புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொழியின் தோற்றம் Poll_c10மொழியின் தோற்றம் Poll_m10மொழியின் தோற்றம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
மொழியின் தோற்றம் Poll_c10மொழியின் தோற்றம் Poll_m10மொழியின் தோற்றம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொழியின் தோற்றம் Poll_c10மொழியின் தோற்றம் Poll_m10மொழியின் தோற்றம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
மொழியின் தோற்றம் Poll_c10மொழியின் தோற்றம் Poll_m10மொழியின் தோற்றம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மொழியின் தோற்றம் Poll_c10மொழியின் தோற்றம் Poll_m10மொழியின் தோற்றம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மொழியின் தோற்றம் Poll_c10மொழியின் தோற்றம் Poll_m10மொழியின் தோற்றம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழியின் தோற்றம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 03, 2009 2:13 pm

மொழியின் தோற்றம் என்று சொன்னதும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியோ, சீன மொழியின் பண்டைய வரலாற்றைப்பற்றியோ அல்லது கிரேக்கம், அரபு மொழிகளின் உருவாக்கத்தைப் பற்றியோ பேசவுள்ளதாகவே நாம் நினைப்போம். ஏதோ ஒரு மொழியை குறித்த தகவல்களை சொல்லப்போகிறார்கள் என்றே நமது எண்ணங்கள் நமக்கு குறிப்புணர்த்தும். ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மொழியைப் பற்றிய மூலத்தை அறியப்போவதில்லை, மனிதர்களின் மொழி, மனிதன் தனது இனத்தோடு தொடர்புகொள்ள பயன்படுத்திய மொழியின் உருவாக்கம் பற்றிய சில தகவல்களை இன்றைக்கு அறியத் தருகிறோம்.

அறிவியலர்களின் கூற்றின் படியும், பகுப்பின் படியும் மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் ஒரு இனமே. ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவு கொண்டவன் என்பதே ஒரு சிறப்புத் தகுதியாகக் கொண்டு மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டவன் என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மேம்பட்டவர்கள், பண்பட்டவர்கள் என்று நமக்கு நாமே அடைமொழிகளை தந்திருக்கிறோம். சமூக அவலங்களை பார்க்கும்போது, மற்ற விலங்குகளிலிருந்து எந்த வகையில் மனிதன் வேறுபட்டான் என்ற கேள்வி பலமுறை எழத்தான் செய்கிறது, என்ன செய்ய.

சரி, விலங்குகளில் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை, ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் கொண்டவை என்று சொல்லப்படுபவை சிம்பன்சி, போனோபோ ஆகிய குரங்கினங்களாகும். சிம்பன்சியை நாம் அறிந்திருப்போம் பார்த்திருப்போம் ஆனால் போனோபோவை அவ்வளவாக நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக மனிதர்களிடயே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கும் என்பது தெளிவு. ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்திகளையும்தான் பரிமாறிக்கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட தகவல்கள் அமைந்துள்ளன.

ஆண் சிம்பன்சி மற்றும் போனோபோக்கள் தங்களுக்கு பசிக்கிறது உணவு கொஞ்சம் தா என்ற சக இனத்தவரிடம் கோட்கும்போதும் சரி, பெண் குரங்குகளை காதல் இச்சைக்கு இணங்க அழைக்கும்போதும் சரி அல்லது மற்ற ஆண் குரங்கினத்தோடு சண்டையிட்டு ஓய்ந்து சரி நாம் அமைதியா பிரிந்து சொல்வோம், நண்பர்களாவோம் என்று சொல்ல விரும்பினாலும் சரி, திறந்த கைகளை நீட்டுகின்றனவாம். அதாவது ஒரே ஒரு அசைவுதான் ஆனால் இடத்திற்கு ஏற்றார்போல் அது வெவ்வேறு பொருள்கொள்ளப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. முக பாவங்களைக் காட்டிலும், குரல் எழுப்பி தொடர்புகொள்வதைக் காட்டிலும் இவை சைகைகளை, அங்க அசைவுகளின் மூலமான மொழியையே அதிகமாக பயன்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


[You must be registered and logged in to see this link.]
மனிதர்கள் இயல்பாகவே அதிகம் அங்க அசைவுகளும், சைகைகளும் மூலம் தொடர்புகொள்ளக் கூடியவர்கள். அனேகமாக மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியிருக்கும், பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்தபின் பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் மனிதர்கள், குரங்குகள் உள்ளிட்ட பாலூட்டியினத்தின் உயர்நிலை இனங்கள் தொடர்பான முதனியியலாளராக உள்ள பிரான்ஸ் தே வால். இந்த ஆய்வுக்காக சான் டியாகோவிலுள்ள வனவிலங்கு பூங்காவின் 13 போனோபோக்களையும், யெர்கெஸிலுள்ள வனவிலங்கு பூங்காவின் 34 சிம்பன்சிகளையும் கூர்ந்து கவனித்து, ஒளிப்பதிவு செய்தார் தே வால். அவரது உதவியாளர் ஏமி பொல்லாக்கும் அவருமாக மொத்தம் 31 கை மற்றும் கால் சைகைகளையும், 18 முக முகபாவ உணர்ச்சி வெளிப்பாடுகளையும், குரலெழுப்பலையும் பதிவு அவதானித்தனர். இதில் இரண்டு வகை குரங்கினங்களுமே முகபாவங்கள், குரலெழுப்பல்கள் இவற்றை ஒரே வகையானசூழலில், நம்மால் கணிக்கக்கூடியதாக பயன்படுத்தியதையும், குறிப்பாக வலி மற்றும் பயம் ஏற்பட்டால் சத்தமாக கத்தின என்றும் இந்த ஆய்வாளர்கள் கண்டனர். ஆனால் சைகைகளை பொறுத்தவரை ஒரு குறிபிட்ட அங்க அசைவு வேறுபட்ட இடங்களில், சூழலில் வெவ்வேறு பொருள் கொள்ளப்பட்டதை அவர்கள் கண்டனர். முதனிகள் எனப்படும் உயர் நிலை பாலூட்டி இனங்கள் எல்லாமே முக பாவங்கள், குரலெழுப்பல்கள் மூலம் தொடர்புகொள்கின்றன, தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்கின்றன. ஆனால், மனிதர்கள், சிம்பன்சிகள், போனோபோக்கள், உராங் உட்டான்கள், கொரில்லாக்கள் ஆகியவை மட்டுமே இவ்வாறு சைகைகளை வெவ்வேறு பொருள் கொண்டவையாக பயன்பாட்டில் வைத்துள்ளன. இந்த குரங்கினங்களின் உயர் நிலை இனங்கள் கிட்டத்தட்ட 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்துள்ளன என்பதால், இத்தகைய சைகைகளும் நீண்டகாலமாக இருந்துள்ளன என புரிகிறது.


மேலும் பொதுவாக இந்த குரங்கினங்கள் சைகை செய்ய விரும்பும்போது வலது கையையே பயன்படுத்துகின்றனவாம். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மூளையில் மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்கத்தில்தான் என்பது கூடுதம் தகவல். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லப்படும்போது , வருத்தப்படத் தேவையில்லை.


நன்றி - சீன வானொலி

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:39 am

நன்றி மொழியின் தோற்றம் 103459460 மொழியின் தோற்றம் 103459460 மொழியின் தோற்றம் 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக