புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 3%
prajai
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 3%
manikavi
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
1 Post - 1%
Rutu
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
1 Post - 1%
சிவா
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 6%
Rutu
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
1 Post - 3%
manikavi
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
1 Post - 3%
viyasan
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 10:16 pm

'எங்கே போட்டுருப்பான்...' என, செடி, கொடிகளுக்கு நடுவிலும், பூச்சு வேலைக்காக வாங்கி குவித்திருக்கும் மணல் குவியல் மற்றும் வாயிற்கதவு ஓரமாக வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளுக்கிடையில் என, எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து களைத்து விட்டார் ராமதுரை. எங்கேயும் செய்தித் தாளைக் காணவில்லை.

பொதுவாக பேப்பர் பையன் வீசியெறியும் செய்தித்தாள், படிக்கட்டு மற்றும் அதை சார்ந்த இடங்களில் தான் கிடக்கும்; இத்தனை நாளும், 6:00 மணிக்கே வந்துவிடும் பேப்பர், இன்று, 6:30 மணி ஆகியும் வரவில்லை. சரி... பேப்பர் தான் லேட் என்றால் பார்வதி போட்டுத் தரும் காபியும், இன்னும் கைக்கு வரவில்லை.

பக்கெட் தண்ணீரில் கையை கழுவி, தோளில் தொங்கிய துண்டில் கைகளை துடைத்தபடி, சிட் - அவுட்டில் இருந்த பிரம்பு நாற்காலியில் வந்து அமர்ந்தார். அருகிலிருந்த டேபிளில் ஆடை படிந்திருந்த காபியும், பக்கத்தில் தாறுமாறாக மடிக்கப்பட்ட செய்தி தாளும் இருந்தன.

''பாரு... ஏய் பாரு இங்க வா...'' என்று மனைவியை ஓங்கிய குரலில் அழைத்தார்.
''எதுக்கு இப்படி காலங்காலத்தாலே பாரு... பாருன்னு என்னய ஏலம் விடறீங்க?''
''ஏன் காபி லேட்டு? அப்புறம், இந்த பேப்பர் இங்க எப்படி வந்தது? இத நான் எங்கெல்லாம் தேடுறது!''
''பேப்பர் அப்பவே வந்துடுச்சு... ரமேஷ் அவன் ரூம்ல வச்சு பாத்துகிட்டிருந்தான். முதல் டிகாஷனில் அவனுக்கு காபி கொடுத்ததால, அடுத்த டிகாஷன் இறங்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நீங்க தான் நேத்திலேருந்து ரிட்டயர் ஆயாச்சுல்ல... எதுக்கு இப்படி அவசரப்படுறீங்க... இனிமே எல்லாமே மெதுவாத்தான் நடக்கும்,''என்றாள்.

''ஓ... ரிட்டயராயிட்டேனா?''என்று கேட்டவருக்கு, நேற்று அலுவலகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றது நினைவுக்கு வந்தது. இனிமேல், எக்ஸ் அக்கவுண்டன்ட்! பிரிவு உபசார கூட்டத்தில், 'ராமதுரை இல்லாவிட்டால், இனி ஆபீஸ் எப்படி நடக்கும்... இழுத்து மூடிட்டு எல்லாரும் வீட்டுக்கு போக வேண்டியது தான்...' என்ற ரேஞ்சுக்கு, ஆளாளுக்கு அவரைப் புகழ்ந்து தள்ளி, அவர் பிரிவுக்காக நீலிக்கண்ணீர் வடித்து, மாலை மரியாதை செய்து, வாடகைக்கு எடுத்த இன்னோவா காரில், வீடு வரை கொண்டு வந்து பிரியா விடை பெற்றுச் சென்றனர். அடுத்த தடவை ஆபீசுக்கு, ஏதாவது வேலையாகப் போனால், ஓரக்கண்ணால் பார்த்து, கால் இஞ்ச் உதட்டை விரித்து செயற்கை முறுவல் பூத்து, வேலையில் முழுகிவிடுவர் என்பது ராமதுரைக்கு தெரியும்.

மகன் ரமேஷ் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். பல லட்ச ரூபாய் காபிடேஷன் பீஸ் கொடுத்து விலைக்கு வாங்கிய சீட்! 'உதவாக்கரை... வீட்ல ஒரு வேலை செய்யுறதில்ல; படிக்கிறதும் சுமார்தான்; எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட், சினிமான்னு ஊர் சுத்துறது... மணிக்கணக்கா மொபைல்போன், பேஸ் புக், சேட்டிங்க்ன்னு அவங்க அம்மாகிட்ட திட்டு வாங்கிக்கிட்டு இருக்கற பய... இன்னக்கி எப்படி, முதல் காபி, பேப்பர் என வி.ஐ.பி., ஆனான்...' என, ராமதுரைக்கு ஆச்சரியமாக இருந்தது.

தொடரும்.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 10:18 pm

மதிய சாப்பாட்டின் போது, தட்டில் பாயசம் ஊற்றினாள் பார்வதி. அதில் நிறைய முந்திரி பருப்பு மிதந்தது.
''இன்னக்கி என்ன விசேஷம், பாயசம் செய்திருக்கே?''என்று கேட்டார்.
''நம்ம ரமேசு கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகிருக்கான்... ஏதோ கார் தயாரிக்கிற சோடா கம்பெனியாமே?''
சிரித்தார் ராமதுரை.

''அது, சோடா இல்ல; 'ஸ்கோடா'ன்னு கார் தயாரிக்கிற பெரிய கம்பெனி. ஆமா... இவனை எப்படி அந்த கம்பெனியில எடுத்தாங்க,'' என்றவர் சீரியசாகி, ''அது சரி, துரை இத என் கிட்டே சொல்லவேயில்லையே... அவ்வளவு மரியாதை! ஹூம்...'' என்றார் கடுப்பாக.
''இல்லங்க... நேத்து என்கிட்டே சொல்லும் போதே, அப்பாகிட்டயும் சொல்லிடும்மான்னான்; நாந்தான் மறந்துட்டேன். காலேஜுல சர்டிபிகேட் வந்ததும், அதை அனுப்பினா கம்பெனியிலிருந்து அழைப்பு லெட்டர் வருமாம்.''

தான் ஓய்வு பெற்று, பென்ஷன் மற்றும் மாதாந்திர வங்கி டிபாசிட் வட்டி பெறுபவராக மாறிவிட்டதாலும், ரமேஷ் பெரிய கம்பெனியில் வேலைக்கு போய், கை நிறைய சம்பளம் வாங்க இருப்பதாலும், வீட்டில் தான் இரண்டாம் தரக் குடிமகனாக பதவி இறக்கம் செய்யப்பட்டது புரிந்தது அவருக்கு!

வழக்கமான நேரத்தில் காபியோ, டிபனோ, குளிப்பதற்கோ சென்றால், 'இப்ப என்ன அவசரம்...' என்று படுத்தி எடுத்தாள் பார்வதி. அவர் விரும்பி பார்க்கும் செய்திச் சேனல்களை கூட பார்க்க முடிவதில்லை. 'ஒரே நியூச தான், எல்லா சேனல்களிலும் திருப்பி திருப்பி காட்டறான்... அதையே எத்தன நேரம் கண் கொட்டாம பாப்பீங்க...' என்று கண்டித்து, சேனலை மாற்றி, சீரியல்களை பார்க்க ஆரம்பித்தாள். அத்துடன், 'சும்மாதானே இருக்கீங்க..., காய்கறி அரிஞ்சு கொடுங்க; மூணு விசில் வந்ததும் குக்கரை இறக்கிடுங்க, பத்து பாத்திரத்த வேலைக்காரிக்காக பின்பக்கம் எடுத்துப் போடுங்க, வாஷிங்மிஷின்ல இருக்குற துணிகளை எடுத்து காயப்போடுங்க, குளிச்சுட்டு சாமி விளக்கேத்துங்க...' என்று எல்லா வேலைகளையும் அவர் மீது சுமத்தினாள்.

ஆரம்பத்தில் கடுப்பாக இருந்தாலும், நாளாவட்டத்தில் இந்த புது வாழ்க்கைக்கு முற்றிலும் பழகி விட்டார் ராமதுரை.சில மாதங்கள் கழிந்தன.ஒரு நாள் காலையில் எழுந்து, சிட்- அவுட்டுக்கு வந்தால், மடிப்பு கலையாத பேப்பர், பேப்பரை கையில் எடுத்ததும் ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள் பார்வதி.

''ஏங்க டிபன் ரெடி; குளிச்சுட்டு வந்துட்டீங்கன்னா சூடா பரிமாறுவேன்... இனிமே இந்த பாத்திரம் தேய்க்கிறது, துணி துவைக்கிறது எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்; நீங்க நியூஸ் சேனல பாருங்க. சீரியல் நாடகங்க எல்லாம் ரொம்ப போர் அடிக்குது, '' என்று முற்றிலும் ஒரு புது பார்வதி உதயமானாள்.''என்னம்மா ஆச்சு உனக்கு... பழையபடி முதல் மரியாதை எனக்கு கிடைக்குது?'' என்று, கிண்டலாக சிரித்தபடி கேட்டார் ராமதுரை.நமட்டு சிரிப்பு சிரித்தபடி உள்ளே போய் விட்டாள் பார்வதி.

இரவு சாப்பிடும்போது, ''ஏங்க நம்ம... ரமேசுக்கு இந்த வேலை கிடைக்காது போல இருக்குங்க. அந்த கம்பெனி கார்லாம் ரொம்ப விலை உயர்ந்ததாம்; நம்மூர் பொருளாதாரம் அடிவாங்கினதால, விற்பனை மந்தமா இருக்காம்; அதனால, அப்பாயின்மென்ட் கேன்சலாகிருச்சு. இனிமே அவன் அப்ளிகேஷன் போட்டு, இன்டர்வியூ அட்டெண்டு செய்து, ஏதாவது கம்பெனியில வேலை கிடைச்சாத் தான் உண்டு,'' என்று கூறியவளுக்கு கண்களில் நீர் எட்டி பார்த்தது.''ஓ... அதுதான் மேட்டரா?'' என்று நக்கலாகக் கேட்டவர், உணவுக்குப்பின் ஈசி சேரில் சாய்ந்த ஓய்வெடுத்த போது, சிந்தித்து பார்த்தார்.

'நம்ம நாட்டுல பார்வதி மாதிரி அதிகம் படிக்காத பெண்கள், தங்களோட தனித்தன்மைய இழந்து, வாழ்நாள் முழுவதும் பொருளாதார ரீதியா புருஷனையும் பின், புள்ளயையும் சார்ந்திருக்க வேண்டிய அவல நிலையில தான இருக்காங்க. தங்களுடைய சின்னச் செலவுக்கு கூட கணவனையோ, மகனையோ எதிர்பார்க்க வேண்டிய பரிதாப சூழல் தானே இவங்களுக்கு இருக்கு... இவங்களுடைய ஓயாத உடல் உழைப்பு, மகனுக்கு திருமணமாகிட்டா கூட முடியுறதில்ல; அவன் மனைவிக்கும் சேர்த்து உழைக்க வேண்டிய நிலையில தான் இருக்காங்க. ரிட்டயர்மென்ட் என்பது இல்லத்தரசிகளுக்கு எட்டாக் கனவு தான். ஒரு விதத்தில், இது கொத்தடிமைத்தனம் தான்; பாவம் இந்த பெண்கள்...' என்று நினைத்தவருக்கு, தன் மனைவி மீது இரக்கம் சுரந்தது.

மறுநாள் காலை சற்று தாமதமாக எழுந்த பார்வதி, அரக்க பரக்க பல் தேய்த்து, சமையலறைக்குள் நுழைந்தபோது, ராமதுரை அவளுக்காக காபி போட்டுக்கொண்டிருந்தார். அரிசியை களைந்து, குக்கர் ஏற்றியிருந்தார்; காய்கறியை நறுக்கி தட்டில் தயாராக வைத்திருந்தார். ஆச்சரியமாக பார்த்த மனைவியை நோக்கி, ''என்ன பாரு அப்படிப் பாக்குறே... இத்தனை நாள் நீ எங்களுக்காக கஷ்டப்பட்டுட்டே... இனிமே என்னோட முறை.

இனி இதையெல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்; நீ ஓய்வெடு,'' என்று வாத்சல்யத்துடன், அவள் தோளில் தட்டிக் கொடுத்து தலையைக் கோதி விட்டார். கணவனின் எதிர்பாராத அன்பால், திக்கு முக்காடிப்போன பார்வதியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

ஆர்.ரகோத்தமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக