புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_m10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10 
21 Posts - 66%
heezulia
சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_m10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_m10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10 
63 Posts - 64%
heezulia
சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_m10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_m10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_m10சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 5:37 pm

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு 9hBzJ1QHi4IPMAKNckEQ+cat_2647189f
-
செல்வா, ஆதீஸ்வரி தம்பதி
--------------------------------------
வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு.

"இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்" என்கிறார் செல்வா.

"பூனைங்க எல்லாம் உங்களுதா..?"

"ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி" ஆதீஸ்வரி.

"உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?"

"நாலு பேருங்க..." ஆதீஸ்வரி.

"சரி... நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?" என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.

"என்ன பண்றதுங்க... வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க" செல்வா.

பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.

இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?
-
ந.வினோத் குமார் - தமிழ் தி இந்து காம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 5:40 pm

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு EN18gpgFRpyMdd08oHK7+thannarvalar_2648336f
-
சென்னை - வளசரவாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் தன்னார்வலர்கள். | படம்: ஆர்.சரவணன்
===========================================

வெள்ளம் சூழத் தொடங்கியதும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தேன். பின்னர், இரண்டு நாட்கள் கழித்து கடுமையான மழையில் எனது வீட்டில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக பயணிக்கத் தொடங்கினேன்.

ஒரு தெருவை கடந்துதான் என் வீடு இருக்கும் தெருவை அடைய முடியும். அந்தத் தெருவில் இடுப்பளவு மேல் தண்ணீர். அங்கே ஒருவர் ப்ளூ கலரில் இருக்கும் தண்ணீர் ட்ரம்மை தண்ணீரில் நீந்தியபடி தள்ளிக் கொண்டிருந்தார். நானும் அவருக்கு உதவலாமே என்று தள்ளினேன். ட்ரம்மை தள்ள முடியவில்லை, மிகவும் கடினமாக இருந்தது.

ட்ரம்முக்குள் என்ன இருக்கிறது என்று கேட்பதற்கு கூச்சமாக இருந்தது. சிறிது தூரம் தள்ளிவிட்டு, "உள்ளே என்ன சார் இருக்கு?" என்றேன். "பிஸ்கட்ஸ், மில்க் பாக்கெட்ஸ், பிரெட்ஸ், சில மளிகை பொருட்கள்" என்று ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் பேசுகிறார், நமது தெருவில் இப்படி ஒருவரா என்று அடுத்ததாக "நான் உங்களை இந்த ஏரியாவில் பார்த்ததில்லையே.. எங்கு இருக்கிறீர்கள்?" என்றேன்.

"நான் இந்த ஏரியாவே இல்ல ஜி.. நான் தாம்பரத்துல இருக்கேன்" என்றார். "இங்கே சொந்தக்காரங்க இருக்காங்களா" என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன். "நோ ஜி... இந்த ஏரியாதான் ரொம்ப பாதிப்பு, தேர் இஸ் நோ ஃபுட்ஸ், மில்க்ஸ் என்று டி.வியில் பார்த்தேன். அதான் தாம்பரத்தில இருந்து வந்தேன்" என்றார்.

நாமும் இதே தெருவில்தான் இருக்கிறோம்; பாதிப்பில் இருந்து மீளாததால்தான் என்னவோ நமக்கு இந்த எண்ணம் இன்னும் வரவில்லையே என்று எனக்கு நானே வெற்று ஆறுதல் சொல்லிக்கொண்டேன். அடுத்த நொடியே "உங்கள் பெயர் என்ன?" என்றேன். "மகேந்திரன் ஜி.. ஐ.டி.ல ஒர்க் பண்றேன்" என்றார்.

"தாம்பரத்துல இருந்து எப்படி வர்றீங்க. பல்லாவரம் தாண்டி பஸ், டூவிலர் எல்லாம் வந்திருக்காதே.. எப்படி வந்தீங்க" என்று அடுத்த கேள்வியை ட்ரம்மை தள்ளிக்கொண்டே கேட்டேன். "என் பைக் குரோம்பேட்டை பெட்ரோல் பங்க்ல இருக்கு. பல்லாவரத்துல இருந்து லிஃப்ட் கேட்டு இங்க வந்தேன். அப்புறம் இப்ப வாக் பண்ணிட்டு வர்றேன்" என்றார்.

அவர் சொன்ன அடுத்த நிமிடம், நாம் கடவுள்களில் ஒருவரை கண்டுவிட்டோம் என்ற உத்வேகத்தில் ட்ரம்மை முழூவீச்சில் தள்ளினேன். நாங்கள் தள்ளிக்கொண்டே போகும்போது, இடது பக்கமாக ஒரு தெரு திரும்பியது. அப்போது, "ஜி... ஐயம் கோயிங் டு திஸ் ஸ்ட்ரீட் ஃபார் ஹெல்ப்" என்று தனியாக ட்ரம்மை தள்ளிக்கொண்டு திரும்பினார்.

நான் நின்றுக் கொண்டே அந்தக் கடவுள் ட்ரம்மை தள்ளிக்கொண்டே போவதைப் பார்த்து கொண்டிருந்தேன். அதுவரை நம்ம வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் போச்சே என்று சோகமாக இருந்தவன், கடவுளைச் சந்தித்த அடுத்த நொடி "என்ன பொருள் போனால் என்ன, சம்பாதித்து வாங்கிவிடலாம்... நம்மால் முடிந்தததைச் செய்வோம்" என்ற உற்சாகத்துடன், வெள்ளத்தால் மூழ்கியிருந்த எனது வீடு உள்ள தெருவை நோக்கி நீந்தினேன்!

'நான் கடவுள்' என்று சொல்லாமல் எனக்கு தரிசனம் தந்த மகேந்திரனைப் போன்ற பல்லாயிக்கணக்கானோரை இப்போது தமிழகத்தில் காணலாம். நீங்களும் கூட மகேந்திரனாக செயல்பட்டிருக்கலாம் அல்லது மகேந்திரன்களை தரிசித்திருக்கலாம்.

மகேந்திரன்களால் நிச்சயம் குறையும் பெருமழை!
=
கா.இசக்கிமுத்து - தமிழ் தி இந்து காம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 5:43 pm

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு DEmr0DN1SlGBmuwOZxIt+sex_workers_2649213f
-
பசியைப் பொறுத்து சென்னைக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய மராட்டிய பாலியல் தொழிலாளிகள்

-
சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தனர்.

இதனை அவர்கள் தங்களது வருமானத்திலிருந்து சேமித்து வழங்குவதற்காக கடந்த 3 நாட்களாக ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு அதில் மிச்சப்படுத்திய தொகையை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத்நகர் மாவட்ட ஆட்சியர் அனில் கவாடேவிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

இது குறித்து ஸ்னேகாலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கிரிஷ் குல்கர்னி கூறும்போது, ''அகமத்நகர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுள் சுமார் 2 ஆயிரம் பேர் ஒன்றிணைந்து இந்த நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.

இவர்கள் இந்தத் தொகையை தங்களது பசியையும் பாராமல் சேமித்து வழங்கியுள்ளனர்.

செய்திகளில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து அறிந்து வேதனையடைந்த அவர்கள், சென்னை மக்களுக்கு ஏதேனும தவி அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இதனை செய்துள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லியில் உள்ள கூஞ்ச் தன்னார்வு அமைப்பின் உதவியை நாடி

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை திரட்டியுள்ளனர்." என்றார்.
-
தமிழ் தி இந்து காம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 5:57 pm

ayyasamy ram wrote:
-செல்வா, ஆதீஸ்வரி தம்பதி
-வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.
"சரி... நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?" என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.
"என்ன பண்றதுங்க... வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க" செல்வா.
பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.
இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1179321
மனித நேயம் இன்னும் சாகவில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 6:00 pm

ayyasamy ram wrote:
-
பசியைப் பொறுத்து சென்னைக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய மராட்டிய பாலியல் தொழிலாளிகள்

இதனை அவர்கள் தங்களது வருமானத்திலிருந்து சேமித்து வழங்குவதற்காக கடந்த 3 நாட்களாக ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு அதில் மிச்சப்படுத்திய தொகையை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத்நகர் மாவட்ட ஆட்சியர் அனில் கவாடேவிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
மேற்கோள் செய்த பதிவு: 1179323
உண்மையான உயர்ந்த நிவரண உதவி எனில் இது தான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 08, 2015 6:47 pm

நமது தெருவில் இப்படி ஒருவரா என்று அடுத்ததாக "நான் உங்களை இந்த ஏரியாவில் பார்த்ததில்லையே.. எங்கு இருக்கிறீர்கள்?" என்றேன்.

"நான் இந்த ஏரியாவே இல்ல ஜி.. நான் தாம்பரத்துல இருக்கேன்" என்றார். "இங்கே சொந்தக்காரங்க இருக்காங்களா" என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன். "நோ ஜி... இந்த ஏரியாதான் ரொம்ப பாதிப்பு, தேர் இஸ் நோ ஃபுட்ஸ், மில்க்ஸ் என்று டி.வியில் பார்த்தேன். அதான் தாம்பரத்தில இருந்து வந்தேன்" என்றார்.
நன்றி நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 7:02 pm

மனம் நெகிழ வைக்கும் பகிர்வு............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்.அந்த நல்ல உள்ளங்களுக்கு தலைவணங்குகிறேன் !....... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 7:05 pm

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு IxZMAElfQP2t3RuHCGxX+madurai350
-
சென்னை வெள்ளம்: ஒரு கடைநிலை ஊழியனின் கரிசனம்!

--
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில், பிணங்களை பரிசோதனை செய்யும் ஊழியர் விஜயன், தனது 1 மாதம் சம்பளம் 13 ஆயிரம் மற்றும் வீட்டில் வைத்திருந்த 7 ஆயிரம் ஆக மொத்தம் ரூ. 20 ஆயிரத்தை, வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு வழங்கும்படி இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த நிகழ்வு, அனைவரையும் நெகிழ வைத்தது.

மிகக் குறைவான ஊதியத்தில், மருத்துவ மனையில் யாரும் பார்க்க சங்கடப்படும் மிக கஷ்டமான வேலையை செய்யும் விஜயனிடம் பேசினோம்.

"சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் படும் துன்பங்களை பார்த்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். என் வீட்டில் உள்ளவர்களிடம் இந்த மாத வீட்டு செலவுக்கு அட்ஜஸ்ட் பண்னிக் கொள்வோம் சம்பளத்தை கொடுக்க போகிறேன் என்று சொன்னேன் ஒத்துக் கொண்டார்கள். இப்போதுதான் சம்பளம் வந்தது. அதோடு வீட்டில் என் மகள் கொடுத்த பணத்தையும் சேர்த்து இருபதாயிரத்தை கலெக்டரிடம் கொடுக்க வந்தேன்" என்றார்.

மனிதம் மலரட்டும்!

- செ.சல்மான்-
விகடன்.காத்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 7:10 pm

//"சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் படும் துன்பங்களை பார்த்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். என் வீட்டில் உள்ளவர்களிடம் இந்த மாத வீட்டு செலவுக்கு அட்ஜஸ்ட் பண்னிக் கொள்வோம் சம்பளத்தை கொடுக்க போகிறேன் என்று சொன்னேன் ஒத்துக் கொண்டார்கள். இப்போதுதான் சம்பளம் வந்தது. அதோடு வீட்டில் என் மகள் கொடுத்த பணத்தையும் சேர்த்து இருபதாயிரத்தை கலெக்டரிடம் கொடுக்க வந்தேன்" என்றார்.

மனிதம் மலரட்டும்!//



என்ன சொல்வது?.................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக