புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_m10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10 
30 Posts - 50%
heezulia
பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_m10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_m10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_m10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10 
72 Posts - 57%
heezulia
பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_m10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_m10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_m10பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:06 am

பந்த பாசங்களை, வேஷங்கள், மோசங்கள் என்போர் கவனிக்க!

பந்தம் என்றால், உறவு; ஆனால், அது, ஒற்றைச் சொல் அல்ல. சொல்லும் போதே பாசம் என்பதையும் சேர்த்து, பந்த பாசம் என்று சொல்வதே மரபு!

உறவு என்பதே பாசத்துடன் இணைந்த ஒன்று தான். என் உடன்பிறந்தோரில் அக்கா, தம்பி, தங்கை உண்டு; அண்ணன் இல்லை. இதனால், 'அண்ணன் இல்லையே...' என்ற ஏக்கமும், 'நமக்கு அண்ணன் என்கிற கொடுப்பினை இல்லையே...' என்றும் எண்ணியது உண்டு.

ஆனால், 'தாய்வழி பெரியம்மாக்கள் மூலம், உனக்கு ஐந்து அண்ணன்கள் இருக்கின்றனரே... இவர்களை ஏன் நீ, அண்ணன்களாக கருதவில்லை...' என்று என் மனமே, என்னை வினவிய போது, 'அதானே...' என, மனம் தெளிந்தேன்.

பின், இவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி, 'அண்ணே... அண்ணே...' என்று வாய் நிறைய சொல்லி, பூரித்து மகிழ்ந்தேன். அவர்களது பாசமும், பரிவும் கண்ணாடியின் பிரதிபலிப்புகளாய் எனக்கு திருப்பி கிடைத்த போது, பூரித்துப் போனேன்.

ஆனால், ஒரே கருப்பையில் தோன்றி வளர்ந்தவர்கள் கருத்து வேறுபட்டு நிற்கிற போது, இயற்கை ஏற்படுத்தி தந்த இந்த அருமையான இணைப்பையும், இப்படி மழுங்கடித்து கொள்ள தான் வேண்டுமா என்கிற முதல் உணர்வே, தலைதூக்கி நிற்க வேண்டும்.

உறவினர்களை பற்றி பொதுவாக சொல்லப் படுகிற குறைகள் இரண்டு...

'என் வளர்ச்சி கண்டு வயிறு எரிகின்றனர்; பொறாமைப்பட்டு சாகின்றனர்...' என்பது, முதல் குற்றச்சாட்டு.
இக்குற்றச்சாட்டில், கால்வாசி கற்பனை; கால்வாசி பொய். ஊகங்கள் எல்லாம் உண்மையாகி விடாது.
எச்சில் கையால் காக்காய் ஓட்டினால், கையில் உள்ள பருக்கைகள் காக்காய்க்கு உணவாகி விடும் என்று, இடது கையால் காக்காய் ஓட்டும் கஞ்சப் பிசினாறிகள் உண்டு. இவர்கள் உறவினர்களுக்கு என்று எதுவுமே செய்யாதபோது தான், அவர்களிடையே பொறாமை வளர்கிறது.

'நம் புது காரில் ஏறி, ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ளுங்கள்; என் மலைவாச இல்லத்தில் குடும்பத்தோடு ஒரு வாரம் தங்கி வாருங்கள்; என் வங்கிக் கணக்கில் உறங்குகிற பணம், உங்கள் பிள்ளையின் படிப்பிற்கு பயன்படட்டும்; பின், சவுகரியப்படும் போது தாருங்கள்...' என்றெல்லாம் நம் வளர்ச்சியின் வாச மலர்களை, உறவினரும் நுகரும்படி கொடுக்காத உறவினர்களால் என்ன பயன்! வளத்தால் உயர்ந்து நிற்பவர்கள், மனதால் உயர்ந்து நிற்க வேண்டாமா... இவர்களை பார்த்து உறவினர் பலரும் வயிறு எரியாமல், வேறு என்ன செய்வராம்!

'அவர் நன்றாக இருந்தால், அது நமக்கும் உதவி; நல்லது...' என்று நம் உறவினர் வட்டத்தை நினைக்கும்படி செய்யாதது, வளர்ந்தவர்களின் தவறல்லவா!

உடல் உழைப்பால், செல்வாக்கால், புகழால், உறவினர் எவருக்கும் பயன்படாத ஒருவரது வாழ்க்கையை, முழுமையற்ற வாழ்க்கை என்பேன். உறவினர் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு, உறவிற்குள் இருக்கிற சம்பிரதாயங்களை சரிவர பின்பற்றவில்லை என்பது!

'எனக்கு முறைப்படி சொல்லவில்லை; எவனோ சொல்லியல்லவா எனக்கு தெரிய வந்தது. முதலில் எனக்கல்லவா சொல்லியிருக்க வேண்டும்... முறைப்படி அழைக்கவில்லை; அலட்சியப்படுத்துகிறார்; கேவலப்படுத்தி விட்டார்.

நன்கு வரவேற்கவில்லை; முகம் கொடுத்து பேசவில்லை; வாங்க என்று கூப்பிடவில்லை; சரி வர உபசரிக்கவில்லை; சாப்பிடச் சொல்லவில்லை; தாம்பூலப் பையும், பரிசும் தரவில்லை...' என்று ஆரம்பித்து, 'துக்கம் விசாரிக்க வரவில்லை; என் வீட்டு விசேஷத்திற்கு வரவில்லை; என்னை மதிப்பதே இல்லை...' என்கிற பெரிய புகார் பட்டியல் இதனுள் அடக்கம்.

ஒன்று சொல்லட்டுமா... இவற்றையெல்லாம் தாண்டிய பெருந்தன்மை நமக்கு வேண்டும். 'போகட்டும் விடு; அவர்கள் குறைபட நடந்து கொண்டாலும், நாம் பெருந்தன்மை காட்டுவோம்...' என்று சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் மீறிய போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.

மறுக்காமல் ஒரு உண்மையை ஒப்புக் கொள்வோம். நண்பர்களை மன்னிக்க முன் வருகிற அளவிற்கு, நமக்கு உறவினர்களை மன்னிக்கிற பெருந்தன்மை ஏனோ இல்லை.

உறவினர்களை, உறவினர்களாக மட்டும் பார்க்காமல், அவர்கள் மீது ஒருவித நட்பு பூச்சையும் பூசிக் கொண்டால், பெருந்தன்மையும், மன்னிக்கும் மனோபாவமும் நம்முள் வளர்ந்து விடும்.
நட்பு நாம் தேடிக் கொண்டது; உறவு, இயற்கை தந்த அற்புத அன்பளிப்பு. நல்லதோர் வீணை இது; இதை, நலங்கெடப் புழுதியில் எறியலாமா?

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 18, 2016 4:02 pm

அருமைமா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 4:16 pm

பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்? 103459460
-
உறவுகளிடம் எதிர்பார்ப்பு அதிகம்....
அதனை அந்த உறவுகள் மதித்து நடக்க வேண்டும்
-
உதாரணமாக கும்பகோணத்திலிருந்து யாராவது
விருந்தினராக  நம் வீட்டுக்கு வந்தால்,  வாங்க
என்று வரவேற்பதோடு, வெற்றிலை சீவல் சுண்ணாம்பு
தட்டை (:தாம்பூலம் )கொண்டு வந்து வைக்க வேண்டும்,,,!
-
அவ்வாறு நடந்து கொள்ளா விட்டால், அவர்கள்
பார்வையில் நாகரிகம் தெரியாத  ஜன்மமாகத்தான்
நாம் தெரிவோம்...
-
அதே போல் கிராமப்புறங்களுக்கு சென்று திருமணத்திற்கு
பத்திரிகை வைத்தால் , பொத்தாம் பொதுவாக எல்லோரும்
திருமணத்திற்கு வந்து விடுங்கள் - என்று கூறினால்
போதாது...
-
அவர்களது குழந்தைகளின் பெயர்களை சொல்லி
அவர்களையும் தவறாமல் அழைத்துக் கொண்டு வரணும்னு
சொல்லணும்...
-
இல்லையென்றால் பெரிசுகள் மட்டும் திருமணத்திற்கு
வருவார்கள்
குழந்தைகளை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டால்
அவங்களை அழைத்து வரணும்னு நீங்க சொல்லலையே
என்று நம்மீதே குற்றம் சாட்டுவார்கள்...
-
இப்படி சில நடைமுறை இருக்கு...
வீடு கிரகப் பிரவேசம் செய்வதற்கு திடீரென நிச்சயித்து
விட்டதால், பத்திரிகை அடிக்கவில்லை, போனிலேயே
சொல்றேன், அவசியம் வரணும்னு ஆண்கள் மட்டும்
அன்பொழுக கூப்பிடுவார்கள்...அவரது துணைவியாரும்
போனில் கூப்பிட வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள்
-
போனில் அழைப்பு வந்தாலும் பரவாயில்லை போகலாம் என்று
தீர்மானிக்க  முடியாது....மனைவி ஒப்புக் கொள்ள மாட்டார்...!!
-
ஆகவே உறவுகளும் சரியாக சில நடைமுறைகளை கடைப்பிடிக்க
வேண்டும்...
-
அப்போதுதான் உறவுகள் உயிரோட்டமுள்ளதாக இருக்கும்
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக