புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_m10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10 
21 Posts - 66%
heezulia
மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_m10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_m10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10 
63 Posts - 64%
heezulia
மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_m10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_m10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_m10மிசோவுக்காக ஏங்கும் உலகு........ Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிசோவுக்காக ஏங்கும் உலகு........


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 10, 2014 4:16 pm

போஸ்னியாவின் தலைநகரம் சரயேவோவைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய நகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்த அங்கிள் மிசோவின் மறைவால் ஆறாத் துயரம் அடைந்துள்ளனர். அவருடைய நினைவாக அவர் இருந்த நகர வீதியில் அவருடைய உருவப் படத்துக்கு மாலையிட்டு, வீதியெங்கும் மெழுகுவத்தி ஏற்றிவைத்து மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.

அங்கிள் மிசோ யார்?

யார் இந்த அங்கிள் மிசோ?

எழுத்தாளரா, பாடகரா, இலக்கிய வாதியா, கவிஞரா, நாடாளுமன்ற உறுப்பினரா, மக்கள் சேவகரா?

இவர்களில் எவரும் இல்லை. காலணிகளுக்கு பாலீஷ் போடும் ஒரு சாமானியர்.

சரி, அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், அவர் மீது ஏன் இத்தனை பாசம்? அதற்குப் பின் சுவாரஸ்யமான ஒரு கதையே இருக்கிறது.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, கொசாவோ பிரதேசத்திலிருந்து சரயேவோ நகருக்கு வந்த ரோமா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் அங்கிள் மிசோ. அவருடைய 21-வது வயதில் தந்தையுடன் இந்நகருக்கு வந்தார். அவருடைய தந்தை பிழைப்புக்காக காலணிகளுக்கு பாலீஷ் போட ஆரம்பிக்க, அவரை அடியொற்றி தானும் அதே தொழிலில் இறங்கினார் மிசோ.

உண்மையில், மிசோவின் பெயர் ஹுசைன் ஹசானி. அவருக்கு குத்துச் சண்டை சொல்லிக்கொடுத்த குரு, ஹங்கேரி நாட்டவர். அவருக்கு இந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. எனவே, அவர் தன்னுடைய மாணவனை ‘மிசோ’ என்று அழைத்தார். அந்தப் பெயரே பின்னாளில் அவருக்கு நிலைத்துவிட்டது.

திருவாளர் சுத்தம்

காலணிக்கு பாலீஷ் போடுவதுதான் வேலை என்றாலும், மிசோ நன்றாக உடை அணிவார். தினமும் தோய்த்து இஸ்திரி செய்த வெள்ளைச் சட்டையை அழகாக அணிந்துவருவார். தலையை வெகு கவனமாகச் சீவி, கவர்ச்சியாகத் தொப்பி போட்டிருப்பார். மீசை எப்போதும் அளவாகத் திருத்தப்பட்டிருக்கும். முகத்தில் எப்போதும் மலர்ச்சி, காந்தத்தைப் போல ஈர்க்கும் சிரிப்பு. அந்தச் சிரித்த முகமும் தேர்ந்த வேலைத்திறமும் பணிவான சேவையும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது.

தாக்குதல்களுக்கு இடையே ஒரு நன்னம்பிக்கை

சரயேவோ நகரம் 1992-95-ல் மிகப் பெரிய வான் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு அஞ்சி நகர மக்களே ஊரைக் காலி செய்துவிட்டு ஓடிய கதையெல்லாம்கூட உண்டு. ஆனால் மிசோ, தான் வேலை செய்த இடத்தைவிட்டு நகரவில்லை. வழக்கம்போல் அவருடைய தொழிலை மேற்கொண்டிருந்தார்.

வான் தாக்குதலில் சரயேவோ நகருக்குக் கடும் சோதனைகள் நேரிட்டபோதும் வீதியில் மிசோ பாலீஷ் போடக் காத்திருப்பதைக் கண்டதும் மக்களுக்கு நிம்மதி பிறக்கும். போர் எப்படியாக நடந்தாலும் நாளை நாம் உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையை அவரைப் பார்த்து நகரவாசிகள் பெற்றார்கள். எத்தனை இடர்கள், சோதனைகள் வந்தாலும் ‘நகரில் நாம் மட்டும் இல்லை; கூட மிசோ இருக்கிறார் துணைக்கு’ என்ற எண்ணத்தை அவர்களுக்குள் அவர் விதைத்தார். இத்தனைக்கும் மிசோ அவருடைய இடத்திலிருந்து ஷூ பாலீஷ் போட்டதைத் தவிர, வேறு எதையும் செய்யவில்லை.

போர் நடந்த காலத்தில் கடும் உணவுப் பஞ்சமும் வறுமையும் கோரதாண்டவமாடியபோதும்கூட, தெரு நாய்களுக்கு அவரிடமிருந்தவற்றைப் போட்டுப் பசியாற்றினார். ‘விசுவாச முள்ள தோழர்கள்’ என்று அவற்றை அழைத்தார். கடந்த 2009-ல் நகர நிர்வாகம் அவருக்குப் பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்ததுடன், குடியிருக்கச் சிறிய குடியிருப்பை ஒதுக்கியதுடன் ஓய்வூதியமும் வழங்கி நன்றி பாராட்டியது.

இந்தத் தகவலை தன்னிடமிருந்த தகரப் பெட்டியை பூட்ஸ்களால் தட்டி ஒலி எழுப்பி, தனது வாடிக்கையாளர்களுக்கும் நண்பர் களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து மகிழ்ந்தார் மிசோ. ஆனால், இந்தக் கௌரவத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்காமல் மனைவி ஜெமிலா மறைந்துவிட்டாளே என்று கண்ணீருடன் அந்த சோகத்தையும் பகிர்ந்துகொண்டார்.

கர்மயோகி மிசோ

போஸ்னியப் பத்திரிகைகளில் மிசோவைப் பற்றி நிறைய பேட்டிகள், துணுக்குச் செய்திகள் வெளிவந்துவிட்டன. உள்நாட்டுப் பத்திரிகைகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பத்திரிகைகளும் எழுதின. அவற்றை எல்லாம் அவர் பிரதி எடுத்து வீட்டில் வைத்திருந்தார். பூட்ஸ்களுக்குப் பாலீஷ் போடும் முன்னால் கையில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு அவர் ஆடிய ஆட்டம்கூட புகைப்படமாக அவருடைய வீட்டை அலங்கரித்தது.

தன்னுடைய வாழ்நாளைத் தானும் மகிழ்ச்சியாகக் கழித்து, மற்றவர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டிய கர்மயோகி மறைந்துவிட்டார். அவர் இருந்த இடத்தில் ஒரு நாற்காலியைப் போட்டு அதில் அவருடைய புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து சுற்றிலும் மெழுகுவத்திகளை ஏற்றிவருகின்றனர் மக்கள்.

“மிசோ எங்களுக்கு விசேஷமாக எதுவும் செய்யாமல் இருக்கலாம்; ஆனால், போர்க் காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தபோதும், வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக்கிடந்தபோதும் தனியாளாக வெளியே வந்தார்; நாங்கள் ஒவ்வொருவரும் வெளியே வர நம்பிக்கை தந்தார். இந்த நகரத்தையே இயங்கவைத்தார். அதற்குச் சின்ன நன்றி இந்த அஞ்சலி” என்கிறார்கள். இப்போது அந்த இடம் மிசோவின் நினைவிடம் அல்ல, மக்களின் நெகிழ்விடம்!


the hindu

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக