புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_m10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10 
11 Posts - 50%
heezulia
மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_m10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_m10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_m10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_m10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_m10மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 11:56 am

மலேசியா - பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! P14b

விளக்கின் அடியில் அவ்வளவாக வெளிச்சம் இருக்காது. அந்த விளக்கில் இருந்து சற்று தொலைவில்தான் அதன் ஒளி வெள்ளம் பாய்ந்து பிரகாசிக்கும். சாதாரண விளக்குக்கே இப்படியென்றால், ஞான விளக்குக்கு..?

உலகுக்கே 'கீதை’ என்னும் ஞான தீபத்தை ஏற்றி உயரே தூக்கிப்பிடித்த கீதாசார்யனுக்கு, கீதை தோன்றிய நம் நாட்டிலோ அல்லது உலகிலேயே வேறெங்குமோ இல்லாத அளவுக்கு, பிரமாண்டமானதொரு கீதோபதேச சிலையை மலேசியாவில் நிறுவி இருக்கிறார்கள். மலேசியா என்றதுமே, ஆகாயம் அளாவ நிற்கும் பத்துமலை முருகன்தான் நம் நினைவுக்கு வருவார். இப்போது அவர் அருகிலேயே, அவர் மாமனான கீதோபதேச கண்ணனும், 'அனுமன் முற்றம்’ என்ற பகுதியில் இடம்பெற்றிருக்கிறார்.

நுழைவாயிலிலேயே, விஸ்வரூபம் எடுத்த நிலையில்- ஆஞ்ச நேயர் தன் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் சீதாராமரை நமக்குக் காண்பிக்கிறார். அவருக்குப் பின்னால், பெரும் குகை ஒன்று இருக்கிறது. அதன் வாயிலின் மேற்புறத்தில், 'சுயம்பு லிங்கக் குகை’ என எழுதப்பட்டிருக்கிறது. குகையின் உட்புறமாக வலது கைப் புறத்தில், ஏறத்தாழ நூறு அடிக்கு மேல் உள்ள உயரமான இடத்தில் ஒரு சுயம்புலிங்கம் (தானாகவே உருவான சிவலிங்கம்) உருவாகி உள்ளது. அது தவிர, குகையின் உள்ளே ராமாயணக் காட்சிகள்... புத்திர காமேஷ்டி யாகம் முதல் ஸ்ரீசீதாராமப் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்துக் காட்சிகளும் மிக அற்புதமான வண்ணச் சிலை களாக உள்ளன. ஒவ்வொன்றும் நிகழ்காலத்தில் நேரில் காண் பது போன்று அவ்வளவு தத்ரூபமாகத் திகழ்கின்றன.

குறிப்பாக, கும்பகர்ணன் படுத்திருக்கும் தோற்றத்தை பிரமாண்டமான முறையில் அமைத்திருக்கிறார்கள். தூங்குகின்ற கும்பகர்ணனை வீரர்கள் பலர் எழுப்பும் காட்சி, அப்படியே கம்பரின் பாடல்களுக்கு விளக்க உரை போல கண்களுக்கு எதிரில் காணக் கிடைக்கிறது.

ராமாயணக் காட்சிகள் நிறைந்த இந்தக் குகைக்கும், அனுமன் முற்றத்தின் தொடக்கத்திலேயே இருக்கும் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கும் நடுவேதான்... உலகிலேயே பிரமாண்டமான 'கீதோபதேச சிலை’ நிறுவப்பட்டுள்ளது.

சீறிப் பாய்ந்து செல்லத் தயாராக இருக்கும் குதிரைகள், அவற்றின் கடிவாளங்களைக் கையில் பிடித்தபடி தேரில் நின்ற நிலையில் கீதோபதேசம் செய்யும் கண்ணன், அவர் எதிரில் கைகளைக் குவித்தபடி பணிவோடு கீதோபதேசத்தைக் கருத்தோடு கேட்கும் அர்ஜுனன்..!

கண்ணனின் பின்னால் தேரின் பின்பகுதியும், பின் சக்கரங்களும் அமைந்திருக்க, (தொடக்கத் தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயரைவிட உயரமான) வண்ணமிகு நாராயணர் சிலை, நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பின்புறத்தில் இருக்கும் குகையின் மேற்பகுதி முகடுகளிலும், பத்து மலை முகடுகளிலும் மேகங்கள் ஊர்ந்து போக, மலைகளில் இருந்து சிற்றருவிகள் விழ, அவற்றில் இருந்து பன்னீர்த் துளிகளைப் போலத் தண்ணீர்த் துளிகள் தெளிக்க... தேரின் குதிரைகளின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் நீரூற்றுகளில் இருந்தும் தண்ணீர்த் துளிகள் தெளிக்க... இப்படிப்பட்ட குளுமையான சூழலின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் கீதோபதேச சிலை, இரவில் வண்ணமயமான விளக்குகளின் ஒளியில் மிகவும் ரம்மியமாக மனத்தைக் கவர்கிறது.

ராமாயணத்தில் தூது சென்றவ ரின் (ஆஞ்சநேயர்) அருகே, மகா பாரதத்தில் தூது சென்றவரின் (கண்ணனின்) சிலையைப் பொருத்த மாக அமைத்தவர்கள், அதற்கு வேறொரு காரணமும் கூறினார்கள்.

'கண்ணன் அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் செய்தபோது, அந்தத் தேரின் கொடியில் இருந்தபடி அதைக் கேட்டவர் ஆஞ்சநேயர். அதனால்தான் அவர் அருகிலேயே இந்தக் கீதோபதேசச் சிலையை நிர்மாணித்தோம்’ என்றார்கள்.

கண்ணன் உபதேசம் செய்யும் அந்தப் பிரமாண்டமான காட்சி யைப் பார்ப்பதற்காக, சூரியபகவா னும் தன் தேரை திசை திருப்பி ஓட்டிக்கொண்டு வந்துவிட்டார். ஆம்! சூரியன் திசை திரும்பிப் பயணத்தைத் தொடங்கும் உத்தராயன புண்ணிய காலமான, 'தை’ மாத முதல் தேதியன்று...

கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்குக் கேட்டபடி வாழ்வு தருகிறான் - என்று சீர்காழியின் பாடலும்,

வயலைத்தேடி பொழியும் மழைபோல் வருகின்றான் கண்ணன் - என்று டி.எம்.எஸ். பாடலும் மலைகளில் எல்லாம் எதிரொலிக்க, அந்தப் பிரமாண்டமான 'கீதோபதேச சிலை’ திறக்கப்பட்டது.

மலேசியாவில் உயர்ந்த விருதுகளைப் பெற்ற டான் ஸ்ரீடத்தோ ஆர்.நடராஜர் இந்தச் சிலையைத் திறந்து வைத்துப் பேசும்போது, சிலையைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டார்.

''ஏறத்தாழ மூன்று ஆண்டுக் காலமாக உருவானது இந்தச் சிலை. 43 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட இந்தச் சிலையில் 13 குதிரைகள் உள்ளன. கீதை சொல்லும் கண்ணனின் கைப்பிடியில் கடிவாளங்களோடு அந்த 13 குதிரைகளையும் அமைத்தோம்.ஞானேந்திரியங்கள்- 5, கர்மேந்திரியங்கள்- 5, மனம் - புத்தி அகங்காரம் என்பவை மூன்று; ஆக, மொத்தம் 13. இவற்றை உணர்த்துவதற்காகவே 13 குதிரைகள் வைத்தோம்.

அவற்றிலும், மனம் போன போக்கில் ஓரம் போகக்கூடாது என்று, முதலில் ஒரு குதிரையை வைத்து, அதன் பின்னால் ஆறு ஜோடிக் குதிரைகளை அமைத்து, கடிவாளங்களைக் கண்ணன் கைப்பிடியில் அமைத்தோம். கீதை சொல்லும் அந்தக் கண்ணன் நமக்கு நல்வழி காட்டட்டும்'' என்று குறிப்பிட்டார் நடராஜர்.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்ட, அந்தக் கண்ணனின் அழகுமிகு எழில் கோலம் நம் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது.

கண்ணனின் காட்டிய வழியில் நடப்போம்!
கசக்கிப் பிழியும் துயரங்களைக் கடப்போம்!

சக்திவிடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக