புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
62 Posts - 57%
heezulia
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
104 Posts - 59%
heezulia
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 9:50 am

குரு எப்படி இருக்க வேண்டும்?

ஒரு சிறுவனுக்கு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உண்டு. இனிப்பை அவன் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாக அவன் அம்மா வருத்தப்பட்டார். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். அம்மாவுக்கு ஒரே கவலை.

அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு சாமியார் இருந்தார். அவர் சொன்னால் இந்தப் பயல் கேட்பான் என்று அம்மா நினைத்தார். அவரிடம் கூட்டிக்கொண்டு போனார். பையன் சமர்த்தாக வந்தான். சாமியாரைப் பார்க்கப் பலர் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் காத்திருந்துதான் அவரைப் பார்க்க முடிந்தது.

அம்மா சாமியாரிடம் தன் பையனின் இனிப்புப் பழக்கத்தைப் பற்றிப் புகார் சொன்னார். சாமியார் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். “நீங்கள் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள்” என்று சொன்னார்.

சிறுவனுக்கு புத்தி சொல்வதற்கு எதற்கு ஒரு வாரம் என்று அம்மாவுக்குக் குழப்பம். கொஞ்சம் கோபமும்கூட. என்றாலும் சாமியாரிடம் கோபித்துக்கொள்ள முடியுமா? வணங்கிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்த வாரம் சாமியார் பையனைத் தன் அருகே அழைத்து இனிப்பு சாப்பிடுவதன் பலன், தீமை எல்லாவற்றையும் விளக்கினார். அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று சொன்னார். எப்படிக் கட்டுப்படுத்திக்கொள்வது என்றும் யோசனை சொன்னார். பையனின் முகத்தில் மலர்ச்சி.

அம்மாவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் குழப்பம் தீரவில்லை. பையனை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சாமியாரிடம் வந்தார். சாமியாரின் முகத்தில் கேள்விக்குறி. “நீங்கள் இந்த புத்திமதியைப் போன வாரமே சொல்லியிருக்கலாமே சாமி?” என்றார்.

சாமியார் முகத்தில் புன்னகை. “போன வாரம் எனக்கே அதிக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது அம்மா. நானே அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாதபோது எப்படி உங்கள் மகனுக்கு புத்தி சொல முடியும்? ஒரு வார காலத்தில் இனிப்பைக் குறைக்கப் பழக்கிக்கொண்டுவிட்டேன். அதனால் இப்போது தைரியமாகச் சொல்கிறேன்” என்றார்.

அம்மாவின் குழப்பம் தீர்ந்தது.

உன்னை முதலில் திருத்திக்கொண்டு ஊருக்கு புத்திமதி சொல் என்பதுதான் இந்தக் அக்தையின் சாரம். ஒரு குரு தன்னை எப்போதும் பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறருக்குச் சொல்லும் அறிவுரைகளைத் தான் முதலில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆனால் ஒரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு முறை பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”

“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர். “குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?” என்று கேட்டார் சீடர்.

பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?”

சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.

துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.

ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.

தான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,

குருவும் சிஷ்யனும் தத்தமது பொறுப்பை ஒழுங்காகச் செய்தால் எது சரி, எது தவறு என்ற கேள்வியே வராது அல்லவா?

பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2015 10:17 am

குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! 103459460 குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 1:41 am

ஆஹா ... ரொம்ப அருமையான பதிவு ...... சூப்பர் ..... என் பல நாள் குழப்பம் தீர்ந்தது ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 12:01 pm

shobana sahas wrote:ஆஹா ... ரொம்ப அருமையான பதிவு ...... சூப்பர் ..... என் பல நாள் குழப்பம் தீர்ந்தது ....
மேற்கோள் செய்த பதிவு: 1157939

என்ன குழப்பம் உங்களுக்கு? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 19, 2015 5:25 pm

krishnaamma wrote:
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1157780

இதை மார்ஜால நியாயம் என்றும் , மற்கட நியாயம்  என்றும் சொல்வார்கள் .

மார்ஜாலம் = பூனை
மற்கடம் = குரங்கு

மிருகங்களும் , பறவைகளும் வளர்ந்தவுடன் தாயைவிட்டு நீங்குகின்றன . மனிதன்தான் இறுதிவரையில் தன் உறவுகளோடு வாழ்கிறான் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 5:42 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1157780

இதை மார்ஜால நியாயம் என்றும் , மற்கட நியாயம்  என்றும் சொல்வார்கள் .

மார்ஜாலம் = பூனை
மற்கடம் = குரங்கு

மிருகங்களும் , பறவைகளும் வளர்ந்தவுடன் தாயைவிட்டு நீங்குகின்றன . மனிதன்தான் இறுதிவரையில் தன் உறவுகளோடு வாழ்கிறான் .
மேற்கோள் செய்த பதிவு: 1158086

அது தான் மேலை நாடுகளில் கொஞ்சம் வளர்ந்ததும் பசங்க அப்பா அம்மாவை விட்டு போய் விடுகிறார்களோ ?................
.
.
.
இதை நம் நாட்டு பசங்க ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டு பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுகிரார்களோ?....................
.
.
சும்மா கேட்டுவிட்டேன்,........அடிக்க வராதீங்கோ.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:24 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1157780

இதை மார்ஜால நியாயம் என்றும் , மற்கட நியாயம்  என்றும் சொல்வார்கள் .

மார்ஜாலம் = பூனை
மற்கடம் = குரங்கு

மிருகங்களும் , பறவைகளும் வளர்ந்தவுடன் தாயைவிட்டு நீங்குகின்றன . மனிதன்தான் இறுதிவரையில் தன் உறவுகளோடு வாழ்கிறான் .
மேற்கோள் செய்த பதிவு: 1158086

அது தான் மேலை நாடுகளில் கொஞ்சம் வளர்ந்ததும் பசங்க அப்பா அம்மாவை விட்டு போய் விடுகிறார்களோ ?................
.
.
.
இதை நம் நாட்டு பசங்க ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டு பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுகிரார்களோ?....................
.
.
சும்மா கேட்டுவிட்டேன்,........அடிக்க வராதீங்கோ.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1158089
நீங்க சொன்னது கோபித்துக்கொள்ளும் படி இல்லை ... மாறாக யோசிக்க வைக்கிறது க்ரிஷ்ணாம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:34 am

shobana sahas wrote:
krishnaamma wrote:

அது தான் மேலை நாடுகளில் கொஞ்சம் வளர்ந்ததும் பசங்க அப்பா அம்மாவை  விட்டு போய் விடுகிறார்களோ  ?................
.
.
.
இதை நம் நாட்டு பசங்க ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டு பெற்றவர்களை முதியோர்  இல்லங்களில் விட்டுவிடுகிரார்களோ?....................
.
.
சும்மா கேட்டுவிட்டேன்,........அடிக்க வராதீங்கோ.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1158089
நீங்க சொன்னது கோபித்துக்கொள்ளும் படி இல்லை ... மாறாக யோசிக்க வைக்கிறது க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1158172

பிழைத்தேன் போங்கோ ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக