புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
4 Posts - 5%
Rutu
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
2 Posts - 2%
prajai
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_m10ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2015 1:59 am


பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்றுடன் முடிந்தது; நீதிபதி குமாரசாமி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி முன், 41வது நாளாக நேற்று நடந்தது.

சுப்பிரமணியசாமி வாதம்:

நீதிமன்ற உத்தரவுப்படி, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியசாமி, 14 பக்க எழுத்துப் பூர்வமான வாதத்தை, நீதிபதியிடம் நேற்று நேரில் சமர்ப்பித்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது: முதல்வர் பதவியை துஷ்பிரயோகப்படுத்தி, பொது ஊழியர் சொத்து சேர்த்ததால், இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா, 1979ல், நடிப்பு தொழிலை விட்டு விட்டார்; அதன்பின், அவருக்கு எந்த வருமானமும் இல்லை; 1987 முதல் 1993 வரை, வருமானவரி செலுத்தவில்லை. இந்த ஆண்டுகளில், தனக்கு எந்த வருமானமும் இல்லையென, அவரே தெரிவித்து உள்ளார். கடந்த 1990ல், ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் ஆகியவற்றை, ஜெயலலிதாவும், சசிகலாவும் துவக்கினர்; அப்போதெல்லாம், இக்கம்பெனிகளுக்கு பணப்புழக்கம் எதுவுமில்லை. ஜெயலலிதா எம்.பி.,யாக இருந்த போது, 9.12 லட்சம் ரூபாயில், நான்கு கார்களையும், எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, ஜீப் ஒன்றை, 1.40 லட்சம் ரூபாயில் வாங்கினார்.

துஷ்பிரயோகம்:

கடந்த 1984 முதல் 1989 வரையிலும், தன் பதவியை பயன்படுத்தி, சொத்து சேர்த்தார். 1991ல், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். பதவியேற்ற ஓராண்டிலேயே, ஜெயலலிதாவும், அவருடன் சேர்ந்து சசிகலாவும், பதவியை துஷ்பிரயோகப்படுத்தி, 2.01 கோடி ரூபாய் சொத்து சேர்த்தனர். பின், காளான் முளைப்பது போல், 32 கம்பெனிகளை துவக்கினர். இக்கம்பெனிகளுக்கு, எந்த தொழிலும் இல்லை; உற்பத்தியும் இல்லை. பெயரளவில் இருந்த கம்பெனிகளுக்கு, ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களில் இருந்து, பணம் வந்து கொண்டிருந்தது. ஆனால், இரு கம்பெனிகளிடையே நடக்கும் பணப் பரிமாற்றம் போன்று காண்பித்து உள்ளனர். தங்கள் கூட்டு சதி மூலம் சேர்த்த பணத்தை கைமாற்ற, கம்பெனிகளை பயன்படுத்திக் கொண்டனர். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி வங்கிக் கணக்குகளுக்கு, அடிக்கடி, லட்சக்கணக்கில் பணம் போடப்பட்டது. இந்த பணத்தை, ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் பணிபுரிந்த ஜெயராமன் என்பவர், வங்கியில் செலுத்தி உள்ளார். கடந்த 1992 - 93ல், ஜெயலலிதா, 6 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது, அதிர்ச்சியளிக்கிறது. நான்கு பேர் மீதும், ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை செய்து, ஆதாரத்துடன் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். இதை, முந்தைய சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்து, குற்றங்களை உறுதிபடுத்தி, தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும். பொது ஊழியர்கள் தவறு செய்தால், தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை, இவ்வழக்கின் மூலம், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும். எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜெ., வழக்கறிஞர் வாதம்: இதையடுத்து, சுப்பிரமணியசாமி வாதத்துக்கு பதிலளிக்குமாறு, ஜெ., வழக்கறிஞர் குமாருக்கு, நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

குமார் கூறியதாவது: பதவிக்கு வருவதற்கு முன்பே, ஜெயலலிதாவுக்கு கம்பெனிகள் இருந்தன. 'கூட்டு சதி' என்பதற்கு, அரசு தரப்பில், எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. ஜெயலலிதா பணத்தில், மற்ற மூன்று பேரும் கம்பெனிகள் வாங்கியதற்கு, எந்த ஆதாரமும் இல்லை. ஒரே வீட்டிலிருந்தனர் என்பதால், கூட்டு சதி செய்தனர் என கூறுவது, அபத்தமானது. ஜெயலலிதா ஊழல் செய்தார் என்றால், அதை யார் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்தனர் என்பதை காண்பித்திருக்க வேண்டும். பொது ஊழியர் சொத்து சேர்த்தார் என்று, பொதுவாக கூறியுள்ளனர். இதற்கான, எந்த ஆதாரமும் காண்பிக்கப்படவில்லை. ஜெயலலிதா வங்கிக் கணக்கிலிருந்து, சசிகலா, சுதாகரன், இளவரசி வங்கிக் கணக்குகளுக்கு, பணம் எதுவும் பரிமாற்றம் நடக்கவில்லை. இவ்வழக்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்டது. முந்தைய நீதிமன்றத்தில், எங்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு உள்ளது. உண்மையான வருமானம் குறைக்கப்பட்டு, செலவுகள் மிக அதிகமாக காட்டப்பட்டு உள்ளது. கட்டடம் கட்டியது, சுதாகரன் திருமணச் செலவு ஆகியவற்றை, பல கோடி ரூபாய் அதிகரித்து காண்பித்து உள்ளனர். ஜெயலலிதாவிடம், 66.65 கோடி ரூபாய் மதிப்பு சொத்து இல்லையென்பதால், சசிகலா, சுதாகரன், இளவரசி சொத்துகளும் சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே, சுப்பிரமணியசாமி வாதத்தை புறக்கணித்து, வழக்கை மீண்டும் சரியாக பரிசீலித்து தீர்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தீர்ப்பு தள்ளிவைப்பு:

பின், நீதிபதி குமாரசாமி கூறுகையில், "வழக்கில், அனைத்து வாதங்களும் முடிவடைந்தன; வழக்கு விசாரணை நிறைவு பெற்றது; தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது,” என்றார்.

நடைமுறை விதி என்ன?

பொதுவாக, செஷன்ஸ் நீதிமன்றம் உட்பட, சில நீதிமன்றங்களில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும்போது, 14 நாட்களுக்குள், தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், உயர் நீதிமன்றத்தை பொறுத்தவரை, அந்த விதிமுறை கிடையாது. எனவே, தீர்ப்பு தேதியை அறிவிப்பது, சம்பந்தப்பட்ட நீதிபதியின் பொறுப்பில் உள்ளது. தீர்ப்பு வெளியாகும் தேதி குறித்து, அதற்கு முந்தைய நாள் வெளியாகும் பட்டியலில் அறிவிக்க வேண்டும்; இதுதான் விதிமுறை. நீதிபதி குமாரசாமி, தீர்ப்பு தேதியை என்று அறிவிப்பார் என, அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கிறது.



ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2015 2:00 am

எங்கள் வழக்குகளில் மட்டும் வேகம்: பட்டியலிடுகிறார் விஜயகாந்த்

சென்னை: 'தே.மு.தி.க., சம்பந்தப்பட்ட வழக்குகளில் காட்டும் வேகத்தை, அனைத்து வழக்குகளிலும் காட்டினால், தமிழக போலீசாரை, பொதுமக்கள் பாராட்டுவர்' என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சட்டசபையில், போலீசை தாக்கியதாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சேகர், தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வழக்கிலும் காட்டாத வேகத்தை காட்டி, இந்த வழக்கின் குற்றப் பத்திரிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., அரசு தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை, பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறது என்பதும், போலீசார் அதற்கு உடந்தையாக உள்ளதும், இதன்மூலம் தெளிவாகிறது. சமீபத்தில், தே.மு.தி.க., நெல்லை மேற்கு மாவட்ட செயலர் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டிற்கு அழைத்து சென்றபோது, நடந்த உண்மை நிலவரத்தை அறிந்த கோர்ட், அவரை ஜாமினில் விடுவித்தது.

முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோகுல இந்திரா, காமராஜ், செல்லூர் ராஜு, வளர்மதி, அ.தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பலரின் மீதும் கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற, பல வழக்குகள் போடப்பட்டு உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக, இந்த வழக்குகள், எப்.ஐ.ஆர்., நிலையிலேயே உள்ளன.

தே.மு.தி.க. குறித்து, சமூக வலைதளங்களில் செய்யப்படும் விமர்சனங்கள் குறித்து, கட்சியின் வழக்கறிஞர்கள், சென்னை போலீசில் புகார் செய்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதே போல, புகார் தே.மு.தி.க., மேட்டுப்பாளையம் நகர செயலர் மல்லி சுப்பிரமணியம் மீது, அ.தி.மு.க.,வினரால் தெரிவிக்கப்பட்டது. அவரை, போலீசார் கைது செய்து, 45 நாட்கள் கோவை சிறையில் அடைத்தனர்.

போலீசாரின் இது போன்ற பாரபட்சமான நடவடிக்கைகளால், போலீசார் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையும் போய்விடும். மக்கள் நலனுக்காக, போலீசார் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.



ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக