புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_m10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10 
21 Posts - 66%
heezulia
பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_m10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_m10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10 
63 Posts - 64%
heezulia
பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_m10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_m10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_m10பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 9:09 am

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை

Dr. V. ஆவுடேஸ்வரி


மனிதனின் அகமனம் ஆற்றல்மிக்கது. அகமன ஆற்றல் பெற்றவர்களே, அகமன ஆற்றலைப் பயன்படுத்துவோரே சாதனையாளர்கள். உள்மன ஆற்றல் கட்டுப்பாடின்றி திசைமாறிச் செல்லுமானால் சுய அழிவே. சீனாவின் துயரம் என்றழைக்கப்பட்ட மஞ்சள்நதி ஒவ்வோராண்டும் பேரழிவை ஏற்படுத்தியது என்பது பழைய சரித்திரம். அதனை ஒழுங்குபடுத்திப் பாயச் செய்வதால் சீனவளத்திற்கு பேருதவியாக மாறியிருப்பது இன்றைய புதிய சரித்திரம். மனிதர்களின் மன ஆற்றல் பயன்பாடுகளின் வரலாறு மஞ்சள் நதி வரலாறு போன்றதே.

உலக அதிசயங்களை எல்லாம் உருவாக்கும் திறன் கொண்ட கரங்களில், உரிமைகளுக்காக உயரக்கூடிய கரங்களில் உள்ளத்தைப் பண்படுத்தும் ஏடுகளை, எழுதுகோலை ஏந்தவேண்டிய கரங்களில் மதுக்கோப்பைகளும், புகை போதைகளும் குடியிருந்தால் மாபெரும் மனித வீழ்ச்சியல்லவா?

“ஆணும் பெண்ணும் சமமெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்றான் பாரதி. சமூகப் பொருளாதார அடிமைத்தனங்களிலிருந்து பெண்ணினம் விடுதலை பெற வேண்டும் என்பதே பாரதியின் கனவு. இன்றைய கல்வியும், சூழலும் மனித விடுதலைக்குப் பாதை காட்டாமல், போட்டி, பொறாமை, தீய பழக்க வழக்கங்கள் எனும் பள்ளத்தாக்கிலே பலரையும் தள்ளி விடுகின்றன. புகைபிடிக்கும் பெண்களும், மது அருந்தும் மங்கையரும், பான்பராக் சுவைக்கும் பாவையரும் ஆண்களுக்குச் சமமானவர்களா? இல்லை பரிதாபத்திற்குரியவர்கள். ஆணின் கேடான குணங்களை நவீனப் பெண் பின்பற்றுவதா சமத்துவம்?

ஆண்களிடம் பெருகியுள்ள பழக்க அடிமைத்தனங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; ஓராயிரம்! உணவுகளை ஓரங்கட்டிவிட்டு உடலைக் கெடுக்கும் தின்பண்டங்களிலேயே நாட்களை ஓட்டும் சிலர், எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் புகைபிடிக்காமலிருக்க முடியாது என்று செயின் ஸ்மோக்கர்ஸ் ஆகிவிட்ட சிலர், ‘கோப்பையிலே என் குடியிருப்பு’ என மதுப் பைத்தியங்களாய் மாறிப்போன சிலர், பெண் மோகம் தணியாமல், ஒழுக்கம், வரம்பு பற்றி உணராமல் காமசுகத்திலேயே திளைக்கும் சிலர், உண்பது ஒன்றே உயர்ந்த கடமை என்று நேரம் காலம் பார்க்காமல் சாப்பாட்டு ராமன்களாய் மாறிவிட்ட சிலர், இணையதளம் எனும் சமுத்திரத்திற்குள் இறங்கி முத்துக்குளிப்பதற்கு பதில் குப்பைகளையும் கூழாங்கற்களையும் பார்த்து மோகித்து பார்வை கெட்டு பாறைகளில் மோதி ‘E-addiction’ எனும் வலையில் சிக்கித் திணறும் சிலர், இப்படி விதவிதமாய் வாழ்க்கையைத் தொலைப் போர் பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது.
பழக்க அடிமைத்தனங்களில் வாழ்வோர் குடும்பத்திலும் சமூகத்திலும் இரண்டற கலந்து வாழ முடியாத தனிமைத் தீவுகளாகின்றனர். பெருகிவரும் புகை, மாது, போதைப் பழக்கங்களை இந்தியா போன்ற பாரம்பரிய பண்பாடுகள் நிறைந்த நாட்டில் முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. நமது உணவுப் பண்பாடுகளும் மேற்கத்திய மோகத்தால் சீரழிந்து விட்டன. கேடான பழக்கங்களில் வீழ்ந்து அடிமையாகும் வாய்ப்புள்ள உடல், மன இயல்புகள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் உருவாகிக் கொண்டிருக்கிறது. பழக்க அடிமைத்தனம் என்பது தனிமனித வாழ்க்கையை கடுமையான, துயரமான பயணமாக மாற்றிவிடும்.

ஒருவர் தன்னிடம் பழக்க அடிமைத்தனம் உள்ளதா? என்று எளிதில் அறியலாம். தவறான பழக்கம் என்று தெரிந்தும் அதே சிந்தனை நீடிக்கிறதா? சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சனைகள், கஷ்டங்கள் வந்தால்கூட தற்காலிகமான விடுபட விரும்பி தவறான பழக்கத்திற்குச் செல்கிறீர்களா? சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி நடுங்கி செயற்கை உத்வேகம் கிடைப்பதாகக் கருதி தவறான பழக்கத்தையே பெரிதும் சார்ந்துள்ளீர்களா? செய்வது தவறு என்று நன்கு உணர்ந்திருந்த போதிலும் மீண்டும் மீண்டும் செய்கிறீர்களா? முயற்சித்தாலும் மீள முடியவில்லையா? இக்கேள்விகளில் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு ‘ஆம்’ எனப் பதிலளித்தால் நீங்கள் ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளீர்கள் என்றே பொருள்.

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து மீள டாக்டர் எட்வர்டு கண்டறிந்த இயற்கை முறை மனநலச் சிகிச்சையான மலர் மருத்துவம் பேருதவி புரிகிறது. மண் தின்னும் குழந்தை முதல் மது அடிமைத்தனங்களிலிருந்தும் மலர் மருந்துகள் மூலம் மீள முடியும். மலர் மருத்துவம் மனித குலத்திற்கு மருத்துவ உலகிற்குக் கிடைத்த மாபெரும் அற்புதக் கொடை. பொதுமக்கள் தாமாகவே மலர் மருந்துகளைப் பயன்படுத்தும் காலம் மலர்ந்தால் எண்ணற்ற வீழ்ச்சிகளிலிருந்து குடும்பங்கள் மீளும். தனிமனித முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களாய் நிற்பவை நொறுங்கும்.

பழக்க அடிமைத்தனங்களிலிருந்து மீள்வதற்காக என்னிடம் துயரத்தோடு வந்து சிகிச்சைக்குப் பின் புதுவாழ்க்கை வாழக்கூடிய ஆண்களும், பெண்களும் மலர் மருந்துகளின் சீரிய ஆற்றலுக்கு சிறந்த உதாரணங்கள். பழக்க அடிமைத்தனங்களிலிருந்து குழந்தைகளை, பருவ வயதினரை, இளையோரை, தம்பதியரை, முதியோரை மலர் மருந்துச் சிகிச்சை மூலம் மாற்றுவதற்கு அவர்களின் குணநலன் பற்றிய ஆய்வும், அடிமைப்பட்டுள்ள பழக்கத்தின் தன்மைகளும், இதர பின்னணிச் சூழல்களும் அறியப்பட வேண்டும். ஒருவருக்கு ஒரு மருந்தோ ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளின் கலவையோ, சில கலவைகளே, மருந்தோடு ஆற்றுப்படுத்தலோ மலர் மருந்தோடு பக்க விளைவு இல்லாத ஹோமியோபதி மருந்தோ, அகுபங்சர் சிகிச்சையோ, இயற்கை மூலிகை மருந்தோ தேவைப்படலாம். அனுபவமும் திறமையும் நிறைந்த மலர் மருத்துவர் இதனை வரையறுக்க முடியும். இத்தகைய சிகிச்சைகளுக்குப் பயன்படும் முக்கியமான சில மலர் மருந்துகளையும் ஹோமியோபதி மருந்துகளையும் வாசகர்கள் அறிந்துகொள்ள வழங்குகிறேன்.


வால்நட் (Walnut)

- பீடி, சிகரெட் பழக்கம், மதுபழக்கம், சூதாட்டம் மற்றும் பல தீய பழக்கங்களிலிருந்தும் விடுதலை பெற உதவும். விரல் சப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் மணமாகியும் கண்ட பெண்கள் பின்னால் சுற்றுதல் எல்லாவற்றுக்கும் பலனளிக்கும்.


ஸ்கிளராந்தஸ் (Scleranthus)

- தவறான பழக்கத்தைக் கைவிடுவதற்கு ஒரு நாளைக் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த நாளிலும் கைவிட மாட்டார்கள். உடனடியாக தீய பழக்கத்தை உதறித் தள்ளும் உறுதியான மனநிலை இல்லாதவர்க்கு இது நல்ல நிவாரணி.


சிக்கரி (Chicory)

- திருடும் சுபாவத்திலிருந்து குழந்தைகளைத் திருத்த உதவும்.


செர்ரிப்பளம் (Cherry plum)

- எவ்வளவு முயற்சித்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுவோருக்கு இம்மருந்து நன்கு பயன்படும். யாராவது குடிப்பதைப் பார்த்தால், அழைத்தால் உடனே குடிக்க வேண்டும் என்ற நிலைக்கு இது நல்ல மருந்து. எதற்கெடுத்தாலும், கோபமும் வெறியுமாய் செயல்படுவோருக்கு, பொருட்களை உடைப்போருக்கு சிறப்பாக உதவும் இம்மருந்து.


கிளமேடிஸ் (Clematis)

- எப்போதும் வீடியோ விளையாட்டு, சினிமா, டி.வி., கிரிக்கெட் என கற்பனை உலகிலேயே காலம் கழிப்பவர்களை மீட்க உதவும் மருந்து.


சிக்கரி & வால்நட்

- நன்கு வளர்ச்சியுற்ற பின்னர் கூட உணவுகளை விரும்பாமல் தாய்ப்பால் மட்டுமே குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை மாற்றுவதற்கு இம்மருந்து உறுதியாக உதவும்.


கிராப் ஆப்பிள் (Crab apple)

- அடிக்கடி, தேவையின்றி முகம், கை கால்களை கழுவும் பழக்கத்திலிருந்து மீட்க உதவும் மருந்து.


ஹீதர் (Heather)

- மற்றவர் யாரையும் பேசவிடாமல் தான் மட்டுமே வளவளவென்று பேசும் குணம் உள்ளவர்க்கு இது பலனளிக்கும்.


சிக்கரி, செர்ரிப்ளம், வால்நட்

- சுய இன்பப் பழக்க அடிமைத்தனம், சுய காதல், ஓரினக் காதல் - இதற்கு சிறப்பாக பயன்தரும்.

ஹால்லி (Holly)

- எப்போதும் ஆரோக்கியமற்ற போட்டி பொறாமை மனநிலை இருக்குமானால் அன்பை மலரச்செய்யும் அரிய மலர் மருந்து. கெட்ட வார்த்தைகளை சரளமாகப் பேசித் திட்டும் பழக்கத்திற்கு இது சரியான மருந்து.

செராட்ரோ (Cerato)

- எதற்கும் எல்லாவற்றுக்கும் மற்றவர்களின் ஆலோசனைகளை மட்டுமே நம்பியிருக்கும் பழக்கத்தை மாற்ற இது உதவும்.

வால்நட், செர்ரிப்ளம், வொய்ட் செஸ்ட் நட்

- நீலப்படங்கள், இணைய தளங்களில் பாலியல் வக்கிர காட்சிகள், ஆபாச புத்தகங்கள் போன்றவைகளில் மூழ்கிக் கிடப்போரை மீட்க உதவும் அதிசய மருந்துகள். மதுப் பழக்கத்தை மீட்க இம்மருந்துகளும், நக்ஸ்வாமிகா, சல்பியூரிக் ஆசிட் போன்ற ஹோமியோ மருந்துகளும் சிறப்பான பயனளிக்கும்.

தீய பழக்கங்களில் அடிமைப்பட்டு ஆயுட்கைதிகளாய் கிடப்பவர்களை ‘மனிதர்களாக’ மாற்ற மலர் மருந்துகள் காட்டும் பாதை எளியது! இனியது! நம்பகமானது!

நன்றி Dr. V. ஆவுடேஸ்வரி

http://www.keetru.com/altmedtamil/apr09/avudeshwari.php

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக