புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
61 Posts - 47%
heezulia
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
3 Posts - 2%
prajai
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
15 Posts - 3%
prajai
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
9 Posts - 2%
jairam
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10யார் இந்த நம்மாழ்வார்? Poll_m10யார் இந்த நம்மாழ்வார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இந்த நம்மாழ்வார்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 9 Jan 2014 - 18:08

#லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.

#பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார்.

#நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை ததும்பத் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.

#நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

#நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய அதே காலகட்டத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார் நம்மாழ்வார். அதற்காகத் தான் பார்த்துவந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார்.

#பசுமைப் புரட்சியின்போது அரசு உரங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நம்மாழ்வார் கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டினார் நம்மாழ்வார். இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.

#பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நம்மாழ்வார். இது அவரது வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.

#கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி.

#ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில் வெளியே தெரிந்தது. ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார். இன்றைக்குத் தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது என்றால் அதற்குக் காரணகர்த்தா நம்மாழ்வாரே!

#1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடையேகூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த நேரத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல; மாறாக, ரசாயன உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு” என்று அன்றே சொன்னார் நம்மாழ்வார்.

#நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல... மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.

#நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு - தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.

#நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார்.

#விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.

#பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யலாமா என்று அன்றைய மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேசச் செய்தார் நம்மாழ்வார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர்.

#தொடக்கத்தில் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் தொடர்பாகப் பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக இயங்கிவந்தன. ஆனால், நம்மாழ்வார் ஆசைப்பட்டதாலேயே பூவுலகின் நண்பர்கள், ரிஸ்டோர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கம், பெண்கள் இணைப்புக் குழு, இந்திய நல்வாழ்வு நல்லறம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஒன்றிணைந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு 2008-ல் தொடங்கப்பட்டது.

#1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தது. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே!

#தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

#நம்மாழ்வாருக்கு நல்ல குரல் வளம். வயலில் இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்றவை அவர் அடிக்கடி ராகமிட்டுப் பாடும் பாடல்கள்.

#நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.

#கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.

#காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.

#வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செல விட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.

#அவர் தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைப்பார்.

டி.எல். சஞ்சீவிகுமார் - thehindutamil

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 9 Jan 2014 - 18:26

சிறப்பான தகவல்கள் ..

பகிர்வுக்கு நன்றி  யார் இந்த நம்மாழ்வார்? 103459460 யார் இந்த நம்மாழ்வார்? 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 12 Jan 2014 - 14:16

ஐயா நம்மாழ்வாரை பற்றிய அருமையான தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013

PostG.Ramajayam Sun 12 Jan 2014 - 20:46

பகிர்வுக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 12 Jan 2014 - 22:29

இதுவரை அறிந்திராத அரிய அறிய வேண்டிய செய்திகள் - அருமை




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 19 Jan 2014 - 14:51

நம்மாழ்வாரை மறக்காத கன்னியாகுமரி

நம்மாழ்வார்... இந்திய விவசாயத்தின் ஒடிந்து போன முதுகெலும்பை ஒட்ட வைக்க, ஓய்வறியாது ஓடி உழைத்த பெரியவர்.

“இந்த மண்ணு இயற்கையாவே சத்தானதுதான். அது பாட்டுக்கு அதை விட்டுட்டோமுன்னா, நல்ல மகசூலா கொடுக்கும். அதைப் போயி ரசாயன உரம், பூச்சி மருந்துன்னு தொந்தரவு பண்ணக் கூடாது. இயற்கையான மாட்டுச் சாணியே போதும். நம்ம பாட்டன், முப்பாட்டன் காலத்துலயெல்லாம் இந்த ரசாயன உரமெல்லாம் இல்லீல்லா” என்று, வெள்ளந்தியாக மேல் சட்டை அணியாமல், விவசாயிகளுக்கு வகுப்பெடுக்கும் நம்மாழ்வாரை, இனி என்று காண்போம்? என, கண்ணீரில் மிதக்கிறார்கள் கன்னியாகுமரி விவசாயிகள்.

நாகர்கோவில் நகர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் நம்மாழ்வார் சிரிக்கிறார். பார்க்கும் போதெல்லாம் கனத்த மனதோடு கண்ணீரில் கரைந்து போகிறார்கள் விவசாயிகள். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார் (75). அவர் மீது, கன்னியாகுமரி விவசாயிகளுக்கு ஏன் அத்தனைப் பரிவு?

வாழ்நாளின் கடைசி மூச்சு வரை இயற்கை வழி வேளாண்மை குறித்த பரப்புரையில் ஈடுபட்ட நம்மாழ்வார், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பல முறை வருகை தந்திருக்கிறார். அதனால் மாவட்ட விவசாயத்தில் ஆக்கப்பூர்வமான பல பணிகளும் நடைபெற்றன.

`கிரியேட்’ அமைப்பின் பொன்னம் பலம் கூறும் போது:

கேரள மாநிலம், கும்பளங்கி பகுதியில் நெல் குறித்த கருத்தரங்கு ஒன்னு நடந்துச்சு. அப்போதான் முதன் முதலா நம்மாழ்வாரை பார்த்தேன். இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதிலும் 57 அமைப்புகளைச் சேந்தவர்கள் கலந்து கொண்டனர். நெல்லின் பாரம்பரியத்தைக் காக்க ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டியதன் அவசியத்தை நம்மாழ்வார் எடுத்துச் சொன்னார்.

முதலாவதாக குமரியில்

அதன் அடிப்படையில், `நமது நெல்லை காப்போம்’ அமைப்பு, முதன் முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் துவங்கப்பட்டது. இங்கிருந்து நம்மாழ்வாரின் முயற்சியால் துவங்கப்பட்ட `நமது நெல்லை காப்போம்’ அமைப்பு, இன்று கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா என பல மாநிலங்களிலும் வேர் விட்டிருக்கிறது. நம்மாழ்வாரின் முயற்சியால், குமரி மாவட்டத்தில் இருந்து அதிகமான பாரம்பர்ய ரகங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. 60 நாளில் விளைச்சலைத் தருகிற அறுபதாம் குறுவை கூட இங்கிருந்து தான் மீட்கப்பட்டது, என்றார்.

இடலாக்குடியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி முஸ்தபா:

குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அதிக அளவில் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. ஒரு முறை கன்னியாகுமரி வந்திருந்த நம்மாழ்வாரிடம் இதை சுட்டிக் காட்டினோம். உடனே, அதற்காக நாகர்கோவிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். நாகர்கோவிலில் உண்ணாவிரதம்

நாகர்கோவிலில் ராஜேந்திர ரத்னு ஆட்சியராக இருந்த போது, நம்மாழ்வாரை அழைத்து வந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தார். அதன் பின்பு தமிழகத்திலேயே முதல் முறையாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் காலையில் இயற்கை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டமும், மாலையில் ரசாயன விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டமும் நடைபெற்று வந்தது. அப்போது இயற்கை விவசாய குறைதீர் கூட்டத்திலும் நம்மாழ்வாரே விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்தார். தொடர்ந்து விவசாயிகளுடனே தங்கி இருந்து இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.

விவசாயி கண்ணீர்

குளங்களை காக்கவும் குமரி மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். தொடர்ந்து அவரது முயற்சியால் குமரி மாவட்டத்தில் அதிகமான பேர் இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர். சந்தேகம் ஏற்படும் பொழுதெல்லாம் எங்களை மாணவனாய் பாவித்து கற்ற்த் தருவாரே... இன்னும் கொஞ்சம் வருஷமாச்சும் இருந்திருக்கலாமே… என கண்ணீர் துடைக்கும் முஸ்தபாவுக்கு வயது 80.

வாசலில் புகைப்படம்

உலகம் செல்கிற வேகத்தில், பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் மூழ்கி, பாரம்பர்யத்தை தொலைத்து விட்டதை நம்மாழ்வார் வீதியெங்கும் சென்று விதைத்ததன் விடை, நாகர்கோவிலில் இரு இயற்கை அங்காடிகளும், இயற்கை ஹோட்டலும் முளைத்திருக்கிறது. இரண்டும் நம்மாழ்வாரால் திறந்து வைக்கப்பட்டவை. இரண்டிலும் வாசலில் வரவேற்கும் நம்மாழ்வார் புகைப்படத்திற்கு பூ போட்டு வைத்திருந்தார்கள்.

இப்போதைய சிந்தனையில் ஒரே விஷயம் நம்மாழ்வாரின் உடல் மட்டுமே புதைக்கப்பட்டிருக்கிறது. அவரது கருத்துக்கள் லட்சோப லட்சம் மக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது.

வளர்ச்சி பாதையில் வடகரை!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது வடகரை கிராமம்.இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் வடகரையில் இப்போதும் விவசாயம் கொடி கட்டிப் பறக்கிறது. காரணம் நம்மாழ்வார் தான். இப்பகுதி மக்களை துவக்க காலத்தில் பொருளாதார ரீதியில் மேம்படுத்த பட்டுப்புழு வளர்ப்பை நம்மாழ்வார் தான் அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில், வடகரை மக்கள் பட்டுப்புழுவுக்கு பயந்து நடுங்கியிருக்கிறார்கள்.

ஒரு நாள் நம்மாழ்வார் வடகரைக்கு போயிருக்கிறார். அங்கிருந்த ஒருவரைக் கூப்பிட்டு, என் பாக்கெட்டில் கை விட்டு பாருன்னு சொல்லியிருக்கிறார். பாக்கெட்டில் பட்டுப்புழுவை போட்டு கொண்டு வந்திருந்தார் நம்மாழ்வார். என் பாக்கெட்டில் வைச்சுருந்தேனே… கடிக்கவா செஞ்சுச்சு? என கேட்டு, பட்டுப் புழு வளர்ப்பை தூண்டி விட்டார். இந்த ஊரில் உள்ள இளவட்டங்கள் பாதிப் பேருக்கு பெயர் சூட்டியதே நம்மாழ்வார்தான். - thehindutamil

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 19 Jan 2014 - 23:57

டி .எல்.சஞ்சீவிகுமார் அவர்களுக்கும் சாமி அவர்களுக்கும் நன்றி! நம்மாழ்வாரின் நாட்டுப் பற்றையும் மக்கள் பற்றையும் மற்றவர்கள் கற்றுகொள்ளவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 20 Jan 2014 - 21:13

யார் இந்த நம்மாழ்வார்? 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக