புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
நினைவெல்லாம் உன்னோடு
நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
*****
‘நினைவெல்லாம் உன்னோடு’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பன்முக ஆற்றலாளர். சிறந்த கல்வியாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.
இந்து சமய அறநிலையத்துறையில் ஆய்வாளராக இருந்து பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விரும்பி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக முத்திரை பதித்து வருகிறார். வழக்கறிஞர்களிடையே உயர்நீதிமன்றத்தில் நடந்த கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். நான், அப்போட்டிக்கு மூன்று நடுவர்களில் ஒருவராக இருந்தேன். அப்போதே அவரிடம் சொன்னேன். விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்று. என்னுரை ஏற்று வெளிவந்துள்ள நூலிற்கு எனது எளிய அணிந்துரை.
உள்ளத்தில் உள்ளது கவிதை, உணர்வின் வெளிப்பாடு கவிதை, நூலாசிரியர் செ. குகசீலரூபன், கவிஞராக இருந்த காரணத்தால் தான் அவரால் பல துறைகளில் முத்திரை பதிக்க முடிகின்றது என்பது என் கருத்து.
முதல் கவிதையில் முத்திரை பதித்து உள்ளார். வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
எனக்குப் பிடிக்கும்!
நீ அழுவது கூட / எனக்குப் பிடிக்கும் /
ஆறுதல் சொல்ல எனக்கு ஆசையாக இருப்பதால்!
நீ பிடிவாதம் செய்வது / எனக்குப் பிடிக்கும் /
அப்போது என் / பிள்ளையாக மாறுவதால்!
நீ வியர்வையில் குளிப்பது / எனக்குப் பிடிக்கும் /
பனித்துளிகளுக்கு நடுவே / ரோஜாவைக் காண்பதால்.
பொதுவாக பெண்கள் அழுதால் பிடிக்காது, பிடிவாதம் செய்தால் பிடிக்காது என்று தான் சொல்வார்கள். இவர் உடன்பாட்டுச் சிந்தனையுடன் ‘பிடிக்கும்’ என்பது நமக்கும் பிடிக்கின்றது.
காதல் கவிதை பலரும் எழுதுகிறார்கள், ஆனால் வித்தியாசமாக எழுதுபவர்களே வெற்றி பெறுகிறார்கள். நூலாசிரியரின் முதல் நூல் காதல் கவிதைகள் வித்தியாசமாக எழுதி வெற்றி பெற்றுள்ளார். சமுதாயக் கவிதைகளும் நூலில் உள்ளது, கூடுதல் சிறப்பு!
தோல்வி!
நேர்முகத் தேர்வில் / தோற்றுப் போனேன்
உலக அதிசயங்களில் / ஒன்றைக் கேட்டார்கள்
உன் பெயரைச் சொன்னதால்.
அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசையை, இருக்கை ஆசையை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார். கவிதையைப் படிக்கும் வாசகர்கள் உண்மையில் சிரித்து விடுவார்கள்.
அரசியல்வாதி!
நெஞ்சுக்கும் தொண்டைக்கும் / இழுத்துக் கொண்டிருந்தது
கடைசி நிமிட உயிர் / நாற்காலியில் அமர வைத்தார்கள்
நல்லபடியாகப் போய்ச் சேர்ந்தது.
நூலின் தலைப்பான “நினைவெல்லாம் உன்னோடு” நெடிய கவிதை நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். படிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் துணையின் நினைவு வரும் என்று உறுதி கூறலாம்.
நாட்டில் நடக்கும் அவலங்களை, ஊடகங்களில் காணும் போது, படிக்கும் போது, வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை. அதனை உணர்த்திடும் வைர வரிகள் இதோ!
மாண்டு போன மனிதநேயம்!
மகாத்மாவோடு சேர்த்து / மனிதநேயத்தையும்
மண்ணில் புதைத்து விட்டோம்.
அன்று தேசப்பிதாவின் / சுவாசத்தை நிறுத்த
ஒரு கோட்சே!
இன்று / கோட்சேக்களுக்கு நடுவில் / பாவம்
தேசப்பிதாவைத்தான் / தேட வேண்டியிருக்கிறது!
பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். முதுமை பற்றி தன்னம்பிக்கை பற்றி, காதல் பற்றி பல கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.
ஏ! பாரத மாதாவே! கவிதையில் உரத்த சிந்தனை சிந்திக்க வைக்கின்றார். பதச்சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன்!. பிடித்த கவிதைகளை மடித்து வைத்துக் கொண்டே வந்தேன். எல்லாக் கவிதைகளையும் மடித்து விட்டேன். அணிந்துரையில் அனைத்தையும் மேற்கோள் காட்ட முடியாது என்ற காரணத்தால் மீண்டும் மறுவாசிப்பு செய்து மிகவும் கவர்ந்த வரிகளை மட்டும் எழுதி உள்ளேன்.
ஹைக்கூ வடிவில் சில கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. சிந்திக்க வைக்கின்றன. எதிர்காலத்தில் ஹைக்கூ 3 வரிகளில் மட்டும் எழுதி, தனியாக ஹைக்கூ நூல் படைப்பார் என்ற நம்பிக்கை உண்டு.
சிகரெட் !
பற்ற வைப்பதே
விரைவில்
பற்ற வைக்கத்தான்.
விரைவில் மடிவாய், தீ மூட்ட வேண்டி வரும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். புகைப்பவர்கள் சிந்தித்துப் பார்த்து செயலை மாற்ற வேண்டும்.
உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றி சொற்சிக்கனத்துடன் வடித்த கவிதை மிக நன்று.
திருக்குறள் !
வார்த்தைப் பூக்களால்
தொடுக்கப்பட்ட
வாழ்க்கை மாலை!
தமிழகத்தில் ஒரு படத்தில் நடித்தவுடன், தமிழக முதல்வர் ஆகி விட வேண்டும் கனவு வந்து விடுகிறது பலருக்கும்.சினிமா பற்றிய கவிதை சிந்திக்க வைத்தது, நீண்ட கவிதை என்ற போதிலும் மிகவும் பிடித்த வரிகள் இதோ!
சினிமா!
சாதியும் சினிமாவும் / ஆட்சிக் கட்டிலில்
அமர் வைக்கும் என்று / மனப்பால் குடித்தவர்கள்
ஏற்கெனவே சூடுபட்ட / பூனைகளை
ஏனோ நினைப்பதில்லை.
இசைக்கருவிகளில் ஒன்றான சிறிய புல்லாங்குழல் பற்றிய கவிதை மிக நன்று. படிக்கும் போது மனக்கண்ணில் புல்லாங்குழல் தெரிய வைத்து வெற்றி பெறுகின்றார், கவிஞர் செ. குகசீலரூபன்.
புல்லாங்குழல்!
உடம்பிலே பட்ட காயத்திற்கு
உதடுகளால் ஒத்தடம்
நன்றிக்கடனாய் / நாதம்!
நன்றி மறவாத காவல் காக்கும் நாய் பற்றிய ஹைக்கூ நன்று.
நாய் / பேசியது / வாலால்!
வாயில்லா ஜீவன் என்பார்கள் நாயை. அது வாலால் பேசிடும் என்பதை உணர்த்துகின்றார்.
பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியாது, மிக நுட்பமானது, ஆழமானது, அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
கடலை விட / ஆழமானது / கன்னியின் மனது.
நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பரபரப்பான வழக்கறிஞர்கள் பணிக்கு இடையே கவிதைகள் எழுதுவது பாராட்டுக்குரியது. புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ கவிதை விருந்தாக உள்ளது. பன்முக ஆற்றலாளரின் ஒருமுகமான உன்னத படைப்பு. இலக்கிய உலகம் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். வாசகர்களே! கவிதை என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல். படித்துப் பாருங்கள். என் கூற்று உண்மை என்பதை உணர்வீர்கள்.
--
.
நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
*****
‘நினைவெல்லாம் உன்னோடு’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பன்முக ஆற்றலாளர். சிறந்த கல்வியாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.
இந்து சமய அறநிலையத்துறையில் ஆய்வாளராக இருந்து பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விரும்பி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக முத்திரை பதித்து வருகிறார். வழக்கறிஞர்களிடையே உயர்நீதிமன்றத்தில் நடந்த கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். நான், அப்போட்டிக்கு மூன்று நடுவர்களில் ஒருவராக இருந்தேன். அப்போதே அவரிடம் சொன்னேன். விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்று. என்னுரை ஏற்று வெளிவந்துள்ள நூலிற்கு எனது எளிய அணிந்துரை.
உள்ளத்தில் உள்ளது கவிதை, உணர்வின் வெளிப்பாடு கவிதை, நூலாசிரியர் செ. குகசீலரூபன், கவிஞராக இருந்த காரணத்தால் தான் அவரால் பல துறைகளில் முத்திரை பதிக்க முடிகின்றது என்பது என் கருத்து.
முதல் கவிதையில் முத்திரை பதித்து உள்ளார். வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
எனக்குப் பிடிக்கும்!
நீ அழுவது கூட / எனக்குப் பிடிக்கும் /
ஆறுதல் சொல்ல எனக்கு ஆசையாக இருப்பதால்!
நீ பிடிவாதம் செய்வது / எனக்குப் பிடிக்கும் /
அப்போது என் / பிள்ளையாக மாறுவதால்!
நீ வியர்வையில் குளிப்பது / எனக்குப் பிடிக்கும் /
பனித்துளிகளுக்கு நடுவே / ரோஜாவைக் காண்பதால்.
பொதுவாக பெண்கள் அழுதால் பிடிக்காது, பிடிவாதம் செய்தால் பிடிக்காது என்று தான் சொல்வார்கள். இவர் உடன்பாட்டுச் சிந்தனையுடன் ‘பிடிக்கும்’ என்பது நமக்கும் பிடிக்கின்றது.
காதல் கவிதை பலரும் எழுதுகிறார்கள், ஆனால் வித்தியாசமாக எழுதுபவர்களே வெற்றி பெறுகிறார்கள். நூலாசிரியரின் முதல் நூல் காதல் கவிதைகள் வித்தியாசமாக எழுதி வெற்றி பெற்றுள்ளார். சமுதாயக் கவிதைகளும் நூலில் உள்ளது, கூடுதல் சிறப்பு!
தோல்வி!
நேர்முகத் தேர்வில் / தோற்றுப் போனேன்
உலக அதிசயங்களில் / ஒன்றைக் கேட்டார்கள்
உன் பெயரைச் சொன்னதால்.
அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசையை, இருக்கை ஆசையை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார். கவிதையைப் படிக்கும் வாசகர்கள் உண்மையில் சிரித்து விடுவார்கள்.
அரசியல்வாதி!
நெஞ்சுக்கும் தொண்டைக்கும் / இழுத்துக் கொண்டிருந்தது
கடைசி நிமிட உயிர் / நாற்காலியில் அமர வைத்தார்கள்
நல்லபடியாகப் போய்ச் சேர்ந்தது.
நூலின் தலைப்பான “நினைவெல்லாம் உன்னோடு” நெடிய கவிதை நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். படிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் துணையின் நினைவு வரும் என்று உறுதி கூறலாம்.
நாட்டில் நடக்கும் அவலங்களை, ஊடகங்களில் காணும் போது, படிக்கும் போது, வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை. அதனை உணர்த்திடும் வைர வரிகள் இதோ!
மாண்டு போன மனிதநேயம்!
மகாத்மாவோடு சேர்த்து / மனிதநேயத்தையும்
மண்ணில் புதைத்து விட்டோம்.
அன்று தேசப்பிதாவின் / சுவாசத்தை நிறுத்த
ஒரு கோட்சே!
இன்று / கோட்சேக்களுக்கு நடுவில் / பாவம்
தேசப்பிதாவைத்தான் / தேட வேண்டியிருக்கிறது!
பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். முதுமை பற்றி தன்னம்பிக்கை பற்றி, காதல் பற்றி பல கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.
ஏ! பாரத மாதாவே! கவிதையில் உரத்த சிந்தனை சிந்திக்க வைக்கின்றார். பதச்சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன்!. பிடித்த கவிதைகளை மடித்து வைத்துக் கொண்டே வந்தேன். எல்லாக் கவிதைகளையும் மடித்து விட்டேன். அணிந்துரையில் அனைத்தையும் மேற்கோள் காட்ட முடியாது என்ற காரணத்தால் மீண்டும் மறுவாசிப்பு செய்து மிகவும் கவர்ந்த வரிகளை மட்டும் எழுதி உள்ளேன்.
ஹைக்கூ வடிவில் சில கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. சிந்திக்க வைக்கின்றன. எதிர்காலத்தில் ஹைக்கூ 3 வரிகளில் மட்டும் எழுதி, தனியாக ஹைக்கூ நூல் படைப்பார் என்ற நம்பிக்கை உண்டு.
சிகரெட் !
பற்ற வைப்பதே
விரைவில்
பற்ற வைக்கத்தான்.
விரைவில் மடிவாய், தீ மூட்ட வேண்டி வரும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். புகைப்பவர்கள் சிந்தித்துப் பார்த்து செயலை மாற்ற வேண்டும்.
உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றி சொற்சிக்கனத்துடன் வடித்த கவிதை மிக நன்று.
திருக்குறள் !
வார்த்தைப் பூக்களால்
தொடுக்கப்பட்ட
வாழ்க்கை மாலை!
தமிழகத்தில் ஒரு படத்தில் நடித்தவுடன், தமிழக முதல்வர் ஆகி விட வேண்டும் கனவு வந்து விடுகிறது பலருக்கும்.சினிமா பற்றிய கவிதை சிந்திக்க வைத்தது, நீண்ட கவிதை என்ற போதிலும் மிகவும் பிடித்த வரிகள் இதோ!
சினிமா!
சாதியும் சினிமாவும் / ஆட்சிக் கட்டிலில்
அமர் வைக்கும் என்று / மனப்பால் குடித்தவர்கள்
ஏற்கெனவே சூடுபட்ட / பூனைகளை
ஏனோ நினைப்பதில்லை.
இசைக்கருவிகளில் ஒன்றான சிறிய புல்லாங்குழல் பற்றிய கவிதை மிக நன்று. படிக்கும் போது மனக்கண்ணில் புல்லாங்குழல் தெரிய வைத்து வெற்றி பெறுகின்றார், கவிஞர் செ. குகசீலரூபன்.
புல்லாங்குழல்!
உடம்பிலே பட்ட காயத்திற்கு
உதடுகளால் ஒத்தடம்
நன்றிக்கடனாய் / நாதம்!
நன்றி மறவாத காவல் காக்கும் நாய் பற்றிய ஹைக்கூ நன்று.
நாய் / பேசியது / வாலால்!
வாயில்லா ஜீவன் என்பார்கள் நாயை. அது வாலால் பேசிடும் என்பதை உணர்த்துகின்றார்.
பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியாது, மிக நுட்பமானது, ஆழமானது, அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
கடலை விட / ஆழமானது / கன்னியின் மனது.
நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பரபரப்பான வழக்கறிஞர்கள் பணிக்கு இடையே கவிதைகள் எழுதுவது பாராட்டுக்குரியது. புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ கவிதை விருந்தாக உள்ளது. பன்முக ஆற்றலாளரின் ஒருமுகமான உன்னத படைப்பு. இலக்கிய உலகம் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். வாசகர்களே! கவிதை என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல். படித்துப் பாருங்கள். என் கூற்று உண்மை என்பதை உணர்வீர்கள்.
--
.
Re: நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
#1172644- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
தோல்வி!
நேர்முகத் தேர்வில் / தோற்றுப் போனேன்
உலக அதிசயங்களில் / ஒன்றைக் கேட்டார்கள்
உன் பெயரைச் சொன்னதால்
சுவாரஸ்யமான படைப்பு . வாழ்த்துகள்
Re: நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
#1172683- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரசிக்கும் படியாக இருந்தன கவிதைகள் .
அதை அழகு பட விமரிசித்த இரா இரவி அவர்களுக்கு
ரமணியன்
அதை அழகு பட விமரிசித்த இரா இரவி அவர்களுக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
#1172731- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அற்புத கவிதை வரிகளை படிக்க படிக்க அருமை.
- Sponsored content
Similar topics
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|