புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
17 Posts - 4%
prajai
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
8 Posts - 2%
jairam
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_m10"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 20, 2014 8:13 pm

தம் தாய்மொழியாம் தமிழையே தமிழ் என்று உச்சரிக்க முடியாது - இயலாது - தெரியாது - முயலாது - தமில் என்றே உச்சரிக்கும் தமிழகத் தமிழரின் எண்ணிக்கை 95 சதவீதம் வரை இருக்குமென "ழ'கரப்பணி மன்றம் எனும் அமைப்பு அறிவித்துள்ளது. இது ஓரளவு உண்மையாயினும், தேவையற்ற பிற தமிழ் விளம்பரப் பணிகளை ஓரங்கட்டிவிட்டு இதைச் சரிப்படுத்த வேண்டியதே இன்றைய இன்றியமையாத் தமிழ்ப் பணியாகும்.

தமிழ் எழுத்துவடிவம் காலந்தோறும் மாறியதால் தமிழ்ச் சாரம் குறையவில்லை. தமிழ் இலக்கிய வடிவம் கவிதையிலிருந்து உரைநடையானதால் தமிழ்ச் செழிப்பு மங்கவில்லை. தமிழ் இலக்கண விதிகள் நெகிழ்ந்தபோது தமிழ்ச்சீர்மை குலையவில்லை. ஆனால், கி.மு நூற்றாண்டுகளிலிருந்து கட்டிக்காத்துவரும் எழுத்து ஒலிப்புமுறை மாறினால் தமிழ் திரிந்து விடும் என்பதே பேருண்மையாகும்.

அறிவியல் நேர்த்தியுடன், தேர்ந்த உள்கட்டமைப்புடன் அமைக்கப்பட்ட நம் மொழியின் பெயரே, த என்ற வல்லினம், மி என்ற மெல்லினம், ழ் என்ற இடையினம் - இவற்றின் இனிய முச்சேர்க்கையாகத் தமிழ் என்று பெயரிடப்பட்டதன் நுட்பம் வியக்கத்தக்கதாகும்.

உலகின் பல மொழிகளுக்கு இல்லாத இச்சிறப்பைப் பெற்றிருக்கிற தமிழர், இதனை உணர்ந்து காப்பாற்றும் முறை எப்படி உள்ளது? எழுத்துகளை ஒலிமாற்றி உச்சரிப்பதால் எவ்வளவு பொருள்மாற்றக்குழப்பம் நேரிடுகிறது என்பது உணரப்படுகிறதா? ழ,ல,ள,ற,ர,ந,ண,ன ஆகிய எழுத்துகளின் உச்சரிப்பு வேறுபாடுகள் பள்ளிகளிலும், இல்லங்களிலும் பயிற்றுவிக்கப்படுவதே நின்றுவிட்டதா? படிப்பறிவில்லாத மக்கள் இதனைத் தவறாக உச்சரித்தால் கூட மன்னிக்கலாம். ஆனால், படித்த மக்கள் - ஊடகங்களில் செய்தி வாசிப்போர், அறிவிப்பாளர்கள், கவிதை அரங்குகளிலும், பட்டி மன்றங்களிலும் தமிழைத் தூக்கி நிறுத்துவோர், ஏன் தமிழாசிரியர்கள் கூட, வந்தார்கள் என்பதை, வந்தார்கல் என்றும்; கழிப்பறை என்பதை, களிப்பறை என்றும், ஈழம் என்பதை ஈளம் என்றும், வாழ்க்கை என்பதை வாள்கை என்றும் பொறுப்பற்று உச்சரிக்கும் அவலத்தைக் கேட்கும்போது வேதனை ஏற்படுகிறது.

தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வசனம் பேசுவோர் பலரும் தங்கள் பங்கிற்குத் தமிழ் உச்சரிப்புக் கொலை செய்தே வருகின்றனர். தமிழுக்கு மட்டுமே உரிய ழகரம் தமிழுக்குச் சிகரமாகும். எனவே, இதற்குச் சிறப்பு ழகரம் அல்லது தமிழ் ழகரம் என்று பெயர். இதை உச்சரிக்கத் தெரியாமல் இருப்பது மொழி ஊனமே ஆகும். ஏனெனில், தமிழில் முக்கியமான சொற்கள் "ழ'வில்தான் அமைந்துள்ளன.

"தமிழிசை கடன்பெற்றதே; தமிழில் உள்ளார்ந்த இசை மரபில்லை' என்ற அவதூறு எழுப்பப்பட்ட காலத்தில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், தமிழில் உள்ள மூன்று வகை இசைக்கருவிகளின் பெயர்களும் ழகரத்தில் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இவை தமிழுக்கே உரியவை என மெய்ப்பித்து எதிர்வாதங்களைத் தகர்த்தெறிந்தார்.

நரம்புக்கருவி - யாழ், காற்றுக்கருவி - குழல், தோல்கருவி - முழவு என்று அவர் குறிப்பிட்ட மூன்றும் தூய தமிழ்ச் சொற்களாகும்.

ழகரம் இந்திய மொழிகளில் தமிழிலும், தமிழிலிருந்து அண்மையில் பிரிந்த மலையாளத்திலும் மட்டுமே உள்ளது. பிரஞ்சு மொழியில் ழ - ஒலியில் இருக்கிறதேயொழிய சொல்லில் இல்லை. 9-ஆம் நூற்றாண்டு வரை தெலுங்கிலும், 10-ஆம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் ழகரம் வழக்கில் இருந்திருக்கிறது. இன்னும் பல திராவிட மொழிகளிலும் இருந்த ழகரம் சகரமாக மாறி வழக்கிறந்தது. ழகர ஒலி தாய் திராவிட ஒலி என்பது மொழியறிஞர்கள் கருத்து.

ஒரு காலத்தில் தமிழ் பயிற்றுவிக்கும்போது ழ,ற,ர,ல,ள,ந,ண,ன ஆகிய எழுத்துளை உச்சரிக்கப் பள்ளிகளில் கடும் பயிற்சி தரப்பட்டது. இதை ஒலிக்கக் கற்காமல் அடுத்த வகுப்புக்குத் தேற முடியாது. இஃது இன்று தொடருவதாகவும் தெரியவில்லை. ஒட்டக்கூத்தரும், வில்லிபுத்தூராரும், பிள்ளைப்பாண்டியனும் தமிழில் பிழை செய்தோரைக் கடும் தண்டனைக்கு உட்படுத்தியதாக வரலாறு உண்டு.

மொழி கெட்டால் வாழ்வு கெடும் என்ற அச்சத்தில் மொழித்தவறை தண்டனைக்குரியதாக அவர்கள் கருதினர். இந்த எட்டு எழுத்துகளைக் கற்றுக்கொள்ள இன்று பல வழிகள் உள்ளன. சற்றே முயன்றால் யாரும் எளிதாக இத்தமிழ் எழுத்துகளைச் சிறப்பாக உச்சரிக்கலாம்.

மொழியுணர்வும், மொழி உச்சரிப்பும் தமிழ் என்ற துள்ளுந்தின் இரு சக்கரங்கள். ஒரு சக்கரம் காற்றிழந்தாலும் தமிழ்ப் பயணம் தடைபடும்! (முனைவர். இ.ஜே.சுந்தர்-தினமணி)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 20, 2014 9:41 pm



நல்ல பதிவு

-------------

சிறப்பு 'ழ'கரமே!

   தமிழின் சிறப்பே 'ழ'கரம் என்பார்;
   தமிழ் என்ற சொல்லிலே வருமே!

   இந்த எழுத்து வராது சிலருக்கு;
   இந்த எழுத்து 'ய'கரமாய் ஆகும்!

   இந்த எழுத்து சரியாக வந்திட,
   இந்தப் பயிற்சி அளித்திடுவர்!

   அது: 'ஏழைக் கிழவன் வாழைப்
   பழத்தில் வழுக்கி விழுந்தான்!'

   கிழக்கு திசையில் பயணித்து,
   பிழைக்கப் போகின்ற ஒருவன்,

   மழை வந்ததால், ஓர் ஓரத்தில்
   மழை படாது ஒதுங்கும் சமயம்,

   வந்த பெரியவர் கேட்டதற்குத்
   தந்த பதில்களைப் பாருங்கள்!

   'எங்கே போறே?' - 'கெயக்க!'
   'எதுக்குப் போறே?' - 'பொயக்க!'

   'ஏன் ஒதுங்கறே ?' - 'மயக்கி!'
   'இப்படிப் பேசறே?'- 'பயக்கம்!'

   தமிழ் வாழ்க!  

===================
 நன்றி 
நன்றி:
rajiram

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 20, 2014 10:25 pm

இந்த சிறப்பு 'ழ'கரம் என்னிடம் மிகுந்த சிரமப்படும்...பாவம் அது...என்னிடம் இன்னும் எத்துணைக் காலம் படாதப் பாடு படப் போகிறதோ?... சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம் 



"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! 224747944

"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! R"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! A"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Empty"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! R"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 21, 2014 2:34 am

தமிழுக்காக ,தமிழனுக்காக உயிரை விடுவேன் எனக்கூறும் அரசியல்வாதிகள் சிலர் "ழ "உச்சரிக்க தெரியாது ,மேடையில் பேசும் போது சிரிப்புதான் வருகிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 01, 2014 8:37 pm

"தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! 103459460 "தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! 103459460 "தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கோம்ஸ் பாரதி கணபதி
கோம்ஸ் பாரதி கணபதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 29/10/2014

Postகோம்ஸ் பாரதி கணபதி Sat Nov 01, 2014 9:25 pm

மிகத் தேவையான ஓர் பதிவு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 02, 2014 6:13 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக