புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
4 Posts - 3%
bala_t
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
1 Post - 1%
prajai
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
291 Posts - 42%
heezulia
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
6 Posts - 1%
prajai
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
5 Posts - 1%
manikavi
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_m10அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 25, 2014 12:24 pm

அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் A0cff1e7-1d2c-41de-b057-55259838b673_S_secvpf

தமிழ்த்திரை உலகப் பின்னணிப் பாடகர்களில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் அவர்கள் குரலின் சாயலில் அற்புதமாக பாடி இவர் சாதனை படைத்தார்.

'டி.எம்.எஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. தந்தை மீனாட்சி அய்யங்கார். தாயார் வெங்கடம்மாள். சவுந்தர்ராஜனுக்கு சிறு வயது முதலே பாடுவதிலும், நடிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது.

சினிமாவில் எப்படியாவது நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாய்ப்பு கேட்டு, பல படக்கம்பெனிகளுக்குச் சென்றார். அவருடைய விடா முயற்சியால் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

1951-ம் ஆண்டு ராயல் டாக்கீஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ‘சுதர்சன்' என்ற படத்தை எடுத்தனர். பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடித்த இப்படத்தில் பி.பி.ரங்காச்சாரி சாமியாராக நடித்தார். அவருக்கு சீடராக டி.எம்.சவுந்தரராஜன் நடித்தார். தொடர்ந்து 'கிருஷ்ணவிஜயம்', 'தேவகி' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் தோன்றியதோடு, சில பாடல்களையும் பாடினார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரைப் போன்ற இனிய குரல் சவுந்தரராஜனுக்கு இருந்தது. 'உள்ளம் உருகுதய்யா, முருகா!' என்ற பாடலை டி.எம்.எஸ். இசை அமைத்துப்பாட, அது இசைத்தட்டாக வெளிவந்தது. பட்டி, தொட்டி எங்கும் ஒலித்த இப்பாடலைக் கேட்டவர்கள், அது பாகவதர் பாடல் என்றே எண்ணினார்கள்.

ஒரு முறை பழனிக்கு பாகவதர் பாட சென்றபோது, அங்கு டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாட்டு ஒலிபெருக்கியில் ஒலித்தது. இந்த பாடலைக் கேட்ட பாகவதர், சவுந்தரராஜனின் குரலில் மனம் மகிழ்ந்து, அவரைக் காண விரும்பினார்.

வேறொரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தனர். அப்போது, 'உங்கள் குரல் அமிர்தமாக இருக்கிறது. ரொம்ப சந்தோஷம். எதிர்காலத்தில் பெரும் புகழ் அடைவீர்கள்' என்று சவுந்தரராஜனை பாகவதர் வாழ்த்தினார்.

1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘மந்திரிகுமாரி' படத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் 'அன்னமிட்ட வீட்டிலே' என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து ,1954-ம் ஆண்டு 'மலைக்கள்ளன்' படத்தில் எம்.ஜி.ஆருக்காக சவுந்தரராஜன் பாடினார். பானுமதியை குதிரையில் வைத்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும்போது பாடப்படும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடலை மிகவும் அற்புதமாக சவுந்தரராஜன் பாடினார்.

எம்.ஜி.ஆருக்கு டி.எம்.சவுந்தரராஜனின் குரல் கனகச்சிதமாக பொருந்தி இருந்தது. இதே ஆண்டில், 'தூக்குத்தூக்கி' படத்தில் சிவாஜிகணேசனுக்காக பாடினார். டி.எம்.எஸ். குரல், சிவாஜிகணேசனுக்கு ரொம்பவும் பொருத்தமாக அமைந்தது. அனைத்து பாடல்களும் `ஹிட்' ஆயின.

1954-ம் ஆண்டு, டி.எம்.எஸ். வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. திரை உலகின் இரு இமயங்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் டி.எம்.எஸ். குரலே பொருத்தமானது என்று திரை உலகத்தினரும், ரசிகர்களும் ஏகமனதாக கருதினர்.

இதன் காரணமாக, எம்.ஜி.ஆர். படங்களுக்கும், சிவாஜி படங்களுக்கும் அவர் தொடர்ந்து பாடினார். இதுபற்றி சவுந்தரராஜன் கூறும்போது, 'சிவாஜிக்கு பாடவேண்டும் என்றால் அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்து பாடுவேன். எம்.ஜி.ஆருக்கு பாடும்போது அடித்தொண்டையிலும், மூக்கிலும் சாரீரத்தை வரவழைத்து பாடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், அசோகன், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அந்தக் காலகட்டத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் டி.எம்.சவுந்தரராஜன் குரல் கொடுத்துள்ளார்.

குறிப்பாக 'தூங்காதே தம்பி தூங்காதே', 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்', 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி', 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்', 'யாருக்காக இது யாருக்காக', 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' போன்ற ஏராளமான பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் பாடல்களாகும்.

1962-ம் ஆண்டு இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் சொந்தமாகத் தயாரித்த 'பட்டினத்தார்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். இதில் எம்.ஆர்.ராதா, லீலாவதி ஆகியோர் நடித்தனர். படத்தை சோமு இயக்கினார். இசை: ஜி.ராமநாதன்.

சவுந்தரராஜன் பட்டினத்தாராக கச்சிதமாக நடித்து இருந்தார். அதில் அவர் பாடிய பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தன. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 'பட்டினத்தார்', ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றி வாகை சூடியது.

அதனைத் தொடர்ந்து 1964-ம் ஆண்டு 'அருணகிரிநாதர்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். 'பட்டினத்தார்' போலவே இதுவும் வெற்றிப்படம். இப்படத்தில் இடம் பெறும் 'முத்தைத் திருநகையத்திச் சரவண...' என்ற கடினமான பாடலை, இனிமையாகப் பாடியிருந்தார்.

அதேபோல 'கவிராய காளமேகம்' என்ற படத்திலும், சொந்த தயாரிப்பில் 'கல்லும் கனியாகும்' படத்திலும் டி.எம்.எஸ். நடித்தார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

தமிழ்ப்பட உலகில் பெரும் திருப்புமுனை உண்டாக்கிய 'ஒருதலை ராகம்' படத்தில் இவர் பாடிய பாடல்கள் அற்புதமானவை. இதுதவிர, ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களையும், நூற்றுக் கணக்கான மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ள டி.எம்.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான மேடைக் கசேரிகளையும் நிகழ்த்தியுள்ளார்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜனின் குரலில் பதிவான கடைசி பாடல், 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1974 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கியது. மத்திய அரசு இவருக்கு, ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கிப் பாராட்டியது. தமிழ் திரைப்பட உலகின் தன்னிகரற்ற பின்னணி பாடகராக திகழ்ந்த டி.எம்.சவுந்தர்ராஜன் உடல் நலக்குறைவு காரணமாக 25-5-2013 அன்று சென்னையில் மரணம் அடைந்தார்.

காலத்தால் அழிக்க முடியாத குரல் வளத்தை தனது பாடல்களின் மூலம் நமக்காக விட்டு சென்றுள்ள டி.எம்.சவுந்தர்ராஜனின் உடலுக்கு திரை உலகத்தினர் மட்டுமின்றி, ஏராளமான அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரைப்படத்துறையில் கோலோச்சி, அவர் பாடியுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களில் பெரும்பாலானவை காற்றுள்ளவரை மக்களின் காதுகளில் தேனீயின் இனிய ரீங்காரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.

-maalaimalar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக