புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:10 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:08 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:50 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 7:12 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 3:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 2:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 2:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 2:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 12:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 8:57 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 5:52 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:51 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 8:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 3:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 1:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 7:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 5:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
13 Posts - 25%
Baarushree
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
2 Posts - 4%
prajai
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
2 Posts - 4%
சிவா
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
1 Post - 2%
viyasan
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
1 Post - 2%
Rutu
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
10 Posts - 83%
Rutu
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_m10மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:25 am

மேஷம்
மேஷம்:உழைப்பால் உயர விரும்புபவர்களே! சிறிது முன்கோபம் இருக்கிறது, அதை மட்டும் விட்டொழித்தால் மிகவும் நல்ல பெயர் எடுப்பீர்கள். தற்போதைய கிரகங்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. பொருளாதார வளமும், பெண்களால் அனுகூலமும் கிடைக்கும். இருந்தாலும் அவ்வப்போது பொருள் இழப்பும், சிறுசிறு உடல் உபாதைகளும் ஏற்படலாம். பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த பிரச்னை நீங்கும்; தீயோர் சகவாசம் முற்றிலும் ஒழியும். குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் வந்தாலும் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். முயற்சிகளால் அனுகூலம் உண்டு.

மாத பிற்பகுதியில் பொருள் விரயமும் வேலையில் சுணக்கமும் ஏற்படலாம். ஆனாலும், எந்தப் பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். குடும்பத்தில் வசதிகள் தொடரும். ஆடம்பர பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். சற்று சிரத்தை எடுத்தால் நிறைய சாதனைகள் செய்யலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்யோகஸ்தர்கள், கடந்த காலம்போல் அனுகூலமான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும்.

பரிகாரம்: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தைச் சொல்ல சொல்ல வடிவேலனின் அருளால் அனைத்து நன்மைகளும் நடக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 15, 16 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:26 am

ரிஷபம்

ரிஷபம்:அனைவரையும் நேர்மையால் கவர்ந்து இழுப்பவர்களே! பல்வேறு திருப்பங்களுடன் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறப்போகிறீர்கள். சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். பொருளாதார வளம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் கிடைக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். தடைபட்டு வந்த திருமண சுப நிகழ்ச்சி கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள்.

குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்தி ருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். படித்து, வேலை தேடித் தவிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடந்த காலத்தை விட சிறப்பான காலகட்டமாக இந்த மாதம் அமையும்.

பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்லுங்கள். லக்ஷ்மியின் அருளால் தங்கு தடையின்றி காரியங்கள் நடந்தேறும்.

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18 ஆகிய நாட்களில் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள்.

அதிர்ஷ்ட நாட்கள்: 3, 4..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:27 am

மிதுனம்

எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பவர்களே! அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பல துறைகளில் முன்னேற்றம் அடைவீர்கள். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்க ஐந்தில் இருக்கும் சனி உதவுவார். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். சுப நிகழ்ச்சிகளில் தடை ஏற்பட்டாலும் குரு 12ம் ஸ்தானத்தில் உலவுவதால் தெய்வ நம்பிக்கையால் அனைத்தும் சுபமாகும். உத்யோகஸ்தர்கள் தொடர்ந்து பொறுப்புடன் உழைத்தால் செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும்.

உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பார்கள். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்டதூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படலாம். கலைஞர்கள் சீரான திசையில் செல்வார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். ஆனாலும், அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் கடந்த காலத்தைவிட அதிகமாகவே இருக்கும்.

பரிகாரம்: சக்தியை வழிபாடு செய்யுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தைச் சொல்லுதல் நலம் பயக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20 ஆகிய தேதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.

அதிர்ஷ்ட நாட்கள்: 5, 6..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:27 am

கடகம்

இயல்பிலேயே தலைமை தாங்கும் பண்புடையவர்களே! உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். அரசு காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள், ரசாயனத் துறையினர், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள். நிலம், வீடு, மனை, வாகன சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினரின் எண்ணங்கள் ஈடேறும். சமுதாய நலப் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவியும்.

வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள். பிள்ளைகளால் சந்தோஷமுண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும். தெற்கு, தென் கிழக்கு திசைகள் அனுகூலம் தரும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் சசிசேகராய நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்வதால் நினைத்த காரியங்கள் இனிதே நடந்தேறும்.

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22 ஆகிய தேதிகளில் இரவுப் பயணத்தின்போது உடைமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நாட்கள்: 7, 8..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:28 am

சிம்மம்

எடுத்த காரியத்தில் உறுதியாக இருப்பவர்களே! தைரியமாக உங்கள் வேலைகளை செய்வீர்கள். உஷ்ண சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம்; கவனம் தேவை. தம்பதியரிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழி உறவினர்களுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுங்கள். முயற்சிகளில் தடைகள் வந்தாலும் குரு பகவானின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும், வீண் அலைச்சலும் ஏற்படலாம்.

தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறுசிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களின் ஆலோசனையின்பேரில் செய்வீர்கள். பிரச்னைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவக் கண்மணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை.

பரிகாரம்: சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது நன்மையைத் தரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் சந்திரசேகர ருத்ராய நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்வதால் நன்மைகள் நடந்தேறும்.

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25 ஆகிய தேதிகளில் வீண் வாக்குவாதத்தை தவிர்த்தல் நல்லது.

அதிர்ஷ்ட நாட்கள்: 9, 10, 11..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:28 am

கன்னி

உழைப்பின் மேன்மையை உலகிற்கு சொல்பவர்களே! பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் உன்னத நிலையை அடைவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றமும், சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரயமும் காரியத் தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல் லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வெகு எளிதாக அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும், அவற்றைத் திறமையாக சமாளிப்பதோடு, சில அனுகூலமான நிகழ்வுகளும் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிக்கலாம்.

உத்யோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்யேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும், பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர், துர்க்கையை வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் நமோ வெங்கடேசாய நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்வதால் ஸ்ரீவெங்கடேசரின் அருள் கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27 ஆகிய தேதிகளில் வாகனங்களை மெதுவாக இயக்கவும்.

அதிர்ஷ்ட நாட்கள்: 12, 13..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:29 am

துலாம்

யாரையும் எளிதில் நம்பிவிடாமல் ஆராய்ந்து பேசுபவர்களே! வாழ்க்கை வளம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் கூடும். வேலை செய்யும் இடத்தில் வரும் பிரச்னைகளை உடன் வேலை செய்வோர் ஆதரவால் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் அன்பு நீடிக்கும். உறவினர் வகையிலும் கூட மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம்.

சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மைகள் பல நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்; கூடவே அலைச்சலும் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம்.

பரிகாரம்: நவகிரக ராகு, சனிக்கு விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் நவக்ரஹதேவதாப்யோ நமஹ’ என்ற நவகிரக மந்திரத்தைச் சொல்வதால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29 ஆகிய நாட்களில் வாகனத்தில் எரிபொருள் இருக்கிறதா, ஏதேனும் அலுவலக வேலையை செய்வதற்கு மறந்து விட்டோமா என்று யோசிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நாட்கள்: 15, 16..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:29 am

விருச்சிகம்

எதிலும் நேர்படப் பேசுபவர்களே! வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். பல்வேறு முன்னேற்றங்களை பெறலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு அள்ளித் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்னைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்; அவர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாதக் கடைசியில் புதிய சொத்துகள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால், அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்யோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு உதவுங்கள்; கோபத்தை விலக்குங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் வடிவேலவா போற்றி போற்றி’ என்ற மந்திரம் நலம் பயக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 30, 31 ஆகிய தேதிகளில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வேலைகளை தள்ளிப்போடாதீர்கள்.

அதிர்ஷ்ட நாட்கள்: 17, 18, 19..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:31 am

தனுசு

எதிலும் தெய்வ நம்பிக்கையுடன் போராடுபவர்களே! குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதேபோல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும், வருமானத்தில் எந்தக் குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும், உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழும் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: திருமுருகனை வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ’ என்ற குரு மந்திரத்தைச் சொல்ல சொல்ல குருமார்களின் அருளால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7.

அதிர்ஷ்ட நாட்கள்: 20, 21 ஆகிய தேதிகளில் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 10:31 am

மகரம்

அடுத்தவரின் உணர்வுகளை உள்வாங்கி யோசிப்பவர்களே! பலவிதமான பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்தவரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு உத்யோகம், தொழில், வியாபார விஷயமாக ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப் புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை கூடும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

குடும்பத்தில் தம்பதியரிடையே இருந்து வந்த பிரச்னைகள் சுமுகமாகும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும்போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்யோன்யமாக இருப்பர். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்: அய்யனார் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீபிரம்ம விஷ்ணு ஸரஸ்வத்யை நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்வதால் அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் குவியும்.

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10 ஆகிய தேதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.

அதிர்ஷ்ட நாட்கள்: 22, 23, 24..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக