புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
48 Posts - 45%
heezulia
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
3 Posts - 3%
jairam
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
2 Posts - 2%
சிவா
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
14 Posts - 4%
prajai
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
6 Posts - 2%
jairam
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_m10துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 17, 2017 12:36 pm

துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Yu8e66JDSEWnjFFbIkEv+saroja_2302261g
-
‘நல்லவன் வாழ்வான்’ படத்தில்
--------------
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நாயகர்களாக உருவாகிவந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜாவும் சினிமாவில் நுழைந்தார். 1952-ல் வெளியான ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானார் சரோஜா.

அந்நாளில் தமிழகம் தாண்டி இலங்கை, ரங்கூன், பினாங்கு ஆகிய நாடுகளிலும் புகழ்பெற்றது டி.எஸ். நடராஜனின் ‘என் தங்கை’ என்ற நாடகம். அதை அப்படியே தழுவி சினிமாவாக எடுக்கப்பட்டது. சி.எல். நாராயணமூர்த்தி, எம்.கே.ஆர். நம்பியார் ஆகியோர் திரைப்படமாக இயக்கிய அந்த நாடகத்தில், அண்ணன் வேடத்தில் நாயகனாக நடித்தவர் சிவாஜி கணேசன்.

அசோகா பிக்சர்ஸ் இந்த நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. அந்த நாடகத்தில் நடித்துவந்த சிவாஜியையே படத்திலும் ஒப்பந்தம் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் ‘பராசக்தி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

“ பராசக்தி கதையிலும் அண்ணன் தங்கை பாசம் இருக்கிறது. ‘என் தங்கை’யிலும் அதுதான் கருப்பொருள். எனவே இதில் சிவாஜி மீண்டும் நடிப்பதைவிட எம். ஜி. ராமச்சந்திரன் பொருத்தமாக இருப்பாரே” என்றார் பெருமாள் முதலியார். அதை ஏற்று எம்.ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தனர். கதாநாயகனுக்கு அடுத்து கதையைத் தோளில் சுமந்து செல்வது தங்கையின் வேடம்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 17, 2017 12:38 pm

துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் CD4ma64fQxSsgc2S0csP+saroja2_2302263g
-
‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆருடன்
-
துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் USz0Xog4RsurRDDLOZRi+saroja1_2302264g
-
‘கடன் வாங்கிக் கல்யாணம்’ படத்தில் சாவித்திரியுடன்
--------------------------------------
-
ஆனால் பொருத்தமான நடிகை கிடைக்கவில்லை. அதனால் ஒரு புதுமுகத்தையே தேர்வுசெய்துவிடுவது என்று முடிவு செய்தனர். அப்போது மயிலாப்பூரில் புகழ்பெற்ற நாட்டியக் கலாசேத்திரமாக இருந்தது வழுவூர் பி. ராமையாப் பிள்ளையின் நடனப்பள்ளி. அதன் ஆண்டு விழாவில் அவருடைய மாணவி பி.இ. சரோஜாவின் நாட்டியத்தைக் கண்டு இவர்தான் தங்கை மீனாவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அறிமுகப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. பராசக்திக்கு முன்பே வெளியாகி எம்.ஜி.ஆருக்கும் புகழைக் கொண்டுவந்தது. பார்வையற்ற பெண்ணாக நடித்து அறிமுகப் படத்திலேயே பெரும் புகழ்பெற்ற இ. வி. சரோஜா தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

என்கண் தந்த கலைச்செல்வி


இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் பழம்பெருமை மிக்க, பாடல்பெற்ற முருகன் தலமாக இருக்கும் ‘என்கண்’தான் இ.வி.சரோஜா பிறந்து வளர்ந்த ஊர். வேணு பிள்ளை ஜானகி அம்மையார் தம்பதியின் இரண்டாவது வாரிசாகப் பிறந்த இவருக்கு சிறு வயதுமுதலே நடனத்தில் ஆர்வம். இரண்டு வயதுமுதல் அம்மாவிடம் நடனம் கற்றுக்கொண்டு பிரகாசித்தார்.

அப்போது மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் பரதக் கலையின் வித்தக மையமாக விளங்கியது. அதற்குக் காரணம் வழுவூர்ப் பாணி நாட்டியம் டெல்லிவரை புகழ்பெற்று விளங்கியது. காண்போரை மயக்கும் லயசுத்தமும், அங்க சுத்தமும் கொண்டதே அதற்குக் காரணம். அதை உருவாக்கியவர் நாட்டிய மேதை நட்டுவனார் பி. ராமையாபிள்ளை.

திரையுலகில் அன்று முத்திரை பதித்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரின் மாணவிகளே. பதினோரு வயதில் இ.வி. சரோஜாவின் திறமையைக் கண்டு, அவரைத் தனது பள்ளியில் சேர்த்துக் கொண்டு முறைப்படி நடனம் பயிற்றுவித்தார் வழுவூரார். ஆசானின் பெயரைக் காப்பாற்றும் விதமாக 14 வயதில் அரங்கேற்றம் செய்து 16 வயதுக்குள் 100 மேடை நிகழ்ச்சிகளில் ஆடிச் சாதனை புரிந்தார் சரோஜா.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 17, 2017 12:40 pm

துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் 0i52eMlwS0mXYCCDi5X1+saroja3_2302262g
-
‘பாக்யலட்சுமி’ படத்தில் ஜெமினியுடன்
--
மயக்கிய மான் நடனம்

அறிமுகப் படம் தந்த புகழ் அவரை மடமடவென்று புகழ்பெற்ற நட்சத்திரமாக்கியது. ஐம்பதுகளில் ஒல்லியான உடலமைப்பு கொண்ட கதாநாயகிகள் அபூர்வம். இ.வி. சரோஜாவுக்கு ஒல்லியான உடற்பாங்குடன் அகலமான நெற்றி, நீளமான முகம், கருணையும் கவர்ச்சியும் இணைந்த கண்கள், கொவ்வை இதழ்கள், குளிர் சிரிப்பு என்று ரசிகர்களைத் தன் கண்ணியமான அழகினால் கவர்ந்தார்.

வழுவூர் பாணி நடனத்தை சினிமாவுக்கான நடத்துடன் இணைத்து ஒவ்வொரு நடன அசைவையும் இவர் நளினமாக வெளிப்படுத்திய பாங்கில் ரசிகர்கள் உருகிப்போனார்கள். இளம் மான்போல் துள்ளித் துள்ளி பல படங்களில் இவர் ஆடிய நடனம், ரசிகர்களின் இதயத்தை வருடியது.

பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கிய திரைக்கதாசிரியர் ஏ. பி. நாகராஜன் கதை, வசனம் எழுதி நடித்த ‘பெண்ணரசி’ படத்தை வேணுசெட்டியாரின் தயாரிப்பில் இயக்கினார் கே.சோமு. அதில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துத் தனது திறமையான நடனத்தால் கவர்ந்தார்.

பின்னர் டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி. ஆர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த ‘குலேபகாவலி’ படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் “சொக்கா போட்ட நவாப்பு… செல்லாதுங்க ஜவாபு” என்ற பாடலுக்கு பாடி ஆடிய நடனம், சரோஜாவைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.

பின்னர் எம்.ஜி. ஆருக்கு வெள்ளிவிழா காவியமாக அமைந்த ‘மதுரை வீரன்’ படத்தில் கதாநாயகி பொம்மியின் (பானுமதி) தோழியாக நடித்தார். அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிடும் புள்ளிமானைத் துரத்திவரும் மதுரைவீரன் எம்.ஜி.ஆரை “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” என்று பகடி செய்யும் விதமாக இ.வி.சரோஜா பாடி ஆடிய நடனம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இதேபடத்தில் பானுமதி, பத்மினி ஆகியோர் ஆடிய நடனங்கள் இடம்பெற்றிருந்தாலும் இ.வி. சரோஜாவின் நடனமே ரசிகர்களைத் திரையரங்குக்குத் திரும்பத் திரும்பச் சுண்டி இழுத்தது. இ. வி. சரோஜாவின் நடனக் காட்சி இருந்தால் அந்தப் படம் வெற்றிபெறும் என்று நம்பப்பட்டது. இதனால் 50க்கும் அதிகமான படங்களில் அவரது நடனம் கதையில் பொருத்தப்பட்டது.

மதுரை வீரனுக்குப் பிறகு ‘அமர தீபம்’, ‘ பாவை விளக்கு’, ‘கற்புக்கரசி’, ’எங்க வீட்டு மருமகள்’, ‘தங்கப் பதுமை’, ‘ நீலமலைத் திருடன்’ என்று சரோஜாவுக்குப் புகழைச் சேர்த்த படங்கள் பல. நகைச்சுவை நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கதாநாயகி ஆக முடியாது என்ற மாயையையும் சரோஜாவே முதலில் உடைத்தார்.

சந்திரபாபுவுடன் மூன்று படங்களில் இணையாக நடித்த அவர், பிறகு எம். ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்குப் படவுலகில் அக்னிநேனி நாகேஷ்வரராவ் என முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். பதினைந்து வயதில் தொடங்கி 26 வயதுவரை மட்டுமே நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நடனத் தாரகை

புகழின் உச்சியில் இருந்தபோது, இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவைத் திருமணம் செய்துகொண்டார். தன் சகோதரர் இ.வி. ராஜனுடன் இணைந்து படநிறுவனம் தொடங்கி ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தைத் தயாரித்தார். ப. நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், இ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இதுவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தில் சரோஜாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை கிடைத்தது. ஆனால் அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்தது. சரோஜா ராமண்ணா தம்பதிக்கு நளினி என்ற ஒரே மகள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாலும் நடனத்தைத் தன் கண்ணென நேசித்ததால் ‘மனோன்மணியம்’ காவியக் கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து இந்தியா முழுவதும் நடத்திக் காட்டி நடனத்திலும் தனது பங்களிப்பைச் திறம்படச் செய்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். ஆனால் நடனத்தில் அவர் வைத்த ஒவ்வொரு அடியும் அமரத்துவம் பெற்றது.

படங்கள் உதவி: ஞானம்

பிரதீப் மாதவன்
தி இந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக