரைதான் பாதை இருக்கும். அதன் பிறகு தனியார் வேன்கள்தான் தனுஷ்கோடிக்குச் செல்லும். கணுக்கால் அளவு கடல் நீரில் அந்த வாகனம் செல்வதைப் பார்க்கையில், கடல் மீது வேன் மிதந்து செல்வது போலத் தோன்றும்.
[size=31]மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! EIaJQzvGQMCkx9hVRFCe+c4f30ae7fd2678b53be9786f352a1a27
[/size]
புயலால் சிந்தைத தேவாலயம் ( தனுஷ்கோடி)
புயலின் கொடுமையான தாக்குதலுக்கு சான்றாக, மண்ணில் அரைகுரையாக புதைந்திருக்கும் தண்டவாளம், மேற்கூரை அடித்துச்செல்லப்பட்ட நிலையில் சிதிலமடைந்து கிடக்கும் தனுஷ்கோடி ரயில் நிலையம், அதே நிலையில் இருக்கும் தேவாலயம் என்றும் காணக்கிடைக்கும்.
அப்போது ராமேசுவரம் தீவிலேயே மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம் என்றால் தொடர்வண்டி நிலையம்தான். மக்களின் ஒரே போக்குவரத்து வழி அதுதானே!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக