புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
61 Posts - 50%
heezulia
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
1 Post - 1%
Shivanya
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
15 Posts - 3%
prajai
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
9 Posts - 2%
jairam
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue May 02, 2017 8:19 am

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?


இப்போது அவைகளை வேகமாக அழித்தபின் புதிய விவாதம் தொடங்கியுள்ளது கண்கெட்டபின் சூரிய வணக்கம் செய்யமுடியுமா ?
யாரைத்தான்நம்புவதோ பேதை நெஞ்சம் என கலக்கம்
ஒண்ணுமே புரியலே என்னமோ நடக்குது என மயக்கம் !
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட மே 11 வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இன்றைய தமிழ் ஹிந்துவில் ஒரு சுவையான கட்டுரை வந்துள்ளது
தகவலுக்காக நன்றியுடன் பகிர்கிறேன்



உவர் நிலத்தின் ஆலகால விஷத்தை உண்டது சீமைக்கருவேல மரங்கள்: ஆச்சர்யமூட்டும் ஓர் ஆய்வு

கா.சு.வேலாயுதன்
சூழலை பாதிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை!’ என்ற மனுவை முன்வைத்து தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட மே 11 வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் பதிலளிக்கவும், வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் மாற்றி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இதன் பின்னணியில் சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா? என்ற சர்ச்சை கச்சை கட்டி நிற்கின்றன. காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்கல்லூரி முன்னாள் முதல்வரும், உழவியல் துறை பேராசிரியருமான முனைவர் வி. செல்லமுத்து இந்த சீமைக்கருவேல மரங்கள் குறித்து 1992- 1995ல் ஆய்வு செய்து பிஎச்டி பட்டம் பெற்றவர். தி இந்து சார்பாக அவரிடம் பேசிய போது பகிர்ந்து கொண்டவை:

நான் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு கடைகோடி நரிக்குடி கிராமத்தை சேர்ந்தவன். பழைய ராமநாதபுரம் மாவட்டம் கடும்வறட்சிக்கு இலக்கான போது அங்கிருந்து தஞ்சாவூருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக பஞ்சம் பிழைக்க சென்றார்கள். ஒரு கட்டத்தில் அப்படி கிராமங்களை விட்டு சென்ற 5 மாவட்ட மக்களின் வாழ்வையே மாற்றியது சீமைக்கருவேல மரங்கள். அவர்கள் இருந்த பூமியில் இந்த சீமைக் கருவேலன்கள் நன்றாக வளர்ந்தது. அதை வெட்டி விறகாக்கி, கரியாக்கி உள்ளூரில் மட்டுமல்ல; வெளியூர், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பத் தொடங்கினார்கள். சுண்ணாம்பு சூளை, கொல்லம்பட்டறை என பயன்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் வாழ்வு மேம்பட்டது. அங்கே இதை விற்பனை செய்தே கோடீஸ்வரர் ஆனவர்களும் உண்டு. எனவே என் ஆராய்ச்சிக்கு இதையே எடுத்துக் கொண்டேன். அதை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டபோது பலரும் சிரித்தார்கள். கேலி செய்தார்கள். எனக்கு தெரிந்து இதில் என்னைப்போல் ஆய்வு செய்து 4 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள்.

சீமைக்கருவேலம் 1870களில் மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஜோத்பூர் மகாராஜா ராஜஸ்தான் முழுக்க கொண்டு வந்து நட செய்திருக்கிறார். ராஜஸ்தான் பாலைவனங்களில் வீசும் காற்றின் வேகத்தால் மணல் மலைக் குன்றுகள். அது குடியிருப்புகளின் வீட்டையே மூடிவிடும். கதவுகளை திறக்க முடியாது. மணல்குன்றுகளை மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை வைத்து அகற்றுவது மனித சக்திக்கு பெரும்பாடாக இருந்தது. அந்த நிலத்திலும் விளையக்கூடிய தாவரமாக இது இருந்ததோடு, மணல் குன்றுகளை உருவாவதை தடுக்கும் அபூர்வ மரமாகவும் விளங்கியது. எனவே ROYAL TREE என்றே இதை வர்ணித்தார் அந்த மகராஜா. அது மட்டுமல்ல, இந்த மரங்களை வெட்டுபவர்கள் தலை துண்டிக்கப்படும் என்றும் சட்டம் போட்டு தடுத்திருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு ராஜஸ்தான் முழுப் பாலைவனமாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த சீமைக்கருவேல மரங்கள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்பட்டன. ஒரு மரத்திலிருந்து ஆயிரக்கணக்கான விதைகள் விழுவதால் ஆயிரக்கணக்கான நாற்றுக்களும் முளைத்தன. இந்த மரத்தின் விதைகளை சாப்பிட்ட கால்நடைகள் போடும் சாணம் மூலமாகவும் விதைகள் விழுந்து முளைத்து பெருக ஆரம்பித்தது. அப்படி மட்டும் இது வந்து பெருகாமல் இருந்திருந்தால் நம் மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளே எரிபொருளுக்காக அழிக்கப்பட்டிருக்கும். அந்த காலத்தில் களர் உவர் நிலங்களை சலவைத்தொழிலாளர்கள் தேடிச்சென்று துணி துவைக்கும் சோடா உப்பு எடுப்பார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த நிலையை அடியோடு மாற்றியது இம்மரங்கள். கடலோர பிரதேசங்களில் இது வளர்ந்து கடல் உப்புமண் உள்நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுத்தது. உப்பள நிலத்தில் நிறைந்திருக்கும் சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் உப்புக்களை உறிஞ்சி சாப்பிட்டு தானாகவே வளர்ந்தது (இந்த நிலத்தில் மற்ற மரங்கள் வைத்தால் கருகிவிடும்) அமிர்தம் கடையும்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டு சிவன் அருள் புரிந்ததுபோல் சோடியம் என்ற நஞ்சை உண்டு நிலத்தை சொஸ்தப்படுத்திய இந்த தாவரத்தை WONDER CHILD OF NATURE என்று வர்ணித்திருக்கிறார் ஒரு விஞ்ஞானி.

ஆடு, மாடுகள் இந்த இம்மரங்களின் காய்களையே சாப்பிட்டு வளர்ந்தன. வீட்டிற்கும், தோட்டத்திற்கும், காடுகளுக்கும், சிறுதொழிற்சாலைகளுக்கும் தடுப்பு வேலியாக இந்த மரங்களே பயன்பட்டது. விறகாக, கரியாக, கரித்துகளாக மாற்றம் செய்யப்பட்ட இம்மரம் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும், வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கும், நீராவியால் இயங்கும் ஆலைகளுக்கும், ஊதுபத்தி கம்பெனிகளுக்கும் சென்றது. தவிர கார்பன் எலக்ட்ரோடுகளாக ஆய்வகங்களிலும், இண்டஸ்ட்ரிகளிலும் பயன்பட்டது. இப்பவும் பரமக்குடி, மானா மதுரை போன்ற பகுதிகளில் இப்பவும் குஜராத் மாநில வியாபாரிகள் இம்மரத்தின் கரிகளை லாரி, லாரியாக வாங்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அவை மும்பை, கல்கத்தா பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

அது எங்கே போகிறது. எதற்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளவில்லை. 100 சதுர கிலோமீட்டர் இந்த சீமைக்கருவேல மரங்கள் இருந்தால் நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை ஒன்றை போட முடியும். அதை கரியா எரிச்சு புகையா விட்டால்தான் சூழல் கேடு, அதையே ஸ்டீம் எனர்ஜியாகவும், எலக்ட்ரிசிட்டியாகவும், பயோ கேஸ், பயோ ப்யூல் என மாற்றிப் பயன்படுத்தினால் ஒரு கேடும் இல்லை என்கிறார் ஒரு விஞ்ஞானி. ஒரு காலத்தில் காகிதக்கம்பெனியில் இதன் பயன்பாடு அதிகம் இருந்தது. இந்த மரங்கள் வளைவாகவும், முள்ளோடும் இருப்பது இதை பயன்படுத்துவதற்கு சிரமங்களை ஏற்படுத்தியது. அதை சமவாக்கில் முள் இல்லாமல் புதிய வடிவில் விளைவிக்க விதை ஆய்வு முயற்சிகள் நடந்துள்ளது. அது தொடரவில்லை.

இதன் கீழே எந்த தாவரமும் வளராதுதான். கண்மாய், ஏரி என நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இவை நின்றதால் அதன் நீர்பரப்பு குறைந்தது. அல்லினோபதி என்ற வேதியியற் பொருள் மிகையாக இருப்பதால் எளிதாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்கிறார்கள். ஆனால் இதனால்தான் நிலத்தடி நீர் குறைந்தது என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக இம்மரங்கள் எங்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அங்கு தண்ணீர் நிறைய இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 100 அடி, 200 அடி நிலத்தடி நீர் உள்ள பகுதிகளை இந்த தாவரம் வளர்ந்ததை வைத்தே அறிந்துள்ளார்கள். உலகில் 3ல் ஒரு பங்கு சீமைக்கருவேல மரங்கள் 40 இனங்களாக இருக்கிறது. இந்தியாவில் 2 இனங்கள் மட்டுமே உள்ளது.

அதில் ஓர் இனமே தமிழ்நாட்டில் உள்ள ‘ப்ரோசோபிச் சூலிஃப்லோரா! (PROSOPIS JULIFLORIA)’. இதில் முட்கள் உள்ளது. இலைகளை ஆடுமாடுகள் சாப்பிடாது. காய்களை மட்டுமே சாப்பிடுகிறது. மனிதர்களுக்கு உணவாக பயன்படுவதில்லை. இந்த இனம் ஆர்டிக், அண்டார்டிகா தவிர அனைத்து நாடுகளிலும் உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் உள்ள சீமைக்கருவேலம் ப்ரோசோபிச் சினரேரியாவிற்கு (PROSOPIS CINERARIA) முட்கள் கிடையாது. அதில் உள்ள இலைதலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடுகிறது. அதில் உள்ள விதைகளை மக்கள் பச்சைப்பயிறு போல உணவுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த சீமைக்கருவேலம் மத்திய பிரதேசத்திற்கு கீழே மட்டுமே உள்ளது.

எந்த உயிரினமும் சிறிய அளவில், சிறுபான்மையாக இருக்கும்போது, அதன் தேவை அதிகமாக இருக்கும். அப்போது அதை அழைத்து விருந்து வைப்பது மனிதனின் வழக்கம். அதுவே மிகுதியானால், தேவை குறைந்தால் சமுதாயப்பேரழிவுக்கே இதுதான் காரணம் என விரட்டுவோம். உதாரணத்திற்கு கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. அதுவே அதிகமாகி விவசாய நிலங்களுக்குள் நுழைந்து விளைச்சலை அழித்தால் பேரழிவு சுட்டுக் கொல்ல சொல்லுகிறார்கள். அதே நிலைதான் தற்போது சீமைக்கருவேலனுக்கும் ஏற்பட்டுள்ளது. விளைநிலத்தை வீடுகளாக்கக்கூடாது; வீடுகள் உள்ள நிலத்தை விளைநிலமாக்க முயற்சிக்கக்கூடாது என்பதுதான் இயற்கை நியதி. அதுபோல இது தேவையற்ற இடங்களில் விளைய விடாமல் தடுப்பதும், தேவையான இடங்களில் வளர்வதும் அவசியமானது. இது இல்லாமலே போய்விட்டால் வரும் காலங்களில் மற்ற காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க முடியாது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 02, 2017 9:17 pm

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 12:45 am

//சீமைக்கருவேலம் 1870களில் மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஜோத்பூர் மகாராஜா ராஜஸ்தான் முழுக்க கொண்டு வந்து நட செய்திருக்கிறார். ராஜஸ்தான் பாலைவனங்களில் வீசும் காற்றின் வேகத்தால் மணல் மலைக் குன்றுகள். அது குடியிருப்புகளின் வீட்டையே மூடிவிடும். கதவுகளை திறக்க முடியாது. மணல்குன்றுகளை மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை வைத்து அகற்றுவது மனித சக்திக்கு பெரும்பாடாக இருந்தது. அந்த நிலத்திலும் விளையக்கூடிய தாவரமாக இது இருந்ததோடு, மணல் குன்றுகளை உருவாவதை தடுக்கும் அபூர்வ மரமாகவும் விளங்கியது. எனவே ROYAL TREE என்றே இதை வர்ணித்தார் அந்த மகராஜா. அது மட்டுமல்ல, இந்த மரங்களை வெட்டுபவர்கள் தலை துண்டிக்கப்படும் என்றும் சட்டம் போட்டு தடுத்திருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு ராஜஸ்தான் முழுப் பாலைவனமாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.//

ரொம்ப சரி, இன்றும் வயலுக்கு நடுவில் இருந்தால் கூட இந்த மரத்தை வெட்ட மாட்டார்கள் ராஜஸ்தான் மக்கள்.....பொக்கிஷம் போல பாது காப்பார்கள், அதை பார்த்துப் பழகிய எனக்கு, நம் தமிழ்நாட்டில் அவற்றை வெட்டக் கிளம்பியது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 12:51 am

ஆனால் ராஜஸ்தானில் உள்ள சீமைக்கருவேலம் ப்ரோசோபிச் சினரேரியாவிற்கு (PROSOPIS CINERARIA) முட்கள் கிடையாது. அதில் உள்ள இலைதலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடுகிறது. அதில் உள்ள விதைகளை மக்கள் பச்சைப்பயிறு போல உணவுக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



அருமையான கட்டுரை ஐயா.........மிகவும் அருமை ! ...பகிர்வுக்கு மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 03, 2017 5:08 pm

சீமை கருவேலமரம் குறித்த பல அறிஞர்களின் கட்டுரைகள் இப்பல்லாம் வந்துகிட்டு இருக்குது. புன்னகை

நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் ஞானம் கிடையாது. ஒரு சில சந்தேகங்கள் அவ்வளவு தான்

- ஏன் இந்த மரத்தின் இலைகளை தாவரஉண்ணிகள் உண்பது இல்லை.

- நிலத்தடி நீரை இவை உறிஞ்சாது சரி , ஆனால் தண்ணீரே இல்லாத அரபு பாலைவனங்களில் இவைகளால் எப்படி வளர  முடிகிறது?

- காய்களை கால்நடைகள் உண்கின்றன என்பது தவறான தகவல்.
(மஞ்சள் நிறமுடைய சீமைக்கருவேல காய்களை எந்த விலங்கினமும் சாப்பிடாது,
இளம் பச்சை அல்லது சாம்பல் நிறமுடைய நாட்டு கருவேல மர காய்களை தான் ஆடு மாடுகள் சாப்பிடும்) இந்த மரத்தின் நடுப்பகுதியை கொண்டு தான் விவசாயிகள் ஏர் கலப்பை , மண்வெட்டி பிடி போன்றவை செய்வார்கள். அவ்வை பாட்டி சொன்ன "ஆலும் ,வேலும்" இந்த வேல மரத்தை தான்.

இதன் கீழே எந்த தாவரமும் வளராதுதான். கண்மாய், ஏரி என நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இவை நின்றதால் அதன் நீர்பரப்பு குறைந்தது.
ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க ,  புன்னகை

ராஜஸ்தானில் உள்ள சீமைக்கருவேலம் ப்ரோசோபிச் சினரேரியாவிற்கு (PROSOPIS CINERARIA) முட்கள் கிடையாது. அதில் உள்ள இலைதலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடுகிறது. அதில் உள்ள விதைகளை மக்கள் பச்சைப்பயிறு போல உணவுக்கு பயன்படுத்துகிறார்கள்
அப்ப இந்த மரத்தையே தமிழ்நாட்டிலும் வளர்க்க சொல்ல வேண்டியது தானே. இங்க மட்டும் ஏன் இந்த சீமை கருவேலமரம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 03, 2017 5:09 pm



விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 03, 2017 10:13 pm

ராஜா wrote:சீமை கருவேலமரம் குறித்த பல அறிஞர்களின் கட்டுரைகள் இப்பல்லாம் வந்துகிட்டு இருக்குது.
சமீப காலமாக whats app லும் கூட இந்த சீமை கருவேல மரங்களுக்கு சாதகமாக சில பதிவுகள் உலவிக்கொண்டிருக்கிறது. யார் இதை இப்படி மன சாட்சி இல்லாமல் பரப்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை.



சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 04, 2017 3:01 am

அறியாத தகவல்கள்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி. அந்த வேலம் குச்சி இதுதானோ?

ஆனால்,
"அதை கரியா எரிச்சு புகைய விட்டால்தான் சூழல் கேடு, அதையே ஸ்டீம் எனர்ஜியாகவும், எலக்ட்ரிசிட்டியாகவும், பயோ கேஸ், பயோ ப்யூல் என மாற்றிப் பயன்படுத்தினால் ஒரு கேடும் இல்லை என்கிறார் ஒரு விஞ்ஞானி"
சந்தேகம் இதுதான் , எரிக்காமல் எப்பிடி அதை ஸ்டீம்   எனெர்ஜியாக மாற்றமுடியும் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 04, 2017 1:44 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:சீமை கருவேலமரம் குறித்த பல அறிஞர்களின் கட்டுரைகள் இப்பல்லாம் வந்துகிட்டு இருக்குது.
சமீப காலமாக whats app லும் கூட இந்த சீமை கருவேல மரங்களுக்கு சாதகமாக சில பதிவுகள் உலவிக்கொண்டிருக்கிறது. யார் இதை இப்படி மன சாட்சி இல்லாமல் பரப்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
எல்லாம் , பெருநகரங்களில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் மாதசம்பளமாக வந்த பணத்தில் "அரிசியும்+பருப்பும் , காய்கறியும்" வாங்கி பொங்கி தின்னுட்டு செரிக்காம கட்டுரை எழுதும் நபர்களாக தான் இருக்கும். புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 04, 2017 2:09 pm

ராஜா wrote:எல்லாம் , பெருநகரங்களில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் மாதசம்பளமாக வந்த பணத்தில் "அரிசியும்+பருப்பும் , காய்கறியும்" வாங்கி பொங்கி தின்னுட்டு செரிக்காம கட்டுரை எழுதும் நபர்களாக தான் இருக்கும். புன்னகை

இருக்கலாம். தன் எழுத்துக்கள் கவனிக்கப்படவேண்டும் என்ற காரணத்தினால் கூட வேண்டுமென்றே எழுதுகிறார்களோ என்னவோ....



சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக