புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
17 Posts - 74%
heezulia
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
4 Posts - 17%
Manimegala
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
1 Post - 4%
ஜாஹீதாபானு
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
134 Posts - 50%
ayyasamy ram
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
11 Posts - 4%
prajai
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
2 Posts - 1%
jairam
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தில்லு! Poll_c10தில்லு! Poll_m10தில்லு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்லு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 20, 2016 9:49 am

தில்லு! PAIxv30QaupiXtuAbqX9+E_1458285564
-
அறுபது வருட அரசியல் பாரம்பரியம் கொண்ட
கட்சிகள் கூட விஜயகாந்த் சொல்லப்போகும்
அந்த ஒற்றை வார்த்தைக்காகத் தான் காத்துக்
கிடந்தன.

'நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கை
இருக்கிறது'. 'பழம் கனிந்துவிட்டது. அது பாலில்
தான் விழவேண்டும்' என்றெல்லாம் சினிமா
வசனங்கள் பேசியும் எதுவும் கேப்டன் முன்
எடுபடவில்லை.

'தனித்த போட்டி' என்ற ரெண்டே வார்த்தையில்
அத்தனை களேபரங்களுக்கும் முற்றுபுள்ளி
வைத்துவிட்டார் விஜயகாந்த்.

தமிழகமே எதிர்பார்த்த ஒரு முடிவை மகளிர்
மத்தியில் அவர் அறிவித்திருக்கிறார். மக்களும்
தலைவர்களும் என்ன நினைக்கின்றனர்?
ஒரு விறுவிறு ரவுண்ட்-அப்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 20, 2016 9:50 am


மகளிர் என்ன நினைக்கிறார்கள்?
-
திவ்யா(குடும்பத்தலைவி):
எல்லா கட்சிகளும் இப்படி தனியா போட்டியிட
முன் வரணும். ஜெயிக்கிறாரோ, இல்லையோ
இந்தத் தடவை அவரோட ஓட்டு பெர்சன்டேஜ்
கட்டாயம் கூடும்.
விஜயகாந்தின் இந்த தைரியமான முடிவால்
பெரும் பாதிப்பு அடையப்போவது தி.மு.க. தான்.
-
பிரேமா (மாணவி):
விஜயகாந்த் அங்க போறார், இங்க போறார்னு
கிளம்பின வதந்திகள்லாம் எங்கிருந்து
முளைச்சதுன்னு தெரிஞ்சுக்கணும்னு ஆர்வமா
இருக்கு. அவரோட குடும்பத்துக்கு உள்ளேயே
குழப்பம் என்றெல்லாம் பேசினாங்க. எது எப்படியோ,
எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வச்சிட்டார்.!
-
பாரதி (தனியார் ஊழியர்):
குழப்பவாதின்னு அவரைச் சொல்லிட்டிருந்தவர்களுக்கு
எல்லாம் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கார்.
அவரைக் கேலி கிண்டல் பண்ணினவங்களுக்கு இது
சரியான பதிலடி. மத்தபடி இதுல என்ன கருத்துச்
சொல்லன்னு தெரியலை. பட், துணிஞ்சு நின்ன
கெத்தைப் பாராட்டியே ஆகணும்.
-
அனிதா (ஆசிரியை):
விஜயகாந்துக்கு சி.எம். ஆசை வந்திருச்சுங்கிறதையே
காட்டுது இந்த முடிவு. ஆசைப்பட ஜனநாயக நாட்டுல
எல்லோருக்கும் உரிமை இருக்கில்லையா? அதனால
இந்த அறிவிப்பை பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை
-ன்னு நினைக்கிறேன்.
-
பஞ்சதா (வீட்டுவேலை):
முன்னாடி எல்லாம் கூட்டுச் சேர்ந்தா நின்னாங்க?
எம்.ஜி.ஆர்., ஆண்டபெல்லாம் ஏது இவ்வளவு கூட்டணி?
திரும்பவும் அந்த மாதிரி ஒரு நிலைமையக் கொணடு
வரப் போறார்னு நினைக்கேன்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 20, 2016 9:50 am


தே.மு.தி.க. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்?
-
ஆர். சித்திரைலிங்கம்:
எங்க கட்சிக்காரங்க கூட்டணியை விரும்புகிற மாதிரி
ஒரு டாக் வெளியில உலாவுச்சு. அதையெல்லாம்
பொய்யாக்கிட்டார் தலைவர்!
-
பாபுகாந்த்:
234 தொகுதியில் சீட் கேட்க ஆள் இருக்கான்னு அடுத்த
பிரச்சாரத்தை எதிரிகள் தொடங்கிட்டாங்க. நானே சீட்
கேட்டிருக்கேன். கிடைச்சா என்ன விலை கொடுத்தாவது
வெற்றியை அவர் காலடியில கொண்டு போய் வைப்பேன்.
-
எம்.கிஷோர்:
நிர்வாகிகள் என்ன நினைச்சாங்களோ தெரியாது.
கட்சியல அடிமட்டத் தொண்டன் எப்பவுமே கட்சி தனியா
நிக்கணும்னுதான் ஆசைப்பட்டான். ஏன்னா, முதல்
தேர்தல்லயே தனியாளா ஜெயிச்ச அன்னிக்கே அவனுக்கு
எங்க தலைவர் மேல நம்பிக்கை வந்திடுச்சு!
-
ஞானமணி:
கேப்டனை இந்த முடிவு எடுக்க வச்சதுல அவர்
மனைவியோட ரோல் முக்கியமானது. அந்த வகையில
அண்ணி அண்ணனுக்கு தப்பான வழியை எப்படிக்
காட்டுவாங்க?
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 20, 2016 9:51 am


தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
-
கே.எஸ். ராதாகிருஷ்ணன் (தி.மு.க.)
விஜயகாந்த், அவரது கட்சியின் முடிவை எடுத்திருக்கிறார்.
எங்களைப் பொறுத்தவரை, தி.மு.க. வலுவான இயக்கம்.
அவசரகால (மிசா) சூழல்கள், ராஜீவ் கொலை உள்ளிட்ட
பல சிக்கல்களை எதிர்கொண்டு இந்த இயக்கம் எழுந்து
நிற்கிறது.
'ரோம் வில் டேக் இட்!' என்கிற சொற்றொடரை எங்கள்
தலைவர் கலைஞர் அடிக்கடி பயன்படுத்துவார். அதேபோல,
டி.எம்.கே. வில் டேக் இட்!
-
சி.ஆர். சரஸ்வதி (அ.தி.மு.க.):
சில அரசியல் கட்சிகளும் சில் ஊடகங்களும்தான்
விஜயகாந்தை பெரிய சக்தியா சித்திரிக்கிறாங்க. ஆனால்
உண்மை அதுவல்ல. அவர் தனித்து நின்றாலும் பூஜ்யம்
தான். கூட்டணி சேர்ந்தாலும் பூஜ்யம் தான். அவரோட
முடிவால அரசியல்ல எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த
முடியாது. அவரது முடிவைப் பற்றி எங்களுக்கு கவலையும்
இல்லை.
-
வைகோ (ம.தி.ம.க.):
அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுக்கும்
எதிரான நிலைப்பாட்டை விஜயகாந்த் எடுத்திருக்கிறார்.
கொள்கை அளவில் இது பாராட்டுக்குரிய முடிவு.
தமிழக அரசியலில் இதன் மூலமாக ஆரோக்கியமான
எதிர்காலம் உருவாகும். தவிர, ஏதோ பேரம் நடந்து
விட்டதாக விஜயகாந்தின் கண்ணியத்திற்க களங்கள்
ஏற்படுத்தும் விதமாக ஒரு நச்சு பிரசாரம் ஏவி விடப்பட்டது.
அதன் பின்னணி யார்? என்பதை நான் அறிவேன்.
அந்த பொய் பிரசாரத்தை மகளிர் மாநாட்டு உரை மூலமாக
தவிடுபொடியாக்கிவிட்டார் விஜயகாந்த்.
அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!
-
நக்மா (காங்கிரஸ்):
தே.மு.தி.க.வில் இருந்து சமீபத்தில் தான் நிறைய
எம்.எல்.ஏ.க்கள் விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அதனால் முன்னர் இருந்த அளவுக்கு அவருக்கு ஒரு
மாஸ் இப்போது இல்லை. அவரது கட்சி படுவீக்காகத்
தான் இருக்கிறது. எனவே அவரது 'தனித்து போட்டி' என்ற
அறிவிப்பு ஒரு பெரிய விஷயமே இல்லை!
-
சீமான் (தலைவர், நாம் தமிழர் கட்சி):
எல்லா இடத்திலும் பேரம் பேசிவிட்டு கடைசியாக எதுவும்
படியவில்லை என்பதால் வந்த முடிவு இது என்பது
வெளிப்படையாகத் தெரிகிறது. முன்பே நீங்கள் தனித்து
தான் போட்டி என முடிவெடுத்திருந்தால் உங்களை ஏன்
ஜவடேகர் சந்திக்க வேண்டும்?
பழம் நழுவி பாலில் விழப்போகிறது என கலைஞர் ஏன்
சொல்ல வேண்டும்? எல்லாவற்றிலும் பேரம் படிந்தால்
ஆதரிப்பது, இல்லை என்றால் நழுவுவது இவரது இயல்பு.
சரியான தத்துவம் இல்லாத தலைமை இப்படித்தான்
குழம்பும்!
-
பேர. ராமு மணிவண்ணன் (அரசியல்துறை, சென்னை
பல்கலைக்கழகம்):
விஜயகாந்தின் தனிப்பட்ட செல்வாக்கு இதனால் கூடலாம்.
அவருக்கு தனிப்பட்ட அளவில் லாபமாக அமையலாம்.
இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு வலுவான
கூட்டணி இல்லாத சூழல் இதனால் உருவாகியுள்ளது.
அரசியல் விமர்சகராக இதை ஒரு பரிணாம
வளர்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன். விஜயகாந்தின்
இந்த முடிவு அ.தி.மு.க.வுக்கு பயங்கர லாபம்.
-
தமிழிசை (பா.ஜ.க.):
அவர் முடிவை ஒரு வகையில் வரவேற்கிறோம்.
எங்கள் பக்கம் இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம்.
அதே வேளையில் அவர் திராவிட முன்னேற்றக்
கழகத்தோடு சேராமல் போனதை நினைக்கும்போது
இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறோம்.
-
ஜி.கே. வாசன் (த.மா.கா):
கடந்த சில நாட்களாக தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக
நடந்த பொய்ப் பிரசாரத்துக்கு தன் அறிவிப்பின் மூலமாக
விஜயகாந்த் முடிவுகட்டி இருக்கிறார். தமிழக மக்களின்
நலனை கருத்தில் கொண்டும், அவரது கட்சியின் நலனை
கருத்தில் கொண்டும் எடுத்த முடிவாகவே இதை நான்
பார்க்கிறேன்!
-
அன்புமணி (பா.ம.க.):
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கள்ளக்
குறிச்சியில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டிலும் இதேபோல,
'தனித்துப் போட்டி' என்றுதான் அறிவித்தார் விஜயகாந்த்.
ஆனால் அதன்பிறகு பா.ஜ.க.வுடன் அணி அமைத்தார்.
எனவே இப்போது அவர் அறிவித்திருக்கும் முடிவிலும்
உறுதியாக இருப்பார் என எப்படி நம்புவது?
-
------------------------
- ச. செல்வராஜ், கடற்கரய், அய்யனார்ராஜன்
குமுதம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக