புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_m10ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:37 pm

வாழ்க்கையை எப்படி மனத்தளவில் எதிர்கொள்வது? இது ஒரு சிக்கலான கேள்வி. உண்மையில் அவரவர் வாழ்க்கையை அவரவர் மனத்தளவில் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் ஞானமே! அந்த ஞானத்தைப் பெற்றுவிட்டால், நாம் எல்லோரும் ஆனந்தமாக வாழலாம்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஏன் வெவ்வேறு மாதிரி அமைகிறது என்ற கேள்விக்கு அறிவியலால் எந்த பதிலும் தர இயலவில்லை. ஆனால், 'கர்மவினையே காரணம்’ என்று ஒரு பதில் தருகிறது ஆன்மிகம்.

விதி என்பதை ஆங்கிலத்தில் ஃபேட் (fate) என்கிறோம். உண்மையில், விதி என்பது ஃபேட் (fate) அல்ல; அது ரூல் (rule) என்றே கொள்ளப்படவேண்டும். ஆமாம், யாராலும் மாற்ற இயலாத சட்டம் அது.

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கிறது என்கிறது பௌதிகம் சார்ந்த நியூட்டனின் மூன்றாம் விதி. இந்த விதி மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். நாம் இப்பிறவியிலோ முற்பிறவியிலோ செய்த ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை கட்டாயம் உருவாகும். அதையே கர்மவினை என்கிறோம். இப்படியோர் ஆன்மிக விதி இயங்குகிறது என்பதை உணர்ந்துகொண்டால், பல தீர்க்கமுடியாத பிரச்னைகள் குறித்து நம் மனம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அமைதியுறும்.

ஒருவருக்கு ஆட்டிஸம் குறையுடன் பிள்ளை பிறக்கிறது. என்ன செய்வது இப்போது? வாழ்நாள் முழுதும் அதைப் பற்றிப் புலம்பிக்கொண்டே வாழ்வதா? அல்லது, சவாலாக ஏற்று, அந்தக் குழந்தையை இயன்றவரை சிறப்பாக வளர்ப்பதா?

நண்பர் ஒருவர் அத்தகைய மகனைப் பெற்றவர். நண்பரின் மனைவியிடம் அந்த மகனைப் பற்றிக் கனிவோடு விசாரித்தபோது, அவர் சொன்னார்... ''சூது வாது அறியாதவன் என் மகன். அவனை 20 வருடங்களாக வளர்த்து வருகிறேன். அவன்தான் என் கடவுள். சொர்க்கத்தைவிட்டு, கடவுள் என் வீட்டில் வந்து பிறந்திருப்பதாகவே உணர்கிறேன். அவனைக் குளிப்பாட்டும்போது, கடவுளுக்கு அபிஷேகம் செய்வதாக நினைத்துக்கொள்கிறேன். சோறூட்டும்போது இறைவனுக்கு நிவேதனம் செய்வதாக உணர்கிறேன். என் தெய்வம் சாப்பிடுவதாக பாவனை காட்டாது; நிஜமாகவே சாப்பிடும்!''

சொல்லிவிட்டு, நெகிழ்ச்சியுடன் விழிகளைத் துடைத்துக் கொண்டார் அவர். மகனை இறுக அணைத்துக் கொண்டார். தன் குறையை நிறையாக்கிக்கொண்டு, வாழ்க்கையைப் பிடிப்புள்ளதாக, அர்த்தமுள்ளதாக அவர் மாற்றிக்கொண்டுவிட்டார்.

''ஒருவேளை, போன பிறவியில் இவனது உழைப்பை எந்த விலையும் கொடுக்காமல் நான் வாங்கிக்கொண்டேனோ என்னவோ? அதற்காகத்தான் இந்தப் பிறவியில் இவனுக்குச் சேவை செய்து அந்தக் கடனைத் தீர்க்கிறேனோ, யாருக்குத் தெரியும்? ஆனால், இந்தப் பிறவியில் இவன் இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை!'' என்று அந்த அம்மாள் சொன்னது, ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

96 வயதுவரை வாழ்ந்த தன் கணவரைப் பரிவோடு  பராமரித்து வந்தார் 85 வயது மூதாட்டி. கணவர் காலமானபின்பு அவர் சொன்னார்... ''கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் அவர் குழந்தை போல் மாறிவிட்டார். பல் அத்தனையும் போய்விட்டது. தலைமுடி உதிர்ந்துவிட்டது. குளிப்பாட்டுவது முதல் உணவூட்டுவது வரை எல்லாம் நான்தான் என் கணவருக்குச் செய்யவேண்டியிருந்தது. இதனால் என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்ததாக உணர்ந்தேன். அவர் போனபின்பு அந்தப் பணிவிடைகளுக்கு இனி வாய்ப்பில்லை. இப்போது என் வாழ்வு வெறுமையானதாக உணர்கிறேன். என் நேரத்தை என்ன செய்வதென்று தெரியாமல், ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், அவருக்குப் பணிவிடை செய்த காலங்களை மனத்தில் அசைபோட்டுக்கொண்டும் எஞ்சிய வாழ்வைக் கழித்துவருகிறேன்!''

ஒருவருக்கு மனநிலை சரியில்லாத மனைவி. கணவர் சற்றும் அலுப்படையவில்லை. குளிப்பாட்டிவிடுவது, கூந்தலைப் பின்னி விடுவது, உணவூட்டிவிடுவது என ஒரு குழந்தையைப்போல் இப்போதும் அவரைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறார்.

'வேறு பெண் மனைவியாகக் கிடைத்திருந்தால் தேவலாம் என்று நினைத்ததுண்டா?’ என்று கேட்டதற்கு, அவர் மிக நெகிழ்வோடு சொன்னார்...

''என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி இது? இவள்தானே என் மனைவி? பிறகு, வேறு பெண் என்ற சிந்தனை எதற்காக? வேறு ஒரு பெண்மணி என் அம்மாவாக இருந்திருந்தால் தேவலாம் என்று நினைப்போமா நாம்? தானே அமைவதுதானே அம்மா, சகோதரி, மகள் என்கிற உறவெல்லாம்? அதுபோல், நான் தேர்வு செய்திருந்தாலும், இவள் என் மனைவியாக எனக்கு அருளப்பட்டவள்.

இவளுக்குச் செய்யும் பணிவிடைகளை நான் சேவையாகக் கருதவில்லை; இது என் கடமை. என்னையே சார்ந்திருக்கும் இவள் சில நேரங்களில் என் கையை இறுகப் பற்றிக்கொண்டு தன் அன்பைத் தெரிவிப்பாள். அந்த நேரங்களில் என் கண்களில் நீர் வழியும். இவ்வளவு அன்பை எந்த மனைவியும் தன் கணவனிடம் செலுத்தியிருக்க முடியாது என்று தோன்றும். ஒரு மனைவிக்கு இத்தகைய பணிவிடைகளைச் செய்யும் வாய்ப்பு பெற்ற என்னைப் போன்ற பாக்கியசாலி உலகில் வேறு யார் இருக்கமுடியும்?''

இப்போது புரிகிறதா? அவரவர் வாழ்க்கையை அவரவர் மனத்தளவில் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மையான ஞானம். அந்த ஞானத்தை அடைய முயல்வதே ஆனந்தத்தின் அடிப்படை. புத்தர், வள்ளலார் போன்றோரெல்லாம் மறைந்துவிடவில்லை. இப்படி நம்மிடையே வேறுவேறு வடிவங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

திருவண்ணாமலை, ஆரணி அருகே அடையபலம் என்ற கிராமத்தைச் சார்ந்த மகான், அப்பய்ய தீட்சிதர். அவருக்கு ஒருநாள் ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. தான் சுயநினைவில்லாமல் ஆகிவிட்டாலும், தெய்வத்தையே நினைத்துக்கொண்டிருக்க முடியுமா என்று பரிசோதிக்க ஆசைப்பட்டார்.

அதன் பொருட்டு, ஊமத்தங்காயைத் தின்று, சிறிது காலம் தன்னைப் பைத்தியமாகவே ஆக்கிக் கொண்டு விட்டார். அந்த நிலையிலும் அவர் சிவனை மறக்கவில்லை. அந்தக் காலத்தில் அவர் சிவனைக் குறித்து எழுதிய சுலோகங்கள்தான் 'உன்மத்த பஞ்சசதி’ என்று போற்றப்படுகின்றன.

அவருக்கு அடிக்கடி தாள முடியாத வயிற்றுவலி வருவது உண்டு. அது அவர் முன்வினைப் பயன். அவ்விதம் வயிற்றுவலி வந்த நேரத்தில், அவரைச் சந்திக்க வடக்கிலிருந்து வந்தார் ஒரு மகான். ஆன்மிக சந்தேகங்கள் சிலவற்றை அப்பய்ய தீட்சிதரிடம் கேட்டுத் தெளிவுபெறுவதே அவர் நோக்கம். விரைவில் ஸித்தி அடையும் முடிவில் இருந்தார் அவர்.

வயிற்றுவலி காரணமாக மகானைச் சந்திக்க மறுத்தால், அவர் வருத்தப்படுவாரே என்று யோசித்தார் தீட்சிதர். தன் சீடர்களிடம் மூன்று பலகைகளைக் கொண்டுவரச் சொன்னார்.

ஒன்றில், மகானை அமரச் சொல்லி விட்டு, இன்னொன்றில் தான் உட்கார்ந்து கொண்டார். பின்பு, அருகில் இருந்த மூன்றாவது பலகையில் கை வைத்தார் தீட்சிதர். அவரின் வயிற்றுவலியைப் பலகை வாங்கிக்கொண்டது. எனவே, அது வலியால் நெளிந்து துடிக்கத் தொடங்கியது.

துடிக்கும் பலகையை ஓரமாக நகர்த்தி வைத்த தீட்சிதர், மகானின் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அதன்பின்பு, வயிற்றுவலியைத் திரும்பவும் வாங்கிக்கொள்ளும் உத்தேசத்தில் பலகையில் கைவைத்தார்.

சட்டென்று அவரின் கையைப் பிடித்துத் தடுத்தார் மகான். ''உங்கள் வயிற்றுவலியைப் பலகையில் எப்படி இறக்கிவைப்பது என்றுதான் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! பிறகென்ன, வயிற்றுவலி அதிலேயே இருக் கட்டுமே! நீங்கள் நிம்மதியாக இருங்களேன்!'' என்று வேண்டினார். அப்பய்ய தீட்சிதர் கடகடவென்று நகைத்துவிட்டுச் சொன்னார்...

''என் வயிற்றுவலி என் கர்மவினையால் எனக்கு வந்தது. அதை அனுபவித்துத்தான் கழிக்கவேண்டும். பலகையில் இறக்கிவைத்த இந்தக் கொஞ்ச நேர வயிற்றுவலியை நான் இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ அனுபவித்தே ஆகவேண்டும். அதுதான் விதி.

ஆனால், இதை அனுபவிப்பதற்காக நான் இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமா? இந்தப் பிறவியிலேயே அனுபவித்து என் வினையைக் கழித்துவிட்டுப் போகிறேனே!''

ராமகிருஷ்ண பரமஹம் சருக்கும், ரமண மகரிஷிக்கும், யோகி ராம்சுரத்குமாருக்கும் புற்றுநோய் வருவானேன்?

ஒன்று, அடியவர்களின் பாவங்களைத் தாங்கள் ஏற்றதால், அது வந்திருக்க வேண்டும்; அல்லது, முன்செய்த கர்மவினையாக அது இருக்க வேண்டும். முற்றும் துறந்த முனிவர்களையே கர்ம வினை பீடிக்குமானால், சாதாரண மனிதர்களை அது வருத்தாதா? கண்டிப் பாக வருத்துமல்லவா? ஆனால், அந்த வருத்தத்திலிருந்து மீள்வதற்கு, அவரவர் வாழ்க்கையை அவரவர் எப்படி எதிர் கொள்வது என்பதைக் கற்க வேண்டும்.

நம்மால் முடியக்கூடிய விஷயங்களில் எல்லாம், நாம் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும். மனித முயற்சியை இறை சக்தி எதிர்பார்க்கிறது. மனிதர்கள் சும்மா இருக்கவேண்டும் என்பது இறை சக்தியின் திட்டமானால், அது மனிதர்களுக்குக் கை கால்களைக் கொடுத்திருக்காது.

ஆனால், நம்மால் முடியாத செயல்கள் என்றும் சில உண்டு. நெருங்கின உறவினரின் மரணம், மருத்துவம் பார்த்தும் தீராத நோய் போன்ற துயரங்கள் அப்படிப்பட்டவை. அவற்றை முன்வினைப் பயன் என்றறிந்து, அமைதியாக எதிர்கொள்ளச் சொல்கிறது நம் ஆன்மிகம்.

வற்றாத அன்பு, தொண்டு மனப்பான்மை இவற்றின் மூலம் முன்வினைப் பயன்களின் துயரைக் குறைக்க முடியும். பக்தியினாலே இந்தப் பாரினில் எய்தும் மேன்மைகளைப் பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி. பக்தி ஒன்றுதான், நம்மால் தீர்க்கமுடியாத கஷ்டங்களை நாம் தாங்கிக்கொள்ளும் வலிமையைத் தரும்.

துயரங்களைப் புறந்தள்ளி, பிரதிபலன் கருதாத சேவையால் நமது வாழ்க்கையை ஆனந்தமாக மாற்றிக்கொள்வோம். நம்மால் தீர்க்கமுடிந்த விஷயங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கு அதிகபட்ச முயற்சி எடுத்துக் கொள்வோம்.

தீர்க்கமுடியாத சிக்கல்களை முன்வினைப் பயன் என்றறிந்து, அமைதியாக எதிர்கொண்டு ஆறுதல்  அடைவோம். இதுவே வாழும் வழி! 

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக