புதிய பதிவுகள்
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:31

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
46 Posts - 40%
prajai
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
1 Post - 1%
kargan86
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
1 Post - 1%
jairam
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
8 Posts - 5%
prajai
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
1 Post - 1%
kargan86
வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_m10வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82034
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 7 Dec 2016 - 15:51

வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்! MfNRvhRmSuCjoHSqlmXN+vm2
-
அரசியல்வாதிகளின் வேண்டுதல்களை நிறைவேற்றும்
அருள்மிகு கந்தசுவாமி முருகன் கோயில் மதுராந்தகம்
தாலுகாவில் உள்ள செய்யூரில் அமைந்துள்ளது.

பிரணவத்தின் பொருள் தெரியாது திகைத்த பிரம்மனை
முருகவேள் விலங்கிட்டுச் சிறையிட்டுத் தாமே சிருஷ்டித்
தொழில் செய்தார். அப்பொழுது திருமால், இந்திரன்,
தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் முருகனிடம் வந்து
பிரம்மனைச் சிறையினின்று விடுவிக்க முறையிட்டனர்.

அவ்வித பெருமை வாய்ந்த முருகவேள் வீற்றிருக்கும்
சிறப்புத்தலம் செய்யூர்.

சூரபத்மனைப் போரில் வெற்றிகொள்ள முருகப்
பெருமானுக்கு உதவிய பைரவரின் பூதவேதாள கணங்கள்,
வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி தரும்
திருக்கோலத்தைக் காண விரும்பி பைரவரிடம் கோரிக்கை
வைத்தன.

பைரவர் முருகனிடம் சொல்ல, ஈசன் ஆட்சீஸ்வரராய் அருளும்
அச்சிறுப்பாக்கம் அருகிலுள்ள சேயூரில் அனுதினமும் ஈசனை
ஆராதிக்க உள்ளதாகவும் அங்கு பூதவேதாள கணங்கள்
வந்தால் அவர்களுக்குத் துணைவியருடன் காட்சி
கொடுப்பதாகவும் கூறினார்.

செய்யூரில் அர்த்தஜாமத்தில் இத்தல கந்தசுவாமியும்,
பைரவரும் 27 நட்சத்திர பூதவேதாள கணங்களும்
சோமநாதரையும், மீனாட்சி அம்மனையும் வழிபட்டு
வருகின்றனர். அவர்களது சிவபூசைக்கு இடையூறு நேராமல்
காப்பதற்காகவே பிரம்மாவும் விஷ்ணுவும்
துவாரபாலகர்களாக ஈசனின் கருவறை சந்நிதியில்
உள்ளனர்.

ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ்ந்த செய்யூர்
கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கருவறை,
அந்தராளம், மகாமண்டபம், வெளிப்பிரகாரம் என்று கோயில்
அமைப்பு கொண்டது. வலப்பக்கம் வள்ளி, இடப்பக்கம்
தெய்வானையுடன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற
திருக்கோலத்துடன் கிழக்கு நோக்கி ஸ்ரீ கந்தசுவாமி சேவை
சாதிக்கிறார்.

கருவறையின் வடபுலத்தில் கஜலட்சுமியும் தென்புறத்தில்
விநாயகர் சிலையும் உள்ளன, சூரியனும், பைரவரும்
கருவறைக்கு வெளியில் ஸ்ரீ கந்தசுவாமியை நோக்கியவாறு
உள்ளது சிறப்பு.

கருவறையின் வெளிச் சுவரைச் சுற்றி நிர்த்த ஸ்கந்தரும்,
பிரம்ம சரஸ்தாவும் (பிரம்மாவைச் சிறைப்படுத்திச் சிருஷ்டித்
தொழிலைச் செய்ததால் பிரம்மசாஸ்தா), பால ஸ்கந்தரும்,
சிவகுருநாதரும், புளிந்தரும் (வேடுவர்) என முருகன்
பஞ்சகோஷ்ட மூர்த்தியாக நின்று அருள் புரிகிறார்.

மூலவரின் நேர் எதிரில் வெளிப்பிரகாரத்தில் பெரிய மயில்,
கொடிமரம், பலிபீடமும் இவற்றின் எதிரில் நவக்கிரகங்களும்
விளக்குடன் கூடிய கல் தூணும் உள்ளன. 26 நட்சத்திர பூத
வேதாள கணங்கள் வெளிப்பிரகாரச் சுவர்களிலும்
1 நட்சத்திரப் பூத வேதாள கணம் மயில் மண்டபத்தின் மேற்
புறம் வெளியே மேற்குப்பார்த்த வண்ணமாக மொத்தம்
27 நட்சத்திரப் பூத வேதாள கணங்கள் உள்ளன. கந்தசுவாமி
கோயிலைச் சுற்றி நான்கு மாட வீதிகளில் நவசந்தி (9) விநாயகர்
அமைந்திருப்பது சிறப்பு.

ஸ்தல விருட்சம் வன்னிமரம். தீர்த்தம் செட்டிகுளம்.
ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, வைகாசி விசாகம்,
தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை விசு, சித்ரா
பௌர்ணமி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி சூரசம்ஹாரம்,
பங்குனி உத்திர திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை,
பங்குனி பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் சிறப்பானவை.

இத்திருத்தலத்தில் சத்துரு சம்ஹார திருசதி ஹோமம் அர்ச்சனை
செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.
27 நட்சத்திரக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதத்தின் தேய்பிறை
அஷ்டமி நாளில் பைரவர் பூத வேதாள பூசை மாலை
4.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.00 மணிவரை நடைபெறும்
27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 பூதவேதாள கணங்களுக்கும்
மலர்கள் தூவி பூசணிக்காயில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி
வழிபடுவர்.

பொரிகடலை, சாத உருண்டை, எள் மற்றும் பழம் படையலிடுவர்.
இந்த 27 நட்சத்திர வேதாள கணங்கள் வழிபாடு இந்தியாவில்
வேறெங்கும் இல்லாதது. இவ்வாறு, ஆறுமுறை தொடர்ந்து வழி
பட்டால் அரசியல்வாதிகள் தங்கள் எதிராளிகளை வீழ்த்தி
அரசியலில் வெற்றிக் கொடி நாட்டுவர்.

மனநிலைப் பாதிப்பிற்கு உள்ளானோரும், ஆட்டிசக் குறைபாடு
உடையோரும், கல்வியில் பின்தங்கியோரும், திருமணத்
தடையால் தவிப்போரும், செய்வினை தோஷம் உள்ளோரும்,
வாஸ்து தோஷத்தால் அவதிப்படுவோரும், பொருளாதாரச்
சிக்கலில் தவிப்போரும், மகப்பேறு இல்லாதோரும் இங்கு வந்து
வழிபட்டால் பலன் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

குரு தோஷம் உள்ளவர்கள், குரு அருள் வேண்டுபவர்
சிவகுருநாதனை வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி
வழிபடல் நன்று. பிரம்மசாஸ்தாவைப் புதன்கிழமைகளில் நெய்
தீபம் ஏற்றி வழிபட்டால் தலைவிதியை மாற்றி அமைப்பார்.

பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட செல்வம்
கொழிக்கும். மகப்பேறு வேண்டுவோர் 6 சஷ்டி திதிகளில்
முருகனுக்குப் பாலபிஷேகம் செய்து 6 தேய்பிறை அஷ்டமி
பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு, 48 நாள்கள் காலை மாலை
தொடர்ந்து வீட்டில் நெய் தீபம் ஏற்றி செகமாயைத் திருப்புகழ்
பாடலையும் பாம்பன் சுவாமிகளின் வேற்குழவி வேட்கையையும்
பாராயணம் செய்தால் குழந்தைப்பேறு நிச்சயம் வாய்க்கும்
என்கிறார்கள் பக்தர்கள்.
பெரியாண்டவர் பூஜையும் இங்கு சிறப்பானது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82034
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 7 Dec 2016 - 15:51

கார்த்திகை தீபத்தின் முந்தைய நாள் பரணி தீபமும்
கார்த்திகை அன்று மகாதீபமும் மறுநாள் நாட்டு தீபமும்
கல்தூண் விளக்கில் ஏற்றுவர். இதனைச் “சிவ தீபம்’ என்பர்.
திருக்கார்த்திகை அன்று மாலையில் மூலவர் கருவறை
விமானத்தின் மேல் ஆறு தீபங்கள் ஏற்றுவர்.
இதனை “முருக தீபம்’ என்பர்.

சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகள் பழைமை கொண்ட
இக்கோயிலுக்கு குலோத்துங்க சோழன் திருப்பணி செய்துள்ளான்.
அந்தகக்கவி வீரராகவ முதலியார், அருணகிரிநாதர்,
சேறை கவிராஜ பிள்ளை, ஸ்ரீ முருகதாஸ் சுவாமிகள், சிவப்பிரகாச
சுவாமிகள் சேயூர் முருகனைப் பாடிப் புகழ்ந்துள்ளது சிறப்பாகும்.

காலை 6.30 முதல் பகல் 11.30 வரையும் மாலை 5.00 முதல்
7.30 வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

சென்னை புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில்
100 கி.மீ தொலைவில் உள்ள எல்லையம்மன் கோயிலில் இருந்து
5 கி.மீ. தொலைவிலும்; சென்னை -திண்டிவனம் நெடுஞ்சாலையில்
மேல்மருவத்தூரிலிருந்து 22 கி.மீ தொலைவிலும்
செய்யூர் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: 94427 73285/ 94447 29512.


———————————————-
– முனைவர். எஸ். ஸ்ரீகுமார்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக