புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
4 Posts - 3%
bala_t
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
1 Post - 1%
prajai
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
293 Posts - 42%
heezulia
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
6 Posts - 1%
prajai
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
5 Posts - 1%
manikavi
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையரங்கும் சினிமாவும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2015 9:06 am

திரையரங்கும் சினிமாவும் 81zp57ruSYiBXuF6295M+z4
-


உன்னதமானதாக நான் கருதும் ஒரு படத்தைப் பற்றி யாராவது மோசமான கருத்தைக் கூறினால் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி ‘எங்கே, எப்படி அதைப் பார்த்தீர்கள்?’ என்பதுதான். வீட்டில் டிவிடிமூலம் பார்த்ததாகப் பதில் வந்தால், நான் பேச்சைத் தொடருவதில்லை. ஒரு திரைப்படத்தைக் குறுவட்டு இயக்கிமூலம் வீட்டில் சின்னத்திரையில் பார்ப்பதற்கும், இருண்ட அரங்கில் அமர்ந்து பெரிய திரையில் பார்ப்பதற்கும் மிகுந்த வித்தியாசங்கள் உண்டு. இவை இரண்டும் அடிப்படையிலேயே மிகவும் வேறுபட்ட அனுபவங்கள். ஒரு திரைப்படத்தை உள்வாங்குவதிலும் எதிர்கொள்வதிலும் புரிந்துகொள்வதிலும் இந்த வேறுபாடுகளின் தாக்கம் இருக்கும்.

மேலோட்டமான ஒப்பீடுமூலம் இதை விளக்க முயல்கிறேன். கச்சேரியில் ஒருவரின் இசையை நேரிடையாகக் கேட்பதற்கும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சங்கீதத்தை வீட்டிலிருந்தபடி கேட்பதற்கும் உள்ள வேறுபாட்டை மனத்தில் கொள்ளுங்கள். ஓரிடத்தில் ஆசனத்தில் அமர்ந்து கச்சேரியின் குவிமையமாக இருக்கும் இசைக் கலைஞரை நோக்கியபடி நீங்கள் இசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பாடகரின் உடல்மொழி, இசைக் கருவிகளை உடன் வாசிக்கும் கலைஞர்களின் இருப்பு ஆகியவையும் இசை கேட்கும் அனுபவத்தின் முக்கியப் பரிமாணங்கள். வேறு எந்தக் குறுக்கீடும் அங்கு இல்லை. அந்த அனுபவத்துடன் நீங்கள் ஒன்றிப்போகிறீர்கள். சில தருணங்களில், ஒலிபெருக்கி போன்ற எந்த மின்கருவிகளும் இல்லாமல் இசை கேட்பது இன்னும் ஆழமான அனுபவம். சென்னையில் வசித்தபோது நடனக் கலைஞர் சந்திரலேகாவின் வீட்டில், Spaces அரங்கில் குண்டேச்சா சகோதரர்களின் துருபத் கச்சேரி கேட்டது அத்தகைய மறக்க முடியாத, ஆழ்ந்த அனுபவம்.

சினிமா பெரிய திரைக்காகத் தயாரிக்கப்படுவது. சினிமா தோன்றி ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் கழித்துத்தான் தொலைக் காட்சி வந்தது. அதற்கும் பல பத்தாண்டுகள் கழித்துத்தான் குறுவட்டு நமக்குக் கிடைத்தது. சினிமா சார்ந்த பெரும்பாலான அழகியல் கோட் பாடுகளும் நியதிகளும் உத்திகளும் சின்னத்திரை, குறுவட்டு போன்ற நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் தோன்றுவதற்கு முன்பே உருவானவை என்பதை நினைவில் கொள்ள வேண் டும். சினிமாவின் அழகியல் நியதிகள் பெரிய திரைக்கு ஏற்ப உருவானவை.

எடுத்துக்காட்டாகப் பரந்த வெளிக்காட்சிகள் சின்னத்திரையில் எடுபட மாட்டா. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘தெய்வம் தந்த பூவே’ பாடல் காட்சியில் விரிந்த கடற்புறம், கரையோரக் காட்சிப்படிமங்கள் திரையை நிரப்பி இருக்கும். அந்த ஆண்டு தேசிய விருது பெற்றதற்கு இந்தப் பாடலின் எழிலார்ந்த காட்சிப் படிமங்களும் முக்கியக் காரணம். அந்தப் பரந்த மணற்பரப்பின் அழகும் பிரமிப்பும் சின்னத்திரையில் தோன்றும்போது தொலைந்துவிடுகின்றன. கடற்கரையில் அந்நிகழ்வு நடப்பதை மட்டுமே உணர முடியும். ஆனால் பாதிப்பு இருக்காது. இன்னொரு எடுத்துக்காட்டு. ‘பரதேசி’ படத்தில் பரந்த வறண்ட நிலப்பரப்பில், தொடுவானத்தில் மக்கள் கூட்டமொன்று எறும்பு வரிசைபோலச் சட்டத்தின் ஒரு விளிம்பிலிருந்து அடுத்த விளிம்புவரை நகரும் காட்சி உண்டு. இந்தக் காட்சிப் படிமங்களின் தாக்கம் சின்னத்திரையில் பார்க்கும்போது எடுபடாமல் போய்விடுகிறது.

பாரம்பரியமாக ஒரு திரைப்படத்தைப் பார்க்க நாம் திரையரங்குக்குச் செல்கிறோம். அங்குக் கதவுகள் மூடப்பட்டு, புறவுலகு மறைக்கப்பட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டு, கண்கள் திரையில் பதிய, அமைதி சூழ, வேறு உறுத்தல் ஏதுமின்றி இருளில் படத்தைப் பார்க்கிறோம். நம் புலன்களுக்கு வேறு சீண்டல் ஏதும் இல்லாமல், கவனம் முழுவதும் திரையில் பதிகிறது. திரையில் ஓடும் படத்துடன் நாம் ஒன்றிப்போகிறோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள், நம் கவனம் சிதறாமல் திரையில் பதிதல் ஆகியவையே இந்த அனுபவத்தின் முக்கியப் பரிமாணங்கள். திரையில் தோன்றும் படத்தையும் அதுசார்ந்து எழும் ஒலியையும் மட்டுமே நாம் உள்வாங்குவதால், நமது சினிமா அனுபவம் ஆழமானதாக அமைகிறது. திரையரங்கின் இருளின் அநாமதேயத்தில் நாம் சிரிக்கலாம், அழலாம். மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று நம் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதில்லை.

இயக்குநர் உருவாக்கிய அந்தக் கனவுலகில் நாம் நுழைந்து, அதன் கதாபாத்திரங்களுடன் சஞ்சரிக்கிறோம். அவை உலவும் அதே வெளியில் நாமும் உலவுகிறோம். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் தனுஷ்கோடி மணற்பரப்பில் சிம்ரன், கீர்ச்சனாவுடன் நாமும் இருக்கிறோம். ஓடுகிறோம். பாடுகிறோம். கதாபாத்திரங்கள் சஞ்சரிக்கும் வெளியை நாமும் பகிர்ந்துகொள்கிறோம். இந்த உணர்வுதான் திரையரங்கில் சினிமா பார்ப்பதின் முக்கிய அம்சம். இந்த உணர்வு பார்வையாளருக்கும் கதாபாத்திரங்களுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் மிக அண்மைக் காட்சிகள் (close-up shots) பார்வையாளருக்கும் நடிகருக்குமான நெருக்கத்திற்கு ஏதுவாகின்றன. இந்த ஒருவழி நெருக்கம்தான் விசிறிகள் உருவாவதற்கும் நட்சத்திரங்கள் உருவாவதற்கும் அடிப்படை. ஒரு நட்சத்திரத்துடன் மிகவும் நெருங்கியிருப்பதுபோல விசிறி உணர்வார். ஆனால் அந்த நட்சத்திரத்திற்கு இவர் யாரென்றே தெரியாது. இந்த நெருக்கமும் உறவும் திரையரங்கத்தில் படம் பார்க்கும் அனுபவத்தில் உருவாகின்றன.

அதிலும் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் முழுத் திரைப்படத்தை ஒரே மூச்சில் பார்ப்பது இந்த அனுபவத்தை ஆழமானதாக்கும். வெளிநாடுகளில் இன்டெர்வெல் என்னும் குறுக்கீடு இல்லாமல் படம் திரையிடப்படுகிறது. நம் நாட்டிலும் திரைப்பட விழாக்களில் திரையிடுதலில் எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது. இருந்தால் படம் பார்க்கும் அனுபவம் சிதைக்கப்பட்டுவிடுமே! வீட்டில் குறுவட்டுமூலம் படத்தைப் பார்க்கும்போது, அந்த சினிமா உலகத்தினுள் நாம் நுழைவதில்லை. உடன் இருப்பவர்களுடன் பேசிக்கொள்கிறோம். தொலைபேசி அவ்வப்போது அழைக்கிறது. இப்படிப் பல இடையூறுகளுக்கு நடுவே படத்தையும் பார்க்கிறோம். நாம் வெளியிலிருந்து அதைப் பார்க்கிறோம்.

இந்த இடையூறுகள் சினிமாவின் முக்கியப் பரிமாணமான ஒலியின் தாக்கத்தைச் சிதைக்கின்றன. சொல்லப்போனால் ஒலியின் பாதிப்பே இல்லாமல் போய்விடுகிறது. வீட்டிலிருக்கும் நம்மைச் சுற்றியுள்ள பல சத்தங்கள், தெருவோசைகள், படம் பார்க்கும் அனுபவத்திலிருந்து நம்மை அன்னியப்படுத்துகின்றன. நமக்காக இயக்குநர் உருவாக்கும் உலகின் பாதிப்பு ஆழமாக அமைய ஒலி மிகவும் அவசியம். புறவுலகு நம்மைச் சூழ்ந்திருப்பது போன்ற பிரமையை அது தோற்றுவிக்கிறது. தான் வேலைசெய்யும் படங்களில் சுற்றுப்புற ஒலிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறும் ஆஸ்கார் விருதுபெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, ‘ஒலி பார்வையாளனின் ஆழ்மனத்தைப் (subconscious) பாதிக்கிறது’ என்று (Deep Focus Cinema, Nov.2014) கூறியிருக்கிறார். திரையில் மலையோடை ஒன்று காட்டப்படும்போது நீரின் சலசலப்பு நமக்குக் கேட்டால்தான் ஓடை உயிர்பெறுகிறது. வீட்டில் படம் பார்க்கும்போது இத்தகைய ஒலிகள் சிதைகின்றன. கடற்கரைக் காட்சி ஒன்றில் அலையோசையை நாம் கேட்க முடிவதில்லை. இயக்குநர் வுடி ஆலன் தன் படம் ஒன்று வெளியிடப்படும் முன் நியூயார்க் நகரில் திரையரங்குகளுக்குச் சென்று ஒலி உபகரணங்கள் தரமாக இருக்கின்றனவா எனப் பரிசோதித்துவிட்டுத்தான் பட வெளியீட்டை அனுமதிப்பார்.

அதுபோலவே ஒளியூட்டத்தையும் (lighting) நாம் சின்னத்திரையில் உணர முடிவதில்லை. ‘அவள் அப்படித்தான்’ படத்தில் இயக்குநர் கதாபாத்திரங்களின் அடி மனத்தின் உணர்வுகளைக்காட்ட ஒளி யூட்டத்தை அருமையாகப் பயன்படுத்தியிருந்தார். சின்னத்திரையில் அது கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடுகிறது. ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகள் முகத்தில் பிரதிபலிப்பதை நாம் சின்னத் திரையில் இழக்கக் கூடும். ‘Lunch Box’ படத்தைப் பார்த்தவர்களுக்கு இது எளிதாக விளங்கும். இயக்குநர் ஒரு சட்டத்திற்குள் (frame) பல விவரங்களைக் காட்டும் போது, அவை சின்னத் திரையில் பார்வையாளரால் கவனிக்கப்படாமல் போவதுண்டு.

ஆனால் விமர்சிக்கவோ ஆராயவோ ஒரு படத்தைப் பார்க்க வேண்டியிருந்தால், குறுவட்டு நல்ல வசதியான உபகரணமாக அமையும். ஒரு காட்சிப் படிமத்தை ‘உறைய வைத்து’ அதைக் கூர்ந்து அவதானிக்க முடியும். ஒரு காட்சியை மறுபடியும் ஓடவிட்டுப் பார்க்க முடியும். ஆனால் சினிமாவை அனுபவிக்க, அதன் ஆழத்தை உணர, பெரிய திரையும் இருண்ட அரங்கும் அவசியம். வீட்டின் சிறிய திரையில் நாம் பார்க்கும் திரைப்படத்தைப் புலனளவில் மட்டுமே எதிர்கொள்ள முடிகிறது. அந்நியப்படுத்தப்பட்ட அனுபவமாக அது அமைந்துவிடுகிறது. அந்த அனுபவத்தின் பேரில் அந்தப் படத்தை விவாதிப்பது நியாயமல்ல என நினைக்கிறேன்.

சு. தியடோர் பாஸ்கரன்

காலச்சுவடு செய்திகள்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக