புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_m10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_m10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_m10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_m10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_m10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_m10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_m10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_m10பிணம் தின்னும் சாத்திரங்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிணம் தின்னும் சாத்திரங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 3:38 am


“அம்மா... முடியலையேம்மா... நான் என்ன பதில் சொல்வேன்?”

“என் ராசா, உங்களை இனிமே என்னைக்குப் பார்ப்பேன் ராசா... என்னைச் சிரிக்கச் சொல்லி அழகுபார்ப்பீங்களே... இன்னிக்கு முகமே தெரியாம சிதைஞ்சு கெடக்குறீங்களே...

ஏ, அய்யா, ஏ அய்யா...”

“பாவா, பாவா... யே... பாவா...”

“கடவுளே உனக்குக் கண்ணில்லையே... ஊருல பொழைக்க வழி இல்லாமத்தான இங்கே வந்தோம்... வந்த எடத்துல எங்களை வதைச்சுட்டீயே... நாங்க என்ன பாவம் செஞ்சோம்...”

“பாவி பாவி... விட்டுட்டுப் போயிட்டியே பாவி... இனி நான் எப்படி வாழ? ம்ம்ம்ம்...”

- இன்னும் தெலுங்கில், ஒடியாவில், இந்தியில் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன அழுகுரல்கள், கேவல்கள், புலம்பல்கள், சாபங்கள். மீண்டும் மீண்டும் கண்களை மறைக்கின்றன சுக்குநூறாகச் சிதைந்து கிடந்த கட்டிடச் சிதறல்களும், கருப்பு பாலிதீன் உறைகளில் மூடப்பட்டுப் பிண்டங்கள் அரைகுறையாக வெளியே தெரிய தூக்கிச் செல்லப்பட்ட சடலங்களும். கிரிக்கெட் ஸ்கோர் போர்டுபோல, இறந்தவர்களின் எண்ணிக்கையை ஆந்திரம், தமிழகம், ஒடிசா, அடையாளம் தெரியாதவர்கள் என்று பிரித்து எழுதப்பட்டிருந்த அந்தக் கரும் அறிவிப்புப் பலகையைக் காலம் முழுவதற்கும் மறக்க முடியாது. மருத்துவமனைச் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களில் மூக்கு எது, வாய் எது என்று தெரியாமல் கூழாகிக் காட்சியளிக்கும் முகங்களைவிடவும் வேகமாகக் கண்ணீரை வரவழைக்கின்றன அவற்றைப் பதைப்பதைப்போடு பார்த்துக் கதறிய உறவினர்களின் முகங்கள். நாசியிலிருந்து பிணவாடையைப் பிய்த்து வீச முடியவில்லை. அந்த வாடை உடையில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா, உடம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா, காற்றில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. செல்லும் இடமெல்லாம் துரத்துகிறது.

என்னைவிடவும் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நண்பர் அவர். சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த நாளில் தொடங்கி ஒவ்வொரு நாளும் செய்தி சேகரிக்கச் சென்றவர். “முடியலீங்க. சாப்பிடக்கூட முடியலை. எதைப் பார்த்தாலும் குமட்டுது, ராத்திரில தூங்க முடியலை. விதுக்கு விதுக்குனு இருக்கு. ஒரே வெறுப்பா இருக்கு. பிள்ளைங்களைப் பார்த்தா என்னமோ பயமா இருக்கு... ஏங்க, தூர நின்னு பார்த்த நமக்கே சகிக்கலையே... எப்படிங்க அவங்களால எல்லாம் நிம்மதியா இருக்க முடியுது? மனசாட்சின்னு ஒண்ணு இருக்குமா, இருக்காதா?”

விபத்தா, படுகொலையா?

ஒரு வாரம் ஆகிவிட்டது சம்பவம் நடந்து. அதை விபத்து என்று குறிப்பிட என் கை கூசுகிறது. 48 வீடுகளைக் கொண்ட 11 மாடிக் கட்டிடம், இன்னும் கொஞ்ச நாட்களில் திறப்பு விழா காணும் நிலையில் இருந்த கட்டிடம், ஒரு இடி மழைக்குச் சிதறி சின்னாபின்னாமாகிறது என்றால், அது விபத்தா; ஊழலின் வெடிப்பா?

நடந்தது படுகொலை. இந்த அமைப்பின் சகல மட்டங்களிலும் புரையோடியிருக்கும் ஊழல்வாதிகள் செய்த படுகொலை. நம் எல்லோருக்கும் இது தெரியும். நம் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் தெரியும். ஆனால், இன்றுவரை ஒரு பெயருக்குக்கூட, சம்பிரதாய நடவடிக்கையாகக்கூட ஒருவர்கூடப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவில்லை. ஒருவர்கூடப் பதவி/பணிநீக்கம் செய்யப்படவில்லை. ஊழலின் பெயரால் அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒருவர்கூடக் கைதுசெய்யப்படவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைவர் - தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் - ஆர். வைத்திலிங்கம் சம்பவ இடத்தைப் பார்வையிடக்கூடச் செல்லவில்லை. அதிகாரிகள் தரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முக்கியப் பொறுப்பான உறுப்பினர் - செயலர் ஏ. கார்த்திக் ஐ.ஏ.எஸ்., இந்தக் கட்டிடத்துக்கு அனுமதி கொடுக்கும்போது அந்தப் பொறுப்பில் இருந்த ஆர். வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் இருவரும் எந்தச் செய்தியாளரின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தயாராக இல்லை. அமைச்சர் பேச மாட்டார், அதிகாரிகளும் பேச மாட்டார்கள்; யாரும் மக்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்க மாட்டார்கள்; எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அதிகார வர்க்கத்தை இத்தகைய ஊழலுக்கான தண்டணையோடு பிணைப்பதைப் பற்றி மத்திய அரசு இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்றால், என்ன நாடு இது?

கொள்ளைக் கொள்கைகள்

இந்தியா நகர்மயமாக்கலை வெறிகொண்டு அணைக்கிறது. இந்தியாவில் வாழும் மூவரில் ஒருவர் நகரத்தில் வாழ்கிறார் என்று பெருமிதம் அடைகிறார் மத்திய நகர்ப்புற அமைச்சர்.

ஆனால், நகர்மயமாதலால் பெருகும் வீடற்றவர்களின் எண்ணிக்கையை (7.8 கோடி பேர்) எதிர்கொள்ள அரசிடம் சரியான திட்டங்கள் ஏதும் இல்லை. வீடுகளின் பற்றாக்குறை 1.87 கோடி. 53% பேருக்குக் கழிப்பறை வசதி இல்லை.

தன்னுடைய குடிமக்களுக்கு வீடு அல்ல; குறைந்தபட்சம் கழிப்பறை வசதியைக்கூட இன்னமும் முழுமையாக உருவாக்கித் தர முடியாத தேசம், தம் ரத்தத்தைச் சிந்தி உழைப்பின் பலனைக் குருவி சேர்ப்பதுபோல சேகரித்து, தாமே ஒரு சொந்த வீட்டை உருவாக்கிக்கொள்ள முனையும் மக்களிடம் அதிகாரவர்க்கம் கொள்ளை அடிப்பதற்கேற்ற கொள்கைகளையே வகுத்துவைத்திருக்கிறது.

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கான நியாயமான விலை இவ்வளவுதான் என்பது யாருக்காவது தெரியுமா? எந்தெந்தப் பகுதியில் எத்தனை அடி அஸ்திவாரம் போட வேண்டும், கட்டுமானப் பொருட்களின் தரமான கலவை நிர்ணயத்தை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை யாராவது அறிவார்களா? இதுபற்றியெல்லாம் அரசுக்கு ஏதாவது அக்கறை உண்டா?

ஒரு வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக்குச் சதுர அடிக்கு இருநூறு ரூபாய் என்பதில் தொடங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு, பெரும் அங்காடிகளுக்கு என்று ரகம்வாரியாகச் சட்டபூர்வ அனுமதிக்கு இவ்வளவு, சட்ட மீறல் அனுமதிக்கு இவ்வளவு என்று லஞ்ச நிலவரம் சொல்கிறார்கள் தரகர்கள். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் ஆளுக்கொரு அளவையும் கையுமாக ஆய்வு என்ற பெயரில் எதைத் தேடி அலைகிறார்கள் அல்லது யாருக்கு நாடகம் காட்டுகிறார்கள்?

தொழிலாளியா, யார் அது?

தேசிய அளவிலான புள்ளிவிவரங்களும் தரவுகளும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஒருவர் என்கிற கணக்கில் பணியின்போது பாதிப்புக்குள்ளாவதாகச் சொல்கின்றன. தேசியக் குற்றச்செயல்கள் பதிவேடுகூட சென்னையில் 2013-ல் மட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததாகத் தெரிவிக்கிறது.

ஆனால், தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தகவல்கள்படியோ 2008-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் எந்தத் தொழிலாளரும் காயம் அடையவுமில்லை, உயிரிழக்கவும் இல்லை. தகவல் அறியும் சட்டப்படி, கேள்வி கேட்டவர்களுக்கு அப்படித்தான் பதில் சொல்லியிருக்கிறது வாரியம். தொழிலாளர்கள் நலனில் நமக்குத்தான் எத்தனை அக்கறை?

சுரணை எங்கே கிடைக்கும்?

ஒரு சின்ன மழைக்கே இடிந்து விழும் கட்டிடம்; அப்படி இடிந்து விழுந்த ஒரு கட்டிடத்துக்கான மீட்புப் பணிக்கே ஒரு வார கால அவகாசம் தேவைப்படும் நகரம்; இங்கே ஒவ்வொரு நாளும் கட்டப்படுகின்றன பல நூறு கட்டிடங்கள். வழக்கம்போல யாவும் தொடர்கின்றன. ஞாயிற்றுக்கிழமை கட்டுமான நிறுவனங்களின் ஓசி சவாரியில் தொடங்கி மவுலிவாக்கத்தில் முதலீடு பண்ண இது தோதான நேரம் என்கிற கணக்குகள் வரை யாவும் தொடர்கின்றன. ஏன் துளி சலனம் இல்லை? ஏன் ஒரு கேள்வி எழவில்லை? நம் சகமனிதன் சதை தின்று, அவர்தம் உயிர்குடித்துப் பிழைக்கப் பழகுகிறோமா நாம்?

- சமஸ் @ தி இந்து

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 08, 2014 10:32 am

ஒரு சில நாட்கள் பேசிய பிறகு இப்பிரச்சனையை வழக்கம் போல் நாம் மறந்து விடுவோம். பத்திரிக்கைகளும் அடுத்த வேலையைப் பார்க்கும்.

இது போன்ற தவறுகளுக்கு பொதுமக்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமாய் இருக்கின்றனர்.

கும்பகோண விபத்து நடக்கும் பொழுது இதே போன்ற குமுறல்கள், புலம்பல் இருந்தது,,, ஆனால் இன்றைக்கும் எத்தனை பெற்றவர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்குச் சேர்க்கும் பொழுது தேவையான பாதுகாப்பு வசதிகள் இருக்கிறதா என்று பார்க்கின்றனர்...எதையுமே கண்டுகொள்ளாமல் இருப்பதே இது போன்ற தவறுகளுக்கு முக்கிய காரணம்.

அனைத்தையும் அதிகாரிகள் தான் பார்க்க வேண்டும் என்று கூறினால், மக்களின் அலட்சியத்தை, அறியாமையை எங்ஙனம் போக்குவது..அவற்றின் விளைவை யார் சுமப்பது. ?

வாழ்வதற்கு அவசியமான வெளிட்சம், நல்ல காற்றோட்டம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைக் கூட கருத்தில் கொள்ளாமல் ஏதோ ஒரு வீடு அல்லது பிளாட் வாங்கியே ஆக வேண்டும் என்று ஆளாய்ப்
பறக்கும் முட்டாள்கள் இருக்கும் வரை இது போன்ற தவறுகள் தொடரும்.






சதாசிவம்
பிணம் தின்னும் சாத்திரங்கள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக