புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_m10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10 
69 Posts - 58%
heezulia
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_m10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_m10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_m10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_m10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10 
111 Posts - 60%
heezulia
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_m10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_m10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_m10அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 01, 2009 10:21 am

http://www.meenagam.org/?p=14840
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத்



எழுதியவர்சோழன் on November 1, 2009
பிரிவு: பிரதான செய்திகள்



அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Rajapakse_kanimozhiதமிழ்
ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத்
தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது
ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில்
சம்பத் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர்
நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி காண்பது சுவாரஸ்யமான அனுபவம். அழகு தமிழில்
அவர் வாதங்களை சரவெடிபோல எடுத்துவைக்கும் விதமே அலாதியானது. அண்மையில்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐவர் குழு இலங்கை போய் வந்தது அவரை மிகவும்
கொதிப்பேற்றியுள்ளது அவரது அனல் வார்த்தைகளில் புரிந்தது!

அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Kumudam04112009001

நாடாளுமன்றக் குழு இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முகாம்களுக்குச் சென்று வந்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


முள்வேலி முகாமிற்குள் முடங்கிக்
கிடக்கும் ஈழத்துச் சொந்தங்களின் இன்னல்களைக் கண்டறிய குளுகுளு கண்ணாடி
அணிந்த டி.ஆர்.பாலுவின் தலைமையில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலில்
குழு என்பதே தவறு. சுதந்திரமாய் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடவும்,
சுதந்திரமாய் கருத்துச் சொல்லவும் அதிகாரம் இல்லாத, யாருடைய ஏவலையோ அல்லது
ஆவலையோ நிறைவேற்றச் சென்றவர்களை கும்பல் என்றே சொல்லலாம்! ராஜபக்சேவின்
அழைப்பின் பேரில் சென்றவர்கள் என்பதை அப்பட்டமாக மெய்ப்பிக்கும் வண்ணம்,
புன்னகை வழிய போட்டோவுக்கு போஸ் கொடுத்ததையும், ராட்சஸன் கையால் பரிசு
வாங்கி மகிழ்ந்த படங்களையும் பார்த்தபோது, சந்திரனில்கூட ஈரம் இருப்பதாக
கண்டுபிடித்துவிட்டார்கள். இவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லையா? என்ற கேள்வியே
எழுந்தது!

அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் Kumudam04112009002இன்னமும்
அந்த மண்ணில் ரத்தவாடை கூட போகவில்லை. கனியம்மா… உங்களுக்கு எப்படியம்மா
பரிசுப் வாங்க மனசு வந்தது? உங்களுக்குத் தந்த அந்தப் பெரிய பரிசு
பெட்டியின் உள்ளே தமிழன் தலை இருக்குமோ என எனக்குத் தோன்றியது!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து,
நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதற்குப் பிறகு `எழும்… தமிழ் ஈழம்’ என்று
கொக்கரித்தார் தொல்.திருமாவளவன். சென்னையில் மாநாடு நடத்தி “கொலைகாரன்
ராஜபக்சேயை குற்றவாளிக் கூண்டில் ஏற்றாமல் விடமாட்டேன்” என்று கோபம்
கொப்பளிக்க பேசியவர், ராஜபக்சேயுடன் மட்டுமல்லாமல், இந்தக் கொலைகளை
அரங்கேற்றிய கோத்தபய ராஜபக்சேயுடனும் புன்னகை பூத்தபடி படமெடுத்துக்
கொண்டதைப் பார்த்தபோது, என் பின்மண்(டை)யிலேயே இலங்கை ராணுவம் சுட்டதைப்போல்
உணர்ந்தேன். இப்போது சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறங்கியவுடன்,
`ராஜபக்சேயை போர்க் குற்றவாளியென அறிவிக்கவேண்டும்’ என்று மீண்டும் நெஞ்சை
நிமிர்த்துகிறார். எத்தனை காலம்தான் இப்படி நடிக்கப் போகிறீர்கள்? உங்கள்
உள்ளத்திற்கும் உதட்டிற்கும் எத்தனை கிலோமீட்டர் தூரம் மிஸ்டர் திருமா? (அடைப்புக்குறிக்கு இருப்பது நானிட்டது-நந்திதா)

கருணாவிற்கு முன்பே காட்டிக் கொடுத்த
டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்துக்கொண்டு முகாம்களை பார்வையிடுகின்றனர்
நமது குழுவினர். பாதிக்கப்பட்ட மக்கள் எப்படி அய்யா சுதந்திரமாக கருத்துச்
சொல்ல முடியும்?

“பிரபாகரனோடு நீயும் இருந்திருந்தால்
கொல்லப்பட்டு இருப்பாய்” என்று ஆணவத்தின் உச்சத்தில் இருந்துகொண்டு
திருமாவளவனைப் பார்த்து இந்த கலியுக ஹிட்லர் ராஜபக்சே சொன்னதை ஏடுகள்
ஊருக்குத் தெரிவித்துவிட்டன. சமாளித்துக்கொண்டு `நகைச்சுவையாக சொன்னது’
என்கிறார் திருமாவளவன். இந்தக் குழு நடத்தியதும் ஒரு நகைச்சுவை
நாடகம்தான். `புலிகளைக் கொன்றுவிட்டோம்’ என அங்கே ராஜபக்சே
ஆரவாரிக்கிறார். `அடங்க மறு அத்துமீறு’ என்று நாளும் பேசிய விடுதலைச்
சிறுத்தைகளை அடக்கிவிட்டோம் என்று இங்கேயும் சில கதர்ச் சட்டைகள் பேசுவது
என் காதில் விழுகிறது. இந்தக் குழுவிற்கு இலங்கையில் என்ன மரியாதை
கிடைத்தது என்பதை இலங்கை பத்திரிகைகளே அம்பலப்படுத்திவிட்டன. `ராவணன்
காலத்தில் இந்தியாவிலிருந்து அனுமன் வந்தான். இப்போது சனீஸ்வரன்
வந்திருக்கிறான்’ என்று மரிசிக்கப்பட்டார்கள்!

கண்ணில் கண்ட கோரக் காட்சியை யாராவது
கொட்டித் தீர்த்துவிடுவார்களோ என்று கருதித்தான் பிரதமரை, ஜனாதிபதியைக்கூட
விமான நிலையத்தில் வரவேற்க முடியாத முதல்வர், இந்தக் குழுவை வரவேற்க
அவசரமாக விமானநிலையம் சென்றார் என்பதே உண்மை.

நம் குழுவின் வருகை முகாம்களில்
தவிக்கும் அகதிகளுக்கு குறைந்தபட்சம் ஓர் ஆறுதலாக இருந்திருக்கும் என்ற
அளவிலாவது அதை வரவேற்க வேண்டாமா?


ஆறுதலா? என்ன பேசுகிறீர்கள்? பந்தி
முடிந்த பிறகு பசித்து வந்த விருந்தாளியைப்போல, சந்தை முடிந்த பிறகு
சரக்கு விற்க வந்த வியாபாரியைப் போல, தேரோட்டம் முடிந்தபிறகு திருவிழா காண
வந்த பக்தனைப்போல, நோயாளி மடிந்த பிறகு மருந்து வாங்கி வந்த உறவுக்
காரனைப்போல என்று கவிஞர் மீரா எழுதியது இந்தக் குழுவின் நடவடிக்கைகளைப்
பார்த்தபோது என் நினைவுக்கு வருகிறது!

தமிழன்… தமிழ் என்று ரொம்பப் பேசுகிறீர்கள். கலைஞர் கூட்டியிருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாமா?

சமீபகாலமாக சினிமாக்காரர்களை பக்கத்தில்
உட்கார வைத்துக் கொண்டு வாரம் ஒரு விழா எடுத்து, அதில் தன்னை `இந்திரன்,
சந்திரன்’ என்று புகழ்வதை ரசித்து ரசித்து அலுத்துவிட்டதோ என்னவோ
கலைஞருக்கு (சிரிக்கிறார்). உலகத் தமிழ் மாநாடு என்றவர் இப்போது ஏன் உலகத்
தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அறிவிக்கிறார்?

உலகத் தமிழ் மாநாடு நடத்த உலகத் தமிழ்
ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி வேண்டும். அது கிடைக்காததால் உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு என்று அறிவிக்கிறாரோ என சந்தேகிக்கிறேன்.

தமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு! இவர்
ஆட்சியில் நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. அதிகாரச் சூழலில் தமிழ் இல்லை.
பள்ளிகளில் தமிழ் இல்லை. கோயில்களில் தமிழ் இல்லை. வீதியில், நடை, உடையில்
கடையில் எங்கும் தமிழ் இல்லை. இதைப்பற்றியெல்லாம்

கவலைப்படாதவர் எதற்கு மாநாடு கூட்ட
வேண்டும்? விளம்பர வெளிச்சத்தில் சுகம் காணத் துடிக்கிற இவர்கள்
தமிழனுக்கு ஒரு பெரிய ஆபத்து வரும்போது, தன்னுடைய குடும்பத்திலுள்ளவர்களை
டெல்லியில் அதிகார நாற்காலியில் உட்கார வைக்க கெஞ்சிக் கூத்தாடி மிரட்டிய
கேளிக்கூத்தை வட இந்திய டி.வி.க்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஊரே
சிரித்தது. இப்போது இலங்கையில் ரத்த அத்தியாயம் முடிந்துவிட்டது என்று
ஊருக்கும், உலகுக்கும் அறிவித்துவிட்டு மாநாடு என மார்தட்டுகிறார்.
எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தேர்தல்களில் கொங்கு மண்டலத்தில் எல்லா
இடங்களிலும் மண்ணை கவ்வியவர்கள் மீண்டும் அங்கே காலூண்றுவதற்கு வழி
கிடைக்காதா என ஏங்கும் விதத்தில் தமிழை கேடயமாக எடுக்கிறார்கள்.

ராமதாஸ் வெளியேறி விட்டாரே?

எதுவும் சொல்ல விரும்பவில்லை.

தமிழீழ பிரச்னையும் ஒரு வழியாக ஓய்ந்துவிட்ட நிலையில், இனி எதை வைத்து அரசியல் பண்ணப் போகிறார் வைகோ?

ஓய்ந்துவிட்டது என்பது அடிப்படை இல்லாத
கேள்வி. அடுத்தது, எங்கள் வைகோ இதை மட்டும் வைத்து அரசியல் செய்யவில்லை.
ஈழத்தைத் தன் அரசியலுக்கும் பயன்படுத்தவில்லை. நாங்கள் மத்திய மாநில
அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை குறிப்பாக, விலைவாசி உயர்வு, சட்டம்
ஒழுங்கு சீர்கேடு, வரலாறு காணாத லஞ்சம், ஜனநாயகப் படுகொலைகள், அரசின்
தவறான பொருளாதார கொள்கைகள் எல்லாவற்றையும் வைத்துதான் பிரசாரம்
செய்கிறோம்! அழகிரி போன்ற அந்தக் குடும்பத்தினரின் அத்துமீறல்களும்,
அதிகார துஷ்பிரயோகங்களும் தமிழகத்தின் எல்லாதுறைகளிலும் ஆட்டிப்
படைக்கிறது. இதை எல்லாம் அம்பலப்படுத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை!.

-வி. சந்திரசேகரன்
படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

நன்றி: குமுதம் சஞ்சிகை
(Visited 115 times, 115 visits today)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக