புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
75 Posts - 45%
heezulia
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
74 Posts - 45%
mohamed nizamudeen
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
4 Posts - 2%
prajai
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
306 Posts - 43%
heezulia
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
291 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
6 Posts - 1%
prajai
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாயிறு போற்றுதும்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:41 am

ஞாயிறு போற்றுதும்...  9zyDzBPuQ1ypUWe5DrHQ+TM-2
-
தைமாதம் முதல் நாள் வரும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்
என்று போற்றப் பெறுகின்றது. அனைவரும் முப்பெருநாளாக
விழாக் கொண்டாடும், இப்பொங்கல் திருநாளின் தலைநாள்
பெரும் பொங்கல் திருநாள்
-
உலகச் சுழற்றியில் ஞாயிறு உத்தராயணம் கொள்ளும் இன்னாளில்
தமிழகத்தை நோக்கி ஞாயிறு வருகை தொடங்குதலை எண்ணி
மக்கள் பொங்கலிட்டு ஞாயிற்றுக்குப் படைத்து வழிபட்டு வருகின்றனர்.
-
ஞாயிறு ஒளிக்கோளம் என்றும், அதன் ஒளிவீசும் தன்மை எது?
ஒளியின் பயன் என்ன? என்றெல்லாம் ஆய்தாய்ந்து அறிவதே அறிவியல்
முறை சார்ந்த வாழ்க்கையாக இருப்பதனினும், ஞாயிறு மெய்த் தன்மையை,
அத்தன்மையின் பெருமையை, நலந்தரும் நன்மையைத் தெரிந்துணர்ந்து
போற்றி "சார்ந்ததன் வண்ணம்' ஆகும் உயிர்ப் பண்பினால்,
ஞாயிறு ஒளியே உயிர் ஒளி விளங்க ஒளிபடைத்த கண்ணும் உறுதிகொண்ட
நெஞ்சும் உயர்வு பூண்ட உளமும் உடைய மக்களாய்த் திகழ பெருமை மிகு
ஆக்கமும் பயனும் விளையக் கண்டனர்.
-
ஞாயிறு ஒளித்தெய்வம் எனவும், விண்ணுக்கும் மண்ணுக்கும் விரிந்த
இவ்வண்டத்திற்கும், விண்மீன் - இராசிமண்டலம், ஒன்பான் கோள்கள்
அனைத்திற்கும் முதன்மையெனவும் வெளி, வளி, தீ, நீர், நிலம்
அனைத்திற்கும் ஆற்றலும் இயக்கமும் அளிப்பதெனவும் பண்டைத் தமிழ்ப்
பெருமக்கள் போற்றி வழிபடுஞ் சிறப்பு என்றும் போற்றத்தகுந்த
பெருஞ்சிறப்பாகும்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:42 am


சங்கத் தமிழின் செங்கதிர்ச் செல்வன்:

(இளஞாயிறு - இளமுருகன்)


"உலகம் உவப்ப வலனேர்பு திருதரு
பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு'

-
என்று ஞாயிறு உதயம் உவமையாக செவ்வேள் முருகன் அணிமயில்
மேவித் தோன்றும் பேரழகை பத்துப்பாட்டுள் ஒன்றான
திருமுருகாற்றுப்படையில் உணர்த்துகின்றார் புலவர் நக்கீரர்.
-
இவ்விரண்டடிகளில் "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு... ஞாயிறு'
எனவே உலகம் - இடமும், ஆகுபெயராய் இடத்துள்ள உயிர்களுமாம்.
ஆகவே, உலகும் உலகத்துயிர்களும் மகிழ வலஞ்செய்து எழில் மிகத்
திரிதரு ஞாயிறு எனவும் - எனவே பலரும் போற்றிப்புகழும்
சிறப்புடையது ஞாயிறு என்பார் ""பலர் புகழ் ஞாயிறு'' என்றும்
உச்சிப்போதில் கண்எரிய வெம்மை விரிக்கும் வெங்கதிர் - காலைப்
போதில் கடலுட்குளித் தெழுந்தாற்போல உலகுயிர்கள் கண்ணொளியாய்
செம்மைபுரி வளர் இளங்கதிர் விரிக்கும் திருவருள் உருவாக விளங்கும்.
-
எனவே இளஞாயிறு அழகும் அருளும் சேயோன் முருகன் அழகும்
ஒருமைப் பெருமையாய் உணர்த்துகின்றார் நக்கீரர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:43 am


-
அவுணராகிய ஆணவ இருளில் சிக்கித்தவித்த ஒளிமேனியர் தேவர்கட்கு
செல்வேள் முருகன் வேற்கதிர் வீசி அவுண இருள் கட்டழித்துத் தேவர்
துயர்தீர்த்து நீலமயில் மேவிய அருளழகுணர்த்த மையிருட்கணம் போர்த்து
உலகைச் சூழ்ந்த இருளையும் பனியையும் வெங்கதிர் வீசி அழித்து
உலகின் கண்ணொளி வழங்கி நீலவான் கடல் மேவிய வளரிள
ஞாயிறை உவமையாக்கினார் நக்கீரர் பெருமான் எனலாம்.

மேலும் செஞ்ஞாயிறைப் போற்றும் செந்தமிழ்ச் தொடர்கள் சங்க
இலக்கியங்களில் (பெரும்பாண்-12; அகநா-91; புறநா-56,90,91,228) ஆங்காங்கு
அழகுறக் காணப்படுகின்றன.

இத்தொடர்கள் உலகின் இருளை விழுங்கி இரும்பனி துடைத்து ஒளியும்
வெயிலும் வழங்கும் இயல்பில் என்றும் மாறாது விளங்கும் உண்மைப்
புகழுக்கு ஒரு முதலாய் உள்ளது ஞாயிறு என்றும் தமிழ்ப் பெருமக்கள்
ஞாயிறைப் போற்றும் உணர்வையும் தெரிவிக்கின்றன.

தொல்காப்பியப் பொருளதிகாரம் 458ஆம் நூற்பாவின் மேற்கோளாகக்
காட்டப்பெறும் பழம் பாடல் ஒன்று ஞாயிறு சிறப்பையும், அதனை வ
ழிபடும் திறத்தையும் - பயனையும் தெரிவிக்கின்றது.

நெற்தற்கலி 1, 11, 12 என்று வருகின்ற பாடற்பகுதிகள் இனிமையும்
வாய்மையும் அறந்தலை நிறுத்தும் செங்கோன்மையும் வாய்ந்து உலகு
உயிர்களை நல்லாற்றின் வாழ்வித்துக் காக்கும் பேரரசன் ஞாயிறு என
உவமை கண்டு உரைக்குந்திறம் ஞாயிறு ஒன்றே உலகின் அரசன்,
உயர் நீதிபதி, உலகின் அறந்தலை நிறுத்தும் அருளாளன் என்று
உணர்த்துதல் காணலாம்.

திருமூலரின் திருமந்திரத்தினுள், "ஆதித்தன் நிலை' என்ற பகுதியில்
(பாடல்கள் 1967, 1977) ஞாயிறு தன்மையும் சிறப்பும் தெரிவித்து
நன்குணர்துகின்றார். இம்மந்திரப் பாடல்கள் ஞாயிறு திருமால் வடிவம்,
சிவசோதியுருவன், என்றும் உலகுக்கு முதன்மையும் ஆற்றலும் ஒளியும்
ஆகும் என்றும், அன்புக் கனியருள்பவன் என்றும் உணர்த்தியுள்ளார்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:43 am


திருவருளும் திருத்தொண்டும் - செஞ்ஞாயிறு:

-
சிவபெருமான் குருவாக வந்து அருளிய திருவருட்பேற்றைத் திளைத்துணர்ந்து
அன்பினால் உருகிப்பாடும் மாணிக்கவாசகர், "இன்றெனக்கருளி இருள்
கடிந்துள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று' என்று இறைவன் உள்ளத்தின்
மேவிய திருவருட் காட்சிக்கு ஞாயிறு உதயத்தை உவமையாக்கிப் பாடியவர்,
திருப்பள்ளியெழுச்சியில்,
-
"அருணன் இந்திரன் தியைணுகினன்
இருள்போய்அகன்றது;
உதயம் நின் மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ...'

-
என்றும் ஞாயிறுக்கு இறைவன் திருமுகத்தின் திருஅருட் பொழிவை
உவமையாக்கி உணர்த்துகின்றார்.

மேலும், சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை புலவர்களும் கவிஞர்களும்
ஞாயிற்றின் சிறப்பைப் பலவாறு போற்றி வருகின்றனர். ஞாயிறு வழிபாடு,
வேதியர், புலவோர் போற்றுகின்ற வேத்தியல் முறையுடன், பொதுமக்கள்
யாவரும் பொங்கலிட்டுக் கொண்டாடும் பொதுவியல்பாகவும் விளங்குவது
தமிழகத்தின் தனிப்பெரும் தகைமையாகும்.
-
-புலவர் எ.வேலாயுதன்
-
(நூல்: ஞாயிறு போற்றுதும்)
-
---------------------------
By -புலவர் எ.வேலாயுதன்
நன்றி- தமிழ் மணி





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக