புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
15 Posts - 3%
prajai
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
4 Posts - 1%
jairam
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_m10ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை…


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun Dec 03, 2017 12:53 pm



நானே ராஜா, நானே ராணி, நானே மந்திரி, நானே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்த ஜெயலலிதா இறந்து போய் ஓராண்டு முடிந்துவிட்டது. அவரின் மறைவு உறுதியானதும், அவரால் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்டவர்கள், ‘நாங்களே ராஜா, நாங்களே ராணி, நாங்களே மந்திரி, நாங்களே மக்கள்’ என்ற

எண்ணத்தில் வாழ ஆரம்பித்து ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டு தொடங்கிவிட்டது. ராஜாக்கள் பஃபூன் வேடம் போடும்போது பவ்யம் அதிகமாக இருக்கும். ஆனால், பஃபூன்கள் ராஜா உடையைத் தாங்கும்போது பல் உடைபட்டுவிடும். அதைத்தான் இப்போது பார்க்கிறோம்.
ஜெயலலிதா இருந்தவரை எடப்பாடி பழனிசாமி எங்கோ இருந்தார். போயஸ் தோட்டத் தூதுவர்களாக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகிய நால்வரைத்தான் நியமித்திருந்தார் ஜெயலலிதா. ‘சொறி, சிரங்கு, படை, தேமல்’ என்று அவர்களை அன்றைய பெண் அமைச்சர் ஒருவர் கிண்டலடித்தது தனிக்கதை. இதில், பழனியப்பன் ஒரு விவகாரத்தில் சிக்கியபிறகு, அவருக்குப் பதிலாக அதே கொங்கு வட்டாரத்தில் ஆள் தேடியபோது அகப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. நால்வரில் ஒருவராய் உள்ளே நுழைந்தார். சசிகலா குடும்பத்தால் உருவாக்கப்பட்ட பன்னீர் என்கிற மொண்ணைக் கத்தி, மோடியால் சாணை பிடிக்கப்பட்டதால் கூர்மை பெற்று அவர்கள்மீது பாய்ந்தது. அடுத்து, ஒரு துரு பிளேடு என எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்தார்கள். எடுத்துப் பயன்படுத்திய விரலையே எடப்பாடி பிளேடு வெட்டிவிட்டது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆரின் வாள் வீச்சில் உருவான கட்சியை, பன்னீரும் எடப்பாடியும் கத்தி, பிளேடால் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

‘ஜெயலலிதா இருந்தவரை இவர்களையும், இவர்களின் அமைச்சரவை சகாக்களையும் தரை டிக்கெட்கூட கொடுக்காமல் தள்ளிவைத்திருந்தது ஏன்’ என்பதை இப்போது இவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமாருக்கு 64 பற்கள் இருப்பது இப்போதுதான் தெரிகிறது. சட்டமன்ற சபாநாயகராக இருந்த ஜெயக்குமாரிடம் ராஜினாமா கடிதம் வாங்க வைத்து, வெலிங்டன் கொடுத்த சிம்மாசனத்திலிருந்து இறக்கி வெளியில் தூக்கிப் போட்டார் ஜெயலலிதா. இது ஏன் என்று அவர்தான் விளக்க வேண்டும். ‘‘கமல் அரசியல் ‘குணா’ படம்’’ என்று கமென்ட் அடிக்கும் ஜெயக்குமாரின் அரசியல் ‘அமைதிப்படை’யா? சீனியர் சயின்டிஸ்ட்டுகளாக ‘வண்டலூர் விலங்குகளை மழையிலிருந்து காப்பாற்ற மேடான பகுதிக்கு அனுப்பிய’ திண்டுக்கல் சீனிவாசன், ‘ஆற்றுநீரை தெர்மாகோல் கொண்டு மூடிய’ செல்லூர் ராஜு, ‘மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால்தான் ஆற்றில் நுரை வருகிறது’ எனக் கண்டறிந்து சொன்ன கருப்பணன் ஆகியோர் வலம்வருகிறார்கள். சென்னை சாலைகள் அமெரிக்காவாகத் தெரிகின்றன, அமைச்சர் வேலுமணிக்கு. இப்படி எல்லாம் மணிமணியாக இருப்பதால்தான், ஜெயலலிதா இவர்களை கஜானாவுக்குள் பூட்டியே வைத்திருந்தார். அவர் போனதும், இன்று சிந்தனை வானில் சிறகடித்துப் பறக்கிறார்கள். இது மைனாரிட்டி அரசுதான் என்பதையே உணராமல் மல்லுவேட்டி மைனர்களாக வலம்வருகிறார்கள்.
135 உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை அரசைக் கொடுத்துவிட்டுப் போனார் ஜெயலலிதா. அதில் 12 பேரை உடைத்தார் ஓ.பன்னீர்செல்வம். அவர்கள் மீண்டும் உள்ளே போய்விட்டார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. இறுதித் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். தேர்தல் ஆணையம் சமீபத்தில் அளித்த இரட்டை இலை தீர்ப்பின்படி, எடப்பாடி அரசுக்கு 111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுதான் உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப் பினர்கள் ஆதரவு வேண்டும். இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் எடப்பாடிக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த வகையில் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், ஆட்சி ஆட்டம் கண்டுவிடும். அதனால் தான், அம்மாவின் அநாதைப் பிள்ளைகள், பி.ஜே.பி-யின் தத்துப் பிள்ளைகளாக வலியப்போய் மாட்டிக்கொண்டார்கள்.
தமிழக சட்டமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் உட்கார மட்டுமே தகுதிபெற்ற பி.ஜே.பி-க்கு, இது குஷியை ஏற்படுத்திவருகிறது. ‘டம்ஜிக்கு… டம்ஜிக்கு… டம்ஜிக்கு…’ பாடுகிறார்கள். ‘நேர்வழியோ, குறுக்கு வழியோ, வீட்டுக்குள் போனால் போதும்’ என்பதுதான் அவர்களின் தேசிய – தெய்விகப் பாதை. இதற்குக் கணக்குப் போட்டுத் தருபவர்களே கவர்னர்கள். வித்யாசாகர் ராவின் மௌனங்களும் மகாராஷ்டிரா பதுங்கல்களும் இதற்கு சாட்சிகள். புதிய கவர்னர், இந்த பழைய மொந்தைகளை மோப்பம் மட்டுமே பிடித்து வருகிறார். சசிகலா குடும்பத்துக்கு ஜோசியம் பார்த்தவர் வீடுவரை புகுந்து புறப்படும் வருமானவரித் துறை, 89 கோடி ரூபாய் இடைத் தேர்தல் பட்டுவாடா ஆவணம் மாட்டிய விஜயபாஸ்கரையோ, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எடப்பாடி உள்ளிட்ட வர்களையோ இன்னும் கை வைக்காமல் இருக்கும் அரசியல் புரிந்துகொள்ள முடியாதது அல்ல; இரட்டை இலையை ரிலீஸ் செய்துவிட்டு, ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை அறிவிக்கும் சூட்சுமமும் அறிய முடியாதது அல்ல. அனைத்துமே அமித் ஷாவின் ஆட்டங்கள். அம்மா ஆட்சி நடத்துவதாக எடப்பாடி சொல்வதெல்லாம் சும்மா. இது, அமித் ஷா ஆட்சி.
‘இவர்கள் நடத்துவது அம்மா ஆட்சி அல்ல’ என்பதற்கு ஒரே ஓர் உதாரணமாக ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லலாம். அது, தி.மு.க – அ.தி.மு.க பங்காளிச் சண்டை ஒழிந்ததுதான். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒண்டிக்கு ஒண்டி நிற்பார்கள். பன்னீரும் ஸ்டாலினும், எடப்பாடியும் ஸ்டாலினும் அப்படி நிற்கவில்லை. ‘ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து கால் ஆட்டக் கூடாது’ என்று எடப்பாடி நினைத்திருக்கலாம். சபாநாயகர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது ஏற்பட்ட களேபரங்களில் உரிமைக்குழு விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, இடைநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலைமைக்குக் கொண்டுபோய் நிறுத்தப்பட்ட தி.மு.க உறுப்பினர்களை எட்டுப்பட்டி சாமியாக நின்று காப்பாற்றினார் எடப்பாடி. ‘ஆறு மாதங்களுக்குமேல், சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத உறுப்பினர் பதவி பறிபோகும்’ என்ற நிலையில் கருணாநிதிக்குச் சிக்கல் வந்தது. சிறப்பு அனுமதித் தீர்மானம் கொண்டுவந்து, அவரின் சட்டமன்ற சாதனை வரலாறு தொடரட்டும் என்று அனுமதித்ததும் எடப்பாடியின் பெருந்தன்மைதான்.
எல்லோரையும் வளைப்பதைப்போல, தி.மு.க-வையும் வளைக்க முயன்றார் முதல்வர். இதன்பிறகு அ.தி.மு.க-வை சட்டமன்றத்தில் விமர்சிக்கும் விஷயத்தில் தி.மு.க-வும் அடக்கிவாசித்தது. இது அ.தி.மு.க-வுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். தி.மு.க-வுக்குப் பெருமை அல்ல. செயலற்ற, திட்டங்களற்ற, கேட்பாரற்ற, அதே நேரத்தில் ஊழல் முறைகேடுகள் நிறைந்த கடந்த ஓராண்டுக் காலத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த தி.மு.க தவறிவிட்டது. ‘பி.ஜே.பி அருளாசியோடு நான்கு ஆண்டுகளை இவர்கள் ஓட்டிவிடுவார்கள், தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று தி.மு.க நினைக்கலாம். சட்டசபையில் பாதிக்கும் சற்றே குறைவான இடம்தான் தி.மு.க-வுக்கு. சட்டையைப் பிடித்து எடப்பாடி அரசாங்கத்தைச் செயல்பட வைக்கும் கடமை மற்ற கட்சிகளைவிட தி.மு.க-வுக்கே உண்டு.

மற்ற கட்சிகளுக்கும் எப்படி அரசியல் செய்வது என்றே புரியவில்லை. ‘அ.தி.மு.க-வை ஆதரிப்பதா, எதிர்ப்பதா’ என்பதே தமிழக பி.ஜே.பி-க்குக் குழப்பம். டெல்லி பி.ஜே.பி தலைமை செய்வது எதுவும் தமிழக பி.ஜே.பி-க்குத் தெரிவதில்லை. மாலத்தீவு கிளைக்கழகம்போல கமலாலயம் இருக்கிறது. அதனால், காலையில் எதிர்க்கிறார்கள்; மாலையில் ஆதரிக்கிறார்கள். இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். அர்ச்சனா ஸ்வீட்ஸ் விளம்பரம் மாதிரி எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இருக்கிறார். அவரது உடல்தான் கோபாலபுரத்தில் இருக்கிறதே தவிர, உயிரும் மனசும் அவ்வை சண்முகம் சாலையிலும் தினகரன் வீட்டிலும் இருக்கின்றன. ஸ்டாலினுக்கும் திருநாவுக்கரசருக்கும் ஒட்டவில்லை. அ.தி.மு.க-வை எதிர்க்கும் பா.ம.க., பி.ஜே.பி விஷயத்தில் அடக்கி வாசிக்கிறது. வழக்கம்போல் கேப்டன், மோடியை ஆதரிக்கிறார்; அ.தி.மு.க-வை விமர்சிக்கிறார்.
ரஜினி படம் எடுத்துவிடுவாரோ என்ற பீதியில், கமல் பெட்டிக்குள்ளிருந்து படம் எடுப்பது மாதிரி சீறிவருகிறார். அவர் மனத்திரையில் ஓடுவது கட்சியா, அமைப்பா, வழக்கம்போல் ‘இரண்டும் கலந்த கலவையா’ என்பதை இப்போது சொல்ல முடியாது. அவர் தேர்தலில் நிற்பாரா என்பதும் இதுவரை புரியாத புதிர்தான்.
தி.மு.க மேடைகளில் பங்கெடுத்து வந்த அத்தனை கட்சிகளும் ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க வேட்பாளரை ஆதரிக்கின்றன. ம.தி.மு.க-வும் அதே முடிவுடன் அரசியல் ஆலோசனைக் குழுக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. ஆர்.கே. நகர் தேர்தல் என்பது தமிழ்நாட்டு அரசியல் தட்பவெப்ப நிலையை உணர்த்தலாம்; உணர்த்தாமலும் போகலாம்.
ஆனால், மொத்தத்தில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழ்நாட்டு அரசியலைத் தலைசுற்ற வைத்துவிட்டது என்பது மட்டுமே உண்மை. ஜெயலலிதா கல்லறையில்; சசிகலா சிறையறையில்; கருணாநிதி வீட்டறையில்; மொத்த தமிழ்நாடும் இருட்டறையில்!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக